Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி களமுனையில் இதுவரை 10,000 படையினர் பலி: பாரிய ஆட்பல நெருக்கடியில் படைத்தரப்பு

Featured Replies

சிறிலங்காவின் வன்னி நடவடிக்கையில் 10 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளனர், 25 ஆயிரம் படையினர் காயமடைந்தனர்.

[செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 30, 2008]

வன்னி நடவடிக்கைகளில் 10 ஆயிரம் சிறிலங்கா படையினர் உயிரிளந்துள்ளனர்.

இவைதவிர தப்பியோடிய மற்றும் காயமடைந்த படையினரின் எண்ணிக்கைகளும் மிக அதிகம்.

எனவே தற்போது படைப்பலத்தை தக்கவைப்பதற்கு அரசு பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக கொழும்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னிப் படை நடவடிக்கை தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரையிலும் 10 ஆயிரம் படையினர் உயிரிழந்ததுடன் 25 ஆயிரத்துக்கு மேற்ப்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் பல ஆயிரம்பேர் உறுப்புக்களை இளந்துள்ளனர்.

இந்தக்காலப்பகுதியில் 25 ஆயிரத்துக்கு மேற்ப்பட்டோர் படைகளில் இருந்து தப்பி ஓடி உள்ளதாக சிறிலங்கா அரச தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்ந ஆண்டின் முதல் 11 மாதங்களில் 11 ஆயிரம்பேர் தப்பி ஓடியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

[ஆதாரம் புலிகளின் குரல்]

http://www.thayakam.net/forums/viewtopic.php?id=241

Edited by தாயகன்

வன்னியை கைப்பற்றும் படை நடவடிக்கைகளில் சிறிலங்கா படைத்தரப்பில் 10,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவை தவிர தப்பியோடிய மற்றும் காயமடைந்த படையினரின் எண்ணிக்கைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன. எனவே தற்போது படை பலத்தை தக்க வைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கொழும்பு படைத்தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

பெருந்தொகை இராணுவத்தை இழந்தும் சளைக்காமல் கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்களைக் கைப்பற்றுவதற்காக நெருங்கி வந்திருப்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும். தமிழர்களைப் போலவே சிங்களவர்களும் இதுதான் கடைசி யுத்தம் என்று பாரிய பிரச்சாரங்களை சிங்கள இளைஞர்களில் மத்தியில் மேற்கொண்டு அவர்களை போர்முனைக்கு அனுப்புவதில் வெற்றியீட்டியுள்ளனர். அத்துடன் இழப்புக்களை வெளியிடாமல் தடுத்து சிங்களவர்களின் மனவுறுதி குலையாமல் தடுத்தும் வருகின்றனர்.

வன்னி களமுனையில் இதுவரை 10,000 படையினர் பலி: பாரிய ஆட்பல நெருக்கடியில் படைத்தரப்பு

[செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2008, 03:47 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

வன்னியை கைப்பற்றும் படை நடவடிக்கைகளில் சிறிலங்கா படைத்தரப்பில் 10,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவை தவிர தப்பியோடிய மற்றும் காயமடைந்த படையினரின் எண்ணிக்கைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன. எனவே தற்போது படை பலத்தை தக்க வைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கொழும்பு படைத்தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் கடந்த இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் படை நடவடிக்கையில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்டு வரும் இழப்புக்கள் தொடர்பாக சிறிலங்கா படைத் தலைமயகத்தைச் சேர்ந்த விடயமறிந்த வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வன்னி நோக்கி சிறிலங்கா படை நடவடிக்கைகளை தொடங்கியதில் இருந்து படைத்தரப்பு பாரிய ஆட்பல இழப்புக்களை சந்தித்துள்ளது. இருந்தாலும், இந்நடவடிக்கையை மிகுந்த சிரமத்துடன் அரசாங்கம் தொடர்ந்து வருகின்றது.

