Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியார் ஈ.வெ.ராமசாமி நினைவு நாள் - டிச. 24.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம், யாரால், எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் தெரியும். வேறு ஏதாவது விசாரிக்க வேணுமா கிருபன்??

எதற்கும் நீங்கள் தீர விசாரிப்பது நல்லது.. :rolleyes:

நான் பார்த்த நிகழ்ச்சியில் ஏன் எதற்காக இப்படிச் செய்கின்றார்கள் என்று தாராளமாக விளக்கம் கொடுத்திருந்தார்கள்.. எப்படி லிங்கம் எடுப்பது என்றும் செய்து காட்டினார்கள்..

சோழியன்,

நான் கடவுள் நம்பிக்கை பற்றியும் மூடநம்பிக்கை பற்றியும் கேட்டேன். நீங்கள் சம்பந்தமில்லாமல் என்னவோ பேசுகிறீர்கள்.

உங்களுக்குப் புரியும்படி கேட்கின்றேன்

சிலை ஒன்றை செய்து அதற்கு மந்திரம் சொன்னால், அது கடவுள் ஆகி விடும் என்பது கடவுள் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

அந்தச் சிலைக்கு கோயில் கட்டி தேர் இழுப்பது கடவுள் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

அந்தச் சிலைக்கு வேண்டுதல் வைத்து, தீ மிதிப்பது, தீச்சட்டி தூக்குவது, அலகு குத்தி காவடி எடுப்பது இவைகள் கடவுள் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

அந்தக் கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் பூசை செய்வது கடவுள் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

தயவுசெய்து நேரடியான பதில்களைத் தரவும்!

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் நீங்கள் தீர விசாரிப்பது நல்லது.. :rolleyes:

நான் பார்த்த நிகழ்ச்சியில் ஏன் எதற்காக இப்படிச் செய்கின்றார்கள் என்று தாராளமாக விளக்கம் கொடுத்திருந்தார்கள்.. எப்படி லிங்கம் எடுப்பது என்றும் செய்து காட்டினார்கள்..

எவ்வளவு தூரம் விசாரிப்பது??... உங்களுக்குச் சாதகமான பதில் வரும் வரையிலா??

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன்,

நான் கடவுள் நம்பிக்கை பற்றியும் மூடநம்பிக்கை பற்றியும் கேட்டேன். நீங்கள் சம்பந்தமில்லாமல் என்னவோ பேசுகிறீர்கள்.

உங்களுக்குப் புரியும்படி கேட்கின்றேன்

சிலை ஒன்றை செய்து அதற்கு மந்திரம் சொன்னால், அது கடவுள் ஆகி விடும் என்பது கடவுள் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

அந்தச் சிலைக்கு கோயில் கட்டி தேர் இழுப்பது கடவுள் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

அந்தச் சிலைக்கு வேண்டுதல் வைத்து, தீ மிதிப்பது, தீச்சட்டி தூக்குவது, அலகு குத்தி காவடி எடுப்பது இவைகள் கடவுள் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

அந்தக் கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் பூசை செய்வது கடவுள் நம்பிக்கையா? மூட நம்பிக்கையா?

தயவுசெய்து நேரடியான பதில்களைத் தரவும்!

சோழியன் அண்ணா

உங்களுக்கு நான் முதலே சொன்னது போல, உஙநீங்கள் வழங்கும் பதிபதிலை வைத்துத் தான் உங்களே மடக்க எத்தனிப்பார்களே தவிர, ஆதாரமாகக் கதைக்க முன்வரமாட்டார்கள் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

சிலை ஒன்றை நடுரோட்டில் கட்டினால் அது பெரியார், அம்பேத்கார் சிலையாகி விடுமா? அதற்கு யாராவது சதம் விளைவித்தால் ஏன் இவர்களுக்குக் கோபம் வருகின்றது??

சொல்லப் போனால் சபேசன் சொன்ன எதுவுமே இதகாவடி ஆடுவதற்கான பதிலாக இல்லை. குறித்த ஒருவரின் பெயரை மாசுபடுத்தவே நிற்கின்றார்கள்

சோழியன் சொன்னது போல,, ஏதாவது சேவைகள் செய்தோ, இது தான் தமிழர் பண்பாடாடு என்று எதையாவது தெளிவாக அடையாளம் காட்டியிருந்தால், அதை மக்கள் பின்பற்றுகறியிருப்பார்கள்.

அல்லது இப்படியே போனால் பல்கலைக்கழக வாழ்வில் மட்டும் கம்னூசியம் கதைக்கின்ற மாணவர்கள் போல் இவர்களின் வாழ்வு ஆகிவிடும்.

குப்பையை அகற்றுங்கள்! அந்த இடத்தில் எதை வைப்பது என்று கேட்காதீர்கள்!

Edited by சபேசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தூரம் விசாரிப்பது??... உங்களுக்குச் சாதகமான பதில் வரும் வரையிலா??

நானொன்றும் பெரியாரின் சீடன் அல்ல. :rolleyes:

இணைத்த ஒளிப்படங்கள் எவ்வாறான சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டன என்பதை நீங்கள் தெளிவாக்கினால் நல்லது. பிரித்தானியத் தொலைக்காட்சி சனல் 5 இல் வந்த நிகழ்ச்சியில் இதேபோன்ற காட்சிகள் இருந்தன.

