Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் போர் இடைவெளி ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா. சபை கோரிக்கை: அமெரிக்காவும் பிரிட்டனும் ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் போரில் சிக்குண்டுள்ள மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் இடைவெளி ஒன்றை நடை முறைப்படுத்த சம்மதம் தெரிவிக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. அதனை அமெரிக்காவும் பிரிட்டனும் ஆதரித்துள்ளன.

இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா வின் பாதுகாப்புச் சபையின் சம்பிரதாய பூர்வமற்ற, உத்தியோக பூர்வமற்ற விவாதம் மூடிய கதவுகளுடன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அதிகாரி ஜோன் ஹோல்ம்ஸ் மனிதாபிமான போர் இடைவெளி ஒன்றுக்கு இரண்டு தரப்புகளும் சம்மதிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்தக் கோரிக்கையை அமெரிக்காவின் ஐ.நா பிரதிநிதி றோஸ் மேரி டிக்கார்லோவும் பிரிட்டனின் சிரேஷ்ட பிரதிநிதி ஜோன் சர்வஸும் ஆதரித்துக் கருத்து வெளியிட்டனர்.

ஊடகவியலாளர் மாநாட்டில் அரசாங்கப் படைகள் பாதுகாப்பு வலயத்துள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக கண்டனம் வெளியிடப்பட்டுள்ளதுடன் அதேநேரம் விடுதலைப்புலிகளும் மக்களை வெளியேற விடாது தடுப்பதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் நாளில் இருந்து இதுவரை பொதுமக்கள் 2,800 பேர் படையினரின் ஷெல் வீச்சில் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.

பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என இலங்கை அரசு தமக்கு உறுதிமொழி வழங்கியிருந்த போதிலும், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான கலாநிதி ஜோன் ஹோல்ம்ஸ் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் துணைத் தூதுவர் றோஸ்மேரி டிகார்லோ ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் சாவேர்ஸ் ஆகியோர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

பாதுகாப்பு வலயத்தில் பெருமளவிலான மக்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில், அந்தப் பகுதிகளை நோக்கி சிறிலங்கா படைகள் ஷெல் தாக்குதலை நடத்தி வருவதாகவும் இது தொடர்பாக அமெரிக்கா ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதாகவும் கூறிய அமெரிக்கத் தூதுவர் றோஸ் மேரி, படையினர் வீசும் ஷெல்கள் மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீழ்ந்து வெடிப்பதாகவும் தெரிவித்தார்

  • கருத்துக்கள உறவுகள்

ஐநாவின் பணி பூர்வீக நிலத்தில் வாழும் மக்களை வெளியேற்றி ஆக்கிரமிப்பாளனையும் அவனது படைகளையும் நிலை நிறுத்த போரை இடைநிறுத்தி தொடர வைப்பது என்பதை இன்றுதான் நான் அறிந்து கொண்டேன். இதற்கு ஒரு சபை உலகில் அவசியமா..??!

மக்களை வெளியேறு வெளியேறு என்றினம்.. மக்கள் வெளியேறி எங்க போவது. அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்குமா..??! வெளியேற முடியும் என்றால் மக்கள் வெளியேறி இருப்பார்கள் தானே..??! மக்கள் வெளியேற முடியாத நிலையில்.. அதாவது புலிகள் தடுத்து அல்ல தாமாக மனம் வந்து பயம் காரணமாக வெளியேற முடியாத மக்களை வெளியேறி திறந்த சிறைகளில் முடங்கு என்பது மனிதாபிமான நடவடிக்கை அன்று. இதைப் புலம்பெயர்ந்த மக்கள் ஐநாவுக்கும் அமெரிக்க பிரித்தானிய பிரதிநிதிகளுக்கும் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

யுத்த இடைவெளி அவசியமில்லை. தமிழர்கள் சுதந்திரமாக என்றும் வாழ ஒரு தனித் தேசம் அமைத்துக் கொடுப்பதே தேவை. மக்களை வெளியேறக் கேட்பதைத் தவிர்த்து தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இருந்து சிங்களப் படைகளை யுத்தத்தை நிறுத்தி வெளியேறக் கேட்பதே தமிழ் மக்கள் அவர்களின் சொந்த வாழ்விடங்களில் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வகை செய்யும்.

ஐநாவின் இந்தக் கோரிக்கை ஏற்புடைய ஒன்றல்ல என்பதை தமிழ் மக்கள் உரத்துச் சொல்ல வேண்டும். ஐநா இந்த மக்களின் வெளியேற்றத்துப் பல்லவியை மாற்றி வெளியேறக் கூடிய இராணுவத்தை வெளியேற்ற கோர வைக்க வேண்டும். அதுவே எமது மக்களின் நிம்மதியான நீடித்த பாதுகாப்பான வாழ்க்கைக்கு உதவும். இந்த அடிப்படையை நாமே ஐநாவுக்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டும்.

காசாவில் இருந்து யுத்தத்தை நிறுத்திவிட்டு இஸ்ரேலை வெளியேறக் கேட்கும் ஐநா காசாவை விட்டு கமாஸை விட்டு பலஸ்தீன மக்கள் வெளியேறக் கேட்குமா..??! நிச்சயம் இல்லை. அது சாத்தியமற்றது.

