Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ணன் பிரபாகரன் வருத்தத்தில் இருக்கிறார் - இயக்குனர் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

pg3go0.jpg

ஈழத் தமிழர்களின் பிரச்னைக்காக தி.மு.க. அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ் இனம் என்ற ஒரே மையத்தில் அனைவரும் இணையாமல், அரசியல் காரணங்களுக்காக சில கட்சிகள் புறக்கணித்ததால் பிரபாகரன் வருத்தம் அடைந்துள்ளதாகக் கூறுகிறார் இயக்குநர் சீமான். அவரைச் சந்தித்தோம்.

``ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய, தி.மு.க. அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. `இது கண்துடைப்பு நாடகம்' என்று பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்தது. இதனைத் தொடர்ந்து ம.தி.மு.க., தே.மு.தி.க. பா.ஜ.க. ஆகிய கட்சிகளும் புறக்கணித்தன.

pg3ayq7.jpg

அ.தி.மு.க. எப்போதுமே ஈழத் தமிழர் பிரச்னையில் எதிர்ப்பு நிலையில்தான் இருந்துள்ளது. அவர்களோடு இணைந்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ம.தி.மு.க.வும் புறக்கணிப்பதாக வைகோ அறிவித்ததும், மருத்துவர் அய்யா ராமதாஸ் என்னைத் தொடர்பு கொண்டு, `ஈழத் தமிழர்களுக்காக வைகோவின் முடிவை மறுபரிசீலனை செய்து கூட்டத்தில் பங்கேற்கச் சொல்லவேண்டும்' என்று கூறினார்.

உடனே, நான் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்திக்க முயற்சி செய்தேன். அவர் மதுரையில் கட்சி நிதியளிப்பு விழாவில் இருப்பதாகத் தகவல் தெரிவித்தார். இதனால் அவரைச் சந்திக்க முடியவில்லை.

தமிழகத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகளைக் களைந்துவிட்டு, தமிழ் இனம் என்ற உணர்வோடு அனைவரும் ஒரே மையத்தில் இணைய வேண்டும் என்பதுதான் அண்ணனின் (பிரபாகரன்) ஆசை.

தமிழ் ஈழத்தின் கதவு மூடப்பட்டுள்ளது. அதனுடைய திறவுகோல் ஒவ்வொரு தமிழனிடத்திலும் உள்ளது. எனவே, நாம் ஒன்றுபட்டுத் திறக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.

இலங்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் தமிழன் மரணத்தைச் சந்தித்து வருகிறான். உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி அவதிப்பட்டுவருகிறான்.

இந்த நிலையில், தாய்த் தமிழகத்தில் இருந்து என்ன முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்து வருவதாக அங்கிருந்து தகவல் வருகிறது. ஆனால் இங்கோ, தி.மு.க. அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சில கட்சிகள் புறக்கணித்துள்ளன.

அ.தி.மு.க. புறக்கணித்ததில் வியப்பு இல்லை. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ புறக்கணித்ததுதான் உலகம் முழுவதும் உள்ள தமிழனின் நம்பிக்கையைக் குலைத்துள்ளது. வைகோவின் முடிவு கண்டு அண்ணன் (பிரபாகரன்) வருத்தம் அடைந்ததாக எனக்குத் தகவல் தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலைக்காக. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவும் தேவை என்ற நிலைப்பாடு கொண்டவர் அண்ணன். குறிப்பாக, ஆளும்கட்சியின் ஆதரவை எப்போதும் எதிர்பார்ப்பார்.

ஜெயலலிதா ஆட்சியின்போதுகூட, `அவர் ஏன் நம்மை வெறுக்கிறார்? நமது விடுதலைப் போராட்ட உணர்வை ஜெயலலிதாவிற்குப் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள்!' என்கிற ரீதியில்தான் பேசுவாராம். ஜெயலலிதாவிற்கு எதிரான நிலையை அண்ணன் பேசமாட்டாராம்.

தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால்தானே மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு ஏதாவது உதவ முன்வரும். இல்லையெனில், தேர்தல் கூட்டணிக் கணக்கை வைத்து காய் நகர்த்திச் சென்றுவிடும்.

தமிழகத்தில் ஒகேனக்கல் பிரச்னை, காவிரி பிரச்னைக்காக தமிழ்த் திரையுலகினர் மொழி, இனங்களைக் கடந்து தமிழர்களுக்காக ஒன்று திரண்டனர். தற்போது ஈழத் தமிழர்களுக்காக வரும் 19-ம் தேதி ஒன்று திரள்கின்றனர். இவர்களைப் போல், அரசியல்வாதிகளும் தங்களது கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுதிரண்டிருக்க வேண்டும்.

