Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படிக்க வேண்டும் வாழ்கை பாடம் ...............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படிக்க வேண்டும் வாழ்கை பாடம் ...............

என் வாழ்கை பயணத்தில் ஒரு நாள் ........உங்களையும் அழைத்து செல்கிறேன் . அரச படைகளின் ஆக்கிரமிப்புக்கு சற்று முந்திய காலம் ..நானும் என் மாமா மாமியும் ,மைத்துனி ,மச்சான் ,என் இரண்டு குழந்தைகளுமாக மன்னார் பகுதிக்கு அண்ண்மையில் உள்ள திரு தலத்துக்கு புனித யாத்திரை பயணமானோம் . அக்கால மினி வசு வண்டி ,கிட்ட தட்ட இருபத்தி ஐந்து பேர் கொள்ள கூடியது. யாழ் பட்டணத்தில் ஆரம்பமாகியது . நம் பயணம் . . கடைசி நேரத்தில் ஒரு முதியவர் ஓட வருகிறார் . சரி என்று அவரை முன் இருக்கையில் அமர்த்தி பயணம் புறப்பட " சளீர் " என்று ஒரு சத்தம் . எட்டி பார்த்த போது அப்போது பிரபலமான ஆணைகோட்டை நல்லெண்ணெய் போத்தல் . பயணம் புறப்பட்ட மாதிரி தான் . பின்னால் சில புறு புறுபுறுப்பு .சரி ,கண்டக்க்டர் (நடத்துனர் ) பெடியனும் ,சாரதியுமாக மீண்டும் அண்ண்மையில் உள்ள கோவிலில் தீப தூப ஆராதனை காட்டி , புறப்பட்டோம் .

பயணம் இனிமையாக இருந்தது. பிரபலமான சினிமா பாடல்களுடன் .தூர பயணமென்பதால் அதிக இறக்க ஏற்றம் இல்லை . என் வண்டுகள் இடையிடை பசி என்பதால் மச்சாள் உதவியுடன் ,சுடுநீர் போத்தல் பால் தயாரிப்பதும் ,அவர்கள் நித்திரை கொள்வதுமாக இருந்தார்கள் . இடையில் எனக்கு அண்மையில் நடத்துனர் பெடியன் .வந்து இருந்து .உடையாடிக்கொண்டு ,தேவையான் போது தாக சாந்தி ........வடை டீ போன்ற தரிப்புகளில் நிறுத்தி ஒரு உறவினர் போல பயணித்தோம் . எமது பயணத்தில் முக்கால் பகுதி முடிந்து விட்ட நிலையில் சக்கரம் (சில்லு ) காற்று போய்விட மாற்றி புறப்படோம் ஒரு ஒருமணி நேர ஓட்டத்தின் பின் " படீர் என்ற சத்தம் " திடுகிட்டு விட்டோம் . ரயர் வெடித்து விட்டது . அதுகிட்ட தட்ட ஒரு காட்டு பிரதேசம் . எலோரும் சரியாக களைத்து விடோம் . காலை ஆறு மணிக்கு வெளிகிட்ட பயணம் பொழுது மங்கும் நேரம் ஏழு மணிக்கு கிட்ட இருக்கும். எலோரும் வாகனத்தை விட்டு இறங்கி விட்டோம். அரை மணி முக்கால் மணி ஆகியது .அந்த பெடியன் (சுந்தரம் ) ஓடி ஓடி தன்னால் ஆனா முயற்சி செய்து கொண்டு இருந்தான்

,எங்கள் வயதான மாமனார் .வேறு வாகனத்தில் போவோமா ?.....என்று ஆலோசனை சொல்லிக்கொண்டு இருந்தார் ,நானும் என் குட்டி வண்டுகளின் பிரச்சனையால் (,சுடு நீர் தீர்ந்து விட்டது ,)ஆமோதித்தேன். கிட்ட தட்ட ஒரு மணி நேரத்தில் மீண்டும் ஆயத்தமாகியது. என் மாமனாரின் பேச்சு (அவர் ஒரு சுடுதண்ணி) பயனக்களை வேறு . அவனின் காதில் எங்கள் ஐடியா எட்டி விட்டது போலும் ,இறங்கும் வரை அவன் எங்கள் பக்கம் வந்து கதைக்கவே இல்லை . மீண்டும் ஒன்றரை மணி ஓட்டத்தில் அந்த தளத்தை அடைந்து விட்டோம். இறங்கியதும் .அந்த பையன் வந்து அக்கா உங்களுடன் ஒரு கதை ....என்றான் .

" .காலையில் ஆறு மணிக்கு ஏறினீங்க அண்ணளவாக ஒரு பத்து மணி நேரம் உங்கள் உயிர் எங்கள் கையில் ...........நம்பி தானே ஏறினீங்க .கொண்டு போய் சேர்ப்போம் என்று . பிறகேன் வாகனம் மாற நினைதீங்க ..........நடு வழியில் இப்படி செய்ய இருந்தீங்களே ....என்று தன் நெற்றிக்கண்ணை திறந்தான் . ......."

