Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கட்டழகி தந்த காயம்....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டழகி தந்த காயம்....

கவிதை......

என் பார்வையில் மயங்கி

பதிலுக்கு சிரித்தாள்

நானும் சிரித்தேன்........

பக்கத்தில் வந்தாள்

நானும் மகிழ்ந்தேன்......

தன் பெயர் கூடச் சொன்னாள்

என் பெயர் நானும் சொன்னேன்.....

ஓர் நாள் பழக்கத்தில்

ஓர் உடல் ஆனோம்......

ஒன்றாகக் கை கோர்த்து

பூங்காவில் நடந்தோம்.....

சந்தோசத்தில் நாம்

எமை மறந்து நடக்க....

கால் தடம் புரண்டு

அவள் ஆற்றினில் விழுந்தாள்......

எனக்கு நீச்சல் தெரியாது

இருந்தும் என் உயிரைக்காக்க

ஆற்றினில் குதித்தேன்...

என்னால் நீச்சல் முடியாமல்

நீரின் மேலுக்கு வந்தேன்...

தண்ணீரில் விழுந்த

வலியும் தாங்காமல்

என் மூக்கிலிருந்து

நீரை எடுத்தேன்...

என்னால் முயன்று பார்த்தும்

நீரில் எழுந்திட முடியல்லை....

கதறி விட்டு

நீந்த முயன்றேன்

எப்படி முடியும்

என்னால் நீந்த....

நீரிலல்லவா நீந்த முடியும்

நிலத்திலே எப்படி

அது என்னால் முடியும்......

கனவிலே வந்த

கட்டழகி அவளால்

கட்டிலிலிருந்து நிலத்திலே குதித்து

என் நிமிர்ந்த மூக்கில்

காயமும் பட்டேன்.....

இவர்கள் கனவிலும் எம்மை

காயப் படுத்துவரென

அவர்களைக் கடிந்து கொண்டு

என் காயத்திற்கு

மருந்து போட்டேன்.....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் எட்டி உதைக்க வில்லை உதைத்தால் கால் இல்லையாக்கும்

நல்லாத்தான் நீந்தி இருக்கிறீர்கள் காயம் பலமோ <_<:unsure::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவருக்கு

இதெல்லாம் வாழ்க்கையில சகஜம்...ம.ப்..பா <_< நல்ல காலம் கதவைத் திறந்துகொண்டு ஜன்னலால வெளியில குதிக்காததற்கு சந்தோசப் படுங்கோ....

இளங்கவி

என் காயத்திற்கு

மருந்து போட்டேன்.....

உதுக்கு தான் சொல்றது பெண்ணா பார்த்து கனவு காண வேண்டும் என்று... அவவே மருந்தும் போட்டிருப்பா... <_<

(கனவில தான்...)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

To

millikai vaasam

நேரில் கண்டு கனவு கண்டிருந்தால் சிலவேளை அடி பலமாகவல்லவா விழுந்திருக்கும், கனவென்ற படியால் கட்டிலுக்கும் நிலத்திற்கும் தூரம் கொஞ்சம் என்றபடியால் மூக்கோடை போச்சு அல்லவா... <_<

ரசித்ததர்கு நன்றி.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

அடச்சீ வெறும் பல்லோட போட்டுதே.அடுத்த முறை பலமான காயம் பட வாழ்த்துக்கள் <_<

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் கனவு வாற நாட்களில நிலத்தில படுக்கவும்!!! <_<:unsure:

To

millikai vaasam

நேரில் கண்டு கனவு கண்டிருந்தால் சிலவேளை அடி பலமாகவல்லவா விழுந்திருக்கும், கனவென்ற படியால் கட்டிலுக்கும் நிலத்திற்கும் தூரம் கொஞ்சம் என்றபடியால் மூக்கோடை போச்சு அல்லவா... <_<

ரசித்ததர்கு நன்றி.

இளங்கவி

மன்னிக்கவும், முதல் எழுதிய கருத்தில் ஒரு சொல்லை தவறவிட்டிட்டன்.

இதுக்கு தான் சொல்றது Doctor பெண்ணா பார்த்து கனவு காண வேண்டும் என்று. அவவே காயத்துக்கு மருந்தும் போட்டிருப்பா...

(Doctor என்ற சொல் தவறவிடப்பட்டது)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் வாழ்த்துக்கள் என்னைப் போன்ற பல உள்ளங்களுக்கும் பலிக்கவேண்டும் என கடவுளைப் பிரார்த்திக்கொண்டு '' யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்'' என வாழ்த்திக்கொண்டு உங்கள் கருத்துக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.

