Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களை காக்க அனைவரும் வீறுகொண்டு எழுங்கள்: கனிமொழி வேண்டுகோள்

Featured Replies

ஈழத் தமிழர்களை காப்பதற்கு அனைவரும் வீறுகொண்டு எழுங்கள் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் வீறு கொண்டிருந்து எழுந்திருந்தால் இந்திய மத்திய அரசு மூலம் கிளிநொச்சியைப் பிடிக்காமல் செய்திருக்கலாம். இனி சிங்கள இராணுவம் முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றிய பின்னரும் இப்படி ஒருக்கால் அறிக்கைவிடவேண்டிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் வீறு கொண்டிருந்து எழுந்திருந்தால் இந்திய மத்திய அரசு மூலம் கிளிநொச்சியைப் பிடிக்காமல் செய்திருக்கலாம். இனி சிங்கள இராணுவம் முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றிய பின்னரும் இப்படி ஒருக்கால் அறிக்கைவிடவேண்டிவரும்.

கிருபன் அவர்களை நொந்து என்ன பயன். அவர்களுக்குள்ள அதிகாரம் அந்தளவுதான்.

ஆனால் நாங்கள் 5 வருடமும் பேச்சுவார்த்தை என்று இழுபட்டுத் திரிஞ்ச அளவுக்கு சிங்களவன் சர்வதேசத்தோட இணைந்து படைப்பலத்தை அதிகரிக்கிறதை அறிஞ்சும்.. அதற்கு ஈடாக எம்மை வளர்த்துக் கொள்ளாததுதான் இன்றைய பின்னடைவுகளுக்கு முக்கிய காரணம்.

சந்திரிக்கா கப்பல் கப்பலா அடிக்கேக்க.. பேச்சுவார்த்தையில இருந்து வெளியேறி இருந்தாலும்.. இப்போதைக்கு கொஞ்சமாவது தேறி இருந்திருக்கும்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அவர்களை நொந்து என்ன பயன். அவர்களுக்குள்ள அதிகாரம் அந்தளவுதான்.

ஆனால் நாங்கள் 5 வருடமும் பேச்சுவார்த்தை என்று இழுபட்டுத் திரிஞ்ச அளவுக்கு சிங்களவன் சர்வதேசத்தோட இணைந்து படைப்பலத்தை அதிகரிக்கிறதை அறிஞ்சும்.. அதற்கு ஈடாக எம்மை வளர்த்துக் கொள்ளாததுதான் இன்றைய பின்னடைவுகளுக்கு முக்கிய காரணம்.

சந்திரிக்கா கப்பல் கப்பலா அடிக்கேக்க.. பேச்சுவார்த்தையில இருந்து வெளியேறி இருந்தாலும்.. இப்போதைக்கு கொஞ்சமாவது தேறி இருந்திருக்கும்..! :lol:

அதுதான் பொதுவாகவே தமிழர்கள் என்று எழுதினேன்.

2004 இல் ஆரம்பிக்க இருந்த சண்டையைப் பிளவும் சுனாமியும் தாமதிக்க வைத்துவிட்டது. "கரணம் தப்பினால் மரணம்" என்றாகிவிட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அவர்களை நொந்து என்ன பயன். அவர்களுக்குள்ள அதிகாரம் அந்தளவுதான்.

ஆனால் நாங்கள் 5 வருடமும் பேச்சுவார்த்தை என்று இழுபட்டுத் திரிஞ்ச அளவுக்கு சிங்களவன் சர்வதேசத்தோட இணைந்து படைப்பலத்தை அதிகரிக்கிறதை அறிஞ்சும்.. அதற்கு ஈடாக எம்மை வளர்த்துக் கொள்ளாததுதான் இன்றைய பின்னடைவுகளுக்கு முக்கிய காரணம்.

