Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விஜயகாந்த்தை எதிர்த்து தேர்தலில் போட்டி - வடிவேலு அதிரடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: ஒரு இடத்தில் ஜெயித்ததற்கே இந்த அளவுக்கு விஜயகாந்த் வன்முறையில் ஈடுபட்டால், நாளைக்கு பத்து இடத்தில் ஜெயித்தால் இந்த நாடு என்னாகும் என்று பயமாக இருக்கிறது. அவருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் எனக்கும் தான் இருக்கிறது. அவர் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன். நானா, விஜயகாந்த்தா பார்த்து விடலாம் என்று நடிகர் வடிவேலு அதிரடியாக கூறியுள்ளார்.

நடிகர் வடிவேலுவுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடுகளும், அதுதொடர்பான மோதல்களும் இருந்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்த் வீட்டுக்கு வந்தவர்கள், வடிவேலு அலுவலகம் காரை நிறுத்தியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும மோதல் ஏற்பட்டு, அதில் வடிவேலு சரமாரியாக தாக்கப்பட்டார்.

இதுதொடர்பாக போலீஸில் விஜயகாந்த் மேலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இன்று வடிவேலு சாட்சியம் அளிக்கவுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை 50க்கும் மேற்பட்டோர் 20க்கும் மேற்பட்ட பைக்குகள், ஆட்டோக்களில் சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீட்டுக்கு வந்தனர்.

பின்னர் வடிவேலு வீட்டின் மீது கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டனர். வீடு மற்றும் அலுவலகம் மீது சரமாரியாக பெரிய பெரிய கற்களை வீசி அடித்ததில் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள், வீட்டின் வரவேற்பரையில் இருந்த ஷோகேஸ் ஆகியவை உடைந்து சிதறின.

வீட்டுக்குள் இருந்தவர்கள் மீதும் கற்கள் விழுந்ததில் வடிவேலு வீட்டினரில் ஒருவர் காயமடைந்ததாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக வடிவேலு உள்ளிட்டோர் உயிர் தப்பினர்.

இந்த கொலை வெறித் தாக்குலைப் பார்த்து அந்த தெருவே பரபரப்பாகியது. அனைவரும் தெருவில் கூடிவிட்டனர். சிறிது நேர தாக்குதலுக்குப் பின்னர் அந்த கும்பல் வந்த வண்டிகளில் திரும்பி விட்டது.

போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து வடிவேலு கூறுகையில், 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். வந்தவுடன் கற்களை எடுத்து வீட்டின் மீதும், அலுவலகம் மீதும் சரமாரியாக வீசினர். தொடர்ந்து வீசிக் கொண்டே இருந்தனர். பக்கத்து வீடுகளிலும் போய் கற்கள் விழுந்தன.

என் தலைவனை எதிர்த்து விட்டு வாழ்ந்து விடுவாயா என்று கோபத்துடன் கூறியபடி கற்களால் தாக்கினர்.

'எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போகிறார்?'

நான் ஒரு நகைச்சுவை நடிகன். என்னை தாக்கி விட்டு எந்தக் கோட்டையை இவர் பிடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. என்னை அடித்துதான் இவர் கோட்டையைப் பிடிக்க வேண்டுமா?.

ஒரு இடத்தில்தான் ஜெயித்திருக்கிறார். அதற்கே இப்படியா?. என்னை எதற்காக குறி வைக்கிறார் என்று தெரியவில்லை. கடந்த ஒரு வருடமாகவே என்னை தாக்கி வருகிறார்கள். பலமுறை கொலை மிரட்டல்கள் விடுத்துள்ளனர். இதையெல்லாம் நான் வெளியில் சொல்லாமல் இருக்கிறேன்.

நான் காமெடி நடிகன். ரவுடி அல்ல. ஜனங்களை சிரிக்க வைப்பது மட்டுமே எனது தொழில். ஜனங்கள்தான் எனது கடவுள். கல் வீசியவர்களுக்கும், அதைத் தூண்டியவர்களுக்கும் மக்கள் சரியான பாடம் கற்றுக் கொடுப்பார்கள்.

எனக்கு இந்த உலகிலேயே ஒரேயொரு எதிரிதான் இருக்கிறார். வேறு யாரும் எனக்கு எதிரிகள் இல்லை. அஜீத் படத்தை வைத்திருந்தார்கள் என்று கூறுகிறார்கள். அது திசை திருப்பும் செயல்.

'நானா, விஜயகாந்த்தா பார்த்து விடுவோம்'

விஜயகாந்த்தான் என்னைக் கொலை செய்ய ஆளை அனுப்பியுள்ளார். கடந்த ஒரு வருடமாகவே இதை அவர் செய்து கொண்டிருக்கிறார்.

மக்கள் செல்வாக்கு என்று நீ கூறுவாயானால் எனக்கும்தான் மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அடுத்த தேர்தலில் நீ எங்கே வேண்டுமானாலும் போட்டியிடு. நான் உன்னை எதிர்த்துப் போட்டியிடுகிறேன். மக்கள் செல்வாக்கு எனக்கா, விஜயகாந்த்துக்கா என்று பார்த்து விடுவோம்.

நீ ஒரு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறாய். நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். அத்தனை கட்சிகளின் ஆதரவுடனும் உன்னை எதிர்த்துப் போட்டியிடுவேன். பார்த்து விடலாம்.

