Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

120 பேர் பலி, 280 பேர் காயம்.கிளிநொச்சி நோக்கிய இருமுனை முன்னகர்வு முறியடிப்பு, ராணுவம் மலையாளபுறம் வரை பிந்தள்ளப்பட்டது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:( 120 பேர் பலி, 280 பேர் காயம்.கிளிநொச்சி நோக்கிய இருமுனை முன்னகர்வு முறியடிப்பு, ராணுவம் மலையாளபுறம் வரை பிந்தள்ளப்பட்டது !

புதன்கிழமை நடந்த கிளிநொச்சியைக் கைப்பற்றும் மோதல்களில் ராணுவம் அறிவியல் நகரிலிருந்து மலையாளபுறம் வரை பினதள்ளப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் நேற்று வியாழக்கிழமை வன்னியில் தெரிவித்துள்ளனர். புதுமுறிப்புப் பகுதியில் இருந்து முன்னேற எத்தனித்த விசேட படைகள் மீது புலிகள் நடத்திய எதிர்ப்புச்சமரில் ராணுவத்துக்கு ஏற்படுத்தப்பட்ட கடுமையான இழப்புக்கள் அந்நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளது.இந்த முறியடிப்புச் சமர்களில் ராணுவத்தில் பல இளம் பராயத்தினர் கொல்லப்பட்டைருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல தமது தரப்பு இழப்புகளை மூடி மறைத்திருக்கும் அரசு, வெறும் 23 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. அதில் 12 பேர் புலிகளிடம் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புலிகள் கனரக இயந்திரத் துப்பாக்கிகளையும், மோட்டர்களையும் பாவித்து தம்மைக் கடுமையாகத் தாக்கியதாக படையதிகாரி ஒருவர் வெளிநாட்டுச் செய்திச் சேவைக்குத் தெர்வித்துள்ளார்.

Edited by ragunathan

கிளிநொச்சி முறிகண்டியைக் கைப்பற்றினோம் என்பது, இதுவரை பொய்யாகத்தானுள்ளது.

படை உயிரிழப்பு 120ஆக உயர்வு, ஒரு பற்றாலியன் களமுனையில் இருந்து அற்றப்பட்டனர்

கிளிநொச்சி புதுமுறிப்பு, மற்றும் அறிவியல்நகர் நோக்கி சிறீலங்கா படையினர் நேற்று புதன்கிழமை மேற்கொண்ட முன்னகர்வு முறியடிப்பில் கொல்லப்பட்ட படையினரது எண்ணிக்கை 120ஆக உயர்வடைந்துள்ளதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 120 படையினர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை, மேலும் 280 படையினர் படுகாயம், மற்றும் காயமடைந்துள்ளனர்.

இதன்மூலம் சிறீலங்கா படைகளின் ஒரு பற்றாலியன் வரையிலான படையினர் ஒரு நாளில் களமுனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் வன்னிச் செய்தியாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

கொல்லப்பட்ட படையினரில் பலர் அண்மையில் படையில் இணைக்கப்பட்ட இள அகவையுடைய புதியவர்கள் என களமுனையில் உள்ள போராளிகள் தெரிவித்துள்ளனர்.

புதுமுறிப்பு நோக்கி முன்னேற முற்பட்ட படையினரும், மலையாளபுரத்தில் இருந்து அறிவியல்நகர் நோக்கி முன்னேற முற்பட்ட படையினரும் விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடியாது பின்வாங்கிச் சென்றனர்.

25இற்கும் மேற்பட்ட படையினது உடலங்கள் இரு தரப்பினாலும் மீட்க முயடியாத நிலையில், முன்னரங்க நிலைகளுக்கு இடையில் சிதறிக் கிடப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய மோதலில் தமது தரப்பில் 20 படையினர் மட்டுமே கொல்லப்பட்டனர் எனவும், விடுதலைப் புலிகள் தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டதாகவும் சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது.

களமுனையில் அதிக படையினர் கொல்லப்படும்போது மோதல் பற்றிய தகவலை வெளியிடாது தவிர்க்கும் சிறீலங்கா அரசு, அதற்குப் பின்னர் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட உடலங்களின் எண்ணிக்கை அறிந்த பின்னர் தமது தரப்பு இழப்பினை வெளியிட்டு வருகின்றது.