சந்திரிக்கா கப்பல் கப்பலா அடிக்கேக்க.. பேச்சுவார்த்தையில இருந்து வெளியேறி இருந்தாலும்.. இப்போதைக்கு கொஞ்சமாவது தேறி இருந்திருக்கும்..! :lol:

ஒரு தெளிவான அரசியல் படைத்துறைசார் சிந்தனையூடாக எமது போராட்டம் நோக்கப்படும்போதே, தெளிவான பதிலைக் காணமுடியும். நாம் அரசியல் அனாதைகள் அல்ல என்று, தமிழினம் உலக அரங்கிலே நிறுவப்பட வேண்டமாயின் தமிழீழம் மீட்க்கப்பட்டாக வேண்டும் என்பது தமிழகத் தலைவர்கள் பலருக்கும், இது தெரியும்.ஆனாலும் அவர்கள் குறிப்பிட்டதோர் எல்லையை கடந்து செயற்பட முன்வராமையும் , ஒற்றுமையின்மையுமே யதார்த்தமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களை காப்பதற்கு அனைவரும் வீறுகொண்டு எழுங்கள் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

தமிழர்கள் எப்போதுமே தங்களுடைய கடந்த கால பெருமைகளில் ஆழ்ந்து அதைப்பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர். கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி இன்று காதில் விழுந்தது. அங்கு ஒரு இனம் மெல்ல அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் அதனை மறந்து, அதனை தாண்டி ஏதேதோ தேடல்களில் நம்மை தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய சகோதரர்களும், சகோதரிகளும் அங்கு வாழும் வகையற்று அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்த பிள்ளைகளுக்கு எதிர்காலம் என்ன என்பதே தெரியாத நிலை உருவாகிவிட்டது.

எது நடக்காது என்று நம்பிக் கொண்டிருந்தோமோ? அது இன்று நடைபெற்று விட்டது. நாம் இன்னும் பழங்கதைகள் பேசிக் கொண்டிருப்பதில் பலனில்லை. இதற்காக இந்த படுகொலைகளை எதிர்த்து, இன அழிவை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். தயவு செய்து, வீறுகொண்டு எழுங்கள், நம்முடைய சகோதரர்களுக்காக, தொப்புள் கொடி உறவுகளுக்காக குரல் கொடுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கவிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியவர்களின் வேண்டுகோளை உலகத் தமிழினம் பற்றிக் கொள்ள வேண்டும்.

" காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது "

  • கருத்துக்கள உறவுகள்

சில ஆயிரம் சதுர கிலோமீட்டரைப் பிடிக்க இலங்கை ராணுவத்திற்குப் பின்னால் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா என ஏழு நாட்டு ராணுவத் தளபதிகள் இருந்தார்கள். தென்கிழக்கின் வலிமையான பல அடியாட்கள் இலங்கை ராணுவத்துக்கு துணை நின்றார்கள். அப்படியும் பேரிழப்புகளோடுதான் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டிருக்கிறது; இல்லை புலிகள் கிளிநொச்சியை முன்நோக்கி நகர்த்தி வைத்திருக்கிறார்கள் என்று கூடச் சொல்லலாம். ஆனால் இதில் தோல்வி யாருக்கு என்று பார்த்தால் தமிழகத்துக்குத்தான். ஏனென்றல் ஆறரை கோடி தமிழ் மக்களும் ஈழத்தின் மீதான இலங்கை அரசின் போரை நிறுத்தக் கோரினார்கள். தமிழக முதல்வர் கருணாநிதியும் பல விதமான கவிதைகள், உணர்ச்சிக் கதையாடல்கள் மூலம் மத்திய அரசிடம் கெஞ்சிப்பார்த்தார். ஆனால் கருணாநிதியின் எல்லாக் கோரிக்கைகளையும் தூக்கி குப்பையில் வீசி எறிந்து விட்டு இலங்கைக்கு ராணுவ ரீதியாக தான் செய்யும் உதவிகளுக்கு கருணாநிதியிடம் ஒப்புதலும் வாங்கிச் சென்று விட்டது இந்திய மத்திய அரசு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=49327&hl=

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆத்திரம் கொண்டோர்க்குச் சாத்திரம் ஏதுக்கடி? தமிழீழத்தை முத்தமிட வேண்டுமெனில் (வீறு கொண்டு எழ வேண்டுமெனில்) அதைத் தடுக்கின்ற சாத்திரங்கள் (சட்டமும், விதிகளும்) மீறப் படவேண்டியவை. பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணம் முல்லைத் தீவு படையினர் வசம் வரும் வரை தள்ளிப் போடப் பட்டுள்ளது. அதுவரை தமிழ்நாடு காவல் இருக்கும்.