3bji3.jpg

முதல்வர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் டாக்டர் அய்யா தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினார். ஈழத் தமிழர்களுக்காக ஒன்று சேர அவர் கருணாநிதியின் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையா? நடிகர் சரத்குமார் ஏற்றுக் கொள்ளவில்லையா? அதுபோல், அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் புறக்கணிப்புக்குக் கூறிய கருத்தைக் கூட கூட்டத்தில் கலந்து கொண்டு அங்குதான் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், உலகிலுள்ள எல்லா நாடுகளும் நம்மை திரும்பிப் பார்த்திருக்கும்!'' என்றார் சீமான்.

படங்கள் : மீடியா ராமு

- இரா. முருகேசன்

-குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான எதிர்பார்ப்பு..!

ஜெயலலிதா ஆட்சியின்போதுகூட, `அவர் ஏன் நம்மை வெறுக்கிறார்? நமது விடுதலைப் போராட்ட உணர்வை ஜெயலலிதாவிற்குப் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள்!' என்கிற ரீதியில்தான் பேசுவாராம். ஜெயலலிதாவிற்கு எதிரான நிலையை அண்ணன் பேசமாட்டாராம்.

தலைவருக்கே உரிய தனித்துவம்..

..ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ புறக்கணித்ததுதான் உலகம் முழுவதும் உள்ள தமிழனின் நம்பிக்கையைக் குலைத்துள்ளது. வைகோவின் முடிவு கண்டு அண்ணன் (பிரபாகரன்) வருத்தம் அடைந்ததாக எனக்குத் தகவல் தெரிவித்தனர்.

****

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால்தானே மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு ஏதாவது உதவ முன்வரும். இல்லையெனில், தேர்தல் கூட்டணிக் கணக்கை வைத்து காய் நகர்த்திச் சென்றுவிடும்.

முற்றிலும் உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்

..ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ புறக்கணித்ததுதான் உலகம் முழுவதும் உள்ள தமிழனின் நம்பிக்கையைக் குலைத்துள்ளது. வைகோவின் முடிவு கண்டு அண்ணன் (பிரபாகரன்) வருத்தம் அடைந்ததாக எனக்குத் தகவல் தெரிவித்தனர்.

****

ஜானா

இது முற்றிலும் தவறான பார்வை..!

தமிழகத்தில் மக்கள் எழுச்சி பத்திரிகைகளின் எழுச்சி அரசியல் கட்சிகளின் எழுச்சி சினிமாத்துறை எழுச்சி மாணவ எழுச்சி.. என்று ஈழத்தமிழருக்கான குரல் பல்வேறு தளங்களில் இருந்து கிளம்பிக் கொண்டு இருக்கிறது. அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

ஆனால் தமிழக மக்களின் உள்ளூர் அரசியல் நிலவரம் என்பது வேறானது. சில தமிழகக் கட்சிகள் ஈழத்தமிழர் நலனை உச்சரித்தபடி.. தமது அரசியலைக் கொண்டு செல்ல முனைகின்றன. வைகோ போன்ற பொறுப்பு வாய்ந்த தலைவர்கள் அதற்கு இடம் கொடுக்காத வகையில் சில முடிவுகளை எடுக்கும் போது வெளிப்பார்வைக்கு.. அது பாதகம் போன்று தெரியினும்.. தமிழகத்தின் சொந்த அரசியல் நிலவரங்களின் தன்மையும் அதில் செல்வாக்குச் செய்யும் என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வைகோ.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனினும்.. அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது மட்டுமன்றி அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு மேலாக திடமான தனது தீர்மானங்களையும் முன் வைத்துள்ளார்.

பாமக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற போதும்.. தனியாகக் கூடி.. ஈழத்தமிழருக்கு தமிழீழமே தீர்வு என்று தீர்மானம் இயற்றி இருக்கிறது.

விஜயகாந்த் போன்றவர்கள் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காத போதும் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வரவேற்றுள்ளனர்.

