Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு பலப்பரீட்டையில் வெற்றி பெறப் போவது யார்?

Featured Replies

இதுவரையில் கிளிநொச்சியில் மையம் கொண்டிருந்த போர் இப்போது முல்லைத்தீவில் மூர்க்கம் பெறத் தொடங்கியிருக்கிறது.மணலாறின் கொக்குக் தொடுவாய் முதல் எத்தாவெட்டுனுவௌ வரையான 12 கி.மீ பிரதேசத்தினூடாக முன்னேறத் தொடங்கிய பிரிகேடியர் நந்தன துடுவத்தவைத் தளபதியாகக் கொண்ட 59 ஆவது டிவிசன் - இப்போது முல்லைத்தீவு நகரில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலைவில் வந்து நிற்கிறது.

சிலாவத்தைக்குத் தெற்காக நிலைகொண்டிருக்கும் 59-1 பிரிகேட்டுக்கு மேற்காக இன்னொரு புறத்தில் 59-3 பிரிகேட் தண்ணீரூற்று மற்றும் முள்ளியவளையின் ஒரு பகுதியைக் கைப்பற்றியிருக்கிறது. அதற்கு மேற்காக 59-2 பிரிகேட் குளமுறிப்பு, கற்சிலைமடுப் பகுதிவரை முன்னகர்ந்திருப்பதாகப் பிந்திய தகவல்.சிலாவத்தை வழியாக முல்லைத்தீவை நோக்கி முன்னேற முற்பட்ட 59-1 பிரிகேட்டின் 14 ஆவது விஜயபா படைப்பிரிவு புலிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டு பெரும் இழப்புக்களைச் சந்தித்திருந்தது.

கடந்த மாதம் 27 ஆம் திகதி நடந்த இந்தச் சண்டையில் 50 படையினர் கொல்லப்பட்டு 90 பேர் காயமுற்றதாகப் புலிகள் கூறியிருந்தனர்.

17 படையினரின் சடலங்களைப் புலிகள் கைப்பற்றி ஒப்படைத்தனர். மேலும் பல படையினரைக் காணவில்லை என்றிருக்கிறது படைத்தரப்பு.இதற்குப் பின்னர் இந்தக் களமுனையில் நகர்வுகள் சற்று மந்தம் அடைந்திருக்கின்றன.

முல்லைத்தீவு நோக்கிய இந்த நகர்வு தடைப்பட்டுப் போயிருக்கின்;ற நிலையில் 59-3 பிரிகேட் வற்றாப்பளை, கேப்பாப்புலவு நோக்கிய முன்னேற்ற முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறது.15 ஆவது இலகு காலாற்படை, 9 ஆவது சிங்க றெஜிமென்ட், 4 ஆவது விஜயபா படைப்பிரிவு ஆகிய மூன்று பற்றாலியன்களுமே இந்த நகர்வில் இறக்கிவிடப் பட்டிருக்கின்றன.காடுகள் வழியாக முள்ளியவளையில் இருந்து வடக்கே புதுக்குடியிருப்பு நோக்கி இறங்க முற்படும் படையினருக்கு எதிராகப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் நடக்கின்ற காட்டுச்சண்டை இருதரப்புக்கும் பலத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இது புலிகளுக்கு வாழ்வா - சாவா என்ற பிரச்சனையுள்ள களம்.

" இரண்டு தரப்பும் இனிமேல் ஒளித்துப் பிடித்து விளையாடப் போகின்றனர். இது எப்படிப்பட்ட யுத்தமாக அமையப் போகிறதென்பது பலரதும் கேள்வியாக இருக்கிறது "

சற்று அயர்ந்து கொண்டாலும் படையினர் புதுக்குடியிருப்பின் வாயிலை அடைந்து விடுவார்கள்.

எனவே, அவர்கள் பலவிதமான தந்திரோபாயங்களையும் கையாண்டு படைமுயற்சிகளைத் தடுக்க எத்தனிக்கின்றனர்.அதேவேளை, கற்சிலைமடு வரை நகர்ந்திருக்கி;ன்ற 59-2 பிரிகேட் தற்போது ஒட்டுசுட்டான் - புதுக்குடியிருப்பு வீதியில் உள்ள கெருடாமடு நோக்கி நகர எத்தனிக்கிறது.புலிகளின் கடும் எதிர்த் தாக்குதல்கள் தொடர்கின்றன.

இதன் பின்னர் மாங்குளத்தில் இருந்து முன்னேறி வந்த 63 ஆவது டிவிசன் படையினர், ஒட்டுசுட்டான் வரை முன்னகர்ந்த 64 ஆவது டிவிசனுடன் இணைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.இதையடுத்

:)

புலிகளின் பலம் பலவீனம், இரகசியங்கள் எல்லாத்தையும் கசிய விட்டது சிலர் ஆய்வுகள் என்ற பெயரில் எழுதுவதுதான்.

தாங்களே களமுனைகளை வழிநடத்துபவர்கள் என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை...

பரபரப்பு என்று ஒண்டு இருக்கு... அது செய்யாத வேலை இல்லை... படிப்பவர்களும் திருந்தமாட்டார்கள்...

அனைத்து இரகசியங்களையும் வெளிச்சம் போட்டு காட்டினால் பிறகு புலிகள் பின்வாங்காமல் என்ன செய்வார்கள். !!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மூன்று மாதத்தில் மாத்திரம் 3000 படையினர் கொல்லப்பட்டதை கேகலிய ரம்புக்கலவே ஒத்துக்கொண்டுள்ளார். கொல்லப்பட்டவர்களை விட காயப்பட்டு களமுனையில் இருந்து அகற்றப்பட்டோர் பல்லாயிரக் கணக்காக இருக்கும்.. இப்படி நைந்துபோயிருக்கும் படையினர் கிளிநொச்சி, ஆனையிறவைப் பிடித்த மாதிரி கேக்கில் நடப்பது மாதிரி முல்லைத்தீவுக்குள் நடக்கமுடியாது.. ஆகவே வெற்றி பெறப் போவது யார் என்பது அர்த்தமில்லாத கேள்வி!

ஆமாம். இராணுவ உளவுத்துறை வேறு இணையத்தில் வரும் தகவல்களைத்தானே தரவாகக் கொடுக்கின்றது. எனவே "ஆய்வாளர்கள்" தகவல் கொடுப்போராக மாறக்கூடாது!

கடந்த மூன்று மாதத்தில் மாத்திரம் 3000 படையினர் கொல்லப்பட்டதை கேகலிய ரம்புக்கலவே ஒத்துக்கொண்டுள்ளார். கொல்லப்பட்டவர்களை விட காயப்பட்டு களமுனையில் இருந்து அகற்றப்பட்டோர் பல்லாயிரக் கணக்காக இருக்கும்.. இப்படி நைந்துபோயிருக்கும் படையினர் கிளிநொச்சி, ஆனையிறவைப் பிடித்த மாதிரி கேக்கில் நடப்பது மாதிரி முல்லைத்தீவுக்குள் நடக்கமுடியாது.. ஆகவே வெற்றி பெறப் போவது யார் என்பது அர்த்தமில்லாத கேள்வி!

ஆமாம். இராணுவ உளவுத்துறை வேறு இணையத்தில் வரும் தகவல்களைத்தானே தரவாகக் கொடுக்கின்றது. எனவே "ஆய்வாளர்கள்" தகவல் கொடுப்போராக மாறக்கூடாது!

ஆய்வாளர் வடிவேலு அவர்களுக்கு நான் சொல்லி விடுகிறேன் ஆய்வுகள் எழுத வேண்டாம் என்று சரியோ? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.