Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக மீனவர்களை காக்க பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடித

Featured Replies

தமிழக மீனவர்களை காக்க பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடிதம்

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதலுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி நேரடியாகவும் கடிதம் மூலமாகவும் பலமுறை தான் வலியுறுத்தி இருப்பதை குறிப்பிட்டுள்ளார். முதல்வர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 27 முறை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் தமிழக மீனவர்கள் 8 பேர் பலியாகி உள்ளனர்; மேலும் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுபற்றி சமீபத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் போது இலங்கை அதிபரின் கவனத்திற்கு எடுத்தச் சென்ற பின்னரும் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை; அதுமட்டுமின்றி சமீபத்தில் நாகப்பட்டினம் பகுதியில் மீன் பிடிக்க சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். இதுபற்றி இலங்கை தூதரகம் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றிற்கு கடிதம் அனுப்பியும் எந்த தீர்வும் காணப்படவில்லை.இந்நிலையில் நாகப்பட்டினம் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

ஆளும் கூட்டணி ஆட்சியில் கணிசமான ஆசனங்கள் இருந்தும் கடிதம் மூலம் இறைஞ்சும் அரசியல் சாணக்கியர்???!!!

"கெஞ்சினால் மிஞ்சுவார் மிஞ்சினால் கெஞ்சுவார்"

ஆதாரம் தினமலர்

Edited by ஔவையார்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதலை தடுத்து நிறுத்த இலங்கை அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை கோரி பலமுறை உங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். நேரிலும் இதுகுறித்து விவாதித்துள்ளேன். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உறுதி அளித்த பிறகும் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பயந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தயங்கி வருகின்றனர்.

கடந்த 2006 ஜனவரி முதல் இன்றைய தேதி வரை 27 முறை தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 24 மீனவர்கள் இறந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பாவி மீனவர்கள். இதே காலகட்டத்தில் சுமார் 342 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

சார்க் மாநாட்டின்போது இலங்கை அதிபருடன் தாங்கள் இதுகுறித்து பேசிய பின்னரும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்கின்றன. கடந்த 4-ம் தேதி நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த மீனவருக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் இலங்கை மீனவர்களிடம் நமது கடற்படையினர் காட்டும் பரிவை, நமது மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் காட்டுவதில்லை. எவ்வித எச்சரிக்கையும் செய்யாமல் கண்மூடித்தனமாக மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர். இது சர்வதேச கடல் சட்டங்களுக்கு எதிரானது.

எனவே, தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து இலங்கை அரசுடன் மீண்டும் பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

http://www.tamilseythi.com/tamilnaadu/karu...2008-09-07.html

  • கருத்துக்கள உறவுகள்
:) இதைவிட வேறு ஏதாச்சும் பிரியோசனமாக செய்ய முடியுமா இவரால் ? அந்தா இந்தா என்றவுடன் பிரதமருக்குக் கடிதம் அனுப்புவதோடு சரி, தன்ர காரியம் முடிந்து விட்டது என்று நினைக்கிறார் போல. என்ன செய்யுறது, இந்த வயசில எழும்பி நடக்கிறதே கஷ்ட்டம, அப்படியிருக்க கடிதம் ஒண்டு மினக்கெட்டு எழுதிறதெண்டால் சும்மாவா? மீனவர் உயிர்தானே?! இன்றைக்கு ஒன்று போனால், நாளைக்கு இன்னொன்று போகும். என்ன அவசரம்? ஆறுதலா வாசித்து பதில் எழுதினாலும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். சாவது ஒன்றும் அப்படி முக்கியமான உயிர் இல்லையே? தமிழ்நாட்டு மீனவன் உயிர்தானே??????
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் அடுத்தவர் எல்லாரையும் வெண்டவர் இவரிட்ட இருந்து முதல் பேனையையும் கடதாசியையும் பறிச்சு வைக்கணும் இல்லாவிட்டால் கடிதம் கவிதை என்று ஏதாவது தேவையில்லாமல் செய்துகொண்டிருப்பார் :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அடுத்தவர் எல்லாரையும் வெண்டவர் இவரிட்ட இருந்து முதல் பேனையையும் கடதாசியையும் பறிச்சு வைக்கணும் இல்லாவிட்டால் கடிதம் கவிதை என்று ஏதாவது தேவையில்லாமல் செய்துகொண்டிருப்பார் :lol::)

