Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேந்திர முக்கியத்துவம் பெற்று வரும் பரந்தன். - வன்னியன்,

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேந்திர முக்கியத்துவம் பெற்று வரும் பரந்தன். - வன்னியன்,

ஞாயிறு, 23 நவம்பர் 2008, 06:21 மணி தமிழீழம் []

படைத்தரப்பின் மிகப்பெரும் இலக்காகக் கொள்ளப்பட்டிருந்த பூநகரி படைகளிடம் வீழ்ச்சி கண்டதோடு யாழ்ப்பாணத்திற்கான தரைவழித் தொடர்பு தென்பகுதியுடன் இணைக்கப்பட்டு விட்டது. இவ்வெற்றியினை அடுத்து சிங்கள தேசத்தில் மிகப்பெருமெடுப்பிலான மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் நடந்தேறிவிட்ட நிலையில் வட போர்முனையில் பூநகரியிலிருந்து பரந்தன் நோக்கி படைகள் நகர்ந்த போது உக்கிரச் சமர் வெடித்தது. இச்சமரினால்; ஏற்பட்ட பாரிய இழப்புக்கள் செய்தித் தணிக்கைகளின் மூலம் மறைக்கப்பட்டாலும் அதனுடைய தாக்கம் தென்னிலங்கையில் மெல்ல மெல்ல உணரப்படத் தொடங்கி விட்டது.

பொதுவாக மனித சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற சண்டைகளில் வெற்றி பெற்ற சமூகம் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தாலும் எதிரி பேரிழப்புக்களைச் சந்தித்து மிகப்பெரும் துன்பத்தில் இருக்கின்ற அதேவேளை வெற்றி பெற்றவர் மகிழ்ச்சிக் கூத்தாடினாலும் அவர்கள் பக்கமுள்ள இழப்புக்களும், அதன் பின்னாலுள்ள அழுகை, சோகம் என்பவற்றை மறந்துவிடுதோடு இது நிலையானதென்ற கற்பனாவாதத்தில் திளைத்துவிடுவது புராதன சமூகங்களுக்கு மட்டுமல்ல இன்றைய நவீன உலகிற்கும் பொதுவான மனோபாவம் என்பது இன்று தென்பகுதி நிகழ்வுகள் மூலம் நிரூபனமாகின்றது.

பேரினவாதச் சிந்தனை மூலம் ஓரினத்தை அடக்குகின்ற போது அடக்கப்படுகி;ன்ற இனம் மாத்திரமல்ல அடக்குகின்ற இனமும் நிம்மதியாக வாழமுடியாது. என்ற யதார்த்த வாதத்தை இன்றும் கூட பதவிஇலக்கு அரசியல் வாதிகள் உணரவில்லை. இனியும் உணரப்போவதுமில்லை. இவ்வாறான புரிதல் இனங்களுக்கிடையே கட்டிவளர்க்கப்பட்டாலேயன்றி இலங்கைத் தீவின் ஜனநாயகம், சமத்துவம், சமாதானம், நிலைபெறுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படப் பேவதில்லை.

அந்தவகையில்தான் பௌத்த சிங்களப் பேரினவாத கருத்தாக "கிளிநொச்சி சிங்களவர்களின் பூர்வீக பூமி" என்ற அரசியல் சபதிகளின் இனவாதக்கருத்தும், வன்னியைக் கைப்பற்றிய பின்னர்தான் அரசியல்ப் பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வுத் திட்டம், புலிகளுடன் தமிழர் பிரச்சனை பற்றிப் பேசத் தேவையில்லை. என்ற கோசங்களும் உரத்து ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்ட இந்த நிலையில் மேற்கு வன்னியின் வீழ்ச்சி தென்னிலங்கையில் மேலும் பேரினவாதச் சிந்தனைக்கு உசுப்பேத்தி விட்டிருக்கிறது. இதன் விளைவுதான் பரந்தன் நோக்கியும், முகமாலைப் பகுதி மீதும் மேற்கொள்ளப்பட்ட படைநடவடிக்கை அமைக்கிறது

கடந்த வாரம் பூநகரி வீழ்ச்சியடைந்ததையடுத்து இராணுவத்தின் வுகு3 படையணி மாங்குளம் நோக்கி மும்முனைகளினால் நகர்ந்து மாங்குளம் சந்தியை கடந்த 17 திகதி காலை கைப்பற்றியது. இதன்மூலம் மாங்குளத்திற்குத் தெற்கே ஏ9 வீதியில் உள்ள கொல்லர் புளியங்குளத்திலிருந்து மாங்குளத்திற்கு வடக்கே கிழவன்குளம் வரையான ஏ9 வீதியில் ஆறு மைல் தூரத்தை படையினர் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கின்றனர். இதன் மூலம் மாங்குளம் நகரம் முழுமையாக படையினர் வசம் சென்றிருக்கிறது. மாங்குளம் சந்தியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் செல்லும் ஏ34 வீதியில் கிழக்குப் புறமாக இரண்டு கிலோமீற்றர் தூரம் முன்னகர்ந்திருக்கும் படையினர் இவ்வீதியை குறுக்கறுத்துச் செல்லும் கனகராயன் ஆற்றுப்பகுதியில் (மரப்பாலத்திற்கண்மையில்) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

