Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பின் புறநகர்ப் பகுதியில் படையினரின் முகாம் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவ அதிகாரி உட்பட 8 பேர் பலி; 10 படையினர் உட்பட 19 போ் காயம்

Featured Replies

தேவாலயம் ஒன்றின் அருகில் இடம்பெற்ற இந்த வெடிப்பில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

- அத தெரண

காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பேரில் 3 பேர் இராணுவச்சீருடை அணிந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாராங்கள் தெரிவித்துள்ளன.

- சக்தி தொலைக்காட்சி

வத்தளை கேகிக்த வீதியில் தற்கொலைத் தாக்குதலில் 5 பாதுகாப்பு தரப்பினர் கொல்லப்பட்டுள்ளனர், 4 பேர் காயமடைந்துள்ளனர்.

- அத தெரண.

மக்கள் பாதுகாப்புபடை (Civil Defence Force) முகாம் ஒன்றினுள் இடம்பெற்ற இச்சம்பத்தில் முகாம் பொறுப்பதிகாரி உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

- சக்தி தொலைக்காட்சி

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் குண்டு வெடிப்பு எனில் சிங்கன் களத்தில் காணப்படுவார். :lol:

what's the damage saan? :D

இருவர் சாவு

இராகம வைத்தியசாலையில் இதுவரை 10 பேர் அனுமதி

................................................................................

.......

2 ppl dead.

Ragama Hospital official says 10 persons injured from blast admitted so far

elakiri.com

ஐந்து பேர் பலியெனவும், இது ஒரு தற்கொ(டை)லை போராளியால் ஏற்படுத்தப்பட்ட குண்டு வெடிப்பு எனவும் டெய்லி மிர்ரர் சொல்கின்றது

வத்தைளையில் குண்டு வெடிப்பு – ஜவர் பலி -பலர் காயம்:

கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இன்று காலை 8.38 அளவில் குண்டுத் தாக்குதல்ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார சேதவிபரங்கள் பற்றி குறிப்பிடவில்லை.

எனினும் தற்கொலைத் தாக்குதல் எனக் கருதப்படும் இத்தாக்குதல் இலக்கு பாதுகாப்புச் சோதனைச் சாவடிஎனவும் இந்த வெடிப்புச் சம்பவத்தில் இராணுவத்தினர் ஐவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

அத்துடன் காயமடைந்த பலரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் ராகம வைத்தியசாலைக்கும் எடுத்து செல்லப்படுவதாகவும் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி :www.globaltamilnews.ne

  • தொடங்கியவர்

வத்தளையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல், 5 இராணுவத்தினர் பலி

[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2008, 03:47.41 AM GMT +05:30 ]

கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இன்று காலை 8.35 மணியளவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.

இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஐவர் இராணுவத்தினர் பலியானதுடன், பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன் காயமடைந்த பலரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும், ராகம வைத்தியசாலைக்கும் எடுத்து விரையப்பட்டுள்ளதாகவும், சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரியப்படுகின்றது.

இச்சம்பவத்தில் காயமடைந்த 14 பேரில், 10 பேரை ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் மூவரையும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வத்தளை தேவாலய வளவில் அமைந்துள்ள சந்தைப்பகுதி மினி இராணுவ முகாம் அருகே உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படையினர் சந்தேகநபரை நிறுத்தி சோதனையிட முற்பட்ட போது தற்கொலை குண்டு தாரி குண்டினை வெடிக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்வின்

கொழும்பின் புறநகர்ப் பகுதியில் படையினரின் முகாம் மீது குண்டுத் தாக்குதல்: அதிகாரி உட்பட 6 படையினர் பலி; 3 படையினர் உட்பட 15 போ் காயம்

[ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2008, 11:53 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் படை அதிகாரி ஒருவர் உட்பட ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் நான்கு படையினர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வத்தளை கேகித்த கோவில் வீதியில் உள்ள படையினரின் முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 நிமிடமளவில் இத்தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிவித்த அவர், இது ஒரு தற்கொலை தாக்குதல் எனவும் கூறினார்.

இதேவேளை, காயமடைந்த படையினரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கொழும்பு தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, இத்தாக்குதலில் 11 பொதுமக்களும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் ராகம மருத்துவமனையிலும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

குண்டு வெடிப்பு இடம்பெற்ற வத்தளை கேகித்தவில் மேலதிக படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வத்தளையில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களில் முகாமில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி! 19 பேர் காயம்

ஞாயிறு, 28 டிசம்பர் 2008, 17:40 மணி தமிழீழம் [செய்தியாளர் செந்தமிழ்]

கொழும்பு புறநகரான வத்தளைப் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிறீலங்காப் படை அதிகாரி உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 படையினர் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர்.

வத்தளை கேகித்த கோவில் வீதியில் உள்ள சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 நிமிடமளவில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட படையினரில் ஆறு பேரும் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 10 பேர் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய 9 பேரும் பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் ராகம மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்னிலங்கையில் விடுதலைப் புலிகளின் தொடர்பான தகவல்கள் மற்றும் தாக்குதல்கள் குறித்த விடயங்களை அறிவதற்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு என சிவில் பாதுகாப்பு அமைப்பு சிறீலங்காப் படையினரால் உருவாக்கப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது.

பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.