Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேதனையிலும் சந்தோசம்

Featured Replies

அபிதா பெயருக்கு ஏற்ற போல அவளும் அழகிய பெண்..அபிதாவுக்கு ஒரே அண்ணன் வெளி நாட்டில் வேலையில் இருந்தான்.. அபிதா அம்மா அப்பாவோட ஊரில் இருந்தாள்..

அம்மா நான் பாடசலைக்கு போகுறேன்.. என்று சொல்லிய படி தன் தோழி வீடு நோக்கி நடக்க தொடங்கினாள் அபிதா...

சுசிதா அபிதாவின் நண்பி இருவரும் ஒரே தெருவில் இருந்தார்கள்.. சிறு வயது முதல் இருவரும் நண்பிகள்.. அதை விட இருவரும் ஒரே பாடசாலையில் படித்தார்கள்...

அபி நம்ம பாடசாலை பெடியன்கள் வாறாங்கள்.. அங்க பாரு... அபி அங்க பாரு செந்தில் வாறன்.. உன்னுடன் இப்ப பேசுறது இல்லையா?

அப்படி இல்லை சுசி போன் பண்ணி பேசுவான்..

செந்தில் வேறு யாரும் இல்லை அவர்கள் வகுப்பில் படிக்கும் மாணவன்..சுசிதா யாருடனும் அதிகம் பேச மட்டாள்.. அபிதா அப்படி இல்லை எல்லாருடனும் அதிகம் பேசி பழகுவாள்..

செந்திலும் அபிதாவும் சின்ன வயதில் இருந்து ஒரே வகுப்பில் படித்ததால் இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.. செந்தில் படிக்க கூடியா மாணவன்.. அபிதாவுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் அவன் தான் சொல்லி குடுத்தான் அபிதாவுக்கு..அபிதாவும் அவனிடமே வந்து கேட்பாள்.... இதனாலே இருவரின் நட்பும் தொடர்ந்து கொண்டு இருந்தது..

நாட்கள் போக போக செந்தில் அபிதா வசம் ஆனான்.. இது எல்லாம் தெரியாதா அபிதா அவனுடன் நட்பு நீதியாய் பழகினாள்.. செந்தில் அவள் நண்பி என்பதை மறந்து தன் காதலியாய் நினைக்க தொடங்கினான்.. இதனாலே அவள் எது கேட்டாலும் தன் தகுதிக்கு மீறி அவனுக்கு பண்ணினான்.. பாவம் தன் தலையில் மண் விழும் என்று முதலில் தெரிந்து இருந்தல் இப்படி எல்லாம் பண்ணி இருக்க மட்டானோ என்னமோ... உலகம் தெரியாதா பெடியன்..

இதர்க்கு இடையில் அபிதாவை வேறு இடம் பார்த்து கொண்டு ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்றார்கள்.. அபிதா படித்த பாடசாலை விட்டு வேறு இடத்தில் வேறு பாடசாலைக்கு போனாள்..

அபிதா வேறு பாடசாலை போனாலும் இருவரின் நட்பும் மலர்ந்து கொண்டுதான் இருந்தது..

இருவரும் பாடசாலை படிப்பு முடியுக்கும் நேரம் வந்தது..

செந்தில் ஜோசிக்க தொடங்கினான் இனியும் சொல்லாமல் இருந்தால் நண்பர்கள் சொல்லுற மாதிரி அபிதா கை தவறி போயுடுவாளோ? பாடசாலை முடித்து கல்லூரிக்கு போக போகுறாள்.. எவ்வளவு பேரை சந்திப்பாள். வேறு பக்கம் திசை மாறி விடுவாளோ என்று ஜோசிக்கலானான்..

அவளுக்கு போன் பண்ணினன் அபி உன்னுடன் நான் இன்று பேச வேண்டும் ஒரு முக்கியாமான விஷயம்.. நான் உன் இடத்துக்கு வரட்டுமா?

இல்லை செந்தில் நான் உங்கு இருக்கும் முருகன் கோவிலுக்கு அப்பா அம்மாவோட சனிக்கிழமை வருகுறேன்.. வரும் போது பேசலாமா?

செந்திலும் சரி என்றான்..

அவன் வர போகும் சனிக்கிழமைக்கு ஆக காத்து இருந்தான்.. ஒவ்வொரு இரவும் நித்திரை இல்லாமல் தவிர்த்தான்..