அதிமுக வைப் பொறுத்தவரை.. அதன் தலைவர் ஜெயலலிதா.. புலிகள் வேறு.. ஈழப்பிரச்சனை வேறு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அது தவறான பார்வை என்பது அவருக்கே தெரியும். இருந்தும்.. தனது எதிர்கால அரசியல் கூட்டணிக்கு ஏற்ப அவர் அறிக்கை விடுகிறார். கலைஞர் ஆட்சியை அல்லது திமுகவை நெருக்கடிக்குள் தள்ளிவிட ஜெயலலிதா முனைகிறாரே தவிர அவரின் ஈழத்தமிழர் நலன் என்ற உச்சரிப்பு இன்னும் சந்தேகத்துக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. இருந்தாலும் அவரின் சில நிலைப்பாடுகளை வரவேற்கலாம். குறிப்பாக ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி இருப்பதை. ஆனால்.. அதை ஐக்கிய இலங்கைக்குள் புடுங்குவது என்பது.. ஜெயலலிதாவால் தான் முடியக் கூடிய காரியம்..!

திமுக வைப் பொறுத்தவரை அதுவும் 100% ஈழத்தமிழர் நலன் சார்ந்து கட்சி நகர்வுகளைச் செய்யவில்லை. அதிமுக மற்றும் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என்று பார்த்து தனது அரசியல் செல்வாக்கை தக்க வைக்க அல்லது உயர்த்த என்றும் சில கைங்கரியங்களைச் செய்கிறது. இருப்பினும் அதன் வெளிப்படையான காத்திரமான தீர்மானங்கள் ஈழத்தமிழர் நலனை உரக்கப் பேச வைக்கிறது என்ற அளவில் அதை வரவேற்க வேண்டியது நம் கடமை.

கலைஞரை இக்கட்டுக்குள் தள்ளுவது ஜெயலலிதா போன்றவர்கள் ஆதிக்கம் பெறுவது.. இப்போதைய சூழலில் ஈழத்தமிழருக்கு ஆபத்தானதே. இதே ஜெயலலிதா சந்திரிக்காவுடன் பகிரங்கமாகக் கூட்டு வைத்துச் செயற்பட்டவர். அந்தளவுக்கு கலைஞர் செயற்பட்டதில்லை எப்போதும்..!

எனவே தமிழகத்தில் எழுந்துள்ள பல மட்ட ஈழ ஆதரவு எழுச்சியை எமக்கு பலமாக்கிக் கொள்ள முனைவதுடன்.. புலம்பெயர் தேசங்களில் எமது எழுச்சியை இன்னும் பல மடங்கு அதிகரிக்க வேண்டும். யாழ்ப்பாணத்திலும் மக்கள் எழுச்சி இடம்பெற வேண்டும். அங்கு ஆமிக்காரனோடு சேர்ந்து தேரிழுக்கும் நிலை இருப்பது வருத்தமளிக்கிறது. அவற்றை எல்லாம் தவிர்த்து.. ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இருப்பை மக்கள் வெறுப்பதை இனங்காட்ட வேண்டும்.

அதைவிடுத்து.. ஈழத்தமிழருக்காக.. பல்வேறு இக்கட்டான காலக்கட்டத்திலும் குரல் தந்த வைகோ போன்ற உணர்வாளர்களை மட்டம் தட்டும் கருத்துக்களை தயவுசெய்து முன் வைக்காதீர்கள். வைகோ பட்ட கஸ்ரத்தில் 1% தானும் உங்கள் சொந்த மக்களுக்காக நீங்கள் பட்டிருக்க மாட்டீர்கள்..! :lol:

Edited by மோகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது முற்றிலும் தவறான பார்வை..!

தமிழகத்தில் மக்கள் எழுச்சி பத்திரிகைகளின் எழுச்சி அரசியல் கட்சிகளின் எழுச்சி சினிமாத்துறை எழுச்சி மாணவ எழுச்சி.. என்று ஈழத்தமிழருக்கான குரல் பல்வேறு தளங்களில் இருந்து கிளம்பிக் கொண்டு இருக்கிறது. அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

ஆனால் தமிழக மக்களின் உள்ளூர் அரசியல் நிலவரம் என்பது வேறானது. சில தமிழகக் கட்சிகள் ஈழத்தமிழர் நலனை உச்சரித்தபடி.. தமது அரசியலைக் கொண்டு செல்ல முனைகின்றன. வைகோ போன்ற பொறுப்பு வாய்ந்த தலைவர்கள் அதற்கு இடம் கொடுக்காத வகையில் சில முடிவுகளை எடுக்கும் போது வெளிப்பார்வைக்கு.. அது பாதகம் போன்று தெரியினும்.. தமிழகத்தின் சொந்த அரசியல் நிலவரங்களின் தன்மையும் அதில் செல்வாக்குச் செய்யும் என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வைகோ.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனினும்.. அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது மட்டுமன்றி அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு மேலாக திடமான தனது தீர்மானங்களையும் முன் வைத்துள்ளார்.