நேற்றைய மோதலில் விடு்தலைப் புலிகளால் படையினரது 12 உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், தமது தரப்பில் 20 படையினர் கொல்லப்பட்டிருப்பதாக படைத் தரப்பு அறிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

120 படையினர் கொல்லப்பட்டதாக மேற்குலக ஊடகங்கள் : அரசுக்கு நெருக்கடி

கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை சிறீலங்கா படையினர் 90 பேர் கொல்லப்பட்டிருப்பதாக BBC, AFP, AP போன்ற மேற்குல ஊடகங்கள் இன்று தகவல் வெளியிட்டுள்ளன.

சிறீலங்கா அரசு இழப்பினை மூடி மறைத்துள்ள போதிலும், மேற்குலக ஊடகங்கள் அதனை வெளியிட்டுள்ளமை அரசுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கடும் சமர் இடம்பெற்றதை அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

தமது தரப்பில் படையினர் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டிருப்பதாக படைத்தரப்புக் கூறியதாகவும் AFP செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.infotamil.ch/

கிளிநொச்சி முறிகண்டியைக் கைப்பற்றினோம் என்பது, இதுவரை பொய்யாகத்தானுள்ளது.

அண்ணை படமெல்லாம் போட்டிருக்கினம் பார்க்கவில்லையோ?

ஆனா ஒண்டு மாத்திரம் உண்மை கிளிநொச்சி போறதுக்கு செரியா பயப்பிடுறாங்கள் எண்டதை மணி அடிச்சி பிரசாதம் பூசிறதில இருந்து தெரியுது.

அவங்கள் கிளிநொச்சிக்கு போயிட்டனெண்டுறாங்கள்!!!??

நீங்கள் என்னடாண்டா போக பயபடுறாங்கள் என்றிங்கள்!! உந்தக்கோயில் எங்க இருக்கு? இதுதான் எங்கடசனங்கள் முன்னம் கொளும்புக்கு போகும்போது முருகண்டில இறங்கி தேங்காய் அடிக்கிற கோயிலா?

உந்த கோயில் கதிர்காமத்துக்கு போற வழியில அவசர அவசரமா கட்டினதாம் படம் எடுக்கிறதுக்கு எண்டு.

தொப்பிக்கல எண்டு ஒண்டு வரைபடத்திலேயே இல்லை அதை பிடிச்சது எண்டு மோட்டுச் சிங்களவங்கள் கேக்கு வெட்டி கொணடாடேல்லையே? அப்பிடித்தான் உந்தக் கூத்தும்.

அட.. கோயில்ல ஒரு சேதத்தையும் காணேல்ல . இது படங்காட்டுறத்துக்கு கட்டின கோயில் மாதிரித்தான் தெரியுது.

கோயில்லையும் சில சேதங்களை செயற்கையாத்தன்னும் ஏற்படுத்தியிருந்தா நம்பக்கூடியதாயிருந்திருக்க

உந்த கோயில் கதிர்காமத்துக்கு போற வழியில அவசர அவசரமா கட்டினதாம் படம் எடுக்கிறதுக்கு எண்டு.

தொப்பிக்கல எண்டு ஒண்டு வரைபடத்திலேயே இல்லை அதை பிடிச்சது எண்டு மோட்டுச் சிங்களவங்கள் கேக்கு வெட்டி கொணடாடேல்லையே? அப்பிடித்தான் உந்தக் கூத்தும்.

அப்படியா சங்கதி!

நானும் இது உண்மையாக்கும் எண்டு நினைச்சிட்டன்

">

Edited by தயா

உந்த கோயில் கதிர்காமத்துக்கு போற வழியில அவசர அவசரமா கட்டினதாம் படம் எடுக்கிறதுக்கு எண்டு.

தொப்பிக்கல எண்டு ஒண்டு வரைபடத்திலேயே இல்லை அதை பிடிச்சது எண்டு மோட்டுச் சிங்களவங்கள் கேக்கு வெட்டி கொணடாடேல்லையே? அப்பிடித்தான் உந்தக் கூத்தும்.

குறுக்ஸ் என்ன சொல்ல வாறிங்கள்:?