..எனக்கும் மனம் வேதனையாக போய்விட்டது ,மன்னிப்பு கேட்டேன் .தம்பி என் மாமனார் சற்று கோப காரர் ,என்று சமாளித்தேன் அவன் மனம் ஆறவே இல்லை . அக்கா முதல் தடவை அதை மாற்றி தொடங்கினோம் தானே ....,இரண்டாம் முறையும் வெடிக்கும் என்று யார் கண்டார் ,எனக்கு புறப்படும் போதே விளங்கி .....விட்டது அக்கா . இனி மேல் இப்படி செய்யாதீங்க ....அப்போது தான் என் மனதில் உறைத்தது . புத்தக ப்டிப்பு மட்டும் வாழ்கை அல்ல . அனுபவமும் தான். வாழ்கை என்று .

இதனால் தான் பயணத்தில் எண்ணை கொண்டு போக கூடாது என்று சொல்வார்களோ ?..........

  • கருத்துக்கள உறவுகள்

ஊரின் நினைப்பை மீட்டி கதையாக தந்ததில் மகிழ்வு.

நாமும் அந்த பஸ்சில் பயணித்த உணர்வு ஏற்பட்டது.

வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் கதை ப்டித்து ........ கருத்து சொன்ன கறுப்பிக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்......வாழ்த்துக்கள்

Edited by putthan

பயணத்தின் போது நல்லெண்ணை கொண்டுபோக கூடாது என நானும் அறிஞ்சிருக்கிறன்

ம்ம்..நெலா(மதி) அக்கா கடசி காச்சியில நீங்க ஒண்டு சொல்லுறியளே அது தான் "புத்தக படிப்பு மட்டும் வாழ்கை அல்ல . அனுபவமும் தான். வாழ்கை என்று.." பின்னிட்டியள்..ள்.. :wub:

அந்த ஒரு வசனதிற்காகவே..வே உங்க படம் நல்லா ஓடும்..ம்..பயணத்தில் போது பெற்றோல் வாகனதிற்கு விட கூடாது எண்டு யாரும் சொன்னா கேட்பியளோ..ளோ.. :icon_idea:

பிறகென்ன எண்ணேய் கொண்டு போக கூடாது எண்டு கொண்டு..டு..பயணம் நன்றாக உள்ளது முடிவே வந்த எண்ணேய் சறுக்கிறது..து..வாழ்த்துகள்..ள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் மாமா ..........வெண்ணிலா ......... ஜம்மு பேபி .......நன்றியுடன் நிலாமதியக்கா ...

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான விஞ்ஞான உண்மை பொதிந்த கதை. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம்: நல்லெண்ணையை பயணத்தில் கொண்டு போகக் கூடாது என்றால் ஆனைகோட்டையிலிருந்து எப்படித் தான் மற்ற இடங்களுக்கு எண்ணை அனுப்புகிறார்கள்? மசகெண்ணெய் போல குழாய் போட்டா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் உடையாத தர டப்பா ..........barrel .............களில் அடைத்து ஏறுமதி செய்வார்களோ ? எல்லாம் அனுபவ பாடம் தானே .....i

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உடையாம இருக்கோணும் எண்டது தான் முக்கியம் போல, மற்ற படி என்ன எண்ணையும் பயணத்துக்கு எதிரி தான். நல்ல காலம் நான் மயிரிழையில தப்பியிருக்கிறன். கிட்டடியில பிரான்ஸ் போய் வரும் போது லா சப்பலில வாங்கின ஒரு போத்தல் ஊர் நல்லெண்ணை நல்லாப் பொதி பண்ணி லக்கேஜில போட்டுக் கொண்டு வந்தனான். அது உடைஞ்சு தொலைச்சிருந்தா பிளேனுக்கு என்ன ஆகியிருக்குமோ தெரியாது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆங் ............ஏன் இந்த வேலைக்கு எல்லாம் போனீங்க ?பக்கத்தில நம்ம நாடு கானடாவில் தமிழ் கடை எல்லாத்திலும் கிடைக்கும் .கால் நடையில் வந்து வாங்கி போகலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலதமதியக்கா பழைய ஞாபகங்களைமீட்டிப்பார்க்கவை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்கா

நல்ல அனுபவப் பகிர்வு, உண்மையிலேயே பயணித்தது போல இருந்தது ஆனால் எனக்கு இந்த நல்லண்ணை விடயம் என்னக்கு இன்றுவரைக்கும் தெரியாது நிலாமதி அக்கா....

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்கோய் நல்ல ஒரு கதை சொல்லியிருக்கிறியல் வாழ்த்துக்கள். எனக்கு ஒரு பழக்கம் இருக்கு யாராவது எதையாவது செய்யாதே என்று சொன்னால் அதை கட்டாயம் செய்வது நான் உது ஓன்றும் பார்க்கிற இல்லை என்ட தலை எண்ணையை பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டன சமையலும் செய்வதில்லை அப்புறம் என்னத்துக்கு எண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இளங்கவி சுப்பண்ணா ............நல்ல எண்ணையை விட நான் கற்ற பாடம் . சோதனை காலத்திலும் நட்பை கை விடாதே ,.......பொறுமை ........என்பது .

ஊரில் நடந்த பழைய நினைவுகளை பகிர்ந்தீர்கள் அக்கா... நன்றிகள். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.