Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதையும் கானமும்!!

Featured Replies

அன்பே

அகத்தை தழுவிய ஆரணங்கே

சுகத்தை தரிசிக்கும் வேளையாதோ?

சித்திரமே!

உன்னை வரைந்த அந்த

வானவன் யாரோ?

சிற்பமே!

கைபடாமல் செதுக்கிய

சிற்பியும் எவனோ?

http://www.esnips.com/doc/77bb868d-9a1b-41...29/Sitpiyin-Kai

  • Replies 99
  • Views 10k
  • Created
  • Last Reply

சோழியன் அங்கிள்..ள்!!. :)

அந்த சித்திரத்தை நான் பார்த்தா..தா பெறகு..கு தான் சொல்ல ஏலும்..ம் அந்த சித்திரத்தை..தை வரைந்த வானவன் யாரோ எண்டு..டு.. :)

ஏன் எண்டா இப்ப கிறுக்கல் கூட சித்திரமாகின்றது..து.. :)

தொடருங்கோ சோழியன் அங்கிள்..ள் உங்களின் கைவண்ணத்தை..தை.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நன்றி யம்மு பேபி! கருத்தாழம் மிக்க பழைய பாடல்களை சிறு 'கிறுக்கல்'களுடன் இணைக்கலாம் என எண்ணுகிறேன்.

மோகன் அண்ணா! பாடல்களை 'யூரியூப் வீடியோ' மாதிரி நேரடியாகவே கேட்க இங்கே வசதி உள்ளதா? :unsure:

  • தொடங்கியவர்

பெண்ணே!

உன்னை அன்பின் சின்னம் என்றல்லவா நினைத்தேன்

அகப்பையை ஏன் தந்தாய்?

தாயே!

உன்னை தெய்வத்தின் வடிவிலல்லவா வணங்கினேன்

பால் தர ஏன் மறந்தாயோ?

இல்விளக்கே!

உன்னை என் இணையாக அல்லவா இணைத்தேன்

சமத்துவம் பேசியேன் சன்னத மாடுறாய்?

http://www.esnips.com/doc/abe8b2b5-7a2c-41...m-Maarippochchu

சோழியன் அங்கிள்..ள்..!!

பெண்ணே!

உன்னை அன்பின் சின்னம் என்றல்லவா நினைத்தேன்

அகப்பையை ஏன் தந்தாய்?

உந்த வரி ரொம்ப நன்னா இருக்கு..கு அநுபவத்தில வந்த வரிகளோ..ளோ..??..பெண் கையால் கெடைத்த அகப்பை கூட சொகம் தான்..ன்.. :unsure:

மற்றது..து..!!

சோழியன் அங்கிள் எனக்கு உப்ப இந்த பாட்டும் எண்டா ரொம்ப விருப்பம்..ம் இந்த பாட்டை வடிவா கேட்டு இந்த பாட்டிற்கு ஏற்றா போல ஒரு கவிதை எழுதுங்கோவன்..ன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

பெண்ணே!

காதலியானால் என்ன

தாரமானால் என்ன

தாயானால் என்ன...

உன்மேல் வைத்த அன்பால்

என்னிலை மறந்து அழுகின்றேனே

அன்பின் பிரிவுக்கு

ஆறுதல் என்பதே கிடையாதா?!

http://www.esnips.com/doc/1758906f-f8f8-48...Asai-Vaiththaal

  • தொடங்கியவர்

சோழியன் அங்கிள் எனக்கு உப்ப இந்த பாட்டும் எண்டா ரொம்ப விருப்பம்..ம் இந்த பாட்டை வடிவா கேட்டு இந்த பாட்டிற்கு ஏற்றா போல ஒரு கவிதை எழுதுங்கோவன்..ன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

எனக்கு பாட்டே விளங்கேல.. இதுக்கு நான் போய் ஒரு கவிதை.. யம்மு பேபி.. என்னைல ஆத்திரம்னா நேரடியா சொல்லிப்போடுங்க.. வேணாம் இந்த வேலை..!! :D

  • கருத்துக்கள உறவுகள்

கள நிர்வாகத்தினரே ..........

சோழியனின் இந்த கிறுக்கல்களில் நானும் இணைவேன் . :D

ஆனால் நெடுக்காலைபோவனை தப்பித்தவறியும் இதுக்குள்ளை மட்டும் வர விடாதேயுங்கோ . :D

அவர் வந்தால் எல்லாம் கிளிஞ்சு போகும் . :lol::lol::lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட்டுக்கு முன்னே இவ்வரிகளை ஒலிவடிவமாக இணைத்தால் சிறப்பாக இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே , அன்பே என்று விழித்து கவிதை எழுதியிருக்கிறாறே.......

