Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புரியாத புதிர் புரிந்த போது...

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ்!

நீங்கள் பெண்களைப் பற்றி முடிவான ஓர் அபிப்பிராயத்தை வைத்துக்கொண்டு கருத்தெழுதுகிறீர்கள். சில ஆண்கள் சில பெண்களை ஏமாற்றுவதும் சில பெண்கள் சில ஆண்களை ஏமாற்றுவதும் சமூகத்தில் சாதாரணமாக நடப்பதுதான். உங்கள் கதையைப் பொறுத்தமட்டில்தான் இக் கருத்தை நான் முன் வைத்தேன். ஏதிலியாக வேலைக்கு வந்த ஒரு பெண் எடுத்ததற்கும் வீட்டில் புகார் பண்ணிக் கொண்டிருக்க முடியாது. இந்த ஜெகனை ஓரங்கட்டினால் இன்னொரு சுகன் வந்து டார்ச்சர் கொடுப்பான். ஆற்றில விழுந்தால் அதன் போக்கில் நீந்திப் போய்த்தான் கரையேற வேண்டும். ஜனனீயும் அதைத்தான் செய்திருக்கிறா. நல்ல கெட்டிக்காரப் பெட்டை.

காட்டில்மான்களாயிருந்தால் கொப்பில குழையைத் திண்டு குளத்தில தண்ணீ குடித்து காதலை வாழ வைத்துக் கொண்டு வாழ்ந்து விடலாம். இது நாட்டில் நாங்களாச்சே. என்ன செய்வது! பின்னால நூறு பொறுப்புகள் இருக்குது என்பதற்காக வாழ்க்கையில் காதல் வராமல் விடுகுதா? வரத்தான் செய்யும். காதல் வாழ்ந்தால் சந்தோசம், வீழ்ந்தால் எதற்குச் சந்நியாசம்? ஒரு செம்பு தண்ணீரைக் குடித்து விழுங்கிவிட்டு அடுத்த பொறுப்புகளைக் கவனிக்க வேண்டியதுதான். பொறுப்புகள் இல்லாதவன் தாடி வளர்த்து தண்ணீயடித்து தெருவால போறவர்களின் நையான்டிகளை தனக்கான அங்கீகாரமென நினைத்து வாழ்வேமாயம் பாடி தொலையட்டும்.ஆனால் காலம் எதற்காகவும் காத்திருப்பதில்லை!!!

எனக்கென்று முடிவான ஒரு அபிப்பிராயம் வைக்கிற அளவுக்கு பெண்கள் உலகில இருக்கிறாங்களா என்பது.. சந்தேகமாகவே இருக்குது..! இருந்தாலும் ஓரிரு நல்ல பெண்கள் சில ஆயிரம் பேர்களுள் இருக்கக் கூடும் என்பதை நிராகரிக்கவில்லை..!

ஜனனி ஆத்தோட போகட்டும் குளத்தோட போகட்டும்.. அடுத்தவன் அவளை நம்ப நடந்திட்டு. அல்வா கொடுக்கிறதிலும்.. ஆரம்பத்திலேயே இதைத் தெளிவாச் சொல்லிச் செய்யலாம் தானே..! விரும்புறவன் அவள் விரும்புற வடிவிற்கு.. நட்பா இருப்பான்.. இல்லாதவன் தன் வழியில போயிட்டிருப்பான்..! எதுஎப்படியோ இந்தக் கதையை எழுதியவர் நல்ல படிப்பினை ஒன்றை இளைஞர்களுக்குச் சொல்லுறார் என்றது மட்டும் புரியுது..! :rolleyes::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு விடயம்! மேனகை விஸ்வாமித்தரனை மயக்கியது வாஸ்த்தவம்தான். ஆனால் மேனகையை அவள் மறுத்தும் விடாது பயமுறுத்தி விஸ்வாமித்திரனிடம் அனுப்பியது இன்னொரு ஆணாகிய தேவேந்திரன்தான். முனிவனைத் தொடர்ந்து தவம் செய்ய விட்டால் தனது பதவிக்கே ஆபத்து வந்து விடும் என்கிற பயம். அப்படியான இந்திரனாகிய ஆணுக்கே தன் இன்னுயிரைத் தியாகம் செய்து உதவிய மேனகையைப் போய் குற்றம் சொல்லலாமா நெடுக்ஸ்? அதால்தான் மீன்டும் சொல்கிறேன் மேனகையும் நல்லவள், ஜனனீயும் நல்லவள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு விடயம்! மேனகை விஸ்வாமித்தரனை மயக்கியது வாஸ்த்தவம்தான். ஆனால் மேனகையை அவள் மறுத்தும் விடாது பயமுறுத்தி விஸ்வாமித்திரனிடம் அனுப்பியது இன்னொரு ஆணாகிய தேவேந்திரன்தான். முனிவனைத் தொடர்ந்து தவம் செய்ய விட்டால் தனது பதவிக்கே ஆபத்து வந்து விடும் என்கிற பயம். அப்படியான இந்திரனாகிய ஆணுக்கே தன் இன்னுயிரைத் தியாகம் செய்து உதவிய மேனகையைப் போய் குற்றம் சொல்லலாமா நெடுக்ஸ்? அதால்தான் மீன்டும் சொல்கிறேன் மேனகையும் நல்லவள், ஜனனீயும் நல்லவள்.

