Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் திருமணம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமண்ம் நுறாவது பதிவு .இது போதுமா இன்னும் தெவையா ?

  • Replies 133
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nedukkalapoovan

நிஜமென்று நினைத்து ஆர்வமாய் படித்திருக்க அதை அகர வரிசையில் கனவாக்கிய விதம் மிக நன்று. வாழ்த்துக்கள்.

இளங்கவி

நன்றி இளங்கவி.

இவ்வளவு பக்கங்கள் ஓடிவிட்ட பின்னும் மூலக் கவியைப் படித்திருப்பது.. உங்கள் ஆர்வத்தைக் காட்டுகிறது..! :)

திருமண்ம் நுறாவது பதிவு .இது போதுமா இன்னும் தெவையா ?

பொன்னியர் தொடர்ந்தால் தொடர்வதுதான்..! :D

நெடுக்ஸ் காதலித்து பார்

வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே

செத்துக்கு கொண்டே வாழவும் முடியுமே, அதற்காவேனும்.

காதலித்து பார்.

சம்பிராதயம் சட்டையை பிடித்தாலும்.

உறவுகள் உயிர் பிழிந்தாலும்

காதலித்து பார்

சொர்க்கம், நரகம் இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார்

வாழும் போதே சாவு தேடி வரும்

செத்தால் கூட சொந்தம் என்று வராது காதல் சொந்தம்.

காதலித்து பார்.

சம்பிரதாயம் சட்டையை பிடித்தாலும்.

உறவுகள் உயிர் பிழிந்தாலும்

உனக்காய் காதல் இரங்காது ..!

காதலித்து பார்

நரகத்தில் உழல்வது இங்கேயே நிச்சயம்.

Edited by nedukkalapoovan

பிரிந்தவுடன் தான் தெரிகிறது

உன்னுடன் சேர்ந்திருந்து போடும்

சண்டையின் சுகம்

காதிலித்து பார்.

பிரிந்தவுடன் தான் தெரிகிறது

உன்னுடன் சேர்ந்திருந்து போடும்

சண்டையின் சுகம்

காதிலித்து பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி காதலித்து பார்.

தெரியும் உன் காதல்..

உன்னுடன் சேர்ந்திருந்தது

சண்டை மட்டும் போடவென்றே.

காதலித்து பார். :)

Edited by nedukkalapoovan

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்களே,

எறும்பூ ஒடி ஓடி கல்லும் கரையும் என்பார்களே,

ஆனால்,

குதிரையை குளத்தடிக்கும் கூட்டி போகலாம்

குளிக்கவும் வார்க்கலாம்

குடி தண்ணீர் பருக்க முடியுமா?

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

கழுதைக்கு கற்பூர வாசனை காட்ட முடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்களே,

எறும்பூ ஒடி ஓடி கல்லும் கரையும் என்பார்களே,

அது விசையின்

உராய்வின் விளைவுகள்.

காதல் போன்று கற்பனையல்ல.

குதிரையை குளத்தடிக்கும் கூட்டி போகலாம்

குளிக்கவும் வார்க்கலாம்

குடி தண்ணீர் பருக்க முடியுமா?

திணிக்க முடியாது.

தாகம் எடுத்தால்

குதிரை தானே குடிக்கும்.

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

நாய் வாலை நிமிர்த்த வேண்டாம்

நாய் கேட்கிறதா..நிமிர்த்து என்று.

அது இயற்கை.. அதற்கு அழகு.

கழுதைக்கு கற்பூர வாசனை காட்ட முடியுமா?

கழுதையும் ஏன் முகரனும் கற்பூரத்தை..

சாமியா ஆடுகிறது.

காதல் என்ற பெயரில்

மனிதர்கள் ஆடும்

பேயாட்டம் போலியாட்டம் போல..! :):wub:

Edited by nedukkalapoovan

என் வாலை நிமிர்த்து என்று நாய் கேட்கவில்லை

அது நாய்க்கு விருப்பமோ என்பதும்

எனக்கு தெரியாது. நாய்க்கு தெரிய கூடும்.

ஆனால் நான் காதலித்து பெற்ற இன்பம்

நெடுக்ஸ் பெறவேண்டும் என்பது எனது எண்ணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் வாலை நிமிர்த்து என்று நாய் கேட்கவில்லை

அது நாய்க்கு விருப்பமோ என்பதும்

எனக்கு தெரியாது.

நாய்க்கு தெரிய கூடும்...

நாய் விசயத்தை

நாய் பார்த்துக் கொள்ளட்டும்

மனிசனுக்கு என்ன வேலை நாயோடு..!

ஆனால் நான் காதலித்து பெற்ற இன்பம்

நெடுக்ஸ் பெறவேண்டும் என்பது எனது எண்ணம்.

பொறுங்கோ பொறுங்கோ

காலத்தின் போக்கில் தெரியும்..

இன்பமா துன்பமா என்று...

இருந்தும்..

இன்பமே ஆக வாழ்த்துக்கள்.

எனக்கு வேண்டாம் அந்த இன்பம்..

எனக்கு..

அது துன்பமே ஆகும்..! :wub:

Edited by nedukkalapoovan

இன்றைக்கோ நாளைக்கோ இழுக்குது சேடம்,

இதுக்கு பிறகு என்ன காலம்.

ஆனால் உனோடு நான் இருந்த ஓவ்வோரு மணித்துளியும்

மரணம் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கோ நாளைக்கோ இழுக்குது சேடம்,

இதுக்கு பிறகு என்ன காலம்.