பெண்ணைப்பார்த்தால் தான் கவிஞருக்கு கவிதை வருமா? :)

  • தொடங்கியவர்

கள நிர்வாகத்தினரே ..........

சோழியனின் இந்த கிறுக்கல்களில் நானும் இணைவேன் . :unsure:

ஆனால் நெடுக்காலைபோவனை தப்பித்தவறியும் இதுக்குள்ளை மட்டும் வர விடாதேயுங்கோ . :o

அவர் வந்தால் எல்லாம் கிளிஞ்சு போகும் . :lol::):lol:

வருக தமிழ் சிறி.. கவிதையுடனும் கானத்துடனும்!! :D

பாட்டுக்கு முன்னே இவ்வரிகளை ஒலிவடிவமாக இணைத்தால் சிறப்பாக இருக்கும்!

ஒலிவடிவமாக இணைக்கலாம்.. ஆனா எனது குரலைக் கேட்டு பலர் யாழ் களம் பக்கமே வரமாட்டாங்களே!! :lol:

பெண்ணே , அன்பே என்று விழித்து கவிதை எழுதியிருக்கிறாறே.......

பெண்ணைப்பார்த்தால் தான் கவிஞருக்கு கவிதை வருமா? :lol:

உணர்வுகளே பெண்ணால்தானே ஏற்படுகின்றன.. நாட்டுப்பற்றென்றாலும் அதுவும் தாய்நாடுதானே? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிவடிவமாக இணைக்கலாம்.. ஆனா எனது குரலைக் கேட்டு பலர் யாழ் களம் பக்கமே வரமாட்டாங்களே!!

ஒருமுறை கேட்டுத்தான் பார்ப்போமே

  • தொடங்கியவர்

பணத்தை நினைத்து

மனத்தைத் தொலைக்கும்

மனிதன் நானல்ல அன்பே!

குணத்தை நினைத்து

ஜடத்தை மறந்து

நிஜத்தை பார் கண்ணே!

வாழ்க்கைக்கு பாசம்

போதும் என்றே நீ

வாராய்! இன்பம் என்றும்!!

http://www.esnips.com/doc/dbe44197-8c5c-4e.../Asaiyaaka-Pesi

மனதிற்கினிய பழைய பாடல்கள். இணைப்புக்கு நன்றி சோழியன் அண்ணை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கருத்தோடு நான் முரண்படுகின்றேன்! இயற்கையை பார்த்து, எழிமையை பார்த்து, ஏழ்மையைப்பார்த்து, ஏன் பணத்தை பார்த்துக் கூட கவிதைகளை கருத்தாக்கப்படுகின்றன! கற்பனை வளமும், மொழியில் சிறந்த நடையும் கொண்டவர்களால் எந்த சூழலிலும், எந்த தலைப்பிலும் கவிதை எழுத முடியும், கட்டுரை வரைய முடியும்!

ஒரு முறை ஒருவரோடு கட்டுரை எழுதுபது பற்றி கதைத்துக்கொண்டிருக்கும் போது, என்ன எழுத என்ன எழுத என்று நச்சரித்துக்கொண்டிருந்தார். நான் என்ன மண்ணாங்கட்டியாவது எழுதுங்க என்று சொன்னேன்.

உடனே அவர் மகிழ்வுடன் மண்ணாங்கட்டி என்று தலைப்பிட்டு ஒரு சிறந்த ஆசிரியர் தலையங்கத்i பத்திரிகைக்கு தீட்டினாhர்.!

பெண்ணாலே கவிதை பிறக்கிறது என்பது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவிலலை. ஆனால் அதற்கான காரணம், காதல், உணர்வு, உறவு என்பவற்றை பெண்களோடே நம்மவர்கள் தொடர்பு படுத்தி வைத்திருக்கின்றனர்.

காதல் -அன்பு பாசம் எல்லாமே ஒரே கருத்தை பகிர்கின்ற போது அது பெண்ணுக்கும் ஆணுக்குரியதாக முடியாது.

  • தொடங்கியவர்

நம்மவர்கள்மட்டுமல்ல.. உலகிலுள்ள மனித இனத்தின் உற்பத்தி தாய்தானே?! அவளிடம் இருந்து உதிக்கும் உயிரானது முதல் உணர்வை அவளிடமிருந்துதானே பெறுகிறது. :)

மனதிற்கினிய பழைய பாடல்கள். இணைப்புக்கு நன்றி சோழியன் அண்ணை.