இங்கு புலிகள் வெல்வார்கள் கொல்வார்கர்கள் எனறு கருத்து சொல்லுபவர்களை வைத்தா போராட்டம் நடக்குது? என்று சொல்ல வாறிங்களா இல்லை புலிகள் செய்த செய்த தவறுகளள யாழ்கள கருத்துகள உறவுகளை முன் நிறுத்தி முன் வைக்கிறிங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா கடந்த யுத்த நிறுத்த காலத்தில் எவ்வாறு இராணுவத்தை போருக்குத் தயார்படுத்தினார் என்பதை விளக்கமாகச் சொல்லியுள்ளார். அவரின் தயார்படுத்தலின்படி முன்னகரும் இராணுவம் முறிகண்டி வந்து சேர்ந்ததில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகின்றது? எனினும் வெற்றிகள் தொடர்ந்தும் நிரந்தரமாக இருப்பதில்லை என்பதை அவரும் உணர்ந்திருப்பார்.

"இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்."

மாவீரர் தின உரையிலிருந்து

மாவீரர் தின உரையில் தேசியத் தலைமையினால் கூறப்பட்ட கருத்திது. இந்தக் கருத்தில் தமிழருக்கு நம்பிக்கையிருக்கிறது. தமிழன் என்ற வகையில் அது எனக்குமிருக்கிறது. சூழ்நிலையை மையமாக வைத்து, எதையும் அனுமானிக்க முடியாது. திருப்பங்கள் எங்கு ஏற்பட வேண்டுமென்பதைக் களமே தீர்மானிக்கும்.

தவறுகளைச் சுட்டிக்காட்டக் கூடியவர்கள் அதைத் திருத்தும் வலுவுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். நாங்கள் பின்தொடர்பவர்கள்தான். ஆனால் குறுக்காலபோவோன் அப்படிப்பட்ட நிலையிலில்லை. அவர் திருத்தப் புறப்பட்டவர். புலிகளைத் திருத்தப் போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்ஸ் என்ன சொல்ல வாறிங்கள்:?

இங்கு புலிகள் வெல்வார்கள் கொல்வார்கர்கள் எனறு கருத்து சொல்லுபவர்களை வைத்தா போராட்டம் நடக்குது? என்று சொல்ல வாறிங்களா இல்லை புலிகள் செய்த செய்த தவறுகளள யாழ்கள கருத்துகள உறவுகளை முன் நிறுத்தி முன் வைக்கிறிங்களா?

***

சகோதரா வினித் அவர்களே!

உண்மையில் உங்கள் சந்தேகத்தை கேட்கின்றீர்களா? அல்லது கேள்விமூலம் ஏதாவது சாதிக்க முயல்கின்றீர்களா?

தாயகத்தில் நிலவும் சூழ்நிலைகள் காரணமாக புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவிதச் சோர்வு ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. அந்த மக்களுக்குக் கூறவிரும்பும் செய்தி என்ன?

சோர்வு என்பது அவநம்பிக்கையால் வருவது. அவநம்பிக்கை என்பது நிலைமைகளைப் பகுத்தாய்ந்து புரிந்து கொள்ளாமையால் வருவது. ஒரு இராணுவ நெருக்கடி தாயகத்தில் நிலவுகின்றது என்பது உண்மைதான். ஆனால், மீளமுடியாத நெருக்கடி என்று அதைக் கருதுவது தவறு. இதைவிடப் பாரிய நெருக்கடிகளை முன்னர் நாம் சந்தித்து மீண்டிருக்கின்றோம்.

தற்போதைய நெருக்கடியையும் தகர்த்தெறிந்து வெற்றி கொள்வோம். புலம்பெயர் மக்கள் தமது வழமையான போராட்டப் பணிகளில் உற்சாகத்துடனும் வேகத்துடனும் செயற்பட வேண்டும்.

உங்களது நிதிப் பங்களிப்பு எங்கள் போராட்டத்தின் முதுகெலும்பாகவே உள்ளது. உலக அரங்கில் நீங்கள் செய்யும் பரப்புரைப் பணியை மேலும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்யுங்கள் வெற்றி தரும் மகிழ்ச்சியை விரைவில் நாங்கள் அனுபவிப்போம்.

பா.நடேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.