Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு கடற்பரப்பில் புலிகளுடன் கடும் சமர்: அரசின் பொய் பிரசாரம் என புலிகள் அறிவிப்பு

Featured Replies

முல்லைத்தீவு மாத்தளன் பகுதியிலிருந்து 4 படகுகளில் சென்ற பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட கடற்படையினர் அதனை புலிகளுடனான சமர் என பொய் பிரசாரம் மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுதலை புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக புலிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நேற்று அதிகாலை வேளையில் மாத்தளன் பகுதியிலிருந்து பொதுமக்கள் 4 படகுகளில் பயணித்துக் கொண்டிருக்கையில் கடற்படையினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இவற்றில் இரு படகுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. இதில் பயணித்த பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் சடலங்களைக் கைப்பற்றிய கடற்படையினர் அதனை விடுதலைப்புலிகளின் சடலங்கள் என பொய்கூறி வருகின்றனர்.

பொதுமக்கள் மீது தாக்குதலை நடாத்திவிட்டு விடுதலைப் புலிகளுடன் கடும் சமர் இடம்பெற்றதாக அரச ஊடகங்களில் உண்மைக்கு மாறான பொய் தகவல்களை கடற்படைப் பேச்சாளர் வெளியிட்டுள்ளதாக விடுதலை புலிகள் தெரிவித்துள்ளார்கள்.

www.tamilwin.com

Edited by thamizhanpan

தேவையற்ற இணைப்பு

கடற்புலிகளை அழித்தாகியாச்சு எண்டு புருடா விட்டாங்கள் இப்ப 4 படகுகளை அழிச்சவயாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டெய்லி மிரர் செய்திகளை பார்ப்பதுடன் நிறுத்துக உடன் பிறப்பே

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக கிடைத்த தகவலின் படி டெய்லி மிரர் தாக்குதல் குழு எந்த வித இழப்புமில்லாமல் தளம் திரும்பியுள்ளதாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவுக்கடலில் பாரிய மோதல் இடம்பெற்றுள்ளதாக டெய்லிமிரர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

25 LTTE cadres and a navy sailor killed in sea battle - SLN

At least 25 LTTE cadres and a navy sailor were killed in a major sea battle off Mullaithivu seas, a navy spokesman said. Four LTTE boats were destroyed and three sailors sustained injuries, Navy claimed.

www.dailymirror.lk



இன்று: தி்ங்கட் கிழமை, மார்ச் 30, 2009

முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்சமர் எதுவும் நிகழவில்லை.

பிரசுரித்த திகதி : 30 Mar 2009

முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே சமர் எதுவும் நிகழவில்லை. மாறாக பொதுமக்கள் சென்ற மூன்று படகுகளை இலங்கை இராணுவம் தாக்கியழித்துள்ளது. இறந்தவர்களின் சடலங்கள் முல்லைத் தீவில் கரை ஒதுங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை(30.03.2009) புதுமத்தளான் பகுதியில் இருந்து 4 படகுகளில் பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகுள் சென்றுள்ளனர். அதிகாலை வேளையில் அவர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. சிலபடகுகள் கரைதிரும்பிய போதும் சுமார் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும் அதில் பயணித்த அனைவரும் இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களின் உடலங்கள் சில முல்லைத்தீவு கடற்கரையிலும், ஏனையவை இராணுவ கட்டுப்பாட்டு பகுதி கடற்கரையிலும் ஒதுங்கியுள்ள நிலையில், அவ் உடலங்களை கைப்பற்றிய இராணுவம், அவை புலிகளின் உடல்கள் என தெரிவித்திருப்பதுடன் கடலில் பெரும் சமர் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது, இதனை பல இணையத்தளங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

இன்றைய தினம் தாம் கடலில் எவ்வித மோதலிலும் ஈடுபடவில்லை என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

<< Back >>



http://www.athirvu.com/target_news.php?sub...amp;ucat=4&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.