ஆனால் உனோடு நான் இருந்த ஓவ்வோரு மணித்துளியும்

மரணம் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

காலத்தாலும் பொய்யான

உன் காதல்

மரணிக்கும் வரை மரிக்காது

உன் உயிர்..!

சேடமே பாவத்தின்

பதில்..! :wub:

வாவ் :(

என் திருமணம் நன்றாய் இருக்கு வாழ்த்துக்கள்.

இது போட்டி :mellow:

நெடுக்ஸ் பொன்னி இருவரும் அசத்துறீங்க அசத்துங்க :D

[நெடுக்ஸ் நான் உங்க பக்கம் எனக்கும் உந்த துர்நாத்தம் பிடிப்பதில்லை :huh: ]

மற்றவன் மணத்தை பற்றி கதைத்து

தம் மணத்தை மறைப்பவரும் உள்ளனர்.

Edited by பொன்னி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாவ் :D

என் திருமணம் நன்றாய் இருக்கு வாழ்த்துக்கள்.

இது போட்டி :mellow:

நெடுக்ஸ் பொன்னி இருவரும் அசத்துறீங்க அசத்துங்க :(

[நெடுக்ஸ் நான் உங்க பக்கம் எனக்கும் உந்த துர்நாத்தம் பிடிப்பதில்லை :huh: ]

நன்றி ராஜா.

உலகத்தைப் படிக்கிறவன்.. எவனும் காதலெனும் துர்நாற்றத்தை ஓரளவுக்கு மேல் சகித்துக் கொள்ளமாட்டான்..! :(

மற்றவன் மணத்தை பற்றி கதைத்து

தம் மணத்தை மறைப்பவரும் உள்ளனர்.

இப்படி அடுத்தவனைச் சொல்லியே..

தம் மணத்தை பரப்புவரும் உளர். :(

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ். சரி ஒருகக்கா தூர நின்று காதலிச்சு பாக்கிறது.சரி வந்தால் கிட்ட போய் மோகனம் பாடுறது.இல்லை என்றால் தொடர்ந்து இப்படியே முகாரி பாடுறதுதானே :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ். சரி ஒருகக்கா தூர நின்று காதலிச்சு பாக்கிறது.சரி வந்தால் கிட்ட போய் மோகனம் பாடுறது.இல்லை என்றால் தொடர்ந்து இப்படியே முகாரி பாடுறதுதானே :mellow:

ஏன்.. நான் நல்லாயிருக்கிறது பிடிக்கல்லையா. போதும் போதும்.. மோகனமும்.. முகாரியும்..! :(:huh:

ஏன்.. நான் நல்லாயிருக்கிறது பிடிக்கல்லையா. போதும் போதும்.. மோகனமும்.. முகாரியும்

பூக்கள் பூத்த செய்தி சோலை சொல்வதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் பூத்த செய்தி சோலை சொல்வதில்லை..

:lol: ஆகா ஆகா அசத்திறியள்.........எப்படி இப்படி எல்லாம்....... :D

:lol: ஆகா ஆகா அசத்திறியள்.........எப்படி இப்படி எல்லாம்....... :D

யாம் என்ன செய்வோம்,

உள்ளே நீராகரம் செல்கிறது

கவிதை மழை பொழிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் பூத்த செய்தி சோலை சொல்வதில்லை..

செய்தி சொல்லவல்ல பூக்களை சோலை கொண்டிருப்பது..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாம் என்ன செய்வோம்,

உள்ளே நீராகரம் செல்கிறது

கவிதை மழை பொழிகிறது.

கவிதைக்கு

காதல் என்பது பொய்...

புளிக்க வைத்த நீராகாரம்

பொழிகிறது கவி மழையாய்

என்பதே மெய்..!

காதலாவது

கவிதை தருவதாவது

அது தந்த வேதனை..

தேடியது நீராகாரம்

அதில் உளறியவை

தாம்..

காதல் கவிதை..! :):lol:

பூக்கள் பூத்த செய்தி சோலை சொல்வதில்லை..

செய்தி சொல்லவல்ல பூக்களை சோலை கொண்டிருப்பது..!

சில பேருக்கு அப்பம் எண்டால் புட்டு காட்ட வேணும்.

பூக்களை பார்த்து ரசிக்க வேணும் என்றால் நீங்கள் தான் சோலைக்கு போக வேணும்

சோலை உங்களை ஒன்றும் வெத்திலை பாக்கு வைத்து கூப்பிடாது என்பது தான் அதன் அர்த்தம்.

Edited by பொன்னி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில பேருக்கு அப்பம் எண்டால் புட்டு காட்ட வேணும்.

பூக்களை பார்த்து ரசிக்க வேணும் என்றால் நீங்கள் தான் சோலைக்கு போக வேணும்

சோலை உங்களை ஒன்றும் வெத்திலை பாக்கு வைத்து கூப்பிடாது என்பது தான் அதன் அர்த்தம்.

சோலை பூக்களைக் கொண்டிருப்பது.. நாங்கள் போய் பார்க்க வேணும் என்பதற்கல்ல. அது சோலையின் இயல்பு.. இயற்கை. நாம் தான்.. அதைத் தேடி ஓடிக்கிறம்..! அது அநாவசியமானதாகக் கூட இருக்கலாம். :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசியில் 2 பேரும் காதலித்துப் பார் என்கின்றீர்கள்.... சரி.... உங்க ஆசைக்காக காதலித்துத் தொலைகின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.