Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்போனில் வழிந்த ஜொள்ளு!

Featured Replies

எனக்கு வீட்டுல நிம்மதியே இல்லாம போச்சு. உங்ககிட்ட பேசும்போதுதான் மனசுக்கு ஆறுதலா இருக்கு. ராங் கால் மூலமா அந்த ஆண்டவன்தான் உங்களை எனக்கு அறிமுகம் செஞ்சு வச்சிருக்கார்'' என்றபடி ஜெயந்தி என்ற பெண் செல்போனிலேயே இளைஞர்கள் பலரை, தன்னுடைய பேச்சாலேயே மயக்கி பணம் பறித்ததாகவும், அவருக்குத் துணையாக அவரது கணவர் மோகன் என்பவரே செயல்பட்டதாகவும் மன்னார்குடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, இப்போது அவர்கள் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

மேற்படி கிளுகிளு சம்பவம் குறித்து போலீஸாரிடமே விசாரித்தோம்.

"கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னார்குடி அருகே உள்ள கட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற இளைஞருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் செக்ஸியான குரலில் பெண் ஒருவர், ஏதோ ஒரு பெயரைச்சொல்லி `அவரா நீங்கள்?' என்று கேட்டுவிட்டு இல்லையென்றவுடன், `அடடா... வேறொருத்தரைத் தொடர்பு கொண்டேன். அது ராங்காலாகி உங்களுக்கு வந்திருச்சு. சாரி.. வச்சுடறேன்.' என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்திருக்கிறாள். `அட, இப்பப் பேசுன அந்தப் பெண் குரல் ரொம்ப ரம்மியமா இருக்கே...' என்றபடி சந்திரசேகரின் மனமும் கும்மியடிக்கத் தொடங்க... அடுத்த சில மணிநேரத்தில் ஏற்கெனவே பேசிய அதே குரல் தன் செல்போனில் மறுபடி ஒலிக்க, சந்திரசேகர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

`நீங்க யாருன்னு தெரியலை... ஆனா உங்ககிட்ட பேசுன அந்த ஒரு செகண்டுல நான் என்னையே பறிகொடுத்த மாதிரி ஆயிட்டேன். உங்ககூட பேசிக்கிட்டே இருக்கணும்போல இருக்குது.' என்று தேனாக ஒலித்த அந்தப் பெண்ணின் தூண்டிலில் சந்திரசேகர் வசமாக லாக் ஆகிவிட்டார். அப்புறமென்ன இவர் தன்னுடைய பெயர், தொழில் பற்றிய உண்மை விவரங்களை உளறிக்கொட்ட... அந்தப் பெண்ணோ `என்னுடைய பெயர் சந்தியா. தான் தஞ்சாவூரில் உள்ள ஒரு பெரிய பஸ் கம்பெனி அதிபரின் பெண். வீடு, கார் என்று ஏகப்பட்ட வசதிகள், இருந்தும் மனசுல நிம்மதிதான் இல்லை...' என்றபடி சோகக்குரலில் சுற்றிய ரீலை, சந்திரசேகர் ஏகத்திற்கும் நம்பிவிட்டார்.

இந்த செல்போன் தொடர்பு பல நாட்கள் நீடித்ததோடு செல்போனிலேயே டூயட்டெல்லாம் பாடியிருக்கிறார்கள்.

ஒருநாள் கூலி கொடுத்தாவது கரும்பை ருசி பார்த்துவிடவேண்டும் என்றபடி மனதிற்குள் திட்டமிட்டுக்கொண்டிருந்த சந்திரசேகரின் செல்போனில் தொடர்பு கொண்ட சந்தியா, ` எங்க அப்பா என்னோட பேங்க் ஏ.டி.எம். கார்டைக்கூட பிடுங்கி வச்சிக்கிட்டார். எனக்கு உடனே ஐயாயிரம் ரூபாய் தேவைப்படுது. கொடுத்து உதவ முடியுமா?' என்று கெஞ்சல் குரலில் கேட்டிருக்கிறாள். ஏற்கெனவே சந்தியாவிடம் லாக் ஆகிவிட்ட சந்திரசேகர் நம் திட்டம் நிறைவேறப்போவதாக நினைத்துக்கொண்டு, `எங்கே நாம் சந்திக்கலாம்?' என்று கேட்டிருக்கிறார். உடனே சுதாரித்துக்கொண்ட சந்தியா `அய்யய்யோ... இப்ப நான் வெளியில வரமுடியாத சூழலில் இருக்கிறேன். என் ஃப்ரெண்டோட பாங்க் அக்கவுண்ட் நம்பர் தர்றேன். அதுல பணத்தைப் போட்டுடுங்க.. அடுத்த வாரம் நாம் நேரில் சந்திக்கலாம்' என்று சொல்லியிருக்கிறாள்.

சந்திரசேகரும், `இந்தப் பணம் அட்வான்ஸாக இருக்கட்டும்' என்று நினைத்தபடி சொன்னபடியே செய்திருக்கிறார். பின்னர் சந்தியா இதே பாணியில் பலமுறை பல ஆயிரங்களை சந்திரசேகரிடமிருந்து கறந்து கொண்டிருக்க, `யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பது போல் தன்னுடைய நண்பர் சதீஷுக்கும் சந்தியாவின் செல்போன் எண்ணைக் கொடுத்துப் பேசச் சொல்லியிருக்கிறார்.