இப்படி இடைக்கிடையாவது கருத்தால் கவனிப்பை உறுதிப்படுத்தினால், தொடர்ந்து பாடல்களை இணைத்துக்கொண்டே இருப்பேன். :unsure:

  • தொடங்கியவர்

உள்ளத்தால் உன்னை உதற நினைத்தேன்

என்னவளே! என்ன செய்வேன்!!

தள்ளிப் போனாலும் தலைசாய்த்து

உன்னையே பார்க்கத் தோன்றுதே!!

கடிவாளம் உடைத்து கதியாக நாடும்

கொடிதான கண்ணை நிலையாக நிறுத்த

கொடியவளே வந்து வழியொன்று சொல்லு

வலியோடு நானும் திசைமாறி நோக்க!!

http://www.esnips.com/doc/f31006fc-f830-4c...Ullam-Thedaathe

நீங்கள் கடைசியாக இணைத்த பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் வரும் பெண்குரல் யாருடையது? ஜானகி போல் உள்ளது. ஆனால், இந்த மிகவும் பழைய பாடலை ஜானகி பாடியிருப்பாரா? :unsure:

நீங்கள் எழுதிய கவிதையும் அழகு... :)

(கவனிப்பு தொடரும்.... :lol: )

  • தொடங்கியவர்

நீங்கள் கடைசியாக இணைத்த பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் வரும் பெண்குரல் யாருடையது? ஜானகி போல் உள்ளது. ஆனால், இந்த மிகவும் பழைய பாடலை ஜானகி பாடியிருப்பாரா? :unsure:

நீங்கள் எழுதிய கவிதையும் அழகு... :)

(கவனிப்பு தொடரும்.... :lol: )

நன்றி!

'எதையும் தாங்கும் இதயம்' படத்தில் K.R.ராமசாமியும், ஜானகியும் இணைந்து பாடிய பாடல் இது.

'எதையும் தாங்கும் இதயம்' படத்தில் K.R.ராமசாமியும், ஜானகியும் இணைந்து பாடிய பாடல் இது.

நன்றி. இந்தப்பாடல் எந்த வருடம் வெளியானது?

  • தொடங்கியவர்

நன்றி. இந்தப்பாடல் எந்த வருடம் வெளியானது?

மன்னிக்கவும். தெரியவில்லை.

சிற்பியில் விளைந்த முத்தே

அற்புத உணர்வின் வடிவே

என் எண்ணத்தில் எழுந்தமகளே

என் கண்ணின் கண்ணே!

அவள் தந்த சொந்தம்

உன்னாலே கண்டேன்

நீ தந்த பந்தம்

அதைப்போல வேண்டாம்!!

http://www.esnips.com/doc/c78763a4-5b10-40...zhakaana-Malare

பொதுவாக சிறிநிவாஸின் பாடல்கள் எல்லாமே எனக்கு பிடிக்கும். இந்தப்பாடலை இன்று தான் முதல் முதல் கேட்டேன். மனதை தாலாட்டும் இந்தப் பாடலை இணைத்தமைக்கு நன்றி. பாடல் வரிகளும் அழகு.

  • தொடங்கியவர்

உங்களது கருத்துக்கு நன்றி மல்லிகை வாசம்!!

பணம் பணமென்று பறந்தோடித் தேடி

குணம் துறந்து சொத்து சுகமென

கணக்கற்றுக் குவித்தும் என்ன பயன்

பிணமாகிச் சாயும்போது வருமா இவை?

வாழ்க்கையின் சுகமிழந்து வலிதாகச் சுமைசுமந்து

தாழ்வை ஈடுசெய்யும் பணமே எனநினைந்து

முன்னிற்கும் களிவிலக்கி களைப்பதிலே என்னபயன்

நன்நெறிகள் பலஇன்பம் அதுவே பேரின்பம்!!

http://www.esnips.com/doc/150729c2-0db7-4e...Enge-Inpam-Enge

பாடியவர்: சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் - படம்: மணமுள்ள மறுதாரம்

இப்படலை நீண்ட காலத்தின் பின்னர் கேட்கிறேன். முன்பு பாடல் வரிகளைக் கவனிக்கவில்லை.

'இன்பமெங்கே..? இன்பமெங்கே?' என்று பாடல் தொடங்கியதும் இது ஏதோ வில்லங்கமான பாட்டாயிருக்குமோ என யோசித்தேன். :(

மிகவும் அர்த்தமுள்ள பாடல். உண்மையான இன்பத்தை உணர்த்தும் பாடல் வரிகள்.

Edited by Mallikai Vaasam

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன்! உங்கள் கவிதைகளில் சிக்க வைத்து நல்ல பாடல்களைப் போட்டு சொக்கவும் வைத்து விட்டீர்கள்.

தொடருங்கள் வாழ்த்துக்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.