இக்காலப்பகுதியில் படையினர் புதிதாக எட்டு படையணிகளை உருவாக்கியுள்ளதுடன் பல களமுனைகளையும் திறந்துள்ளது. இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் எதிர்ச் சமர்களில் படையினர் என்றுமில்லாத அளவுக்குப் பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்றனர்.

வன்னியை கைப்பற்றும் படை நடவடிக்கை தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்குள் இதுவரை 10,000 படையினர் உயிரிழந்துள்ளதுடன் 25,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பல ஆயிரம் பேர் உடல் அவயவங்களை இழந்துள்ளனர்.

இதே காலப்பகுதியில் 25,000-க்கும் அதிகமானோர் படைகளில் இருந்து தப்பியோடி விட்டனர் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்பாக, இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் மட்டும் 11,000 பேர் வரை தப்பியோடிவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பெரும் நிலப் பிரதேசங்களை கைப்பற்றி வரும் படையினர் அதனை தக்க வைப்பதற்கான படை பலத் தேவையில் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். அதனை ஈடு செய்யும் முகமாக படைகளில் இளைஞர்களை சேர்க்கும் பொருட்டு தென்பகுதியில் உள்ள ஒவ்வொரு செல்லிடப்பேசிகளுக்கும் படையில் இணைந்து கொள்ளுமாறு தகவல்களை அரசாங்கம் அனுப்பி வருகின்றது.

மேலும் கிழக்கில் இருந்தும் யாழ். குடாநாட்டில் இருந்தும் வன்னி நோக்கி படையினரை நகர்த்தி வருவதுடன் சிறுவர்களையும் பெண்களையும் கூட படையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளையும் படைத்தரப்பு முடுக்கி விட்டுள்ளது.

இவை தவிர படையில் இருந்து தப்பியோடும் படையினரின் எண்ணிக்கையும் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதனால், தப்பியோடுவோர் மீதான தண்டணைகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தப்பியோடி மீளக் கைதாகும் படையினரை தண்டிப்பதற்கு என புதிதாக தானியங்கி தண்டனை-இயந்திரங்களைக் கூட அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.

கைதாகும் தப்பியோடிய படையினர் இந்தத் தண்டனை-இயந்திரத்துடன் பிணைக்கப்பட்டு இரு நாட்கள் தொடர்ச்சியாக மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்ட பின்னர் உக்கிரமான மோதல்கள் நடைபெறும் முன்னணி களமுனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

படையில் இருந்து சிங்கள இளைஞர்கள் தப்பியோடாது இருப்பதற்கு என படைத்தரப்பு பிரத்தியோகமாக கையாண்டு வரும் ஒரு கடுமையான முறை எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன

http://www.puthinam.com/full.php?223OOAcbb...411e6cccbccYO3e

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள கிராமங்களில் ஒலி பெருக்கிகள் மூலம் ஒலிபெருக்கி இளைஞர்கள் மட்டும் அல்லாது சிங்கள யுவதிகளையும் படையில் சேர்த்துகொண்டு இருக்கின்றவர் அண்மையில் இறந்த சிங்கள வயது குறந்த இளைஞர்களை நோக்கும் போதே தெரிகிறது சிங்கள படைக்கு ஆள் பற்றாக்குறை என்று இதை மூடி மறத்து உங்களுக்கு இலவசமாக சில பொருட்கள் தருகிறோம் என்றும் சில வசதிகள் செய்த்து கொடுக்கப்படும் என்று பரப்புரைகள் வழங்கப்படுகின்றன அரசாங்கத்தால் :D:D

கிராமிய உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரும் பிரச்சாரப்படுத்தி 5 சிங்கள இளைஞர்களை இராணுவத்தில் சேர்க்க வேண்டும் எண்று செயல்திட்டம் வகுக்கப்பட்டும் செயற்படுத்த பட்டும் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்க பட்டு உள்ளனர்...

