Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினர் கிளிநொச்சியை நெருங்கிவிட்டதால் எதிர்கால இலக்குகள் சவாலாகவே இருக்கும் - இராணுவத் தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினர் கிளிநொச்சியை அண்மித்த பகுதிகளில் நிலைகொண்டுள்ளதால் தமது எதிர்கால இலக்குகள் மிகவும் சவால்கள் நிறைந்ததொன்றாக இருக்குமென இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

துணுக்காய், உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் ஆகிய பிரதேசங்களை படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து களநிலைவரங்கள் தொடர்பான உண்மை நிலைவரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா வன்னி படைத் தலைமையகத்துக்கு சென்றதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வன்னிப் படைத் தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை வன்னியின் 21ஆம் கட்டளைப் பிரிவு அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வரவேற்றார்.

மேலும் வன்னி இராணுவத் தலைமையகத்தில் அப்பிராந்தியத்துக்கான சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த இராணுவத் தளபதி, இப்படை நடவடிக்கைகளில் இராணுவத்தினர் வெற்றிபெற்றுள்ளதை வெகுவாக வியந்து பேசியுள்ளார்.

அங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்;

வன்னியில் நடைபெற்ற மனிதநேய இராணுவ நடவடிக்கைகளில் படையினர் வெற்றிகொண்டுள்ளதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அத்துடன் இராணுவம் கிளிநொச்சியை அண்மித்த பகுதிகளிலேயே தற்பொழுது நிலைகொண்டுள்ளது. அதனால் எமது எதிர்கால இலக்குகள் மிகவும் சவால் நிறைந்ததாகவே இருக்கும்.

இருந்தாலும் அதனையும் வெற்றிகொள்வோமென்பதில் நாம் உறுதியாகவுள்ளோம். படையினர் ஒவ்வொருவரும் மிகுந்த மனவலிமையுடனேயே காணப்படுகின்றனரெனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வன்னிப் பிராந்தியத்துக்கான தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும் வன்னி களநிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளித்தார் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

http://swissmurasam.info/content/view/8719/26/

ஒரு அடி பின்வாங்குவதுபோல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயம் சவாலாக இருக்கும் அதுவும் இரத்த வெறிபிடித்த சிறிலங்கா படையினருக்கு புதைகுழியாக அமையும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயம் சவாலே தான்! ஒரு அடி வாங்கிய பொன்சேகா மறு அடிக்கும் விவைவில் தயாராகவே இருத்தல் வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றுதவறுகளில் இருந்து பாடம் படிக்காதனாலேயே "வரலாறு மீண்டும் மீண்டும் நிகழும் முதல் தடவை அது ஒரு துன்பியல் இரண்டாம் தடவை அதுவே ஓர் கேலிக்கூத்தாகும்"

முதலில் ரத்வத்தை இப்ப சரத்

சிங்களத்தளபதி போரியல் மேதை சன் சூவின் "பலமாக இருக்கும் போது பலவீனமாக இருப்பது போல் காட்டிக்கொள்,பலவீனமாக இருக்கும் போது பலமாக இருப்பது போல் காட்டிக்கொள் என்ற பால பாடத்தையே மறந்து விட்டார்".

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் கற்றுக்கொள்வார்

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்னு கற்க இன்னும் நிறைய உண்டு.

என்னப்பா உது..? கசாப்பு கடைக்காறன் மாதிரியே பேசுறார்..??? உவர் உண்மையிலையே இராணுவ தளபதிதானோ...???

எனக்கு சந்தேகம் என்ன எண்டால் 1000 கணக்கிலை புலிகளை கொண்று, இடங்களையும் பிடிச்சிட்டார்.. பிறகு என்ன கஸ்ரம்..???

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா உது..? கசாப்பு கடைக்காறன் மாதிரியே பேசுறார்..??? உவர் உண்மையிலையே இராணுவ தளபதிதானோ...???

எனக்கு சந்தேகம் என்ன எண்டால் 1000 கணக்கிலை புலிகளை கொண்று, இடங்களையும் பிடிச்சிட்டார்.. பிறகு என்ன கஸ்ரம்..???

அது தானே தயா அண்ணா, நேரே கிளிநொச்சி பஸ்ராண்டிலை போய் நிண்டு விசிலடிச்சு கூப்பிட மகிந்த வேட்டியை மடிச்சுக்கட்டிக்கொண்டு வரமாட்டார்.? :)

இராணுவத் தளபதியை இனியாவது உண்மை பேசுவதற்கு அனுமதியுங்கப்பா.

நிச்சயம் சவாலாக இருக்கும்...

இப்ப மழையும் தொடங்க தென்பகுதியில இப்வே வெள்ளைக் கொடியளை ஓடர் கூடுக்க சொல்லுறியள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.