Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'விடுதலைப்புலிகள் பலத்தை இழக்கவில்லை'- பா. நடேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக பி பி சி தமிழோசைக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d436QV3b02ZLu3e

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக பி பி சி தமிழோசைக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d436QV3b02ZLu3e

மக்களின் அவலங்கள் மிக உக்கிரத்துடன் தொடரும் வேளையில் இத்தகைய பேட்டிகளால் என்ன பயன்?

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அவலங்கள் மிக உக்கிரத்துடன் தொடரும் வேளையில் இத்தகைய பேட்டிகளால் என்ன பயன்?

அது தானே...

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக பி பி சி தமிழோசைக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களை இழந்து வருவது குறித்து கேட்டபோது, விடுதலை இயக்கங்கள் இது போன்று பின் வாங்கிச் செல்வதும்- பிறகு அந்த இடங்களை மீண்டும் பிடிப்பதும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான் என்று கூறிய அவர், விடுதலைப் புலிகள் முன்பு கூட பின்வாங்கிச் சென்று பிறகு பெரிய வெற்றிகளைப் பெற்றதாகவும் கூறினார்.

பொது மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் கூறும் குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர், அத்தகைய அமைப்புகள் அப்பகுதிக்கு வந்து உண்மை நிலையை அறிந்து கொள்ளலாம் என்று கூறினார்.

விடுதலைப் புலிகளின் தாக்கும் திறனை பெரிய அளவில் குறைத்து விட்டதாக அரசு கூறுவது பொய் பிரசாரம் என்று குறிப்பட்ட அவர், அதே சமயம் தமது போராளிகள் முன்னைப் போலவே உக்கிரத்துடன் சண்டையிட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

கௌரவமான, சுதந்திரமான தீர்வு கிடைக்கும் பட்சத்தில் தாம் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Civilian killed in battle என்று தலைப்பிட்டு செய்தி போட்டுக்கொண்டு இருந்த BBC இதுதான் chance என்று இப்ப Tamil Tiger rebels 'to fight on' என்று தலைப்பிட்டு மனித பேரவலத்தினை திசை திருப்புகின்றது. இத்தகைய பேட்டிகள் மக்களின் அவலத்தினை குறைப்பதற்கோ அல்லது இன அழிப்பிற்கெதிரான ஒன்றுபட்ட ஆதரவை திரட்டுவதற்கோ உதவாது

Civilian killed in battle என்று தலைப்பிட்டு செய்தி போட்டுக்கொண்டு இருந்த BBC இதுதான் chance என்று இப்ப Tamil Tiger rebels 'to fight on' என்று தலைப்பிட்டு மனித பேரவலத்தினை திசை திருப்புகின்றது. இத்தகைய பேட்டிகள் மக்களின் அவலத்தினை குறைப்பதற்கோ அல்லது இன அழிப்பிற்கெதிரான ஒன்றுபட்ட ஆதரவை திரட்டுவதற்கோ உதவாது

இதை தான் குறுக்ஸ் சொல்லுவார் இந்த முறை புலம் பெயர் மந்தைகள் தப்பி ****** மந்தைகள் என்று பேச போகிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பீப்பீப்சீ தமிழ் ஓசை கேட்ட கேள்விகளுக்கே அவர் பதிலளித்துள்ளார். கேள்விகளையும் போட்டிருந்தால் புரிந்திருக்கும்.

நிழலி,

உங்கள் ஆதங்கம் புரிகின்றது. நீங்கள் மட்டுமல்ல பலரும் சிலவிடயங்களை மறக்கின்றீர்களா? அல்லது மறந்ததுபோல் நடிக்கின்றீர்களா?

இன்று விடுதலைப்புலிகள் சிங்களராணுவத்துடன் மட்டும் போராடவில்லை.

சிங்கள அரசுடன் எத்தனை நாடுகள் இணைந்து நின்று போரிடுகின்றது?

இந்தியாவால் செய்மதியின்மூலம் முல்லைதீவில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் பார்த்து சிங்கள அரசுக்கு கூறும்போது அவர்களால் போரில் வெல்லமுடிகின்றது.

நாங்கள் விடுதலைப்புலிகளை மட்டுமே குறை கூறுவதை விட்டு நாங்கள் அவர்கள் எதிர்பார்ப்பதை செய்தால் அவர்கள் நாங்கள் எதிர்பாக்கும் வெற்றியை தருவார்கள்.

அவர்கள் சர்வதேசமே திரும்பிபார்க்கும்வெற்றி செய்தியை தரும்போது

அதை சர்வதேசம் அங்கீகரிக்கும் நிலைக்கு புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்களாகிய நாங்கள் இதுவரை செய்தது போதுமா?