சனிக்கிழமை வந்தது அவளும் வந்து சேர்ந்தாள் அவர்கள் அப்பா அம்மாவோட..அபிதாவை பார்க்க கோவிலுக்கு போனான் செந்தில்.. ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்ற படியால் அபிதா செந்திலும் பேசுவதை அவள் அப்பாவும் அம்மாவும் தப்பா நினைக்கலை..

என்ன செந்தில் வந்து விட்டு பேசாமல் இருக்குறிர்கள் என்னிடன் என்ன பேச வேணும்..

அதில்லை அபிதா எப்படி ஆரம்பிப்பது என்று தெரிய வில்லை.. அதுதான் ஜோசித்தேன்..

சும்மா ஜோசிக்காமல் சொல்லுங்கள் ஏதாவது உதவி வேணுமா?

இல்லை இல்லை அப்படி ஒன்றும் வேணாம்...

ஒகே நான் விசையத்துக்கு வந்து விடுறன்..அபி உனக்கு என்னை பற்றி நல்லாவே தெரியும் நான் எந்த பெண்ணையும் நிமிர்ந்து பார்க்காதவன்... ஆனால் நான் எப்ப உனக்கு படிப்பு சொல்லி குடுக்க தொடங்கினனோ அன்றில் இருந்து உன்னைதான் நினைத்துட்டு இருக்கன்.. என்னால் உன்னை மறக்க முடிய வில்லை... நீ எனக்கு இப்ப பதில் சொல்ல வேணும் என்று இல்லை ஜோசித்து சொல்லு... நான் காத்து இருக்குறேன்..

அபிதாவுக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை .. ஒகே செந்தில் நான் ஜோசித்து இரண்டு நாட்களில் பதில் சொல்லுறேன்...

சரி அபிதா புறப்படுறேன்..

சரி செந்தில் என்றாள்...

அபிதா தன் அன்பு தோழியான சுசிதாவிடம் பேசினாள்.. சுசி செந்தில் என்னை காதலிக்குறனாம்.. என்ன செய்வது என்று புரிய வில்லை .. நீ என்ன சொல்லுறாய் சுசி?

அபி உனக்கு செந்தில் கிடைத்தது அதிஸ்டம் அவன் எவ்வளவு நல்லவன்... உண்மை சொல்ல போனால் அவனை மாதிரி ஒருதன் கிடைத்தால் நான் வேணாம் என்று சொல்ல மட்டான்...அவன் உன்னை நல்லா வைத்து இருப்பான் அபி.. அப்புறம் உன் விருப்பம்.. நீதான் முடிவு பண்ண வேண்டும்...

அபிதாவுக்கு மனதில் குழப்பம் இருந்தாலும் செந்திலுக்கு சம்மதம் சொன்னாள்..

செந்தில் அவள் சம்மதம் சொல்லிய நாட்களில் இருந்து அவளுக்காக உருக தொடங்கினான்.. கோவிலுக்கு போகதவன் கோவிலுக்கு சென்று வந்தான்...

இருவரும் பாடசாலை படிப்பு முடித்து கல்லூரிக்கு போக தயரானார்கள்.. செந்தில் அபிதா ஊர்லயே இருக்கும் கல்லூரியில் சேர்ந்து படித்தான் அவளை பார்ப்பதர்க்காகவே...

கல்லூரி படிப்பு முடியும் வரை அபிதாவும் செந்திலும் காதல் வானில் பறந்தார்கள்.. இதர்க்கு இடையில் செந்தில் அவளுக்காகவே இரவில் வேலை பார்த்தான் படித்து படித்து அவளை நல்லா வைத்து இருக்கணும் என்பதுக்காகவே...

கல்லூரி படிப்பு முடியும் தரணும் வந்தது...செந்தில் ஜோசித்தன்... எனி பிரச்சனை எதுகும் இல்லை அபிதாவை கல்யாணம் செய்வோம் .

அபி நாளையோட நமக்கு கல்லூரி படிப்பு முடியுது எனிமேல் கல்யாணம் செய்வோமா??

எனிமேல் நான் உன்னை நல்லா வைத்து இருப்பன் தானே...

என்ன செந்தில் என்ன அவசரம் என்று கேட்டாள் அபிதா செந்திலிடம்..

இல்லை அபி என்னால் உன்னை பிரிந்து இருக்க முடியாது அதுதான் கல்யாணம் செய்வோமா??

சரி செந்தில் நன் ஜோசித்து முடிவு சொல்லுறேன்..

