Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணம் - இரண்டு திருட்டு மனங்களின் இணைவு (வயசு வந்தவர்களுக்கு மட்டும்)

Featured Replies

  • தொடங்கியவர்

சோழியன் மாமா, டங்குவார், நெடுக்காலபோவான், சஜீவன், வசம்பு, தமிழ்சிறீ, நிழலி, நுணாவிலான், புஸ்பாவிஜி எல்லார் கருத்துக்களுக்கும் நன்றி! நான் இதுபற்றி உண்மையில எழுதவேண்டி வந்தது எனக்கு நெருங்கிய பலரிண்ட வாழ்க்கை இப்பிடி கனடாவில சீரழிஞ்சு போறதாலதான். உங்கட கருத்துக்களில இருந்து பயன்மிக்க பல நல்ல சிந்தனைகளை உள்வாங்ககூடியதாக இருந்திச்சிது. தவிர நானும் சுயமாக சில விசயங்களை தீவிரமாக யோசிக்ககூடியதாக இருந்திச்சிது. ஏதோ நம்ம எதிர்காலமாவது இப்படி சீரழியாதவாறு ஏதாவது செய்ய ஒட்டுமொத்த கருத்துக்கள் உதவினால் போதும் எண்டு எனக்கு இருக்கிது.

வாழ்க்கை அவரவர் தனிப்பட்ட விருப்பம், தேர்வு, சுதந்திரம். நீ இப்பிடி வாழ், அப்பிடி செய் எண்டு நாம சொல்ல ஏலாது. எண்டாலும் நாம ஓரளவு எச்சரிக்கையாக, புத்திசாலித்தனமாக, நேர்மையுடன் நம்மட வாழ்க்கையை நகர்த்த முயற்சிக்கலாம். ஒருவரிண்ட வழி அவருக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் அதே வழியில இன்னொருத்தர் போக முயற்சித்தால் சிலவேளைகளில் அது முரண்பாடாக இருக்கலாம். அவரவர் அவரவர் சூழ்நிலைகளுக்கு, நிலமைகளுக்கு தக்கமாதிரி வாழ்க்கையை ஓட்டவேண்டியதுதான். இந்தவகையில, மற்ற ஆக்களுக்கு என்னமாதிரியோ தெரியாது.. எண்டாலும் எனக்கு சிறுபொறி இந்தக்கருத்தாடல் மூலம் மூளையுக்க தோன்றி இருக்கிது. அதுபோதும் எண்டு நினைக்கிறன். மினக்கட்டு கருத்து எழுதின அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றிகள்

நிறைய யோசிக்காதீங்க.. உங்களுக்கு யாரை பிடிக்கிறதோ.. அவருக்கு உங்களை பிடிக்கிறதா? வீட்டில சொல்லுங்க.. குடும்பமாகுங்க.. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது சாப்பாட்டு மேசையில் குடும்பத்தோடு சேர்ந்து மனம்விட்டு பேசி சாப்பிடுவதை வழமையாகக் கொள்ளுங்கள்.. பிறகென்ன? உங்க வாழ்க்கை அற்புதமாக அமையும்... வாழ்த்துக்கள்!! :unsure:

சம்பந்தமில்லாம இதுக்குள்ள மூக்கை நுளைக்கிறத்திற்கு எல்லாரும் என்னை மன்னிக்க வேணும்!

என்ற ஆசை என்ன என்றா, இந்தத்தலைப்பு மாதிரி அரசியல் தலைப்புகளும் பிச்சல் புடுங்கல் இல்லாமல் சுபம் என்று முடியுதோ அன்றைக்கு எங்களுக்கு விடிவு பிறக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்கள்... நானும் சோதினை முடிச்சுப் போட்டு வந்து கருதேளுதுவம் எண்டு பார்த்தால் எல்லாம் முடிஞ்சிது போல இருக்கு.. :)

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

இல்லை தும்பளையான் உங்கட எண்ணங்களையும் சொல்லுங்கோ. இது மூடுப்பட இல்லை. எனக்கு ஓரளவு விளக்கம் கிடைச்சதால நான் கருத்து எழுதுறதை நிப்பாட்டி இருந்தன்.

மற்றது, சாணக்கியன் அண்ணா... உங்கட ஆசை நியாயமானதுதான். ஆனால் நடக்குமோ? நடைமுறையில சாத்தியமானதோ?

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு இப்பல்லாம் பொண்ண ஹெலியில கொன்டுவந்து இற்கிறது தான் லேட்டஸ்ட் சோ 50 தும் கானாது...

