Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர்ந்து முன்னேறும் சிங்கள ராணுவத்துக்கு சமாதி கட்டுமா கிளிநொச்சி?

Featured Replies

தொடர்ந்து முன்னேறும் சிங்கள ராணுவத்துக்கு சமாதி கட்டுமா கிளிநொச்சி?

2-ம் உலகப்போர் உச்ச கட்டமாக இருந்த நேரம். ஹிட்லரின் ஜெர்மனி படை ரஷியாவுக்குள் புகுந்து வெற்றிகளை குவித்து தலை நகரம் மாஸ்கோவை பிடிக்க முன்னேறி கொண்டிருந்தது.

எந்த நேரத்திலும் மாஸ்கோ ஜெர்மனி படையிடம் விழலாம் என்ற பரபரப்பான கட்டம். மாஸ்கோவை நோக்கி வந்த ஜெர்மனி படையை எதிர்கொள்ள லெனின் கிராடு என்ற இடத்தில் ரஷிய படை அரண் அமைத்து நின்றது.

இருதரப்புக்கும் அங்கு கடும் சண்டை நடந்தது. ரஷியபடை அடித்த அடியில் ஜெர்மனி தடுமாறியது. ஜெர்மனி வீரர்கள் கூட்டம், கூட்டமாக செத்து விழுந்தனர். இனியும் தாக்குபிடிக்க முடியாது என்று கருதிய ஜெர்மனிபடை பின்வாங்கியது.

அவர்களை ரஷியபடைகள் விடாமல் விரட்டி சென்றன. படை ஜெர்மனிக்குள் சென்ற பிறகும் ரஷியபடைகள் விடவில்லை. பெர்லின் நகரம் வரை விரட்டினார்கள். கடைசியில் தோல்வி உறுதி என கருதிய ஹிட்லர் தற்கொலை செய்ய 2-ம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.

இதே `லெனின் கிராடு' நிலைதான் கிளிநொச்சியில் சிங்களபடைக்கு ஏற்படப்போகிறது என்று விடுதலைப்புலிகள் கூறுகிறார்கள்.

விடுதலைப்புலிகளிடம் இருந்த இடங்களில் ஒவ்வொரு பகுதியாக பிடித்து இப்போது விடுதலைப்புலிகளின் தலைமையிடமான கிளிநொச்சியை பிடிக்க நகரை சுற்றி ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கு முன்பே முற்றுகை தொடங்கி விட்டது. அப்போதே இன்னும் 48 மணி நேரத்தில் கிளிநொச்சியை பிடித்து விடுவோம் என்று ராணுவ தளபதி உதய நாணயக்காரா கூறினார். மாதம் ஒன்று ஆகியும் இன்னும் புறநகர் பகுதியிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

இப்போது கிளிநொச்சியை சுற்றியுள்ள சிறு, சிறு ஊர்களை பிடித்து வருகிறார்கள். 4 நாட்களுக்கு முன்பு விடுதலைப்புலிகள் கடற்படை தளமான பூநகரியை கைப்பற்றினார்கள்.

இதையடுத்து கிளிநொச்சியை பிடிக்க பூநகரியில் இருந்து கிழக்கு நோக்கி ஒரு படையும், மாங்குளம் பகுதியில் வடக்கு நோக்கி ஒரு படையும், யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து முகமாலை வழியாக தெற்கு நோக்கி மற்றொரு படையும் முன்னேறி வருகின்றன.

சிங்கள படையில் 50 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். விடுதலைப்புலிகள் படையில் சுமார் 4 ஆயிரம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். இருந்தாலும் சிங்கமென எதிர்த்து நின்று சிங்கள படையை திக்கு முக்காட செய்து வருகின்றனர். எந்த விலை கொடுத்தாகிலும் கிளிநொச்சியை காப்பாற்றியே தீருவது என்று சபதமிட்டு போரிடுகின்றனர்.

இதுவரை விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவத்துக்கு ஓரளவு மட்டுமே எதிர்ப்பு காட்டி விட்டு பின்வாங்கி வந்தனர். ஆனால் இப்போது கடும் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.

