Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'பாதுகாப்பு வலய பகுதி' மீது அதிகாலை முதல் சிறிலங்கா படையினர் பாரிய தாக்குதல்

Featured Replies

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு என சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மீது முழு அளவிலான பாரிய தாக்குதல் நடவடிக்கையினை சிறிலங்கா படையினர் இன்று அதிகாலையிலேயே தொடங்கியிருக்கின்றனர்.

ஏற்கனவே இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் என அறிவித்துவிட்டு அக்காலப் பகுதியில் மக்கள் வதிவிடங்களை நோக்கி பாரியளவில் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்த சிறிலங்கா படையினர், இன்று புதன்கிழமை அதிகாலை முதல் தரை வழியாக பாரிய தாக்குதலினை மேற்கொண்டுள்ளனர்.

தரைவழித் தாக்குதலுக்கு வசதியாக பெருமளவு இராணுவ வாகனங்களும் ஆயுதங்களும் கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி நகர்த்தப்பட்டன.

இரண்டு நாள் தாக்குதல் நிறுத்தம் என்ற அறிவிப்பை இதற்கு வசதியாகவே சிறிலங்கா படையினர் பயன்படுத்தியிருந்தார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை மாத்தளன் தொடக்கம் வலைஞர்மடம் உள்ளடங்கலான பகுதிகளை நோக்கி மிகச் செறிவான எறிகணைத் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள், தாங்கிகளின் தாக்குதல்களுடன் மற்றும் கனரக துப்பாக்கித் தாக்குதல்களையும் சிறிலங்கா படையினர் நடத்தி வருகின்றனர்.

படையினரின் எறிகணைகள் மக்கள் வாழும் பகுதிகளில் மிகவும் செறிவாக வீழ்ந்து வருவதால் பொதுமக்கள் தரப்பில் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடிய பேரபாயம் உருவாகியிருப்பதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களின் விபரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னிச்சையாகத் தானே அறிவித்த புத்தாண்டுகாலப் போர் நிறுத்தம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று அதி காலைமுதல் அதி உச்ச தாக்குதலைப் பாதுகாப்பு வலயத்தினுள் பாவித்தவண்ணம் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சிறிலங்காப் படைகள் உள் நுழைய முனைவதாக வன்னியிலிருந்து சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் போராளிகள் மறைந்திருப்பதாக் கூறிக்கொண்டு நிராயுதபாணிகளான மக்கள் மீது போர் தொடுத்து மாபெரும் இன அழிப்பொன்றினை சிறிலங்கா அரசு முன்னெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இம்முன்னெடுப்பில் அப்பாவி மக்கள் பாரிய அழிவுக்குள்ளாகியுள்ளார்கள் எனக் கருதப்படுகிற போதும். அது குறித்த மேலதிக விபரங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

http://4tamilmedia.com/index.php/200904153...5-05-31-38.html

Edited by forlov

  • கருத்துக்கள உறவுகள்

பெருமூச்சும் , ஏக்கமும் தான் வருகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி

திகதி: 15.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்]

சிறிலங்கா பொது மக்களின் வாழ்விடம் மீது மேற்கொண்டுள்ள இன அழிப்புத் தாக்குதலில் இன்று காலை மட்டும் மூன்று மணி நேரம் மேற்கொள்ள்ப்பட்ட தாக்குதலில் 180 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் பெருமளவானவோர் படுகாயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

இரண்டு நாள் போர் நிறுத்தத்தை அறிவித்து தாக்குதலுக்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா தரப்பு இன்று காலை தொடக்கம் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது கடுமையான ஆட்டிலெறித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அத்துடன் மோட்டார் தாக்குதல்களும், ஆர்.பி.ஜி தாக்குதல்களும், எல்.எம்.ஜி, கலிபர் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்களை அழித்துக்கொண்டு இறுதியாக எஞ்சியிருக்கும் பகுதியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா தீவிரமாக இறங்கியுள்ளது. இன்று காலை 7.40 மணி தொடக்கம் 10.40 மணி வரை இடம்பெற்ற தாக்குதல்களில் 180 பொது மக்கள் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த பலர் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல் காரணமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்காவின் போலியான போர் நிறுத்த அறிவிப்பை உடனடியாக வரவேற்றிருந்த சர்வதேச நாடுகள், சிறிலங்காவின் இந்த இராணுவ நடவடிக்கை தொடர்பாக கருத்தெதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை. புலம்பெயர்ந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள தமிழ் மக்களின் எழுச்சி அந்தத்தந்த நாடுகளை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த எழுச்சியை தணிப்பதற்கு சிறிலங்காவிற்கு அழுத்தங்களைப் பிரயோகித்தபோதும், எஞ்சியிருக்கும் பகுதியையும் கைப்பற்றி அங்கிருக்கும் மக்களை அகற்றிவிட்டால் புலம்பெயர்ந்த மக்கள் போராட வேண்டிய நிலை ஏற்பாடாது என எதிர்பார்க்கும் சில சர்வதேச நாடுகள் சிறிலங்காவின் இந்த இறுதித் தாக்குதலுக்கு மௌனமாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன், போரை முடித்துவிட்டு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கப்போவதாக சிறிலங்கா அரசு கூறிவருகின்மையை இந்த நாடுகள் வரவேற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது படையினர் எறிகணை பீரங்கித் தாக்குதல் நூற்றுக்கணக்கானோர் பலி பலர் காயம் :