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு இப்பல்லாம் பொண்ண ஹெலியில கொன்டுவந்து இற்கிறது தான் லேட்டஸ்ட் சோ 50 தும் கானாது...

என்ன சுண்டல் , தவறாக பதிந்துவிட்டீர்கள் ........

கெதியிலை எண்டு வர வேணும் . :)

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை தும்பளையான் உங்கட எண்ணங்களையும் சொல்லுங்கோ. இது மூடுப்பட இல்லை. எனக்கு ஓரளவு விளக்கம் கிடைச்சதால நான் கருத்து எழுதுறதை நிப்பாட்டி இருந்தன்.

நன்றி முரளி அண்ணா..

எனது கருத்துப்படி திருமணம், என்பது ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளக் கூடிய இருவரிடையே மட்டும் நடக்க வேண்டும். பெற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் சமூகம் என மற்றவர்களின் அழுத்தங்களுக்காக பொருத்தமற்றவர்களைத திருமணம் முடித்த பின்னர் எத்தனையோ பேர் படும் பாடுகளை கண்டிருக்கிறேன். எனக்கு நன்கு தெரிந்த ஒருவர் பெற்றாரின் சம்மதத்துடன் உறவுமுறைப் பெண் ஒருவரையே திருமணம் முடித்தார். பத்து வருடத்திற்கும் மேலாக இருவரும் கூடி வாழ்ந்து இரண்டு பிள்ளைகளும் பிறந்த பின்னர் தற்போது இருவருக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள். சில காலங்களிற்கு முன்னர் இவர்களின் வாகனத்தில் சிறிது தூரம் போகவேண்டிய தேவை ஏற்பட்டது. பயணம் தொடக்கி நிமிடத்தில் இருவருக்கிடையிலும் பெரிய சண்டை. மூன்றாவது ஆள் நான் அங்கு இருக்கிறேன் எண்டோ பிள்ளைகள் பாக்கிறார்கள் எண்டோ அவர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. வெளியிலே பார்த்தால் நல்ல ஒற்றுமையான குடும்பம் போன்ற பிரமை. இவர்களைப் போலவே புலத்தில் இன்னொரு குடும்பத்தையும் எனக்குத் தெரியும். திருமண வெள்ளி விழாவையும் கொண்டாடிய வயது முதிர்ந்த தம்பதிகள். திருமணத்திற்கு முதல் பேசியிருக்க வேண்டிய சில்லா விசயங்களை பேசாத விளைவு இன்று இருவரும் ஒரே வீட்டிலே சீவிக்கிறார்கள் ஆனால் ஆளுடன் ஆள் கதைப்பதில்லை. இவர்கள் காதலித்துத் திருமணம் முடித்தவர்கள். திருமணத்தில் எத்தனையோ பொருத்தங்களைப் பாக்கிறார்கள் ஆனால் முன்னர் பலர் குறிப்பிட்டது போல மனப் பொருத்தத்தைப் பாக்க மறந்து விடுகிறார்கள். :D

இங்கு கருத்து எழுதும் பலரிலும் நான் வயதில் மிகக் குறைந்தவன் என நினைக்கிறேன். எனது அனுபவப் படி காதலித்துத் திருமணம் செய்வதுதான் சிறந்தது. காதலிக்கும் போது ஒருவரை ஒருவர் நன்கு அறியக் கூடிய சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. :D இந் நிலை பேசி முடிக்கப் படும் திருமணங்களில் பெரும்பாலும் காணப்படுவதில்லை. :) திருமணம் முடித்த பின்னர் தான் ஒருவரை ஒருவர் அறியக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. அதன் போது, ஒருவர் எதிர் பார்த்தபடி மற்றவர் நடக்க வில்லை எனின் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சிலர், திருமணம் முடித்து விட்டோமே, இனி என்ன செய்வது என சலித்த படி வாழ்கையை ஓட்டுகின்றனர். பேசி முடிக்கப்படும் திருமணங்கள் சில வருடங்கள் வரை பொருத்தமானதாக இருந்திருக்கலாம், ஆனால் தற்போதுள்ள வளர்ச்சியடைந்த தொழில்நுட்ப யுகத்தில், மனிதர்கள் இயந்திரங்களாக வேலை செய்யும் போது பேசி திருமணம் முடித்து, ஒருவாரை ஒருவர் அறிஞ்சு கொண்டு வாழப் பழகுவது இலகுவானது என நான் நினைக்கவில்லை. :D

