Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் இருந்து வரும் இளம் ஆண், பெண்கள் படையினரால் பலர் முன்னிலையில் நிர்வாணமாக்கப்பட்டு சோதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இருந்து வரும் இளம் ஆண், பெண்கள் படையினரால் பலர் முன்னிலையில் நிர்வாணமாக்கப்பட்டு சோதனை

(2ம் இணைப்பு)

திகதி: 14.04.2009 // தமிழீழம் // [சங்கிலியன்]

சிறிலங்காவின் கொடூரமான இனப்படுகொலைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் வன்னிப் பகுதியில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகின்ற மக்கள் படையினரால் மிக மோசமான உடல் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

யாழ்ப்பாணம், வவுனியா பகுதிக்கு வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என இந்த அவலத்தை நேரில் கண்டுகொண்டுள்ள சர்வதேச தொண்டர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சோதனைச் சாவடிக்கு வருவதற்கு முன்னரே ஆடைகளைக் களைந்துவிட்டு விரிசையாக குறிப்பிட்ட இடைவெளி விட்டு நிர்வாணமாக சோதனைச் சாவடிக்கு வருமாறு பணிக்கப்படுவதால் மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்பாகப் பெண்கள் படையினரின் இந்நடவடிக்கையால் மிகுந்த மன வேதனைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இராணுவத்தினர் பார்த்துக்கொண்டிருக்க ஆண்களும், பெண்களும் இவ்வாறு செல்லவேண்டிய நிலை எற்பட்டுள்ளதாகவும், இவர்களை உடற் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு ஆண் படையினர் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நிர்வாணமக்கப்பட்டு வருபவர்களை படையினர் படப்பிடிப்பு செய்யும் அதேவேளை, அங்கு நிற்கும் படையினர் தங்கள் செல்பேசியில் படம் பிடித்து தமது நண்பர்களுடன் பரிமாறிக் கொள்வதாகவும் தெரியவருகின்றது.

சிறிலங்காப் படையினரின் இந்த அநாகரீகமானதும் சர்வதேச போரியல் விதிமுறைகளுக்கு எதிரானதுமான இந்தச் செயற்பாடுகளை பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புக்கள் வன்மையாக கண்டிதுள்ளன.

sankathi

கறுப்பி நாங்கள் நொந்து என்ன பயன் அவர்கள் காண்பிப்பதற்கு போனால் யார் என்ன செய்ய முடியும். உயிரை காப்பாற்ற மானத்தை இழப்பதற்கு அவர்கள் தயாராவிட்டதனால்தானே இந்த பிரச்சனை.

வெகுவிரைவில் இந்த படங்கள் இணையத்துக்கும் வந்துவிடும். :lol::lol::lol:

எப்பதான் உந்த 'மாற்றம்' வருமோ..................................... :lol:

கறுப்பி நாங்கள் நொந்து என்ன பயன் அவர்கள் காண்பிப்பதற்கு போனால் யார் என்ன செய்ய முடியும். உயிரை காப்பாற்ற மானத்தை இழப்பதற்கு அவர்கள் தயாராவிட்டதனால்தானே இந்த பிரச்சனை.

வெகுவிரைவில் இந்த படங்கள் இணையத்துக்கும் வந்துவிடும். :lol::lol::lol:

ஏன் நீங்கள் மட்டும் என்ன நம்பிக்கையில் போராடும் பிரதேசத்தினை விட்டு ஓடி வந்தனீர்கள்? நீங்கள் போராடும் பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரும் போது ஆமிக்காரன் கற்பூரத்தில் சத்தியம் செய்து தந்தவனா உங்களையும் நிர்வாணப் படுத்து பார்க்க மாட்டன் என்று? எது நடந்தாலும் பரவாயில்லை என்று தானே நாமெல்லோரும் இராணுவ பிரதேசம் வந்து விமானம் ஏறினாங்கள்?

உயிரைக் காப்பாற்றிக் கொண்டு நாம் ஓடி வரலாம், ஆனால் வன்னி மக்கள் மட்டும் போக கூடாதோ? இழப்பதற்கு எதுவுமே அற்று இராணுவத்திடம் சரணடையும் மக்களை குறை கூறுவதற்கு எமக்கு எந்த அருகதையும் இல்லை

நிழலி சொல்வதும் சரிதான். ஆனால் கறுப்பி தன் மன வேதனையை செய்தியாய் இணைத்துள்ளார். என்ன செய்ய எல்லாம் நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கின்றது.

கறுப்பி நாங்கள் நொந்து என்ன பயன் அவர்கள் காண்பிப்பதற்கு போனால் யார் என்ன செய்ய முடியும். உயிரை காப்பாற்ற மானத்தை இழப்பதற்கு அவர்கள் தயாராவிட்டதனால்தானே இந்த பிரச்சனை.

வெகுவிரைவில் இந்த படங்கள் இணையத்துக்கும் வந்துவிடும்.

இப்படி எல்லாம் எழுதுவது நல்லதில்லை. உங்கள் வசனங்கள் மிக மோசமானது. காண்பிப்பதற்கு அவர்கள் போகவில்லை. அப்படியாயின் யாழில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள ஆறுலட்சம் மக்கள் உயிரை காப்பாற்ற காண்பித்துக்கொண்டா உள்ளார்கள்? முக்காவாசி சனமும் இராணுவ ஆக்கிரமிப்பில் தான் உள்ளது. போதாக்குறைக்கு நாங்கள் உயிரை காப்பாற்ற ஓடிவந்தவர்கள். மானம் ஓனம் பற்றி எல்லாம் நாங்கள் சத்தம் போடுவது அழகில்லை. மனுசத்தனத்துடன் மக்களின் அவலங்கை அணுக முற்படுங்கள்.

http://www.tamilwin.com/view.php?2a36QVF4b...3g2hF2ccdHj0o0e

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

இந்த குழைந்தைகளுக்கு மானம் ஓனம் பற்றி எல்லாம் தெரியாது பசி மட்டும் தான் தெரியும். இதை முதல் புரிந்து கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநாகரீகமான செயலை எண்ணி நானே பொறுமிக்கொண்டு இருக்கிறேன்.

நிழலி சொல்வதும் சரிதான். ஆனால் கறுப்பி தன் மன வேதனையை செய்தியாய் இணைத்துள்ளார். என்ன செய்ய எல்லாம் நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கின்றது.

எனது பின்னூட்டல் கறுப்பிக்கு அல்ல

கறுப்பி அச்சாப் பிள்ளை.. அவா(ர்) இப்படியெல்லாம் கேவலமாக எழுத மாட்டா(ர்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி நாங்கள் நொந்து என்ன பயன் அவர்கள் காண்பிப்பதற்கு போனால் யார் என்ன செய்ய முடியும். உயிரை காப்பாற்ற மானத்தை இழப்பதற்கு அவர்கள் தயாராவிட்டதனால்தானே இந்த பிரச்சனை.

வெகுவிரைவில் இந்த படங்கள் இணையத்துக்கும் வந்துவிடும். :lol::lol::lol:

சுழல்கதிரையில் இருந்து இதை விட இன்னும் சிறப்பாக என்னால் எழுதமுடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது பின்னூட்டல் கறுப்பிக்கு அல்ல

கறுப்பி அச்சாப் பிள்ளை.. அவா(ர்) இப்படியெல்லாம் கேவலமாக எழுத மாட்டா(ர்)

குளிர்சாதனப்பெட்டிக்கில்ல இருக்கிற மாதிரி ஜீல்லுன்னு இருக்கு :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.