சுப்பண்ணை , நீங்கள் வேறை , அவர் முந்தி அனுப்பின கடிதங்களைத்தான் திகதியை மாத்திப்போட்டு அதையே திருப்பி , திருப்பி அனுப்புவதாக கேள்வி . :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை , நீங்கள் வேறை , அவர் முந்தி அனுப்பின கடிதங்களைத்தான் திகதியை மாத்திப்போட்டு அதையே திருப்பி , திருப்பி அனுப்புவதாக கேள்வி . :o

அப்படியோ சங்கதி :) ? இருக்கலாம் அப்ப கவிதை எல்லாம் எங்க இருந்து எடுக்கிறார் கலிங்கத்து பரணியில இருந்தோ. எது என்னவோ இந்த பனம்பழத்துக்கு கறுப்பு கண்ணாடி போட்டவர் இருக்குமட்டும் தமிழகத்துக்கு விடிவு இல்லை. நானும் தமிழக நண்பர்களோடு கதைக்கேக்க சொன்னன் என்னடாப்பா உவர் தன்னை அடிக்கடி கடலில தூக்கி போடுங்கோ என்று சொல்லிட்டு இருக்கிறார் ஒருக்கா தூக்கி போடுங்கோவன் என்று அதுக்கு அவையள் சொல்லிச்சினம் இல்லை சுப்பண்ணை தமிழகமும் ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலைவந்தால் அவரை தூக்கி கடலில போட்டு அதில்தான் எங்கட தற்கொலைப்படை போய் மத்தியரசை தாக்கும் என்று (சிறி அவர்சொன்னதில கனக்க உள் விசயங்கள் இருக்கு விளங்குதோ :lol::o )

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தெரிகிறதே கையாலாகாத முதல்வர் கருணாநிதி தமிழக மீனவர்களே உங்களது பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள் உதவாத முதல்வர் எதற்காக ???.............

ஒரு கடிதம் எழுதினேன் ........ அதில் என் மனுவை (??) அனுப்பினேன்........

விரைவில் டில்லி வருவேன்........ ஒரு பூச்செண்டுடன் வருவேன்........

கூட்டணி ............ இது தான் கூட்டணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மீனவர்களை காக்க பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடிதம்

அப்ப கவிதை ஒண்டும் எழுதேல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை , நீங்கள் வேறை , அவர் முந்தி அனுப்பின கடிதங்களைத்தான் திகதியை மாத்திப்போட்டு அதையே திருப்பி , திருப்பி அனுப்புவதாக கேள்வி . :D

திறமையான பதில்

ஒரு வரியில் எத்தனை அர்த்தங்கள்.........

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதிக்கு ஒரு அட்வைஸ்:

கடிதம் எழுதுறத்துக்கு எங்களிட்ட ஒரு திறமான ஆள் இருக்கிறார். அவரிட்ட கேட்டீங்கெண்டா விதம் விதமா, பக்கம் பக்கமா எழுதித் தருவார். அண்ணாத்தை கடிதம் எழுதாத உலகத் தலைவர்களே கிடையாது.

Mr. கருணாநிதி: சகிப்புத்தன்மைக்கு பரிசுபெற்ற அந்த ஆனந்தமானவற்றை details வேணுமெண்டால் என்னை தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரியே நம?????????

கருணாநிதிக்கு ஒரு அட்வைஸ்:

கடிதம் எழுதுறத்துக்கு எங்களிட்ட ஒரு திறமான ஆள் இருக்கிறார். அவரிட்ட கேட்டீங்கெண்டா விதம் விதமா, பக்கம் பக்கமா எழுதித் தருவார். அண்ணாத்தை கடிதம் எழுதாத உலகத் தலைவர்களே கிடையாது.

Mr. கருணாநிதி: சகிப்புத்தன்மைக்கு பரிசுபெற்ற அந்த ஆனந்தமானவற்றை details வேணுமெண்டால் என்னை தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு கடிதம் அனுப்பினேன் அதில் தமிழ்நாட்டு மீனவர் உயிரை அனுப்பினேன்.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.