Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மும்பை பற்றி எரிந்தபோது பார்ட்டிக்குப் போன ராகுல் காந்தி

Featured Replies

டெல்லி: மும்பையில் தீவிரவாதிகளுடன் கமாண்டோப் படையினர் போராடிக் கொண்டிருந்தபோது, நாடே பதைபதைப்புடன் அந்தப் போராட்டத்தை டிவிகள் மூலம் பார்த்துக் கொண்டிருந்தபோது, டெல்லி புறநகர்ப் பகுதியில் தனது நண்பர் கொடுத்த ஆடம்பர விருந்தில் கலந்து கொண்டு ஜாலியாக இருந்திருக்கிறார் ராகுல் காந்தி.

நாடே அதிர்ந்து போயிருந்த நேரத்தில் ராகுல்காந்தி இப்படி பார்ட்டிக்குப் போனது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு தொடங்கிய இந்த விருந்து அதிகாலை வரை நீடித்துள்ளது. இரவு முழுக்க பார்ட்டியில் கலந்து கொண்டார் ராகுல் காந்தி. ராஜீவ் காந்தியின் தோழரும், குடும்ப நண்பருமான கேப்டன் சதீஷ் சர்மாவின் மகன் சமீர் சர்மா.

சமீரும், ராகுலும் சிறு வயது முதலே தோழர்கள். சமீருக்குக் கல்யாணம் ஆகப் போகிறது. இதையொட்டி, அவர் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணிந் சகோதரி லீனா முசாபிர் கொடுத்த விருந்துதான் இது.

டெல்லி அருகே உள்ள ராதே மோகன் செளக் என்ற இடத்தில் உள்ள பிரமாண்டமான பண்ணை இல்லத்தில் இந்த பார்ட்டி நடந்தது. கிட்டத்தட்ட 800 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். மிக மிக ஆடம்பரமாக பார்ட்டி நடந்துள்ளது.

மும்பையில் அப்பாவி மக்களைக் காப்பாற்ற தீவிரவாதிகளுடன் கமாண்டோக்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருந்த நிலையில், ராகுல் காந்தி ஆடம்பர விருந்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ராகுல் காந்தி பார்ட்டிக்குப் போனது குறித்து அஜய் பால் என்பவர் இப்படிக் கூறுகிறார் - மும்பை முழுவதும் ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்டுகளில் பார்ட்டிகள் உள்ளிட்டவற்றை ரத்து செய்து விட்டனர். மற்ற இடங்களில் ஆடம்பரமின்றி எளிமையான முறையில் நிகழ்ச்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன

ஆனால் ராகுல்காந்தி பார்ட்டியில் கலந்து கொண்டு சந்தோஷமாக இருந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் எதிர்காலத் தலைவர்கள் மீதான எங்களது நம்பிக்கையை தகர்க்கும் வகையில் அமைந்து விட்டது என்கிறார் பால். பால், ஓபராய் ஹோட்டலில் சிக்கி, ஹோட்டல் ஊழியர்களால் காப்பாற்றப்பட்டு உயிர் மீண்ட அப்பாவிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோமாபுரி நகரம் பற்றி எரிந்தபோது, நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டு இருந்தானாம். அம்மா தான் பிறந்தா வூரு வரலாறை, பையனுக்கு சொல்லி இருப்பாரு. இப்ப நம்ப வூரு பற்றி எரியும் போது, பையனுக்கு அம்மா வூரு ராசா நீரோ நினைப்பு வந்திருக்கும். தம்பி ஜல்சா பண்ணக் கிளம்பியிருப்பாரு.

:rolleyes::lol::D

[தட்ஸ்டமில் இணையதளத்தில் ஒரு வாசகர் எழுதியுள்ள கருத்து!]

இது எங்களுக்கு தேவையில்லாத விவகாரம்.

இதை விட கேவலமானது 2005 (சுநாமி அழிவிற்கு பிறகு) 2006 (கிழக்கில் ஆக்கிரமிப்பு அவலங்கள் ஆரம்பித்த நிலையில்) 2007 (முழு தமிழீழமுமே பத்தி எரிந்து கொண்டிருக்கும் பொழுது) வரை நடந்தது. 2008 இலும் சாதாரணமானவர்களால் அல்ல நடைமுறை அரசு மற்றும் அதன் நிர்வாக அலகு என்று சொல்லிக் கொள்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.

எங்கடை அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்திக் கொள்ளுவம். அண்டை நாட்டு உள்விவகாரம் தேவை அற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவன் என்பவன்மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணிப்பதற்காக தான் விரும்பி வரவேண்டும்

நாமாக சும்மா போறவனைப்பிடித்துக்கொண்டுவந

  • தொடங்கியவர்

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்களுக்கு தேவையில்லாத விவகாரம்.

