Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதவி வேண்டாம் அங்கீகரி – கனேடிய மாணவர்களின் உணர்ச்சி மிகு போராட்டம்

Featured Replies

யோர்க் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வீதி மறியல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். யோர்க் பல்கலைக்கழக முன்றில் ஆரம்பமான இவ்வீதி மறியல் போராட்டத்தில் பெரும் திரளான மாணவர்கள் பங்குபற்றினர்.

யோர்க் பல்கலைக்கழக முன்றலிலிருந்து பிரதான வீதியூடாக தமிழீழ தேசியக்கொடியைத் தாங்கியவாறு பேரணியாக சென்ற மாணவர்கள், "தமிழீழ விடுதலையை அங்கீகரி" "எம்மை யாரும் தோற்கடிக்க முடியாது""எமக்கு வேண்டும் தமிழீழம்" போன்ற கோசங்களை எழுப்பியதோடு சன நெருக்கடி நிறைந்த வீதியினை மறித்து தமது கோரிக்கைகளை வலுவாக வெளிப்படுத்தினர்.

இது வரை காலமும் கனேடிய அரசையும் சர்வதேச சமூகங்களையும் நோக்கி இரந்து குரல் எழும்பிவந்த கனடியத் தமிழர் சமூகம் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான பலன்கள் எதுவும் கிடைக்காத காரணத்தாலும், கனேடிய மற்றும் சர்வதேச அரசுகளின் வேண்டுதல்களை, சிறிலங்கா அரசு புறக்கணிப்பதாலும் தனித் தமிழீழமே தமிழரின் பிரச்சினைக்கு தீர்வாகும் என கோசமிட்டனர்.

தமிழினத்தை அழித்து, கொடிய போரை அரங்கேற்றி வரும் சிறிலங்காவின் சிங்களக் கொடியை தனது உறவுகளை பறிகொடுத்த மாணவர் ஒருவர் எரித்தார். இது வரை காலமும் நடைபெற்ற போராட்டங்களில் முற்றிலும் வேறுபட்ட வடிவில் கனேடிய தமிழ் மாணவரின் விடுதலை அவாவை இப் போராட்டம் வெளிக்காட்டியது.

போராட்டத்தின் இறுதியில் மீண்டும் யோர்க் பல்கலைக்கழக முன்றலில் ஒன்றுகூடிய மாணவர்கள் மத்தியில் யோர்க் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உதவித் தலைவர், மற்றும் அதன் உறுப்பினர் ஆகியோர் உரையாற்றினார்கள்.

அவர்கள் தமது உரையில் 'தமிழர்களும் மனிதர்களே எனவே அவர்களது உரிமைகளையும் உயிர் வாழ்வுக்கான உத்தரவாதத்தையும் யாரும் தட்டிக்கழிக்க முடியாது' எனக்குறிப்பிட்டனர்.

தமிழ் மாணவர்கள் சார்பில் உரையாற்றியோர் மாற்றின சமூகங்களுக்கு இன்றைய தாயக நிலமை தொடர்பான விளக்கவுரையை நிகழ்த்தினர். அத்தோடு சிறீலங்கா அரசினால் புனர்வாழ்வு நிலையங்கள் என அழைக்கப்படும் நாசிப்படைகளின் கொலை முகாங்கள் போன்ற தடுப்பு மையங்களில் தமிழர்களை மூன்று வருட காலத்துக்கு அடைத்து வைக்கும் திட்டமானது தமிழ் சமூகத்தைக் கொன்றழிப்பதற்கானதேயாகும். இது இலங்கைத்தீவில் தமிழர்களின் இருப்பை துடைத்தொழிப்பதையே நோக்காகக் கொண்டது எனவும் தெளிவுபடுத்தினர்.