ஆனால் இராணுவத்தில் இணைவோருக்கு பிடித்த இடங்களை பாதுகாத்தல்தான் வேலை எண்று சொல்லி சேர்க்க படுகிறார்கள், முன்னணி களங்களுக்கு போக வேண்டியது இல்லை எனும் உறுதியும் வழங்கபடுகிறது....

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியைக் கைப்பற்றும் படை நடவடிக்கைகளில் சிறிலங்கா படைத்தரப்பில் 10,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவை தவிர தப்பியோடிய மற்றும் காயமடைந்த படையினரின் எண்ணிக்கைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன. எனவே தற்போது படை பலத்தை தக்க வைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கொழும்பு படைத்தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் கடந்த இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் படை நடவடிக்கையில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்டு வரும் இழப்புக்கள் தொடர்பாக சிறிலங்கா படைத் தலைமையகத்தைச் சேர்ந்த விடயமறிந்த வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வன்னி நோக்கி சிறிலங்கா படை நடவடிக்கைகளை தொடங்கியதில் இருந்து படைத்தரப்பு பாரிய ஆட்பல இழப்புக்களை சந்தித்துள்ளது. இருந்தாலும், இந்நடவடிக்கையை மிகுந்த சிரமத்துடன் அரசாங்கம் தொடர்ந்து வருகின்றது.

இக்காலப்பகுதியில் படையினர் புதிதாக எட்டு படையணிகளை உருவாக்கியுள்ளதுடன் பல களமுனைகளையும் திறந்துள்ளது.

இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் எதிர்ச் சமர்களில் படையினர் என்றுமில்லாத அளவுக்குப் பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்றனர்.

வன்னியை கைப்பற்றும் படை நடவடிக்கை தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்குள் இதுவரை 10,000 படையினர் உயிரிழந்துள்ளதுடன் 25,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பல ஆயிரம் பேர் உடல் அவயவங்களை இழந்துள்ளனர்.

இதே காலப்பகுதியில் 25,000-க்கும் அதிகமானோர் படைகளில் இருந்து தப்பியோடி விட்டனர் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்பாக, இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் மட்டும் 11,000 பேர் வரை தப்பியோடிவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பெரும் நிலப் பிரதேசங்களை கைப்பற்றி வரும் படையினர் அதனை தக்க வைப்பதற்கான படை பலத் தேவையில் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

அதனை ஈடு செய்யும் முகமாக படைகளில் இளைஞர்களை சேர்க்கும் பொருட்டு தென்பகுதியில் உள்ள ஒவ்வொரு செல்லிடத் தொலைபேசிகளுக்கும் படையில் இணைந்து கொள்ளுமாறு தகவல்களை அரசாங்கம் அனுப்பி வருகின்றது.

மேலும் கிழக்கில் இருந்தும் யாழ். குடாநாட்டில் இருந்தும் வன்னி நோக்கி படையினரை நகர்த்தி வருவதுடன் சிறுவர்களையும் பெண்களையும் கூட படையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளையும் படைத்தரப்பு முடுக்கி விட்டுள்ளது.

இவை தவிர படையில் இருந்து தப்பியோடும் படையினரின் எண்ணிக்கையும் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதனால், தப்பியோடுவோர் மீதான தண்டனைகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தப்பியோடி மீளக் கைதாகும் படையினரை தண்டிப்பதற்கு என புதிதாக தானியங்கி தண்டனை இயந்திரங்களைக் கூட அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.

கைதாகும் தப்பியோடிய படையினர் இந்தத் தண்டனை இயந்திரத்துடன் பிணைக்கப்பட்டு இரு நாட்கள் தொடர்ச்சியாக மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்ட பின்னர் உக்கிரமான மோதல்கள் நடைபெறும் முன்னணி களமுனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

படையில் இருந்து சிங்கள இளைஞர்கள் தப்பியோடாது இருப்பதற்கு என படைத்தரப்பு பிரத்தியேகமாக கையாண்டு வரும் ஒரு கடுமையான முறை எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

www.tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.