இதை விட கேவலமானது 2005 (சுநாமி அழிவிற்கு பிறகு) 2006 (கிழக்கில் ஆக்கிரமிப்பு அவலங்கள் ஆரம்பித்த நிலையில்) 2007 (முழு தமிழீழமுமே பத்தி எரிந்து கொண்டிருக்கும் பொழுது) வரை நடந்தது. 2008 இலும் சாதாரணமானவர்களால் அல்ல நடைமுறை அரசு மற்றும் அதன் நிர்வாக அலகு என்று சொல்லிக் கொள்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.

எங்கடை அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்திக் கொள்ளுவம். அண்டை நாட்டு உள்விவகாரம் தேவை அற்றது.

இவர் சுற்றி சுழண்டு தலைவரின் பிறந்தநாளுக்கு வாறார்

திருந்தாத nஐன்மம்

விட்டுவிடுங்கள்

அல்லது

கூப்பிடுங்கள் ஏகே47யை.........

Edited by KUGATHASAN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா இருங்கையா அந்தால் சும்மா ஜாலியா பார்ட்டிக்குப்போனதுக்கு நீங்கள் ஏனையா சன்டைபிடிக்கிறியல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாறகிழமை எங்கடை சனத்தின்ரை கொண்டாட்டம் ஒண்டுக்கு போறன்.

அங்கை 250 பேருக்கு ஒரு மண்டபம் எடுத்து நல்லவடிவாய் சோடிச்சு கேக் வெட்டப்போயினமாம்.

அதோடை மூண்டு சாறி மாத்தி போட்டோ எடுக்கிறதாய் காதிலை விழுந்துது

சாப்பாடு வகையள் சொல்லி வேலையில்லை.சர்வதேச அளவிலை எல்லாச்சாப்பாடுகளும் அங்கையிருக்கும்.ஆனால் எங்கடை பிரச்சனையளை சர்வதேசத்துக்கு சொல்லமாட்டம்.

மற்ரது தண்ணியைப்பத்தி நான் வாய் திறக்க மாட்டன்

  • கருத்துக்கள உறவுகள்

வாறகிழமை எங்கடை சனத்தின்ரை கொண்டாட்டம் ஒண்டுக்கு போறன்.

அங்கை 250 பேருக்கு ஒரு மண்டபம் எடுத்து நல்லவடிவாய் சோடிச்சு கேக் வெட்டப்போயினமாம்.

அதோடை மூண்டு சாறி மாத்தி போட்டோ எடுக்கிறதாய் காதிலை விழுந்துது

சாப்பாடு வகையள் சொல்லி வேலையில்லை.சர்வதேச அளவிலை எல்லாச்சாப்பாடுகளும் அங்கையிருக்கும்.ஆனால் எங்கடை பிரச்சனையளை சர்வதேசத்துக்கு சொல்லமாட்டம்.

மற்ரது தண்ணியைப்பத்தி நான் வாய் திறக்க மாட்டன்

உண்மையாவா?? சுக்காட் முருகன் கோயிலிலை 7பேர்தான் உண்ணாவிரதம் இருந்தவையாம் அதுவும் 15 நிமிசம் . அதைவேறை படம் எடுத்து செய்தியாய் போட்டு ஊருக்கும் அனுப்பினவையாம். நாங்களும் ஊருக்கு வேலை செய்யிறம் எண்டு காட்டினவையாம். உலக நாடுகளிலையே யெர்மன்தான் அதி வேகமாய் உணர்ச்சியாய் வேலை செய்யினமாம். என்ரை மண்டையை கம் காமாச்சியம்மன் கோயில் சுவரிலை கொண்டுபோய் அடிக்கிறதாய் நேத்திக்கடன் வைச்சிருக்கிறன். முடிஞ்சால் இன்னும் யாராவது ஒரு மண்டபத்தை எடுத்து உண்ணா விரதம் இருங்கோ.தாங்க முடியேல்லை :rolleyes::lol::D

வன்னியிலை பத்தி எரியும் போது எங்கட ஆக்கள் கொழும்பிலையும், வெளி நாட்டிலையும் தண்ணி பாட்டி வைக்கிறது போல வைத்து இருப்பினம்.. அந்த பெடியும் போய் இருக்கும்...!!

என்ரை மண்டையை கம் காமாச்சியம்மன் கோயில் சுவரிலை கொண்டுபோய் அடிக்கிறதாய் நேத்திக்கடன் வைச்சிருக்கிறன்.

நேத்திக்கடனை எப்ப நிறைவேற்றப்போறியள்??

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி! எப்ப கடன் என்று எனக்கும் ஒருக்காச் சொல்லுங்கோ!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.