எமது கலாச்சாரத்திலே பலதை போட்டிக்காகவும், வெளிப் பகட்டிற்காகவும் புலத்திலே செய்வது ஒரு சம்பிரதாயமாகி வருகிறது என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய விடயம் தான். இங்கு வீணாக செலவழிக்கப்படும் பணம், திருமணம் முடிப்பவர்களின் எதிர்காலத்திற்கு செலவழிக்கப்பட்டால் புதிதாக வாழ்கையைத் தொடங்கும் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இப்படி செலவழிப்பது ஒரு சுழற்ச்சி போன்றது. ஒருவர் செலவளிபதைப் பார்க்கும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு அதை விட அதிகம் செலவழிக்க வேண்டும் என நினைகின்றனர். இப்படி நினைப்பவர்கள் வசதி இல்லாதவர்களாக இருக்கும் போதே தேவையில்லாத கடன்களும் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன... :blink:

எனது கருத்துப்படி திருமணம், என்பது ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளக் கூடிய இருவரிடையே மட்டும் நடக்க வேண்டும்.

இது முற்றிலும் உண்மை தும்பளையான். எனக்குத் தெரிந்த பலரும் நீங்கள் குறிப்பிட்டதுபோல ஏனோ தானோவென்றுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் சந்தோசமின்றி இருப்பது மட்டுமின்றி, பிள்ளைகளின் சந்தோசங்களையும் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுள் காதலித்து மணந்து கொண்டவர்களும் அடங்குவர். தற்போதைய காலகட்டத்தில் எல்லோரும் தங்கள் தங்கள் மனச்சந்தோசத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நாம் வாழ்வது ஒருமுறைதான். அதற்குள் எமக்கு விரும்பியவாறு நாம் வாழவேண்டுமென்பதே இந்தத் தலைமுறையின் எண்ணம். எமது எண்ணங்களுக்கேற்றவராக, எமக்குப் பிடித்தவராக ஒருவரைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது. அது அவ்வளவு எளிதும் அல்ல. தேடல் மூலம் நாம் ஓரளவேனும் எமக்குரியவரைத் தேர்ந்தெடுக்கலாம்.

நீங்கள் சொல்வது போல, காதல் திருமணங்கள் முடித்தவர்கள் எல்லோரும் சந்தோசமாக இல்லை. அவர்களிலும் விவாகரத்து வரை போனவர்கள் அதிகம். அதிலும் மனப்பொருத்தம் அமைந்தவர்கள்தான் தொடர்ந்தும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மனப்பொருத்தம் இல்லாதவர்கள் ஒருசில வருடங்களில் பிரிந்து விடுகிறார்கள். காதல் என்பது ஒரு மனக்கவர்ச்சி. அது நீண்டநாள் நீடிப்பதில்லை. காதலோடு மனப்பொருத்தமும் சேர்ந்தால்தான் அவர்களின் உறவு நீடிக்கிறது. இதோடு இராசயனப் பொருத்தமும் சேர்ந்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையான தம்பதிகளாக இருப்பார்கள். ஒருசிலருக்கே இப்படி அமையும். இதற்காகத்தான் பொருத்தம் பார்த்துச் செய்வார்கள். ஆனால், எம்மில் பலர், 70 -75 வீதம் பொருந்தியிருந்தாலே செய்து வைத்துவிடுவார்கள். எமது பெற்றோர்கள், பொருத்தம் பார்த்து, அவர்களுக்குப் பிடித்துவிட்டால் உடனே திருமணத்தை நிச்சயித்து விடுகிறார்கள். அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளையும் கருத்தில் எடுப்பது மிகவும் குறைவு. அதிலும் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இன்னும் மோசம். வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்றே அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். ஆனால், தாங்கள் வயதில் மூத்தவர்கள் என்பதாலேயே தமக்கு எல்லாம் தெரியும் என நினைப்பார்கள். எனக்குத் தெரிந்து, பல திருமணங்கள் அவசரப்பட்டே நிச்சயிக்கப்பட்டிருக்கின்ற

  • 6 months later...
  • தொடங்கியவர்

தற்போதைய காலகட்டத்தில் எல்லோரும் தங்கள் தங்கள் மனச்சந்தோசத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நாம் வாழ்வது ஒருமுறைதான். அதற்குள் எமக்கு விரும்பியவாறு நாம் வாழவேண்டுமென்பதே இந்தத் தலைமுறையின் எண்ணம்.

சாதாரணமாக ஓர் மனுசன் இப்படித்தான் இருப்பான் + யோசிப்பான் தமிழச்சி. தான் சந்தோசமாய் இருக்க முயற்சி செய்வது சரி, ஆனால்... மற்றவனின் மனச்சந்தோசத்திற்கு இடைஞ்சல் கொடுக்கும்போதுதான் பிரச்சனை வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.