Paul Merton In India

episode 3

In the company of a local magician, Paul heads further north to a rural town where a group of social reformers are attempting to challenge the superstitious ways of the people. He watches on as two men put metal hooks through their skin and pull a car down the street in an effort to prove that human endurance trumps so-called religious miracles. The angry reception to the reformers’ show proves that most local people are not ready to give up their mystical beliefs just yet – and Paul wonders if this is perhaps not a bad thing.

http://demand.five.tv/Episode.aspx?episode...ame=C5136220003

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லுக் குடுத்து அடி வாங்குறதுக்கு நல்ல உதாரணமாப் போச்சுது கிருபன் தூயவன் கருத்தாடல். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நாட்டில் நடந்தாலும், நீங்கள் திருந்தமாட்டீயள். தமிழனின் புதைகுழிக்கான கல்லறையிலும், இதை எழுதி வைப்பியள் போல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொல்லுக் குடுத்து அடி வாங்குறதுக்கு நல்ல உதாரணமாப் போச்சுது கிருபன் தூயவன் கருத்தாடல். <_<

பொல்லு பெரிய உருட்டுக்கட்டை மாதிரித் தெரியலாம். ஆனால் "உள்சோத்தி"யாக உள்ளதனால் அடி பலமாக இருக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி கிருபன், யஸ்ரின்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி கிருபன், யஸ்ரின்

யமுனாப் பையனை முந்த முயற்சியா? <_<

  • கருத்துக்கள உறவுகள்

போரட்ங்களின் வடிவங்கள் வித்தியாசமாக இருந்தாலும் விடயங்கள் ஒன்றாக இருப்பதே வெற்றிக்கு வழிகோலும்.

கடவுளை நம்பி வாழ்வை தொலைப்பவனுக்கு. அவனது வாழ்வை அவனுக்கே பெற்றுக்கொடு;க்க அவன்மீது அக்கறை கொண்ட ஒருவன் தனது வாழ்வை அர்பணித்து போராடுகிறான். இருவரும் எதிரியாவது நிச்சயிக்கபட்ட ஒன்று என்பது போராளிக்கு நன்கே தெரியும். நாம் யாரோடு பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை பொறுத்தே எமது வார்த்தைகள் உதிரும். எமக்கு அமிலத்தை பற்றி தெரியும் என்பதற்காக பிறந்ததில் இருந்தே கோவில் சுவருக்குள் மாட்டிகொண்டவனுடன் பேசும் போது அமிலம் பற்றி பேசமுடியாது.

அவனுடன் தேசிக்காய்பற்றித்தான் பேச முடியும். அப்படி பேசினால்தான் அவனுக்கும் புரியும். (ஆனாலும் எப்படி பேசினாலும் யாழ் களத்தில் உள்ள சிலருக்கு புரியாது என்பது பலருக்கு தெரியும்). பெரியாரிடம் தொலைநோக்கு பார்வை இருந்தது என்பதால் எடுத்த எடுப்பில் நீயும் தொலைவாக பார் என்றால் பார்ப்பவன் கண்ணுக்கு புகைதான் தெரியும். ஆகவே அவனுக்கு தூரத்தை நாம் குறிப்பிடலாகாது அவனுக்கு எதுவரை தெரிகிறதோ அதில் இருந்துதான் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த நிலைகளை காட்டமுடியும்.

ஆகவே உலகம் ஒளிவேகத்தில் முன்னேறிசென்றாலும். நாம் பல கோடி ஆண்டுகள் பின்னேற வேண்டிய காட்டாயமும் இங்கே இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

கடவுள் நம்பிக்கையையும் மூடநம்பிக்கையையும் பிரித்து காட்டுங்கள் நாங்கள் கடவுளை நம்புகிறோம் என்றால் யாரும் முன்வருகிறார்கள் இல்லை. தம்மையே நம்பாது கடவுள் வந்து எமை காப்பார் என்று நம்மிகொண்டிருப்வரிடம் அதை எதிர்பார்க்க முடியாது. மதங்களை மனிதன் தோற்றுவித்தான்.... இந்த மதங்களை தோற்றுவித்த மனித தெய்வங்களை நான் வணங்குகிறேன். யாதும் அறியா ஒரு மனித கூட்டத்தில் கலகத்தை ஏற்படுத்த அவர்களுக்கு கடவுள் தேவைபட்டார் தவிர அவர்கள் கடவுளை நம்பவி;ல்லை. மனிதனை பண்படுத்த தோற்றுவித்த மதங்களால் மனிதனை புனிதனாக்கினார்கள் என்பதைவிட விலங்குபோல் கிடந்த ஒரு விலங்கினத்தை மனிதனாக்கினார்கள் என்பது உண்மை. மனிதனின் சிந்தனையை தூண்டிவிட்டார்கள். சில கபோடிகள் அடுத்தவனை சுரண்டி வாழ நல்ல வசதியாய் இருக்கும் என்று எண்ணி இடைசெருகல் செய்தவைகளே இன்று மதங்களாகி நிற்கின்றன. மனிதம் மறைந்து ஒரு மாயை தோன்றி வெறும் கொலைவெறி மனிதர்களை அதுதான் தோற்றுவித்தது. ஒரு மதவாதியால்தான் இன்னொரு மதவாதி கொல்லபடுகிறான். மதங்களை நம்பாதவன் யாரையும் கொல்லவி;ல்லை மாறாக அவன் இந்த மாடுகளுக்காக தானே சாகிறான். கடவுளை நம்புவன்தான் பாவங்களை செய்கிறான். பாவங்களை செய்வதால்தான் கோவிலுக்கு ஒட வேண்டிய காட்டாயம் அவனுக்கு தோன்றுகிறது. புண்ணியம் என்றெண்ணி பாவங்கள் செய்வதையே வாழ்வாக்கி கொள்கிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.