Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவுக்கு மலேசியாவிலிருந்து கொலை மிரட்டல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவருடைய வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர்.

.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் நவநீத கிருஷ்ணன், சண்முகம் ஆகியோர் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர்.

மலேசியாவிலிருந்து இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஏதேனும் கருத்து தெரிவித்தால், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோவுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கு ஏற்படும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் மைந்தன் என்பவர் பெயரில் இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் ‘உலக தமிழின பாதுகாப்பு கழகம்’, பாங்காக், தாய்லாந்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தலைமையகம் கனடாவில் குவிஸ் ஹவுஸ் என்ற இடத்தில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நான்கு பக்க கடிதம் மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

எனவே ஜெயலலிதாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர்கள் கேட்டுக் கொள்வார்கள் என்று தெரிகிறது.

ஜெயலலிதாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தவர் நீதிபதி ஜெயச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.adhikaalai.com/index.php?option...5&Itemid=52

புரட்சித்தலைவிக்கும் மிரட்டலா?... என்ர அய்யோ.......... :D ........ :D ............ :D

என்ன ஒரு குரூரமான உலகமப்பா இது?... :) .... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வேற யார் வேலை எல்லாம் றோவின் உபயமே :) .

நம்ம யாழ் தமிழ்மைந்தனோ என்று சந்தேகமாயிருக்கு? :lol:

இது டூமச் அண்ணி :)

  • கருத்துக்கள உறவுகள்

இது டூமச் அண்ணி :lol:

அண்ணியோ ............

ஜெயலலிதா திருமணம் முடித்து விட்டாவா ?

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்போடு விளையாடதே!-ஜெவுக்கு வந்த மிரட்டல் கடித விவரம்

வியாழக்கிழமை, அக்டோபர் 30, 2008

சென்னை: தமிழ் இனத்தோடும், தமிழர் உணர்வோடும் நீ மோதாதே! நெருப்போடு விளையாடதே!. எரிந்து சாம்பலாகிப் போவாய் என்பதை இதன் மூலம் எச்சரித்துக் கொள்கிறோம். இது வெறும் மிரட்டல் அல்ல என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்டுள்ள மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் விஷயத்தில் தலையிட்டால் அதன் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்கும் என உலகத் தமிழ் இன பாதுகாப்புக் கழகம் என்ற பெயரில் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதையடுத்து அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் அதிமுக மனு அளித்துள்ளது.

மேலும் இந்தக் கொலை மிரட்டல் தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

அதிமுக வழக்கறிஞர்களான நவநீதகிருஷ்ணன், வெங்கடேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் நேற்று மாலை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெய்சந்திரன் அறைக்கு சென்று அவரிடம் ஜெயலலிதாவுக்கு வந்த கடிதத்தின் நகலை சமர்ப்பித்தனர்.

மேலும் அவர்கள் நீதிபதியிடம் அளித்த மனுவில், இது மிகவும் சீரியசான கடிதம். ஏற்கனவே நீதிமன்றம் ஜெயலலிதாவின் பாதுகாப்பு குறித்து எஸ்பி நிலையிலான அதிகாரி விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் வீட்டிற்கு எஸ்பி வந்து விசாரணை செய்துவிட்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த கடித நகலை உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபியிடமும் வழங்குமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கிற்கான நோட்டீசும் அரசு வழக்கறிஞரிடம் வழங்க உத்தரவிட்டார்.

அந்தக் கடிதம்:

கனடாவில் உள்ள உலகத் தமிழ் இன பாதுகாப்பு கழகத்தின் தாய்லாந்து கிளையின் ஆசிய திட்ட அலுவலர் வெ.தமிழ்மைந்தன் என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதம் மலேசியாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வீட்டுக்கு நேற்று காலையில் இந்தக் கடிதம் வந்து சேர்ந்தது.

அந்த கடிதத்தில்,

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சனையில் தலையிட வேண்டாமென செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு இறுதி எச்சரிக்கை. செல்வி, நீ உன் வேலையை ஒழுங்காகப் பார்த்துக் கொண்டு இருக்கவும். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் பற்றி தமிழ்நாட்டில் பொய் பிரசாரம் செய்ய வேண்டாம். உன் நன்மைக்காக வேண்டி எச்சரிக்கிறோம்.