எனவே ரஷியா `லெனின் கிராடு' போல சிங்களபடையை கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் தோற்கடித்து புறமுதுகிட்டு ஓட செய்ய வாய்ப்பு உள்ளது.

இதுவரை விடுதலைப்புலிகள் சாதாரண ஆயுதங்களை கொண்டே சிங்கள படையை தாக்கி வருகிறார்கள். விடுதலைப்புலிகளிடம் அதி நவீன ஆயுதங்கள், விமானம், ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தும் பீரங்கிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றை இனி பயன்படுத்துவார்கள். இது சிங்களபடைக்கு பேரழிவை ஏற்படுத்தலாம். எனவே கிளிநொச்சி சிங்கள படைக்கு சமாதி ஆனாலும் ஆச்சரியம் இல்லை.

இதேபோலத்தான் 1997-ம் ஆண்டு சிங்களபடை வெற்றி மேல் வெற்றி பெற்று வடக்கு பகுதி வழியாக கிளிநொச்சியை நோக்கி முன்னேறியது. விடுதலைப்புலிகள் பின்வாங்கி கொண்டே இருந்தனர்.

கிளிநொச்சிக்கும் முகமாலைக்கும் இடையே உள்ள யானை இறவு என்ற இடத்தில் சிங்கள வீரர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து வெற்றி நடைபோட்டு வந்து கொண்டிருந்தனர்.

அது மேற்கு பக்கமும், கிழக்கு பக்கமும், கடல் அமைந்துள்ள குறுகிய நிலப்பரப்பு கொண்ட பகுதியாகும். திடீரென மேற்கு, கிழக்கு கடல் பகுதியில் இருந்து வந்த விடுதலைப்புலிகள் சிங்கள படையை வழி மறித்தனர். அதேபோல முன்னும், பின்னும் விடுதலைப்புலிகளின் படை சூழ்ந்து கொண்டது.

4 பக்கமும் விடுதலைப்புலிகள் சூழ பொறிக்குள் சிக்கிய எலி போல சிங்களபடை வசமாக சிக்கி கொண்டது. 1000 பேரை விடுதலைப்புலிகள் கொன்று குவித்தனர். மீதி இருக்கும் 10 ஆயிரம் பேரும் தப்ப முடியாத நிலை.

எப்படியாவது எங்களை காப்பாற்றுங்கள் என்று இந்தியா உள்பட சர்வதேச நாடுகளிடம் இலங்கை அரசு கெஞ்சியது.

சரி! போனால் போகட்டும் என்று விடுதலைப்புலிகள் 10 ஆயிரம் பேருக்கும் உயிர் பிச்சை கொடுத்தனர்.

அதேபோல பொறிக்குள் சிக்கவைக்கத்தான் விடுதலைப்புலிகள் பின்வாங்கி செல்கிறார்கள் என்று இலங்கை முழுக்க பேச்சு இருக்கிறது.

ஆனால் இப்போதைய சிங்களபடை முன்புபோல இல்லை. ஏராளமான நவீன ஆயுதங்கள் இருக்கின்றன. வலுவான விமான படை இருக்கிறது. புதிய யுக்தியோடு போரிடுகிறார்கள். எனவே விடுதலைப்புலிகளை வீழ்த்தி விடுவார்கள் என்று சொல்வோரும் இருக்கிறார்கள்.

இதில் எது நடக்க போகிறதோ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் அங்கு நடக்கும் சிங்கள படையின் அத்துமீறலால் அந்த பகுதியைச் சேர்ந்த 2 1/2 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து குழந்தை குட்டிகளோடு காடுகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். உண்ண உணவு இல்லை. உயிருக்கு உத்தரவாதம் இல்லை. தினமும் மரண பீதியில் நிற்கும் அவர்களின் கண்ணீருக்கு நிச்சயம் இறைவன் பதில் சொல்லியே தீருவான் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் திடீரென அதிரடியாக தாக்கும் கொரில்லா போர் முறையில் உலகப்புகழ் பெற்றவர்கள். தற்போது அவர்கள் பெரிய ராணுவத்தை போல நேருக்கு நேர் சென்று போரிடும் மரபு போர் முறையை பின்பற்றுகிறார்கள்.