அவன் பாவம் அவளை தப்பா எடுக்கலை அவள் சம்மதம் சொல்லுவாள் என்று கார்த்து இருந்தான்...

அபிதா நாட்களை தள்ளி போட்டு இட்டு வந்தாள்..

செந்தில் அவள் சம்மதம் சொல்லுவாள் என்ற நினைப்பில் அவளின் இனிய கனவுகளுடன் விடிந்ததும் தெரியாமல் நித்திரை கொண்டு இட்டு இருந்தான்..

யாரோ எழுப்புவது போல இருக்கு அம்மாவின் குரல் போல இருக்கு என்று சொல்லிய படியே எழுந்தான்.. இந்த அம்மாவுக்கு வேறு வேலை இல்லை.. என் தேவதை நானே ஒரு கிழமை பார்க்க இல்லை என்று கனவில் பார்த்தாலும் இந்த அம்மா குழப்பி விட்டு இட்டாங்க..

டேய் செந்தில் உனக்கு ஒரு கடிதம் வந்து இருக்கு...தாய் குடுத்த கடிதத்தை பிரித்தான்.. அதில் அபிதாவின் கை எழுத்து... ஜோசித்து கொண்டு பிரித்து படித்தான்..

அவன் ஆறு வருடங்கள் கட்டி வைத்த கனவை எல்லாம் ஒரே வார்த்தையில் அவள் உடைத்து விட்டாள் அபி என்ற அபிதா...

செந்தில் உங்களை எனக்கு புடிக்க வில்லை உங்களுடன் இருந்து கஸ்ர பட நான் தயார இல்லை..அம்மா அப்பா வெளி நாட்டில் மாப்பிளை பார்த்து இருக்காங்கள்... நான் அவனை கல்யாணம் பண்ணி அங்கு போக போகுறேன்.. நீங்கள் கல்யாணத்தை குழப்ப கூடாது என்றுதான் கல்யாணத்துக்கு அன்று கடிதம் கிடைக்குற மாதிரி பண்ணினான்.. இந்த கடிதம் நீங்கள் படிக்கும் நேரம் எனக்கு கல்யாணம் ஆகி இருக்கும்...செந்தில் இடி விழுந்தவன் போல் ஆனான்

இரு மாதங்கள் பித்து பிடித்தவன் போல இருந்தான்.. மெல்ல மெல்ல மீண்டு வர தொடங்கினான்..

அந்த நிலையில் சுசிதா தேடி வந்தாள் செந்திலை.. அவனை பார்த்து அழ தொடங்கினாள் சுசிதா..

செந்தில் ஏன் இப்படி இருக்குறியள் நீங்கள் படிக்கும் காலத்தில் எவ்வளவு கம்பீராமாய் இருந்திர்கள்..செந்தில் எனக்கு தெரியும் நீங்களும் அபிதாவும் காதலித்தது.. அவள் இப்படி செய்வாள் என்று நான் நினைக்க வில்லை.. அவள் தூரோகி அவளை நினைத்து ஏன் நீங்கள் கவலை படணும்..

சரி விடு சுசிதா என்ன இந்த பக்கம். நீ எப்படி இருக்காய் கல்யாணம் பண்ணி விட்டையா?

அது பத்திதான் உங்களிடம் பேச வந்தன்.. பேசலாமா?

என்ன சொல்லு சுசி... என்ன உதவி வேணும் சொல்லு...

எனக்கு உங்களிடம் உதவி வேணாம் செந்தில்.. நான் சொல்ல வாறதை சொல்லி விடுறன் உங்களுக்கு புடிக்க இல்லை என்றால் சொல்லுங்கள் செந்தில்...

செந்தில் ஜோசனையுடன் அவளை பார்த்தான்..

செந்தில் நான் பேசி முடிக்கும் வரை நீங்கள் பேச வேணாம் எனக்காக.. அதுக்கு அப்புறம் உங்கள் விருப்பம்..

செந்தில் நம்ம படிக்கும் போதே நான் உங்களை விரும்பினன்.. இன்னமும் நான் உங்களை என் மனதில் வைத்து பூஜை செய்து கொண்டுதான் இருக்கன்.. நீங்கள் அபிதாவிடம்தான் நெருங்கி பழகீனிர்கள்.. அதை விட நான் படிப்பில் அழகில் குறைவு உங்களை விட அது ஒன்று என் மனத்துக்கு உள்ள இருந்த படியால் நான் எதுகும் சொல்ல வில்லை.. அப்புறம் நீங்கள் அபிதாவை விரும்புவது தெரிந்தது அதனாலே நான் பேசாமல் இருந்து விட்டன்.. சொல்லாமல் இருப்பதை விட சொல்லுறது மேல் என்று மனத்துக்கு தோணியது அதுதான் சொன்னன் அப்புறம் உங்கள் விருப்பம் நான் வருகுறேன்.. உங்களுக்கு விருப்பம் என்றால் உங்க அம்மாவை கூட்டி கொண்டு வந்து பொண்ணு கேளுங்கள்.. சொல்லி விட்டே அவள் சென்று விட்டாள்..