ஐநா எமது விடயத்தில் புது அணுகுமுறையைக் கையாள நினைக்கிறது. அதற்கு நாம் அனுமதிப்பின் எமது நிலம் உரிமை மட்டும் பறிபோகமாட்டாது. இதையே ஐநாவும் அமெரிக்காவும் உலகம் பூரா செய்து இராணுவ ஆதிக்கங்களை நிறுவி மக்களை அங்கிருந்து விரட்டி அடிக்கும் பணியைச் செய்ய ஆரம்பித்துவிடும். இது அபாயகரமான ஒரு அணுகுமுறையாகும். இதை நாம் எதிர்க்க வேண்டும். இத்தனை இழப்புகளும் எமது மக்களை சிங்கள இனவெறி அரக்கனிடம் அடிமையாகக் கையளிக்க அல்ல நாம் சந்தித்திருக்கிறோம்.

இந்தப் போர் இடைவெளி 50,000 சிங்களப் படைகளை வெளியேற்ற அமைய வேண்டுமே தவிர 3 இலட்சம் மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் இருந்தல்ல. இதனை ஐநா தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். புலம்பெயர் மக்களும் இதனை தெளிவாக வலியுறுத்திக் கூற வேண்டும். இப்பவே இதனைச் செய்ய வேண்டும். இன்றேல் அமெரிக்காவும் பிரிட்டனும் ஐநாவும் எம்மை நிரந்தர அடிமைகளாக்க சிங்களவனுக்கு உதவுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையே தோன்றும். பிரிட்டன் ஏற்கனவே எமது தமிழ் இராட்சியங்களை சிங்கள இராட்சியங்களுடன் இணைத்து சிங்களவனிடம் கையளித்த கைங்கரியத்தை செய்ததாலே இன்று நாம் இவ்வளவு இழப்புக்களை சந்தித்து நிற்கிறோம் எமது மண்ணில் நாம் வாழும் உரிமையை மீட்க. மீண்டும் அப்படி ஒரு வரலாற்றுத் தவறு நிகழ நாம் அனுமதிக்கவே கூடாது. :mellow:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்சின் கருத்தே அனைத்துத் தமிழ் மக்களின் கருத்துமாகும்.தமிழர்கள் எங்கே வாழவேண்டும் என்பது தமிழர்கள் முடிவெடுக்க வேண்டிய விடயம்.தமிழர்களை தங்கள் பூர்வீக நிலங்களிலிருந்து வெளியேறுமாறு கேட்பது நியாயமற்ற செயல்.ஐ.நா இப்போது செய்ய வேண்டியது உடனடி யுத்த நிறுத்தத்திற்கு சிறிலங்கா அரசை வற்புறுத்றுவதாகும்.உலக நாடுகளின் உதவியில் போரை நடத்திக் கொண்டிருக்கும் சிறிலங்காவை வற்புறுத்துவதற்கு அந்த நாடுகளுக்கும் அதை பிரதிநிதுத்துவப்படுத்தும் அமைப்பான ஐ.நா விற்கும் உரிமை உண்டு.மறுத்தால் பொருளாதார தடை என்ற ஒற்றை ஆயுதத்தை கையில் எடுத்தாலே சிறிலங்கா வழிக்கு வரும். அதை விடுத்து இத்தனை அழிவுகளுக்குள்ளும் சொந்தப் பலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை அவர்கள் சம்மதத்தைக் கேட்காமல் வன்னியை விட்டு வெளியேறச் சொல்வது எந்தவித நியாயமுமற்றது.தமிழ்மக்கள் சர்வதேசத்திடம் தங்கள் தாங்கள் நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையைக் கேட்கிறார்களே ஒழிய தங்களை தங்கள் நிலத்தில் இருந்து வெளியேற்றுமாறு கேட்கவில்லை.மொத்தத்தில் அப்படையில் சிறிலங்காவின் கோரிக்கையும் ஐ.நாவின் கோரிக்கையும் ஒன்று தான் மக்களைப் புலிகளிடமிருந்து பிரிப்பது. மக்களே புலிகள்! புலிகளே மக்கள்! யாரை யாரிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறீர்கள்?

Edited by புலவர்

இந்த இழவை நேற்று தொலைக்காட்சியில் பார்த்தோம் ஐயா.

ஐ.நா சிறீ லங்காக்கு இன்னும் உசுப்பேத்தி விடுகிது மாதிரி இருக்கிது. சிறீ லங்கா அரசுதான் தமிழர்களின் காவலர்கள் எண்டுறமாதிரி கதை அளக்கப்படுகிது.

ஐ.நா அதிகாரிகளுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தது ஒரு முஸ்லீமாம். அவன் தமிழ் மக்கள் தமது நிலமையை சொன்னபோது ஐ.நா அதிகாரிகளுக்கு உண்மையை எல்லாம் மாத்தி சொன்னதாய் வேறு சொல்லுறீனம்.

சிறீ லங்கா அரசு மிகவும் திட்டமிட்ட வகையில பல்வேறு படிநிலைகளில தனது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு இருக்கிது எண்டுறதுக்கு இந்த பேச்சுக்கள் ஓர் சான்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.