மக்கள் + போர்

  • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலைப் போராட்டம் மக்கள் பலத்துடன் மக்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகின்றது விடுதலை போராட்டத்தில் நாம் பல பின்வாங்களைச் செய்து பின்னர் அதனைவிட பாரிய வெற்றிகளை அடைந்துள்ளோம் என தமிழீழ விடுதலை புலிகளின்அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

பி பி சி தமிழோசைக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் அவர் மேலும் தெரிவித்தாவது

அரச படைகளின் விமானக் குண்டு வீ்ச்சி, செல்வீச்சி, பொருளாதார தடை, மருந்துப் பொருட்கள் தடை, என பாரிய மனித அவலத்திற்கு முகம் கொடுத்த வண்ணமுள்ளனர். இந்நிலையில் சிறிலங்கா அரசு பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு எமது மக்களையும், வெளிநாடுகளையும், மக்கள் கண்காணிப்பு அமைப்புக்களையும் ஏமாற்றிவருகின்றனர்.

எங்களுடைய போராட்டம் எங்களுடைய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சுதந்திரமான, சுவிச்சமான வாழ்க்கையைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே போராடிவருகின்றோம். எமது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் மக்களை மனித கேடயமாக பயன்படுத்துவதாக பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொண்டு மக்கள் மீது கண்மூடித்தனமாக தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.

கடந்த இரு வருடங்களாக நடாத்திவரும் இராணுவ நடவடிக்களினால் எமது மக்கள் எங்கள் பாதுகாப்பை விரும்பி எம்முடன் இடம்பெயாந்து பாதுகாப்பாக வருகின்றனர். அரசாங்கத்தின் பொய் பிரச்சாரங்களை நம்பி மனித உரிமை அமைப்புக்கள் பிழையாக வழிநடாத்தப்படுகின்றது. என தெரிவித்த அவர் இவர்களுக்கு ஒரு பகிரங்க அழைப்பு ஒன்றை விடுகின்றேன். அரச படைகளினால் மேற்கொள்ளப்டும் அனைத்து தாக்குதல்களையும் நிறுத்திவிட்டு அவர்கள் எங்கள் பிரதேசத்திற்கு வந்து பார்த்தால் உண்மை நிலை என்ன என்பதை உணர்ந்து கொள்வர்.

எமது முப்படைகளும் கடந்த காலத்தைப் போலவே இருக்கின்றன போராளிகள் மிகவும் வீராவசத்துடன் போராடிவருகின்றனர். அவர்களுடன் நேர்க்கு நேர் மோதலில் பலத்த இழப்புக்களை சந்தித்துவரும் இராணுவத்தினர் தமது ஆத்திரத்தையும் கோபத்தையும் தீர்ப்பதற்காகவே எங்கள் மக்கள் மீது தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டுவருகின்றனர்.

விடுதலைப் போராட்ட காலங்களில் பின்நோக்கி நகர்வதும் பின்பு இழந்த இடங்களை பிடித்து சுதந்திரத்தை பிரகடனப்படுத்துவது முன்னைய விடுதலைப் போராட்டங்களில் நிகழ்ந்துள்ளது என்பதை இக்கால கட்டத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். தற்போது கூட 300 சதுரக் கிலோமீற்றர் மாத்திரம் தான் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பொய்பிரச்சாரம் செய்கின்றது.

எமது தேசிய தலைவர் அவர்கள் மக்களின் நலனுக்காக, மக்களின் சுதந்திரமான, சுவிச்சமான வாழ்விற்கு எதனையும் அர்ப்பணிக்க தயாராக இந்த மண்ணில் நின்று போராடிவருகின்றார். உண்மையில் சுதந்திரமான கெளரவமான தீர்வுக்காகத்தான் போராடிவருகின்றோம்.

அந்தவகையில் கௌரவமான, சுதந்திரமான தீர்வு கிடைக்கும் பட்சத்தில் தாம் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்

http://www.pathivu.com/news/1471/34//d,topnews_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே நடேசன் அவர்கள் பி.பி.சி க்கு பேட்டி வழங்கினரா?அல்லது இதுவும் வதந்தியா?

உண்மையாகவே நடேசன் அவர்கள் பி.பி.சி க்கு பேட்டி வழங்கினரா?அல்லது இதுவும் வதந்தியா?

ஏன் bbc கேட்க்க மாட்டிங்களோ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,,,,,,,,

அதிகமான மக்கள் கொல்லப்படும் போது அதுவே மக்களுக்கு விடுதலையின் மீதான வெறுப்பை

கொண்டு வரும்,

"வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.