இதை எல்லாம் செந்திலின் அம்மாவும் கேட்டு கொண்டு இருந்தர்கள்.. அவர்களுக்கு இப்பதான் புரிந்தது மகனின் இந்த கோலத்துக்கு என்ன காரணம் என்று...

செந்தில் என்ற அம்மாவின் குரல்..

என்னம்மா என்றான்..

செந்தில் கோப படைதை நான் சொல்வதை கேட்டு..

இல்லை அம்மா சொல்லுங்கள்..

நான் நீயும் அந்த பெண்ணும் பேசியதை கேட்டன்.. நீ ஜோசித்து பார் நீ விரும்பிய பெண் காசுக்காக சென்று இருக்காள்.. நீ விரும்பிய பெண் அழகாக கூட இருக்கலாம் ஆனால் அவளிடம் நல்ல மனம் இருக்கா ஜோசித்து பார்...

ஆனால் இந்த பெண் அழகில் படிப்பில் குறைவாய் இருக்கலாம் ஆனால் நல்ல மனது இருக்கு... உனக்கு நிம்மதியான வாழ்வு தருவாள்..

ஒருவனுக்கு அழகிய மனைவி இருந்தாள் என்று சொல்வதை விட.. அன்பான மனைவி அவனுடன் எந்த கஸ்ரத்தில் வாழ கூடிய மனைவி இருந்தாள் என்று சொல்வது மேல் இல்லையா?ஜோசித்து முடிவு பண்ணு செந்தில்.....

அவன் இரவு இரவாய் ஜோசிக்க தொடங்கினான் அம்மா சொல்வது சரிதான்.. நான் அபிதாவை பண்ணி இருந்தால் நிம்மதி இருந்து இருக்காது இப்பவே இப்படி செய்பவள் கல்யாணத்துக்கு அப்புறம் ஓடி போயு இருந்தால் அவமானம்தான் மிஞ்சி இருக்கும் அதை விட இதுவே மேல்...

அடுத்த நாள் அம்மாவிடம் சென்றான் அம்மா நான் இன்று என் வேலைக்கு புறப்படேன் .. நீங்கள் சுசிதா வீட்டில் போயு அவர்களை பெண் கேளுங்கள்... என்று சொல்லி விட்டு தன் புதிய வாழ்வை தொடர்வதர்க்காக சந்தோசமாக கிழம்பி போனான் முதல் கட்ட படிக்கட்டாய் வேலைக்கு போனான் செந்தில்..

சந்தோசமாக போகும் மகனை பார்த்து தாய் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்..

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் கருத்து மிக அழகானது .........நன்றி சுஜி

  • தொடங்கியவர்

கதையின் கருத்து மிக அழகானது .........நன்றி சுஜி

நன்றி அக்கா..

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா நீ விரும்புவளை விட உன்னை விரும்புபவளை கல்யாணம் கட்டிக்க..........என்று சொல்லுறியள்........தொடரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இடத்திலும் இந்த பெண்கள் காக்க வைத்து கழுத்து அறுக்கினும் நம்பவே முடியவில்லை இந்த பெண்களை :D:icon_idea::)

  • தொடங்கியவர்

கண்ணா நீ விரும்புவளை விட உன்னை விரும்புபவளை கல்யாணம் கட்டிக்க..........என்று சொல்லுறியள்........தொடரட்டும்

அது உண்மைதானே நம்ம விரும்புவரை விட நம்மளை விரும்புவர் நல்லம்தானே.. நன்றி புத்தன் உங்கள் கருத்துக்கு

எல்லா இடத்திலும் இந்த பெண்கள் காக்க வைத்து கழுத்து அறுக்கினும் நம்பவே முடியவில்லை இந்த பெண்களை :D:icon_idea::)

என்ன முனிவர் யார் அப்படி பண்ணினது உங்களுக்கு.... எல்லாரும் ஒரு மாதிரி இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.