அம்மணி நீ தேவையில்லாமல் விடுதலைப் புலிகளின் விஷயத்தில் தலையிட்டால் அல்லது மூக்கு நுழைத்தால் அதன் விளைவு மிகப் பயங்கரமாக இருக்கும் என்பதை உனக்கு இறுதியாக உலகத் தமிழ் இன பாதுகாப்புக் கழகம் எச்சரிக்கிறது.

உனது நடவடிக்கையை மாற்றிக் கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறோம். இனி வரும் காலத்தில் உன் செயல்பாட்டில் எந்த ஒரு மாற்றமில்லை என்றால் பெனாசிர் பூட்டோவுக்கு ஏற்பட்ட நிலைதான் உனக்கும் வரும்.

தமிழ் இனத்தோடும், தமிழர் உணர்வோடும் நீ மோதாதே! நெருப்போடு விளையாடதே!. எரிந்து சாம்பலாகிப் போவாய் என்பதை இதன் மூலம் எச்சரித்துக் கொள்கிறோம். இது வெறும் மிரட்டல் அல்ல.

எங்களின் ஆற்றல் மிக்க மன உறுதியின் வெளிப்பாடு, எங்கள் ஆதங்கம் உனக்கு புரிந்தால் சரி. புலிகளின் தாகம் தனி தாயகம். இதுதான் எம்மக்களின் வேட்கை. இதை தடைபோட எவர் நினைத்தாலும் அவர்களை அழிக்க நாங்கள் தயங்கமாட்டோம்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஏமாந்த அதிமுக கட்சிக்காரர்களுக்கு தலைவியாக நீ இருந்து கொண்டும், சில ஏமாளித் தமிழர்களுக்கும், அப்பாவி தமிழர்களுக்கும், உலக அரசியல் நடப்புத் தெரியாத தமிழ் உணர்வு இல்லாதவர்களுக்கும் நீ தலைவியாக இருந்து கொண்டும் அரசியல் நடத்தி பிழைத்துக்கொள். நீயொரு கன்னடப் பெண்மணி.

வெறும் பகட்டுக்கும், பணத்திற்கும், பதவிக்கும் வேண்டி உன்னிடம் ஒரு அடிமையைப் போல் இன உணர்வு அற்று சில தமிழர்கள் உனக்கு விசுவாசமாக இருக்கலாம். அதற்காக வேண்டி மொத்த தமிழ்நாடே உனக்கு அடிமையென்று எண்ணிவிடாதே. இறுமாப்புக் கொள்ளாதே! கர்வம் கொள்ளாதே.

எங்களைப் பொறுத்தவரை நீயொரு நடிகை. அரசியல் பொது வாழ்விலும், உன் நடிப்பும் உலகுக்கு தெரிகிறது. உலக அரசியல் வரலாற்றில் வீராவேசம் பேசியவர்கள் வாழ்ந்ததில்லை. மீண்டும் எச்சரிக்கிறோம், இலங்கையில் தன் இனம் காக்கவும், தன் சொந்த மண்ணின் உரிமைக்காக போராடும் தமிழ் ஈழ போராட்டவாதிகளின் உண்மை உணர்வை எழுச்சியை, உன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்தாதே!.

விடுதலைப் புலிகளின் தனி ஈழம் கொள்கையை உன்னைப் போன்று ஆயிரமாயிரம் முதல்மைச்சர்கள் வந்தாலும் தடுத்து நிறுத்த இயலாது. கட்டுப்படுத்த முடியாது.

விடுதலைப் புலிகளை நேசிக்கும் அல்லது ஆதரிக்கும் அல்லது தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று எண்ணுபவர்கள் உலகில் வாழும் 75 நாடுகளில், 6 கோடிக்கு மேல் தமிழர்கள், அதாவது தமிழ்நாட்டையும் சேர்த்து இருக்கிறார்கள். அதற்காக வேண்டி நிதி உதவி செய்கிறார்கள் என்பது உனக்கு தெரியுமா? இதுவே உனக்கு இறுதி எச்சரிக்கை. உன்னை இறுதி யாத்திரைக்கு அனுப்ப எங்களுக்கு அதிக நேரமில்லை. அதிக காலம் தேவையில்லை. நீயொரு பெண் என்பதற்காக வேண்டி இவ்வளவு காலம் பொறுமையாகக் கடைப்பிடித்தோம்.

