Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போரை நிறுத்த முடியாது என்பதா?- தமிழகம் எரிமலையாக வெடிக்கும்: மகிந்தவுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

Featured Replies

போரை நிறுத்த முடியாது என்பதா?- தமிழகம் எரிமலையாக வெடிக்கும்: மகிந்தவுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

[வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:56 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை ஒரு போதும் நிறுத்த முடியாது என்று புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளமைக்கு தமிழ்நாட்டின் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசிய பிறகு "போர் நிறுத்தம் செய்ய முடியாது" என சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்ச அறிவித்திருப்பது எதிர்பாராதது அல்ல. இனவெறியும் போர் வெறியும் பிடித்து ஆட்டும் சூழ்நிலையில் அவர் இன்னொரு ஹிட்லராக உருவாகிக்கொண்டிருக்கிறார் என்பதை உலகம் உணர வேண்டும்.

இந்தியப் பிரதமரின் வேண்டுகோளையும், தமிழக சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தையும் மதிக்க அவர் தயாராக இல்லை. அவருக்குப் பின்னணியில் உள்ள இந்தியாவின் எதிரி நாடுகளே அவரது துணிவிற்குக் காரணம்.

இனி இந்தியா என்ன செய்யப் போகிறது? ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? அல்லது உறுதியான நடவடிக்கை எடுத்துப் போரை நிறுத்தப் போகிறதா? என்பதை அறிய தமிழக மக்கள் துடிக்கிறார்கள். விரைந்து செயற்பட இந்திய அரசு தவறினால் தமிழகம் எரிமைலையாக வெடிக்கும் என எச்சரிக்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிகள் தரும் மமதை இது

இதற்கு அதே வழியில்தான் மருந்துண்டு......??????

இறுதிப் போர்...???

மாதிரியோ....????

  • கருத்துக்கள உறவுகள்

காலம் ஒரு நாள் மாறும்!

இந்த மமதை இந்தியா மத்திய அரசின் இரகசியமான முழு ஒத்துழைப்புதான் காரணம், இலங்கை அதனை சரியாக பயன்படுத்துகிறது.. அதாவது பரசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல் செயல்படுகிறது...

இப்போக்கால் தமிழகத்திலும் மத்தியரசில் வெறுப்படைய வைத்து பலவிதமான மாற்றங்களை தமிழக அரசியலில் ஏற்படுத்தப்போகிறது எதிர்காலத்தில்..ஏற்கனவே தமிழமீனவர் நிலைமை படுமேசம்..தமிழகமீனவரை அன்னியராக உதாசீனம், இலங்கைதமிழரை அழிப்பதற்கு உதவி என்பன ஒருவிதமான போக்கை இந்தியாரசு ஏற்படுத்தி பல பக்கவிளைவுகளுக்கு காரணம் ஆகப்போகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தை நிறுத்தி பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண சொல்வதாகச் சொல்லும் இந்தியாவின் தலை நகரில் வைத்தே இதைச சொல்ல மகிந்தவிற்கு துணிவைக் கொடுத்தது யார்? இனியும் மத்திய அரசில் நம்பிக்கை வைப்பது தமிழக மக்களின் சுயத்திற்கு இழுக்காகும். இனி தமிழகம் காத்திரமான முடிவுகளை எடுப்பதற்குரிய நேரம் வந்து விட்டது என்றே நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றரைக்கோடியை வைத்துக்கொண்டு இவ்வளவு மமதையென்றால்

ஐயா கலைஞர் அவர்களே உங்களிடம் ஏழு கோடி இருக்கே...........???

என்ன செய்யப்போகிறீர்கள்

அல்லது மீண்டும் ஈழத்தமிழனுக்கு கவிதை தானா?????????????

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போரை யாராலும் நிறுத்த முடியாது ,போரில் தோல்வி ஏற்பட்டாலே இலங்கை சமாதானத்திற்கு வரும்(2000ல் ஏற்பட்டது போல்) எமது மக்களின் வீரம் செறிந்த வாழ்வாதாரப்போரே இதற்கு முற்றுப்புள்ளியிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.