என்னை ஆள் வைத்து அடிச்சீல்ல, உனக்கு எந்தத் தகுதியும் இல்லை. நான் உன்னை எதிர்த்துப் போட்டியிடுகிறேன். அதில் நீ ஜெயித்து விட்டால் இந்த தமிழ் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்.

ஒரு இடத்தில் ஜெயித்ததற்கே இந்த அளவுக்கு வன்முறை என்றால், நாளைக்கு பத்து இடத்தில் ஜெயித்து விட்டால் இந்த நாடு என்னாகுமோ என்று பயமாக இருக்கிறது என்றார் வடிவேலு கோபத்துடன்.

நன்றி தற்ஸ் தமிழ்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகர் வடிவேலு அரசியலில் குதிப்பதற்காகவும் விஜயகாந்iத கேவலப்படுத்துவதற்காகவும் நடந்துள்ள திமுக வின் கீழ்த்தரமான அரசியல் கூத்து.

இது யாருடைய கூத்தாகவும் இருக்கட்டும்.. ஆனால் வடிவேலுவின் கோபத்திலும் கேள்வியிலும் நியாயம் உள்ளது..!!

அப்ப வடிவேலும் வந்திட்டா பகிடிக்குப்பஞ்சம் இருக்காது...

  • கருத்துக்கள உறவுகள்

ஏதும் திரைப்படம் என்று நினைத்துவிட்டாரோ வடிவேலு .

சும்மா இருந்த வடிவேலை உந்த பத்திரிகைகாரங்கள் உசுப்பேத்தி உசுப்பேத்தி, உண்மையிலயே

ரணகளமாக்க போறாங்க , உந்த செய்தியே கொஞ்ச நாளைக்கு பத்திரிகைய நிரப்ப காணும் .

அப்ப வடிவேலும் வந்திட்டா பகிடிக்குப்பஞ்சம் இருக்காது...

மற்றவங்களிலும் திறமையாக பகிடிவிட.. வடிவேலு கஸ்டப்பட வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்!! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசயகாந்தை வடிவேலோடை சமநிலைப்படுத்த ஆரோ முயற்சி செய்யினம் போலை கிடக்கு :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் என்ன மகாத்மாவா?-வடிவேலு

சென்னை: தன்னை ஏதோ மகாத்மாவுக்கு அடுத்தவர் போலவும், மற்றவர்கள் எல்லாமே கெட்டவர்கள் போலவும் விஜயகாந்த் பேசுகிறார். முதல்வரையும், காவல்துறையும் அவர் மிகக் கேவலமாக விமர்சித்துள்ளது கண்டனத்துக்குரியது என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

வடிவேலு விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த், முதல்வர் கருணாநிதியையும், காவல்துறையையும் கடுமையாக விமர்சித்தார்.

இதுகுறித்து வடிவேலு இன்று நிருபர்களிடம் பேசுகையில்,

முதல்வர் என்ன சும்மாவா இருக்கிறார். அவருடைய பணிச்சுமை அனைவருக்கும் தெரியும். என்னைத் தூண்டி விடவா அவருக்கு நேரம் இருக்கிறது.

விஜயகாந்த் ஏதோ மகாத்மாவுக்கு அடுத்து தான்தான் என்பது போல பேசுகிறார். மற்றவர்கள் எல்லாமே கெட்டவர்கள் என்பது போல பேசுகிறார்.

என்னை அடிக்கத் தூண்டியது விஜயகாந்த்தான். அவர் அனுப்பிய ஆட்கள்தான் என்னைக் கொலை செய்ய முயற்சித்தனர். இதுதான் சார் உண்மை. இதில் எந்தப் பொய்யும் இல்லை.

இதில் முதல்வரை ஏன் இழுக்கிறார், அரசியலுக்கும், இதற்கும் என்ன சம்பந்தம். ஏன் இந்தப் பிரச்சினையை அவர் அரசியலாக்கப் பார்க்கிறார்.

நான் கூறிய புகார்களுக்கு இதுவரை அவர் பதிலே சொல்லவில்லை. நான் கோர்ட்டுக்குப் போகக் கூடாது என்று நினைத்து இந்த செயலை செய்தனர். ஆனால் நான் கோர்ட்டுக்குப் போனேன். அவர்கள்தான் யாரும் வராமல் ஓடிப் போய் விட்டார்கள். இப்போது மாஜிஸ்திரேட் வாரண்ட் பிறப்பித்துள்ளார்.

விஜயகாந்த் தனது ரவுடியிசத்தை என்னிடம் காட்டக் கூடாது. நான் அதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்.

எனது வீட்டை தாக்கத் தூண்டியது விஜயகாந்த்தான். அவர் அனுப்பிய ஆட்கள்தான் எனது வீட்டைத் தாக்கினர். இதுதான் உண்மை.

இந்த விஷயத்தில் சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் முதல்வரையும், காவல்துறையினரையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் சரத்குமார் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயகாந்த் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். அதேபோல பல நடிகர், நடிகைகளும் என்னைத் தொடர்பு கொண்டு பேசி தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என்றார் வடிவேலு.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

சரியான (கறுப்புப்)போட்டி

வண்டி வைத்தவருக்கும்

கு.... வைத்தவருக்கும் இடையே போட்டி

பார்த்து மகிழ தமிழர்கள் தயாரா???

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா சினிமாவாகவே இருக்கட்டுமே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.