இளங்கவி

suvi

அந்தக் கறுமம் தான் எப்ப வருமென்று தெரியாதே... <_< . அல்லது முதலிலே நிலத்தில படுத்திருக்க மாட்டேன். கருத்துக்கு நன்றி suvi

இளங்கவி

உங்கள் வாழ்த்துக்கள் என்னைப் போன்ற பல உள்ளங்களுக்கும் பலிக்கவேண்டும்.

'' யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்'' என வாழ்த்திக்கொண்டு

அட இது வேறையா...?

இனி ஒரு முதலுதவிப்பெட்டியை கட்டிப்பிடிச்சுக்கொண்டு தான் படுக்க வேணும் போல...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்லிகை வாசத்திற்கு

ஏற்கனவெ உருவம் அப்படி இப்படி... அதில மூக்கை வேற உடைச்சுகொண்டு வருகுது.. இதுக்கு வைத்தியம் பார்க்கிற நேரம் ஆஸ்பத்திரிக்கு போனாலென்றாலும் கொஞ்ச காசு உழைகெல்லாம் என்று டாக்டர் பெண்ணு போயிடுவா....

எனக்கு பிறைவேற் கிளினிக்குக்கு போறதுக்கெல்லாம் காசு இல்லையப்பா..... <_< , சும்மா பொண்ணே போதுமப்பா.... :unsure:

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இளங்கவி , /........

..இது இரவுக்கனவோ ,அதிகாலை கனவோ ? அதிகாலை கனவு பலிக்கும் என்பார்கள் . . எதற்கும் ஜாக்கிரதை ,......

.. தண்ணீர் பக்கம் போகும்போது .....? ???????

Edited by nillamathy

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாழ்த்துக்கள் என்னைப் போன்ற பல உள்ளங்களுக்கும் பலிக்கவேண்டும் என கடவுளைப் பிரார்த்திக்கொண்டு '' யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்'' என வாழ்த்திக்கொண்டு உங்கள் கருத்துக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.

இளங்கவி

suvi

அந்தக் கறுமம் தான் எப்ப வருமென்று தெரியாதே... :lol: . அல்லது முதலிலே நிலத்தில படுத்திருக்க மாட்டேன். கருத்துக்கு நன்றி suvi

இளங்கவி

யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்று சொல்ல கூடாது ஏனென்றால் கனவு கண்டது நீங்கள் ஆதலால்

யான் பெற்ற இன்பம் எனக்கே என்று மாற்றுங்கள் :unsure::lol:<_<:unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை ஒரு நண்பர் வாழ்த்த அவரின் வாழ்த்துக்களை எல்லோருக்கும் பிரிச்சு கொடுத்திட்டேன் அல்லவா, கொடுத்ததை திருப்பி வாங்குவது தமிழனுக்கு அழகில்லை அல்லவா.....

எனவே எதற்கும் ஒரு முதலுதவிப் பெட்டியோட படுங்கோ அது எல்லாத்துக்கும் நல்லது... <_<:unsure:

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவரே

நான் கனவு காண்போருக்காகத்தான் அப்படிச் சொன்னேன், நீங்கள் தான் தவம் இருக்கிறவராச்சே....

உங்களுக்கு அது பொருந்தாது.... :lol: .

''எள்ளு என்றாலும் ஏழாய் பிரி'' நல்லதுக்கு மட்டும் பொருந்தினால் தப்பு, கெட்டதற்கும் அதைப்பொருத்தவெண்டும்.... :unsure:<_<:unsure:

இளங்கவி

நிலாமதி அக்காவிற்கு

இது இரவுக்கனவுதான், பெரிசாய் பயப்பிடுகிறத்துக்கு ஒன்றும் இல்லை அக்கா....

எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.....

நன்றி நிலாமதி அக்கா..

இளங்கவி

கட்டழகி தந்த காயம் வலித்தாலும்..ம் அவளை நினைக்கையில் காயங்கள் ஆறிவிடுகின்றன என்ன இளம்கவி அண்ணா..ணா..??.. :lol:

மனதில் நின்ற வலியை கவிதையாக்கியதில்..ல் தங்களின் வலி விளங்குகிறது..காயங்கள் ஆற நாட்கள் எடுப்பதில்லை அல்லவா..வா..

பொறுத்திருங்கள்.. :o

வாழ்த்துகள் காயதிற்கு இல்ல..ல காயத்தால் உண்டான கவிக்கு..கு..!! :wub:

என் காயத்தில்

தெரிவது கூட

அவளின்

முகம் தான்..

அது தான்

காயம்

வலிக்கிறது..!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு பேபிக்கு

வலியால் வந்த கவிக்கும் வாழ்த்துச் சொல்லி அந்த வலியையும் உங்கள் கவியால் வருடிவிட்ட ஜம்மு பேபிக்கு எனது நன்றிகள்.

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.