Edited by Punithan

மன்னிக்கவும் கனிமொழி ஒரு ஜந்து நிமிடம் நீங்கள் உங்கள் தந்தையிடம் கதையுங்கள் அவர் மாறினால் தமிழகமே மாறிவிடும் ஏன் மத்திய அரசே மாறிவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பேசச்சொன்னபின்தான்

கனிமொழி அவர்கள் இப்படிப்பேசியிருப்பார் என்பது என் அபிப்பிராயம்

அப்பொழுதுதானே மற்றவர்கள் கை காட்டமுடியாது

அரசியலில் இதெல்லாம்..............????

பச்சோந்தி அரசியல் வாதிகளின் பின்னால் மறுபடியும் ஈழத்தமிழினம் சென்று ஏமாறப் போகின்றது. ஏமாந்தது போதும். இனியாவது ஏமாற்றுபவர்களை இனம் கண்டு கொள்வதே உசிதம்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

பச்சோந்தி அரசியல் வாதிகளின் பின்னால் மறுபடியும் ஈழத்தமிழினம் சென்று ஏமாறப் போகின்றது. ஏமாந்தது போதும். இனியாவது ஏமாற்றுபவர்களை இனம் கண்டு கொள்வதே உசிதம்.

ஜானா

அப்படிச் சொல்ல முடியாது ஜனா.

ஒருவேளை கலைஞர் தீவிரமாக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தால்.. ஜெயலலிதா மத்திய அரசை அண்டி.. தனது அரசியலை முன்னிலைப்படுத்துவார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால்.. இப்போ கேட்கும் இந்த குரல்கள் கூட அடைக்கப்பட்டு விடும்.

ஏன் எம்மவரிடையே.. சங்கரி.. டக்கிளஸ்.. கருணா.. பிள்ளையான்.. சித்தார்த்தன் இல்லையா. கிளிநொச்சியை இராணுவம் பிடித்ததைக் கொண்டாட. பூநகரியை பிடித்ததற்கே ஊர்வலம் நடத்தி பறையடித்த டக்கிளஸ்.. போன்றவர்கள்.. ஏன் தான் தமிழர்களாக பிறந்தார்கள் என்றிருக்கிறது.

எமது அழுக்குகளை நாம் அகற்றினால்.. அரைவாசிப் பிரச்சனை தீர்ந்திடும். அமெரிக்க தூதுவர் சொல்லுறார்.. புலிகளைப் புறக்கணிக்க இந்த அழுக்குகளை தமிழர்களின் பிரதிநிதிகளாக்கிக் காட்டுங்கள் என்று. அப்படி பேசும் அளவுக்கு நாம் இதுகளை விட்டு வைச்சிருக்கிறமே. நாம் எமது அழுக்குகளை அகற்றாமல்.. மற்றவர்களை நோக்கித் திட்டுவதில் பயனில்லை. அவர்களின் பிரச்சனை அவர்களுக்குத்தான் அதிகம் தெரியும். அதில் மூக்கை நுழைப்பது அழகல்ல..! :lol:

Edited by nedukkalapoovan

தவறு தான், ஆனால் இவாகளால் செய்யக் கூடியதைக் கூட செய்யாமல் தமது அரசியல் இலாபங்களுக்காக எம்மை பகடைக்காய் ஆக்கி கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று முழுத் தமிழகமும் ஈழத்தமிழரின் துன்பத்தைக் கண்டு கொதித்துப் போயுள்ளது. இந்த எழுச்சியை சதகமாக பயன்படுத்தி ஒரு முடிவை எடுத்திருக்க முடியும். அப்படிச் செய்திருப்பின் தமிழகம் இந்த அரசியல் வாதிகளின் பின்னால் திரண்டு நின்றிருக்கும். அதைவிடுத்து தமது சுயநலன்களுக்காக இவர்கள் செயல்படுவதை என்னவென்று கூறுவது?

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

வீறு கொண்டு எழுவது எப்போது எல்லா ஈழ தமிழனும் இறந்த பிறகா ?? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.