சதீஷிடமும், `சந்திரசேகரிடம் சொல்லவேண்டாம்' என்றபடி தன்னுடைய செல்போனை பலமுறை ரீசார்ஜ் செய்யச் சொல்லியிருக்கிறாள் சந்தியா. இப்படி பல ஆயிரங்கள் செலவழிந்ததை சந்திரசேகரிடம் சொல்லாமல் சந்தியாவிற்குத் தனியே ஒரு புது `ரூட்' போட்டிருக்கிறார் சதீஷ். சந்தியாவும் சளைக்காமல் `உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு. கூடிய சீக்கிரம் உங்களை நான் நேரில் சந்திக்கிறேன்' என்று சொல்லியே சமாளித்திருக்கிறாள்.

இந்நிலையில், ஒருநாள் சந்திரசேகருக்கு வழக்கம்போல் சந்தியாவின் செல்போனிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதில் சந்தியாவின் ஸ்வீட் வாய்ஸை எதிர்பார்த்த சந்திரசேகருக்கோ அதிர்ச்சி. கரகர குரலில் ஒலித்த ஆண்குரல் ஒன்று `யோவ் யாருய்யா நீ... உன்னை நினைச்சு என் தங்கச்சி பாய்சன் சாப்பிட்டுட்டா. இப்ப தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம். நீ உடனே பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கிட்டு தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வா. வரலைன்னா நாங்க போலீஸ்ல கம்ப்ளைண்ட் செஞ்சுடுவோம்' என்று சொல்லி மிரட்ட, சந்திரசேகர் ஆடிப்போய்விட்டார். இதன்பிறகுதான் தன் புத்தியில் லேசாக சந்தேகம் எழ, சக ஜொள் நண்பர் சதீஷிடம் இது குறித்து ஆலோசித்து தஞ்சாவூர் சென்று தகவலை உறுதிப்படுத்திவிடுவோம் என்று முடிவு செய்திருக்கின்றனர்.

பேசியதுபோல் தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்த நபரிடம், `சந்தியாவை நாங்கள் இப்போது பார்க்கவேண்டும்' என்று சந்திரசேகரும், சதீஷும் சொல்ல... அதற்கு மறுத்த அந்த நபர், `இப்போது பணத்தை மட்டும் கொடுங்கள். அவள் உயிர் பிழைத்த பிறகு பார்க்கலாம்' என்று அடம்பிடித்துள்ளான். பின்னர் அந்த நபரிடம், `என்னுடன் வா.. பணம் கொடுக்கிறோம்' என்றபடி கையோடு அழைத்துவந்து எங்கள் வசம் ஒப்படைத்தனர். இதன்பிறகு நாங்கள் அவனுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விசாரித்ததில் தன் பெயர் மோகன் என்றும், தன்னுடைய மனைவி ஜெயந்திதான் சந்தியா என்ற பெயரில் இவர்களிடம் பேசி பணம் பறித்தாள் என்றும், அதற்குத் தானும் துணையாக இருந்ததாகவும் உண்மைகளைக் கக்கிவிட்டான். உடனே நாங்கள் விரைந்து சென்று சந்தியா என்ற ஜெயந்தியைக் கைது செய்தோம்'' என்றனர்.

மேற்படி மோசடி தம்பதியர் மோகன், ஜெயந்தி குறித்து விசாரித்தோம். பல்வேறு பகீர் தகவல்கள் கிடைத்தது.

" ஒரத்தநாடு அருகே உள்ள பாலபுதூரைச் சேர்ந்த மோகன், மன்னார்குடிக்கு வந்து அரசியல் கட்சி ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டு கோழிக்கறி வியாபாரம் செய்து வந்தாராம். ஏற்கெனவே தன் முதல் கணவனையும், இரு குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு ஓடிவந்து மோகனுடன் குடும்பம் நடத்திவந்த ஜெயந்தி தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் இதே ஸ்டைலில் தன்னுடைய கைவரிசையைக் காட்டி பல இளைஞர்களிடம் பணம் பறித்து வந்திருக்கிறாளாம். சபலகேஸ்கள் சிலரிடம் ஜெயந்தியை நெருக்கமாகப் பழகவிட்டு அதனை செல்போன் கேமராவில் படமெடுத்து, அதனைக் காட்டி மிரட்டி இருவரும் சேர்ந்தே பணம் பறித்து வந்திருக்கின்றனர் என்ற தகவலும் மன்னார்குடி பகுதியை அதிர வைத்திருக்கின்றது. மேலும் இவளது வலையில் ஐம்பது வயதைத் தாண்டிய பலரும், அரசியல் பிரமுகர்களும்கூட சிக்கி பெரும் பணத்தைத் தொலைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

கடைசியாக மன்னார்குடி டி.எஸ்.பி. மாணிக்கவாசகத்திடம் பேசினோம். ``குற்றத்தை இருவருமே ஒப்புக்கொண்டனர். செல்போனால் இளைஞர்கள் சீரழிந்து வருவதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு!''