இதற்குமேல் நடப்பதை யார் அறிவார்? விடுதலைப் புலிகளை உலகில் யார் அழிக்க நினைத்தாலும் சரி அல்லது அவர்களுக்கு எதிராக செயல்பட்டாலும் சரி, அத்தகையவர்களை நாங்கள் அழிக்கத் தயங்க மாட்டோம் என்பது உண்மை.

எங்கள் போராட்டத்திற்கு முன்னால் நீயொரு தூசி. தமிழன் என்றொரு தனி இனம். அவன் குணமும் தனி என்பதை உணர்ந்து உன் தவற்றை இனிமேல் திருத்திக்கொள்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கமிஷனரிடம் மனு:

இந்தக் கொலை மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை போலீஸ் கமிஷனர் சேகரிடம் நேற்று மாலை மனு கொடுக்கப்பட்டது.

முன்னாள் சட்ட அமைச்சரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான டி.ஜெயக்குமார் கமிஷனர் சேகரை சந்தித்து இது தொடர்பாக பேசினார்.

பின்னர் மனு ஒன்றையும் கொடுத்தனர். அதில்,

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு 30ம் தேதியன்று (இன்று) ஜெயலலிதா செல்ல இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற கடிதம் வந்துள்ளது.

இந்த கடிதத்தின் மீது காவல்துறை உடனடியாக கவனம் செலுத்தி, இந்த கடிதத்தை அனுப்பியவர் யார்? இதற்கு பின்னணியில் யார்? யார்? இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து உரியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், ஜெயலலிதாவுக்கு, உரிய பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இதே மனுக்கள் தமிழக அரசின் முதன்மை உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரிடமும் வழங்கப்பட்டது.

மேலும் ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயனும், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரையும் நேற்று மாலையில் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் உதவி கமிஷனர் ரவீந்திரனை சந்தித்தும் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

முன்னதாக ஜெயலலிதாவுக்கு இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னரே இது கடிதமாகவே வந்தது தெரியவந்தது.

thatstamil

இளந்து போன தனது செல்வாக்கை உயர்த்தவும், புலிகள் விடயத்தில் தான் சரி என்பதை காட்டவும் ஜெயா தன்னவர்களை வைத்து கடிதத்தை தனக்கு எழுதி அனுப்ப வைத்து இருப்பார்...

செய்ய கூடியவர்தானே..?

இது தமிழ் நாட்டில் ஏற்பட்;டுள்ள ஈழத்தமிழ் ஆதரவை முற்றாக இல்லாதொழிப்பதற்கான ஒரு நடவடிக்கைக்கான ஆரம்பம். கவனம் உறவுகளே இதைப்போல ஆயிரம் விளையாட்டுக்கள் நிகழும் ஒரு தடவை செய்த தப்பை நாம் திரும்பவும் செய்ய முயலமாட்டோம். எமக்கு எதிரி சிங்களவன்தான் தமிழர் அல்ல . . இது ஏமாற்றுக்கடிதம் . .

அது என்ன ஒரு தடவை செய்த தப்பு????? எனக்கு விளங்கவில்லை??

ஜெயா நேற்றுமுந்தினம் தன்னை கருணானிதி கைது செய்ய திட்டமிடுவதாக பரபரப்பு ஏற்படுத்த முயன்று அது பிசுபிசுத்ததால் அடுத்த முயற்சியை தொடங்கியுள்ளார்.....பாவம்

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களே பயர் (நெருப்பு)அவங்களோடை யாராவது விழையாடுவாங்களா?? :unsure: :unsure: :unsure::lol: :lol:

ஈழத்தின் குழந்தைக்கே விளங்காட்டி மற்றவர்களிற்கு எப்படி விளங்கும்

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழ் இன பாதுகாப்பு என்ற பெயரில் கனடாவில் எவ்வித அமைப்பும் இருப்பதாக நான் அறியவில்லை. தவிர, சிறிலங்கா அரசின் இணையத்தளங்கள் இதற்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம், மற்றும் கனடாத் தமிழர் என்று அழுத்திச் சொல்ல முனைவதன் பின்ணனி தொடர்பாக ஜெயலலிதா அம்மையாரும், மகிந்தவும் சேர்ந்து ஏதும் சதிகளில் ஈடுபட்டிருக்கின்றனரா என்றே சந்தேகிக்க வைக்கின்றது.

