Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார் வளைகுடா முதல் பாக்கு நீரிணை வரை 7 யுத்தக்கப்பல்களை நிறுத்தியது இந்தியா

Featured Replies

கொழும்பில் நடைபெறும் 'சார்க்கு' மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர் சிங்கின் பாதுகாப்பு கருதி மன்னார் வளைகுடா முதல் பாக்கு நீரிணை வரையான கடற்பரப்பில் இந்தியா ஏழு கடற்படைக் கப்பல்களை நிறுத்தியுள்ளது.

இரு நாள் சார்க் மாநாடு கொழும்பில் நேற்று சனிக் கிழமை ஆரம்பமாயிற்று இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை நண்பகல் கொழும்பு வந்தார்.

பிரதமரதும் இந்தியக் குழுவினரதும் பாதுகாப்பபுக்காக மன்னார் வளைகுடா முதல் பாக்கு நீரிணையில் கலிமார் முனை வரை இந்தியக் கடற்படை தனது பாதுகாப்பை முழு அளவில் பலப்படுத்தியுள்ளது.

இந்தியக்கடற்படையனரின் நான்கு யுத்தக்கப்பல்களும் இந்திய கரையோரக்காவல் படையின் மூன்று கப்பல்களும் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கiயில் ஈடுபட்;டுள்ளதாகவும் இதில் கடற்படையின் இரு கப்பல்களும் கரையோர காவல் படையினரின் இரு கப்பல்களும் மன்னார் வளைகுடாவிலும் கடற்படையின் இரு கப்பல்களும் கரையோரக் காவல் படையின் ஒரு கப்பலும் பாக்கு நீரிணையிலும் அதற்குச் சமீபமாகவும் தரித்து நிற்பதாகவும் அதிகாரயொருவர் தெரிவித்தார்.

இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடு, சார்க் மாநாடு முடிந்த பின்னரும் எதிர்வரும் 7ம் திகதி வரையிருக்குமென்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதேநேரம், இலங்கை கடற்பரப்பில் இந்தியக் கடற்படைக் கப்பல்களின் பிரசன்னத்தை உறுதிப்படுத்திய மற்றோரு அதிகாரி ஐ.என்.எஸ்.மைசூர் மற்றும் ஐ.என்.எஸ்.ரன்வீர் ஆகிய இரு கப்பல்களும் விசேட கடற்கொமான்டோக்கள் சகிதம் கேந்திர முக்கிய நிலையங்களில் ரோந்து வருவதாகவும் தெரிவித்தர்ர்.

'தேவையேற்படும் போது அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இது. அவர்கள் மிகவும் உஷார் நிலையில் வைக்கப்ட்டுள்ளனர். கலிமார் முனை முதல் ராமர் பாலம் வரயான கடற்பரப்பு பாதுகாப்பு வலையமைப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தர்ர்.

இதே நேரம், ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் அதற்கு அப்பாலுள்ள கடற்பகுதிகள் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்படடுள்ளன.

மன்னார் வளைகுடாவிலும் பாக்கு நீரிணையிலும் நிறுத்தபட்டுள்ள போர்க்கப்பல்கள் ராஜ்புட் மற்றும் டெல்கி வகை நாசகாரிகளாகும். இந்தக் கப்பல்கள் சிலவற்றில் ஏவுகணைகளும் பொருத்தப்படடுள்ளன.

இதே நேரம், சென்னை மற்றும் இராமநாதபுரம் பகுதிகளிலிருந்து விமானப்படையினர் மேற்கொண்டு வரும் தீவிர கண்காணிப்புக்கு அப்பால் கற்படையினரின் கண்காணிப்பு விமானங்களும் உலங்குவானூர்திகளும் தொடர்ந்தும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கரையோர வழிமறிப்பு கலங்களும் ரோந்தில் ஈடுபட்டுள்ளதுடன் இராமேஸ்வரம் முதல் நாகபட்டினம் வரையினான சகல கடற்படை முகாம்களிலிருந்தும் முழு அளவிலான கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நன்றி தினக்குரல்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை அப்போ தாங்கள் ஈழத்தில் இருந்த போது செய்த போது தங்களது இழப்பு எண்ணில் அடங்காதவை. இப்போ இவ்வளவு கப்பலையும் கொண்டு வந்து என்ன படம் காட்டுகிறார்கள்.??? இந்த கப்பல்களை வைத்து பெங்களூர், அகமதாபாத் போன்ற குண்டு வெடிப்புகளை நிறுத்த முடியுமா? இது தொடரும். டாக்டர் மன்மோகன் சிங் பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு சில பல் நன்மைகளை செய்தாலும் இன்னும் இவர் அரசியல் கத்துக்குட்டி தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இந்திய மீனவர்களின் பாதுபாப்பிற்காக நிறுத்தப்பட்டிருக்குதாம். கருணாநிதியின் உத்தரவுக்கமைய மத்திய அருசு எடுத்த நடவடிக்கை. :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

7 கப்பலும் கழிவுகளை இலங்கை கடலில் கொட்டிட்டு போகவே வந்தது? என்ன நாசமறுப்புக்கு இந்த 7 கப்பலையும் கொண்டுவந்தாங்களோ தெரியவில்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

7 கப்பலும் கழிவுகளை இலங்கை கடலில் கொட்டிட்டு போகவே வந்தது? என்ன நாசமறுப்புக்கு இந்த 7 கப்பலையும் கொண்டுவந்தாங்களோ தெரியவில்லை :lol:

அண்டை நாடுகளுக்கும் புலிகளுக்கும் பிலிமு காட்டுறாங்க பிலிமு..! :o:lol:

அண்டை நாடுகளுக்கும் புலிகளுக்கும் பிலிமு காட்டுறாங்க பிலிமு..! :o:lol:

இந்த பிராந்தியத்தில் ஆண்டவனுக்கு அடுத்தபடியாக அவர்கள் தானாம்! இல்லை இல்லை!! ஆண்டவனே அவர்கள் தானாம்!!!

மெலியாரை வலியார் இடித்தால் வலியாரை வல்லவன் இடிப்பான்!!! பாரதம் பாரதக்கதைகளை மறந்துவிடக்கூடாது!

நாராயணா! நாராயணா!!!:lol:

Edited by vettri-vel

இதில் பிலிம் ஏதும் இல்லை நம்முடைய பலத்தை சொல்லாமல் அவர்களே வெளிக்காட்டி இருக்கின்றார்கள்.

இப்படி கப்பல் கப்பலாக கொண்டு வந்து காட்டும் நிலைக்கு இந்தியாவின் நிலை பரிதாபமாக இருக்கு.

அப்ப இந்தியா 7 கப்பல் மட்டும்தான் தென்பகுதீல வைச்சு இருக்குதா.?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.