பாமக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற போதும்.. தனியாகக் கூடி.. ஈழத்தமிழருக்கு தமிழீழமே தீர்வு என்று தீர்மானம் இயற்றி இருக்கிறது.

விஜயகாந்த் போன்றவர்கள் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காத போதும் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வரவேற்றுள்ளனர்.

அதிமுக வைப் பொறுத்தவரை.. அதன் தலைவர் ஜெயலலிதா.. புலிகள் வேறு.. ஈழப்பிரச்சனை வேறு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அது தவறான பார்வை என்பது அவருக்கே தெரியும். இருந்தும்.. தனது எதிர்கால அரசியல் கூட்டணிக்கு ஏற்ப அவர் அறிக்கை விடுகிறார். கலைஞர் ஆட்சியை அல்லது திமுகவை நெருக்கடிக்குள் தள்ளிவிட ஜெயலலிதா முனைகிறாரே தவிர அவரின் ஈழத்தமிழர் நலன் என்ற உச்சரிப்பு இன்னும் சந்தேகத்துக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. இருந்தாலும் அவரின் சில நிலைப்பாடுகளை வரவேற்கலாம். குறிப்பாக ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி இருப்பதை. ஆனால்.. அதை ஐக்கிய இலங்கைக்குள் புடுங்குவது என்பது.. ஜெயலலிதாவால் தான் முடியக் கூடிய காரியம்..!

திமுக வைப் பொறுத்தவரை அதுவும் 100% ஈழத்தமிழர் நலன் சார்ந்து கட்சி நகர்வுகளைச் செய்யவில்லை. அதிமுக மற்றும் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என்று பார்த்து தனது அரசியல் செல்வாக்கை தக்க வைக்க அல்லது உயர்த்த என்றும் சில கைங்கரியங்களைச் செய்கிறது. இருப்பினும் அதன் வெளிப்படையான காத்திரமான தீர்மானங்கள் ஈழத்தமிழர் நலனை உரக்கப் பேச வைக்கிறது என்ற அளவில் அதை வரவேற்க வேண்டியது நம் கடமை.

கலைஞரை இக்கட்டுக்குள் தள்ளுவது ஜெயலலிதா போன்றவர்கள் ஆதிக்கம் பெறுவது.. இப்போதைய சூழலில் ஈழத்தமிழருக்கு ஆபத்தானதே. இதே ஜெயலலிதா சந்திரிக்காவுடன் பகிரங்கமாகக் கூட்டு வைத்துச் செயற்பட்டவர். அந்தளவுக்கு கலைஞர் செயற்பட்டதில்லை எப்போதும்..!

எனவே தமிழகத்தில் எழுந்துள்ள பல மட்ட ஈழ ஆதரவு எழுச்சியை எமக்கு பலமாக்கிக் கொள்ள முனைவதுடன்.. புலம்பெயர் தேசங்களில் எமது எழுச்சியை இன்னும் பல மடங்கு அதிகரிக்க வேண்டும். யாழ்ப்பாணத்திலும் மக்கள் எழுச்சி இடம்பெற வேண்டும். அங்கு ஆமிக்காரனோடு சேர்ந்து தேரிழுக்கும் நிலை இருப்பது வருத்தமளிக்கிறது. அவற்றை எல்லாம் தவிர்த்து.. ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இருப்பை மக்கள் வெறுப்பதை இனங்காட்ட வேண்டும்.

அதைவிடுத்து.. ஈழத்தமிழருக்காக.. பல்வேறு இக்கட்டான காலக்கட்டத்திலும் குரல் தந்த வைகோ போன்ற உணர்வாளர்களை மட்டம் தட்டும் கருத்துக்களை தயவுசெய்து முன் வைக்காதீர்கள். வைகோ பட்ட கஸ்ரத்தில் 1% தானும் உங்கள் சொந்த மக்களுக்காக நீங்கள் பட்டிருக்க மாட்டீர்கள்..! :lol:

நெடுக்ஸ் நீர் சொல்வது சரி

Edited by puspaviji

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதைவிடுத்து.. ஈழத்தமிழருக்காக.. பல்வேறு இக்கட்டான காலக்கட்டத்திலும் குரல் தந்த வைகோ போன்ற உணர்வாளர்களை மட்டம் தட்டும் கருத்துக்களை தயவுசெய்து முன் வைக்காதீர்கள். வைகோ பட்ட கஸ்ரத்தில் 1% தானும் உங்கள் சொந்த மக்களுக்காக நீங்கள் பட்டிருக்க மாட்டீர்கள்..! :lol:

மிகவும் உண்மை.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ புறக்கணித்ததுதான் உலகம் முழுவதும் உள்ள தமிழனின் நம்பிக்கையைக் குலைத்துள்ளது. வைகோவின் முடிவு கண்டு அண்ணன் (பிரபாகரன்) வருத்தம் அடைந்ததாக எனக்குத் தகவல் தெரிவித்தனர்.

