Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகள் தோல்வியடைவதை இந்தியா விரும்பாது - ஜே.வி.பி. தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தோல்வியடைவதை இந்தியா விரும்பாது - ஜே.வி.பி. தெரிவிப்பு

வீரகேசரி நாளேடு 1/18/2009 10:23:14 PM - பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமென தெரிவிக்கும் இந்தியா, மறுபுறம் விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை டில்லிக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளமை இந்தியாவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று ஜே.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது.

விடுதலைப் புலிகள் முழுமையாக தோல்வியடைவதையும் எமது நாடு பயங்கரவாதத்தை முழுமையாக வெற்றி பெறுவதையும் இந்தியா ஒரு போதும் விரும்பாது என்றும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே ஜே.வி.பி. யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி. யுமான விஜித்த ஹேரத் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து அதிகாரப் பரவலாக்கலை முழுமையாக முன்னெடுக்கும் அரசியல் தீர்வை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காகவே சிவ்சங்கர் மேனன் இங்கு வந்தார். இதுவே உண்மையாகும்.

எனவே அரசாங்கம் உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். இலங்கைப் பிரச்சினைக்கு எவ்வாறான அரசியல் தீர்வை காண வேண்டுமென நாமே தீர்மானிக்க வேண்டும். அதை விடுத்து இந்தியாவுக்கு தீர்வை முன்வைக்கும் அதிகாரம் கிடையாது.

அதேவேளை இந்தியாவின் யோசனைகளை ஏற்று அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ளும் அதிகாரமும் அரசாங்கத்திற்கு கிடையாது. அதிகாரப் பரவலாக்களுக்காக மக்கள் ஆணை வழங்கவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்து மக்களுக்கு சம உரிமைகளை வழங்கவே ஆணை வழங்கினர்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியா ஆதரவு வழங்குமென உறுதியளிக்கும் அதே நேரத்தில் விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழர் கூட்டமைப்பினரை டெல்லிக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளது.

இது இந்தியாவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளது. புலிகள் முழுமையாக தோல்வியடைவதையும் எமது நாடு பயங்கரவாதத்தை முழுமையாக வெற்றி பெறுவதையும் இந்தியா ஒரு போதும் விரும்பாது.

இலங்கையில் பிரச்சினை தொடர்வதன் மூலமே இந்தியாவின் பொருளாதாரம் அபிவிருத்தியடையும். எமது பிரச்சினையை பயன்படுத்தி இங்கு இந்திய வர்த்தகத்தை வியாபிக்கச் செய்து எமது பொருளாதாரத்தை கொள்ளையடிப்பதே இந்தியாவின் நோக்கமாகும் என்றார்

தங்களுடைய கோணத்தில் எங்களது பிரச்சனைகளை விமர்சிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னப்பா

வெல்வதும் பிடிக்காது

தோற்பதும் பிடிக்காது

நீ நோகிறமாதிரி அடி நானும் வலிக்கிறமாதிரி அழுகிறன்...

இந்தியா எதையுமே விரும்புவது இல்லையே....!!

இது இந்தியா சிலவேளை ஒதுங்கினாலும் என்ற உள்பயத்தினால், உள் நோக்கத்துடன் இந்தியாவை தூண்டப்பண்ணி தங்கள் வெற்றியை (முல்லைத்தீவையும் கைப்பற்றல்) இந்தியாவின் துணையுடன் நிறைவேற்றல்...

அதாவது இந்தியாவை உசுப்பி தங்கள் காரியங்களை செய்தல்... இவ்வளவு காலமும் அதைதான் செய்து வருகிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

செய்வதெல்லாம் பயங்கரவாதம், பேசுவதெல்லாம் பயங்கரவாத ஒழிப்பு, அடி செருப்பாலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா எதையுமே விரும்புவது இல்லையே....!!

பம்பாயில் பயங்கரவாதிகள் தாக்குவதையும் விரும்புவதில்லை அதற்காக நடக்காமலா இருக்கு, :)

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தோல்வியைத்தான் இந்தியா விரும்புகிறது. ஈழத்தில் தனது சொல் கேட்கும் ஒட்டுக்குழுவை வளர்க்க இந்தியா விரும்புகிறது.

இப்படிப் பல விருப்பங்கள் இந்தியாவிற்கு, சிறிலங்காவிற்கு இருப்பதோ வேறு வகையான விருப்பம். கடைசியில அல்வாதான். :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காகிதப் போராளிகள் இனும் இலங்கையில்தான் இருக்கிறார்களா? தமிழின அழிப்புப் போரை நடத்துவதே இந்தியா தான் என்று ஏன் யாரும் இவர்களிடம் சொல்லவில்லை? ஆயுதம், பயிற்சி, தளபதிகளின் பிரசன்னம், உளவுத் தகவல், ஆயுதம் வாங்க இலகுக் கடன் எல்லாமே புலிகள் தோற்றுவிடக் கூடாது என்ற ஆசையில்தான் இந்தியா சிங்களவர்களுக்குக் கொடுக்கின்றதா?

அட மோட்டுச் சிங்களவனே(இப்போதாவது ஒதுக்கொள்கிறீர்களா அவரகள் மோடர்கள் என்பதை ?)எப்பத்தான் தெளிவு பெறுவீர்களோ ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.