தமிழீழ விடுதலையை முன்வைத்தும், அதனை அங்கீகரிக்கக் கோரியும் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாணவர்கள் தமிழீழத்தின் அடையாளமான தமிழீழ தேசியக்கொடியை தமது கரங்களில் தாங்கியிருந்தனர்.

http://www.pathivu.com/news/370/54/d,view.aspx

தொடர்புடைய செய்திகள் : http://www.canadatyo.org/full.php?id=136

http://www.excal.on.ca/cms2/index.php?opti...iew&id=6801

Edited by Snegethy

  • கருத்துக்கள உறவுகள்

இந்தபோராட்டமே முற்றிலும் புரட்சிகரமான வித்தியாசமான முன்னோடியான ஒரு போராட்டம்

1.சிங்கக்கொடி எரித்தமை

2.தமிழீழத்தை அங்கீகரி!

என்ற கோரிக்கையை முன்வைத்தமை,சிற்பான்மையினரி

கனடா ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்கள் வீதி மறியல் கவனயீர்ப்பு போராட்டத்தினை நேற்று நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

கனடா ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்கள் வீதி மறியல் கவனயீர்ப்பு போராட்டத்தினை நேற்று நடத்தியுள்ளனர்.

மாணவ சமுதாயத்துக்கு எனது வாழ்த்துக்கள்.மாணவர் சக்தி மிகவும் பலமானது.உரிய முறையில் இந்த சக்தியை எல்லா நாடுகளிலும் பயன் படுத்தினால் பல நாடுகளை எமது பிரச்சனைகளை சரியான முறையில் அனுகப் பண்ணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் இந்த போராட்டம் மீண்டும் என்னுமொரு தெளிவைக் கனடா மக்களுக்குச் சொல்கின்றது. வெறுமனே மக்கள் அவலத்தைக் காட்டுவது மட்டும் போதாதது. அந்த மக்கள் அவலத்தினால் தான் எம் போராட்டம் தேவைப்படுகின்றது என்பதையும் உலகிற்கு இதே தருணத்தில் தான் சொல்ல முடியும்.

எனவே இதை ஒரு அடையாளமாகக் கொண்டு, நாம் செய்கின்ற ஒவ்வொரு போராட்டமும் எனி வரும் காலங்களில் தமிழீழத்தின் தேவையையும் சொல்வது போன்று அமையவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா இளையோர் சமுதாயத்துக்கும் யோர்க் மாணவர்களுக்கும் வாழ்த்துகள். உங்களில் ஒரு இளையவளாய் நானும் மகிழ்கின்றேன். இங்கிருந்தும் என்னால் இயன்றவரை பங்கெடுப்புகளிலும் ஈடுபடுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் தொடர்ச்சியான இணையப் போரில் ஈடுபடுகின்றார்கள் என்பதற்கு குறித்த காணோளி யுரிப்பில் தூக்க வைக்கப்பட்டதற்குச் சான்று. அக் காணொளி தொடர்பாகத் தொடர்ச்சியான முறையீடு செய்வதன் மூலம் தூக்கி விட்டார்கள். இதை இந்த வேகத்தை நாங்களும் சளைக்காமல் செய்ய வேண்டும்.

1.சிங்கக்கொடி எரித்தமை

2.தமிழீழத்தை அங்கீகரி!

இன்று ஜெனீவாவில் நடைபெற்ற பேரணியும் இதேபோல்தான் நடைபெற்றது..

சினேகிதி இணைச்ச யூரியூப் வீடியோ தூக்கபட இல்லை. தமிழ்மகன் இணைச்சது தூக்கப்பட்டு இருக்கிது. அதில வித்தியாசமாய் என்ன இருந்திச்சிது எண்டு தெரியவில்லை. இதில தூக்கப்படக்கூடியதாய் என்ன விசயம் இருக்கிது எண்டு தெரிய இல்லை. வீடியோ தூக்கப்பட்டால் யூரியூப்பை தொலைபேசியில கூட தொடர்புகொண்டு காரணம் கேட்கலாம். தகுந்த காரணம் இல்லாமல் காணொளியை தூக்கமுடியாது. சினேகிதி இணைச்ச காணொளி:

">

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.