மாங்குளத்தின் வீழ்ச்சி கிழக்கு வன்னியின் தென் அரைப்பாகத்தில் மிகப்பரும் நெருக்கடியை ஏற்படுத்தவல்லது. ஏனெனில் ஓமந்தைப்பகுதியில் நிலைகொண்டிருக்கின்ற படையினருக்கு முன்பிருந்த புலிகளின் முன்னரங்கை அவர்கள் கைவிட்டு பின்னகர்ந்திருப்பதனால் தற்போது படையினர் புளியங்குளத்திற்கு அண்மை வரை நகர்ந்து நிலையெடுத்திருக்கின்றனர். இதன்மூலம் மாங்குளப்பகுதியிலுள்ள படையினரை ஏ9 வீதியூடாக தொடர்பை ஏற்படுத்துவதற்கு இன்னும் 11 மைல்கள் தூரமே உள்ளது. அத்தோடு இப் 11 மைல் தூர ஏ9 வீதியின் மேற்குப் புறத்தில் நான்கு தொடக்கம் ஐந்து மைல்கள் தூர இடைவெளிக்கு அப்பாலும் படையினர் நிலைகொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மாங்குளத்திற்குத் தெற்கேயுள்ள பிரதேசங்களிற்கு நெருக்கமாக படையினர் நிலைகொண்டிருக்கின்ற வேளை நெடுங்கேணிப்பிரதேசத்திலுள்

  • கருத்துக்கள உறவுகள்

அக்கராயன் குளத்தில் இருந்து கிளிநொச்சியைப் பிடிக்கலாம்

பூநகரி-நல்லூர் பகுதியிலிருந்து பரந்தனைப் பிடிக்கலாம்.

முகமாலை- கிளாலியிலிருந்து ஆனையிறவைப் பிடிக்கலாம்.

ஒதியமலையில் இருந்து நெடுங்கேணி பிடிக்கலாம்.

மாங்குளத்தில் இருந்து ஒட்டுசுட்டானைப் பிடிக்கலாம்.

குமுழமுனையில் இருந்து முள்ளியவளையைப் பிடிக்கலாம்..

இப்படி எல்லா இடமும் பிடிக்கலாம் என்பதற்கு பதில் மாவீரர் தின உரையில் உள்ளது என்றுதான் எல்லாரும் நம்புகின்றார்கள்..

நம்பிக்கைதானே வாழ்க்கை..

ஓமந்தையை பிடித்திருப்பதாக கொழும்பு இணையம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

நம்பிக்கை...தானே... வாழ்க்கை...???????

பளைப்பகுதியிலிருந்து பலாலி கூட்டுப்படைத்தளத்தின் மீது குறிபிசகாத ஆட்லறித் தாக்குதலை விடுதலைப்புலிகள் நாடாத்தியதானது படைத்தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ு. பொதுவாக புலிகளின் வசமுள்ள வடமாட்சி கிழக்குப்பகுதியிலிருந்தும், பளைப்பிரதேசத்திலிருந்தும் யாழ்க்குடாவின் எந்தப் பகுதிக்கும் ஆட்லறித் தாக்குதலை மேற்கொள்ளக் கூடிய வீச்செல்லைக்குட்பட்ட தூரத்திலேயே இராணுவத்தளங்கள் அமைந்துள்ளது.

எப்பவுங்கண்ணா இது நடந்தது???

நீங்க பதிவு படிக்கிற ஆக்களை வச்சு காமடி கீமடி ஒண்டு பண்ணேல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

ஓமந்தையை பிடித்திருப்பதாக கொழும்பு இணையம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

நம்பிக்கை...தானே... வாழ்க்கை...???????

ஓமந்தையை யாரும் பிடிக்கதேவையில்லை

போய் உட்கார்ந்தாலே போதும்

ஏனெனில் அது ஆயுதங்கள் பாவிக்கக்கூடாத இடம் என்று எழுமப்பட்ட தகவல் இருக்கும் இடம்............????

ஏனெனில் அது ஆயுதங்கள் பாவிக்கக்கூடாத இடம் என்று எழுதப்பட்ட தகவல் இருக்கும் இடம்............????

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் மந்தையைப் பிடிப்பதில் என்ன இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் மந்தையைப் பிடிப்பதில் என்ன இருக்கிறது.

ஏன் முல்லைத்தீவைப் பிடித்தால்கூட ஒன்றும் இல்லைத்தானே.. கணனி, இணைய வசதிகளோடு இருந்து வேடிக்கை பார்க்கும் நம் கூட்டத்திற்கு ஒரு பிரச்சினையுமில்லை.. :lol:

ஏன் முல்லைத்தீவைப் பிடித்தால்கூட ஒன்றும் இல்லைத்தானே.. கணனி, இணைய வசதிகளோடு இருந்து வேடிக்கை பார்க்கும் நம் கூட்டத்திற்கு ஒரு பிரச்சினையுமில்லை.. :lol:

வேடிக்கை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள் வேண்டியதைச் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க ஆளாளுக்கு ஒவ்வொரு கதையைக்கதைத்துக்கொண்டு இருக்கிறம் இனி என்ன நடககப்போகிறது புலிகள் பலம் இழந்துவிட்டார்களா இல்லை பதுக்குகிறார்களா என்டு எங்களுக்கு மட்டுமல்ல ஏன் சிங்களவனுக்குக் கூடத்தெரியாது.பொறுத்திருப்

Edited by puspaviji

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பவுங்கண்ணா இது நடந்தது???

நீங்க பதிவு படிக்கிற ஆக்களை வச்சு காமடி கீமடி ஒண்டு பண்ணேல்லையே?

நீர் கேட்டதத் தான் நானும் கேட்கிறன் இது எப்ப நடந்தது நம்மட ஆக்கள் சும்மா றீல் விட்டு இனி உன்மையைச் சொன்னாலும் சனம் நம்பாமல் விடப்போகுது பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

வேடிக்கை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள் வேண்டியதைச் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

வேடிக்கை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்

அவர்களைத்தான் இவர் தேடுகிறார்

தானும் அவர்களோடு சேர்வதற்கோ????

அல்லது

தட்டிக்கொடுக்கவோ??????????

நாமறியோம்....................?????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.