விடுதலைப்புலிகளுக்கு ஒரு வேளை பின்னடைவு ஏற்பட்டால் அவர்கள் மறுபடியும் கொரில்லா போர் முறையில் இறங்கலாம். அப்போது சிங்கள படையால் தாக்கு பிடிப்பது கடினம். சிங்களபடை இப்போது தமிழர் பகுதி முழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறது. எனவே கொரில்லா முறையில் தாக்கும்போது அதை சமாளிப்பது பெரிய கஷ்டமாக இருக்கும்.

பிடிப்பது எளிது தக்க வைப்பது கடினம்

ஒரு நாட்டில் போர் நடக்கும் போது எதிரி பகுதியை எளிதாக பிடித்து விடலாம். ஆனால் அதை நீண்ட காலம் தக்க வைப்பது கடினம். இதற்கு முன்பு விடுதலைப்புலிகளிடம் இருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் விடுதலைப்புலிகள் எளிதாக மீட்ட வரலாறு இருக்கிறது.

நவீன விமானம்- ஆயுதங்கள்

சிங்கள ராணுவத்திடம் தற்போது மிக்-29 ரக போர் விமா னம் எஸ்.எல்.ஏ.எப்-மி-24 என்ற ஹெலிகாப்டர்கள் உள்ளன. அதிநவீன வசதி கொண்ட இவை சிங்கள படைக்கு மிக உதவியாக இருக்கிறது.

மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சரும் அவர்களிடம் உள்ளது. இதை வைத்து ஒரே நேரத்தில் பல ராக்கெட்டுகளை வீசி விடுதலைப்புலிகளுக்கு கடும் நெருக்கடி கொடுக்கிறார்கள். இலங்கை கடற்படையும் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம், மற்றும் பொருட்கள் வருவதை வெற்றிகரமாக தடுத்து வருகிறார்கள்.

2005-ம் ஆண்டில் ராஜபக்சே அதிபரான நேரத்தில் விடுதலைப்புலிகளுக்குரிய கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள மன்னார், பட்டி கோலா, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு பகுதி ஆகியவை இருந்தன. இப்போது அவற்றை விடுதலைப்புலிகள் இழந்து விட்டனர்.

20 வருடமாக விடுதலைப்புலிகளிடம் இருந்த மன்னார் மாவட்டமும் கைவிட்டு போய் விட்டது.

அடம்பன் நகரம், விடத்தல் தீவு போன்றவற்றை விடுதலைப்புலிகள் இழந்தது அவர்களுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டபகுதிகளே விடுதலைப்புலிகளிடம் இருக்கின்றன. விடுதலைப்புலிகள் 1997-ம் ஆண்டு நடத்திய `ஓயாத அலைகள்' என்ற தாக்குதல் சிங்கள படையை திëக்கு முக்காட செய்தது.

சிங்களபடை தமிழர்களின் பெரும் நிலப்பரப்பை 8 மாதமாக போரிட்டு கைப்பற்றி இருந்தது.

`ஓயாத அலைகள்' என்ற அதிரடி தாக்குதல் மூலம் விடுதலைப்புலிகள் அந்த இடங்களை எல்லாம் 7 நாளில் மீண்டும் கைப்பற்றினார்கள். விடுதலைப்புலிகள் நூறு, நூறு பேராக வந்து திடீர் தாக்குதல் நடத்துவார்கள். சிங்களபடை சிறிது நேரம் கூட ஓய்வு எடுக்க விடாமல் இந்த தாக்குதல் நடந்தது. இதனால் தான் இதற்கு ஓயாத அலைகள் என்று பெயரிட்டு இருந்தனர்.