*****

ஜானா

எமக்காகக் குரல் கொடுக்கும் நெடுமாறன், வை.கோ, திருமாவளவன் ,இராமதாஸ் போன்ற தலைவர்களை விமர்சிக்க வேண்டாம். இவர்கள் எக்காலத்திலும் எமக்காகக் குரல் கொடுப்பவர்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் சில நாடுகளில் தாயகத்துக்கு உதவி புரிகிற அமைப்புகளுக்கிடையே நடைபெறும் போட்டிகள் காரணமாக , ஒரு அமைப்பு வைக்கும் நிகழ்வுக்கு மற்றவர்கள் போகிறதில்லை. மற்றைய அமைப்பு வைக்கிற நிகழ்வுக்கு முதல் அமைப்பினர் செல்வதில்லை. ஏன் எங்களில் எத்தனை பேர் உங்கள் நாடுகளில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் செல்கிறீர்கள். மாவீரர் நிகழ்வு, பொங்குதமிழுக்கு செல்கிறவர்கள் சிலர் நாட்டுப்பற்றாளார் தினம், தியாகி திலீபன் தினம் செல்வதில்லை. சிட்னியில் பொங்குதமிழ், மாவீரர் நிகழ்வுகளுக்கு ஆயிரத்துக்கு மேல் மக்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால் மற்றைய தினங்களில் ஆயிரத்துக்கும் குறைவாகவே மக்கள் செல்கிறார்கள்.

கந்தப்பு சொன்னதற்கமைய அந்த தவைர்களை யாரும் தப்பான எண்ணத்தில் நினைக்கவேண்டாம். அவர்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்த வண்ணம்தான் இருக்கின்றார்கள். அது எதிர்காலத்தில் (நிறைய நாட்கள் இல்லை அடுத்த மாதம் மலரப்போகும் தமிழீழத்தில்) வெளிக்கொணரப்படும். ஈழத்தில் பிறந்து வளர்ந்த எமக்கு இருக்கின்ற உணர்வலைகளை விட அவர்களின் செயற்பாடுகளும் நம்பிக்கைகளும் உணர்வுகளும் எவ்வளவோ மேலானவை அவை எமக்கு தற்போதும் கிடைத்தவண்ணம் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய நாட்கள் இல்லை அடுத்த மாதம் மலரப்போகும் தமிழீழத்தில்

தேதி குறித்து விட்டார்களா? கிளிநொச்சிக்கு ஐயா ஆனந்தசங்கரி போவதற்கு ஆவலாய் இருக்கிறார். நீங்கள் இப்படிக் குண்டைத் தூக்கிப் போடுகிறீர்களே!

வைகோ போகாததை சரி எண்றும் சொல்லலாம், பிழை எண்டும் சொல்ல முடியும்.... ஆனால் அவர் தனக்கு சரி எண்டு பட்டதை செய்தார்...!!!!

ஈழவரை எப்போதும் எதிர்க்கும் ஜெயலலிதா அம்மையரை விலகி போய்விடாமல் பக்கத்திலேயே ஒரு புலி ஆதரவாய் இருப்பதும் நல்லதுதானே...!!

கலைஞர் கூட சொன்னாரே வராதவர்கள் தன்மீதுள்ள எதிர்ப்பினால்தான் வரவில்லையே ஒளிய வேறு ஒண்றும் இல்லை எண்று...

தேதி குறித்து விட்டார்களா? கிளிநொச்சிக்கு ஐயா ஆனந்தசங்கரி போவதற்கு ஆவலாய் இருக்கிறார். நீங்கள் இப்படிக் குண்டைத் தூக்கிப் போடுகிறீர்களே!

1-9 ்இலை வரவேற்பு வைத்து உடும்பு கறி போடுவினமோ....??

Edited by தயா

கட்டாயம் மலரும்.

நம்பிக்கைதான் வாழ்க்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.