தம்மக்களைக் கொன்று அனுதாபம் தேடுவதில் வல்லவரான மகிந்தவுக்கு இப்படி ஒரு சூழ்ச்சியான செயலைச் செய்வது ஒன்றும் கஸ்டமான காரியமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
:( முன்னர் இந்த ஜெயா என்கிற நச்சுப் பாம்பு சந்திரிக்கா என்கிற சிங்களப் பேரினவாதியுடன் கூட்டுச் சேர்ந்து எங்களுக்கு அநியாயம் செய்தது. இன்று அதே நச்சுப் பாம்பு மகிந்த என்கிற கொலை வெறி பிடித்த பாசிசச் சிங்களவனோடு சதி செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

உலகத் தமிழ் இன பாதுகாப்பு என்ற பெயரில் கனடாவில் எவ்வித அமைப்பும் இருப்பதாக நான் அறியவில்லை. தவிர, சிறிலங்கா அரசின் இணையத்தளங்கள் இதற்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம், மற்றும் கனடாத் தமிழர் என்று அழுத்திச் சொல்ல முனைவதன் பின்ணனி தொடர்பாக ஜெயலலிதா அம்மையாரும், மகிந்தவும் சேர்ந்து ஏதும் சதிகளில் ஈடுபட்டிருக்கின்றனரா என்றே சந்தேகிக்க வைக்கின்றது.

தம்மக்களைக் கொன்று அனுதாபம் தேடுவதில் வல்லவரான மகிந்தவுக்கு இப்படி ஒரு சூழ்ச்சியான செயலைச் செய்வது ஒன்றும் கஸ்டமான காரியமல்ல.

கனடாவில் ஏதோ ஆப்பு வைக்கப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் சட்டபூர்வமாக இயங்குவதற்கு பதிவு செய்தல் என்பது மிகமிக அவசியம். இத்தனை பிரச்சனை நடந்தபோதும், அனைத்து தமிழ் அமைப்புக்களும் தங்களை அரசிடம் பதிவு செய்துள்ளன. இப்படி பிரச்சனை கிளப்புவதற்குச் செய்வதெல்லாம் யாருடையதோ சூழ்ச்சியாகவே இருக்க வேண்டும். கனடாவிலேயே அப்படி அமைப்பில்லை. அவர்களுக்குத் தாய்லாந்தில் கிளையாம்....

சிறிலங்கா அரசு கள்ளப்பாஸ்போட்டில் அரசாங்கமே கருணாவை அனுப்பி வைத்தது போல, மற்றய நாடுகளும் நடப்பார்கள் என்று எண்ணிக் கொள்கின்றது.

ஜெயலலிதா அம்மையார் மீது எவ்வித கோபமும் கிடையாது. ஆனால் செத்து விழும் மக்களின் குருதியில் தங்களுடைய அரசியல் வாழ்க்கையில் அறிக்கை எழுதுகின்றார்கள் என்பதைப் பார்க்கின்றபோது தான் வேதனையாக உள்ளது. அவருடைய தேவை என்பது மாநில ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே. அதற்காகத் தான், இப்படி மாறிக் கொள்கின்றார்.

சிலவேளை அவர் நல்ல மனதுள்ளவராக இருக்கக்கூடும். அவரைச் சுற்றியுள்ளவர்கள் தான் அவரின் மனதைக் கெடுக்கின்றார்கள். மக்களின் மரணங்களை உண்மையோடு பார்க்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அம்மணிக்கு இன்னும் இலங்கை பிரச்சினை விளங்கவில்லையா ................ :huh:

அல்லது விளங்காத மாதிரி நடிக்கின்றாரோ ?

நித்திரையிலும் , கருணாநிதியின் நினைப்பு தான் போல ........... :(

இந்த காணொளியில் எத்தனை தரம் கருணாநிதியின் பெயரை இவ சொல்லியிருக்கிறா என்று யாராவது எண்ணிப் பாத்து சொல்லுங்கோவன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.