அப்ப ஏவ ஏவுப்படும் கணைகளா பெண்கள். அவர்களுக்கு என்று சுயமா புத்தி இல்லையா. அடுத்தவரின் மன உளைச்சல்களைப் புரிந்து கொண்டு செயற்படும் பக்குவம் கிடையாத ஜடங்களா அவர்கள். அப்படியெல்லோ உங்கள் கருத்தைப் படிக்கேக்க அமையுது..!

அச்சுறுத்தலுக்கு அடிபணிவதை மட்டுமா பெண்களால் செய்ய முடியும். அச்சுறுத்துபவனை எதிர்த்து ஒரு அப்பாவி ஏமாற்றப்படுவதை தவிர்ப்பதெல்லோ நீதி..! இதில் எதை நன்மை என்பது..!! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரர் சுவி இங்கு யாரும் மொத்த பெண் வர்க்கத்தை குற்றம் சொல்ல வில்லை மேலும் ஒரு சில பெண்கள்

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தன்னையும் ஏமாற்றி பிறரையும் ஏமாற்றி வாழ்வது

பொய்யான வாழ்கை யும் வாழ்வது குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் ஆண்களை குறை சொல்வது

எங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டோம் தவிர பெண்களை குறை கூறவில்லை

இதனால் நாங்கள் சொல்லி யாரும் திருந்த போவதும் இல்லை.....காதலிக்காமல் யாரும் இருக்க போவதும் இல்லை

அனுபவம் தானே வாழ்கை

பட்டு தேறிய பின்பே விளங்கும் ...........தாடியுடன் அலைவதா அல்லது போத்தலுடன் அலைவதா

நீங்கள் சொன்னீர்களே ஜெகன் ,இல்லாவிட்டால் சுமன் என்று அப்படி வாழ்ந்துவிடுவார்கள் பெண்கள்

ஆனால் ஆண்கள்?.........................

அந்த முதல் காதல் இதயத்தில் மூலையில் இருந்து கொண்டே இருக்கும் அந்த ஜெகன் போல...........

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னீர்களே ஜெகன் ,இல்லாவிட்டால் சுமன் என்று அப்படி வாழ்ந்துவிடுவார்கள் பெண்கள்

ஆனால் ஆண்கள்?.........................

ஜனனி இல்லாவிட்டால் கஜனி. :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

வெளவாலுக்கு வாழ்க்கைப்பட்டால் கவுண்டுதான் கிடக்கனும் என்றும் சொல்லுறவை..! :lol:

ஏதோ மனிதருக்கு வாழ்க்கைப்பட்டவையெல்லாம் நமிர்ந்து கிடக்கிற மாதிரி எல்லோ இருக்கு உங்க கதை :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ மனிதருக்கு வாழ்க்கைப்பட்டவையெல்லாம் நமிர்ந்து கிடக்கிற மாதிரி எல்லோ இருக்கு உங்க கதை :)

அதுவேறையா.. ம்ம்..! காலம் மாறிப்போச்சுது..! கலியாணம் என்பதே சங்கடமான சமாச்சாரம் ஆச்சுது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்திற்கு முன்பு நிமிர்ந்து நடந்த ஆண்கள் ..........

கல்யாணத்திற்கு பிறகு கவுண்டுதானே கிடக்கினும் :lol::lol::lol::unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த முதல் காதல் இதயத்தில் மூலையில் இருந்து கொண்டே இருக்கும் அந்த ஜெகன் போல...........

வணக்கம் முனிவர்! நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை!அதுபோல் இதுவும் ஏற்கப்பட வேண்டியதே. 'புதிதாக வேலைக்கு வரும் பெண்களுக்கு விரும்பாத காதலும், அதைச் சமாளிப்பதும்கூட பிரச்சனைதான்" ஜெகனின் வலி எனக்குப் புரியும். எனக்கும் இருந்தது. அதற்காக: பெண்ணின் பக்கத்தில் இப்படியும் ஒரு ஞாயம் இருக்கலாம் என்றே எனக்குப் பட்டதைச் சொன்னேன். மற்றும்படி சும்மா ஒரு செய்தியை வைத்துத்தான் நான், நீங்கள், நெடுக்ஸ் எல்லோரும் விமர்சித்துக் கொண்டிருக்கிறோம். யாணையைப் பார்த்த குருடர்போல்....

  • கருத்துக்கள உறவுகள்

நான், நீங்கள், நெடுக்ஸ் எல்லோரும் விமர்சித்துக் கொண்டிருக்கிறோம். யாணையைப் பார்த்த குருடர்போல்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.