என்றார் அவர். ஸீ

நன்றி குமுதம்

:icon_idea:அட இது கூட நல்லாத் தான் இருக்கு. எதற்கும் ராஜா உங்க செல்போன் நம்பரை எனக்கு தனிமடலில் அனுப்பி வையுங்கள் பிள்ளையார்சுழி போட்டு தொடங்கி வைக்க. :lol: நீங்க ரொம்ப நல்லவரு என்று கேள்விப்பட்டேன் அதனாலை தான். :D

'''' செல்போனால் இளைஞர்கள் சீரழிந்து வருவதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு!'' '''

முட்டா பயலுக....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படியெல்லாம் கிரிமினலா யோசிக்கிறாய்ங்க............

  • கருத்துக்கள உறவுகள்

"கோழிக்கறி வியாபாரம் " அமோகமா தான் நடந்திருக்கு. :icon_idea:

"கோழிக்கறி வியாபாரம் " அமோகமா தான் நடந்திருக்கு. :icon_idea:

:lol:அதாலை தான் ஆட்களையும் கோழியை அமுக்கின மாதிரி அமுக்கிட்டாங்க. :D

  • கருத்துக்கள உறவுகள்

நம்மளிட்ட எல்லாம் இந்த பருப்பு வேகாது :icon_idea:

நம்மளிட்ட எல்லாம் இந்த பருப்பு வேகாது :D

:Dஏன் இருந்ததையெல்லாம் ஏற்கனவே இழந்து, இப்போ இழப்பதற்கு ஒன்றுமில்லையோ?? :D:D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஜொள்ளர்கலுக்கு இது தேவை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

:Dஅட இது கூட நல்லாத் தான் இருக்கு. எதற்கும் ராஜா உங்க செல்போன் நம்பரை எனக்கு தனிமடலில் அனுப்பி வையுங்கள் பிள்ளையார்சுழி போட்டு தொடங்கி வைக்க. :D நீங்க ரொம்ப நல்லவரு என்று கேள்விப்பட்டேன் அதனாலை தான். :D

நீங்களும் டெலிபோனில் ஜொள்ளு விடுபவரா? :D

நீங்களும் டெலிபோனில் ஜொள்ளு விடுபவரா? :D

:Dஉந்த லொள்ளுத் தானே வேணாங்கிறது. :D நான் பிள்ளையார்சுழி போட்டுத் தொடங்க வேண்டுமென்று தெளிவாய்த் தானே குறிப்பிட்டுள்ளேன். அப்ப இதுவரை இல்லை என்று தானே அர்த்தம். :D அப்ப உங்க நம்பரை தரப் போறீங்களா?? பிள்ளையார்சுழி போட்டுத் தொடங்க............... :D

  • தொடங்கியவர்

:Dஅட இது கூட நல்லாத் தான் இருக்கு. எதற்கும் ராஜா உங்க செல்போன் நம்பரை எனக்கு தனிமடலில் அனுப்பி வையுங்கள் பிள்ளையார்சுழி போட்டு தொடங்கி வைக்க. :D நீங்க ரொம்ப நல்லவரு என்று கேள்விப்பட்டேன் அதனாலை தான். :D

வசம்பண்ணா,

உந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை :D .

[பெண்கள் பற்றி எங்களுக்கு நெடுக்கால்போவான் நிறைய அறிவுரைகள் தந்திருக்கார் :D ]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிக்4டநடக்குதா இனி றாங்கோலன்னா வைச்சிடனும்

வசம்பண்ணா,

உந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை :D .

[பெண்கள் பற்றி எங்களுக்கு நெடுக்கால்போவான் நிறைய அறிவுரைகள் தந்திருக்கார் :lol: ]

<_<அட நெடுக்கு சொல்லாட்டில் உங்களுக்கு பெண்கள் பற்றி ஒன்றுமே தெரிந்திருக்காதோ ?? :D அப்ப நீங்க ரொம்ப நல்லவரு இல்ல அதையும் தாண்டி ரொம்ப ரொம்ப நல்லவரு போல. :):D

இப்படிக் கூட நடக்குதா இனி றாங்கோலன்னா வைச்சிடனும்.

:Dஎழுதிய விதத்தைப் பார்த்தால் யாராவது ராங் கோல் எடுக்க மாட்டார்களா என்று ஏங்வகுவது போலல்லவா இருக்கிறது. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதிய விதத்தைப் பார்த்தால் யாராவது ராங் கோல் எடுக்க மாட்டார்களா என்று ஏங்வகுவது போலல்லவா இருக்கிறது. <_<

வசம்பு எழுதின விதத்தைப்பார்த்தா அப்படித்தெரிதோ அப்படி நினைக்கிறவர்களுக்குத்தான் அப்படித்தெரியும் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மளிட்ட எல்லாம் இந்த பருப்பு வேகாது :D

அதுதானே என்னெண்டு உங்களிட்டை வேகும்???? ஏற்கனவே பருப்புவாளியோடை திரிஞ்சனீங்களெல்லே <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.