Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா, ரஷ்யா, வியட்நாம் நாடுகளின் ஆதரவுள்ளவரை இந்தியா, மேற்குலக நாடுகளின் பேச்சைக் கேட்க தயாரில்லை - சம்பிக்க

Featured Replies

நன்றி பதிவு.. இலங்கையின் திமிர் பேச்சுக்களை பாருங்கள் முழுதமிழர்படுகொலைகளை செய்து கொண்டு.. இப்பேச்சுக்களை உரிய முறையில் உலகிற்கு போகவேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்லுங்கள்.. இதன் மூலம் இலங்கைக்கு முட்டுக்கொடுக்கும் நாடுகளுக்கு உலகின் மூலம் நெருக்கடி கொடுத்து அடக்கலாம்..

சீனா, ரஷ்யா, வியட்நாம் நாடுகளின் ஆதரவுள்ளவரை இந்தியா, மேற்குலக நாடுகளின் பேச்சைக் கேட்க தயாரில்லை - சம்பிக்க

இலங்கை இறையாண்மை கொண்ட சுயாதீனமான நாடு எமது பிரச்சினையில் தலையிட இந்தியாவுக்கோ அல்லது வேறெந்த மேற்குலக நாடுகளுக்கோ அதிகாரமில்லை எனசுற்றுச் சூழல் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள யுத்த நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் மறுத்தநிலையில் அதனை ஏற்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை 1987 ஆம் ஆண்டைப் போன்று இந்தியாவுக்கு எதிராக வீதிப் போராட்டம் வெடிக்கவைப்பதற்கான நடவடிக்கை என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்பில் உள்ளனர். அந்த அமைப்பினர் தலைவர் பிரபாகரனை பாதுகாக்க இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகிக்கின்றது. இது அந்நாட்டிற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிப்பதற்கான செயற்பாடு என அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் போது இதனைக் குறிப்பிட்டார்.

அவ்வாறு ஐ.நா. சபையில் ஹோம்ஸ் வெளியிட்ட தகவல்களாக இருந்தாலும் சரி ஐ.நா. பாதுகாப்பு சபையில் எந்தப் பிரேரணை கொண்டு வந்தாலும் இலங்கையை அசைக்க முடியாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேற்குலக நாடுகள் தான் புலிகளுக்கு விமானங்களையும்இ தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கின. எனவே மேற்குலக நாடுகளின் பேச்சைக் கேட்க நாம் தயாரில்லை. என உறுதியாக கூறியுள்ளார்.

ஜ. நா வால் அசைக்க முடியாது என்றால் ஒரு வேளை ஈராக் மீது போர் தொடுத்த போலோ அல்லது ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தால் உங்களால் சமாளிக்க முடியும்மா, உலக அரசியல் நிலவரம் எப்போதும் மாறலாம்,

1986 இல் சதாமுக்கு இரசாயன ஆயுதம் கொடுத்தது அன்றய அமெரிக்க பாதுகாப்புச் செயலாலர் 2006இல்

அவரை இரசாயன ஆயுதம் பாவித்தார் என்று தூக்கில் போட்டதும் அதே அமெரிக்க பாதுகாப்புச் செயலாலர் ரம்ஸ்பீல்ட் தான் உலக நிலவரம் எப்படி மாறுகிறது :o:o:o

அதே போல் தலிபான் சோவியத் ஒன்றியத்தை போராட உதவி செய்து அவர்களை விடுதலை போராளிகள் என்று பாராட்டியதும் அமேரிக்கா தான், அதன் பின் அவர்களை மிகப் பெரிய பய்ஙரவாதியாகவும் சித்தரித்த்தும் அமேரிக்கா தான். :):lol::lol: :

இதை சம்பிக்க அண்ணாச்சி உணர்வார் என்று நம்புவோமாக :lol::wub:

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய இந்தப் பேச்சுக்கு அடிப்படை இந்தியாவை சிக்கலில் இருந்து விடுவிப்பது ஆகும்..! அதாவது இந்தியாவே போரை நிறுத்தும்படி கேட்டாலும் இவர்கள் உடன்பட மாட்டார்கள் என்று காங்கிரஸ்காரர் தமிழக எழுச்சியை அடக்க இது பயன்படும்..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனும் வடக்கத்தையானும் சேர்ந்து எங்களுக்கு அரப்பு அரைச்சு காட்டுறாங்கள்.

அதுமட்டுமல்ல இந்தியாவைச் சிக்கலுக்குள் தள்ளி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியாகக் கூட இதனைப் பார்க்கலாம்.

நாங்கள் எல்லாம் உசாராணது அவருக்கு தெரியாதுபோல கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் துணிவில் தான் சம்பிக்க ரணவக்க இந்த துள்ளு துள்ளுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.