கடந்த 2 ஆண்டு போரில் 8 ஆயிரம் விடுதலைப்புலிகள் கொன்று இருப்பதாகவும், முன்னணி தலைவர்கள் பலர் பலியாகி விட்டதாகவும் சிங்கள அரசு கூறுகிறது.

http://www.tamilwin.com/[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008, 08:23.14 PM GMT +05:30 ] [ மாலைமலர் ]

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து முன்னேறும் சிங்கள ராணுவத்துக்கு சமாதி கட்டுமா கிளிநொச்சி?

சிங்களபடை தமிழர்களின் பெரும் நிலப்பரப்பை 8 மாதமாக போரிட்டு கைப்பற்றி இருந்தது.

`ஓயாத அலைகள்' என்ற அதிரடி தாக்குதல் மூலம் விடுதலைப்புலிகள் அந்த இடங்களை எல்லாம் 7 நாளில் மீண்டும் கைப்பற்றினார்கள். விடுதலைப்புலிகள் நூறு, நூறு பேராக வந்து திடீர் தாக்குதல் நடத்துவார்கள். சிங்களபடை சிறிது நேரம் கூட ஓய்வு எடுக்க விடாமல் இந்த தாக்குதல் நடந்தது. இதனால் தான் இதற்கு ஓயாத அலைகள் என்று பெயரிட்டு இருந்தனர்.

http://www.tamilwin.com/

இது தான் இனியும் நடக்கும் பாருங்கோ :huh:

Edited by kuddipaiyan26

மன்னிக்கவேணும்! 2ம் உலகமகா யுத்தத்தையும் நமது போராட்டத்தையும் ஒப்பிடவேண்டாம்! ரஸ்யாவில் வென்றது ரஸ்ய படைகள் அல்ல! காலநிலையும் அமரிக்க பிரித்தானிய நட்புறவுகளின் உதவியும்! நமது போரர் மிகவும் தனித்துவம் வாய்ந்தது! அதற்கு தனியான ஒரு வரலாறு இன்று எழுதப்படுகிறது!

இரண்டாம் உலகப்போரின்பல ரகசியங்கள் தற்போது வெளிருகிறது முடிந்தால் பாரக்கவும்!

http://www.bbc.co.uk/iplayer/episode/b00fk...oors_Episode_1/

http://www.bbc.co.uk/iplayer/episode/b00fp...oors_Episode_2/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் தலைவனின் வழிநடத்தலும் போர் யுக்தியும் அளவிடமுடியாதவை. இழந்தவை மீண்டும் கிடைக்கும்..

தலைவரின் மாவீரர் நாள் உரை பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் இந்த போர் மன்னாருக்கான போர் அல்ல இது ஆனையிறவுக்கான போர் என்று ஒரு வருடத்துக்கு முதலலெயே எமது ஆய்வாளர்கள் கூறிவிட்டார்களே! அப்படி இருக்கும் போது புலிகளுக்கு மட்டும் தெரியாதா சிங்களத்தின் புதிய (?) போர் யுக்தி? யாழ் குடாவில் இருக்கும் இராணுவம் இன்னமும் நெருக்கடியினுள்தான் இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

கிளிநொச்சிக்கு வெளியில்தான் சமாதி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வின் இணையத்தளத்தில் வந்த இவ்வாக்கத்தினை வாசிக்கும் போது இந்திய ஊடக மொன்றில் வந்த ஆக்கம் போல இருக்கிறது. ஊடகத்தின் பெயரை தமிழ்வின் இணையத்தில் இல்லையா? அல்லது இறைவன் இணைக்க மறந்து விட்டாரா?

2005-ம் ஆண்டில் ராஜபக்சே அதிபரான நேரத்தில் விடுதலைப்புலிகளுக்குரிய கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள மன்னார், பட்டி கோலா, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு பகுதி ஆகியவை இருந்தன

சரி விடுங்கோ கந்தப்பு, மெள்ள மெல்ளமாத்தான் திருந்தவேணும்.... இருந்தாலும் நீண்ட தூரந்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.