vannishellattack.png

முல்லைத்தீவில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது இலங்கைப் படையினர் இன்று எறிகணை, பீரங்கி, 40 எம்.எம்.கெனோன், 50 கலிபர் இயந்திர துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை 7.40 முதல் 10.40 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமை காணப்படுவதுடன் காயமடைந்த பலர் வீதிகளில் தனிமையில் கிடப்பதாகவும் கூறப்படுகிறது. இலங்கைப் படையினர், எறிகணை மற்றும் துப்பாக்கித் தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்தி வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்கால் மற்றும் பொக்கனைப் பகுதிகளில் மூன்று மணித்தியாலங்களில் சுமார் 180 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சேதவிபரங்கள் தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுமத்தாளன் வைத்தியசாலைக்கு அருகில் தமது நிலைகளில் இருந்து படையினர் மேற்கொள்ளும் துப்பாக்கிப் பிரயோகங்கள் காரணமாக காயமடைந்தவர்களை மருத்துமனைக்கு கொண்டு செல்வது தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவ பணியாளர்களால் வெள்ளைக் கொடிகளுடன் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட படுகாயமடைந்த பொதுமக்கள் பலர் வழியில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை வெள்ளைக் கொடியுடன் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற மருத்துவப் பணியாளர் ஒருவர் படையினரின் துப்பாக்கித் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார். அவரின் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து உழவு இயந்திரம் மூலம் வெள்ளைக் கொடியுடன் ஏற்றிச்செல்லப்பட்ட பொதுமக்கள் 9 பேர் படையினரின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். படையினரின் தாக்குதல்கள் காரணமாக காயமடைந்த பொதுமக்கள் பலர் உதவிகளின்றி வீதிகளில் வீழ்ந்து கிடப்பதாகவும் இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் குடில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். வளைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தங்கியிருந்த மக்களே இதில் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கைப் படையினர் பல முனைகளில் இருந்து எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். முள்ளியவளை, நெடுங்கேணி, ஒட்டுச்சுட்டான், புதுக்குடியிருப்பு, தேவிபுரம், மற்றும் சாளைப் பகுதியில் இருந்து படையினர் பாதுகாப்பு வலய பகுதி மீது கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை புதுமத்தாளன் வைத்தியசாலையில் இருந்து முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு செல்லும் வீதியை இலக்கு வைத்து 44 எம்.எம் கெனோன், மற்றும் 50 கலீபர் துப்பாக்கிகள் மூலம் படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு வலயப் பகுதிக்கு அருகில் உள்ள முன்னரங்கப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் கடும் மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், படையினர் பொதுமக்கள் மீது தமது தாக்குதல்களை திருப்பியுள்ளனர்.

இதனிடையே செவ்வாய்க் கிழமை முதல் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள மக்கள் உணவு எதுவும் உட்கொள்ளாத நிலையிலேயே இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. பட்டினியால் குழந்தைகள் வாடுவதாகவும் இதனை வார்த்தைகளால் கூறமுடியாது எனவும் கூறப்படுகிறது.

அதேவேளை புதுமத்தாளன் வைத்தியசாலைக்கு காயமடைந்த 38 பொதுமக்கள் அவர்களின் உறவினர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தனர். எடுத்துச் செல்லப்பட்டவர்களில் 12 பேர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக வைத்தியசாலை தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/tamil_news....=8423&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

(2ம் இணைப்பு)மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இன்று சிறிலங்கா உலங்குவானூர்தி- எறிகணை தாக்குதல்கள்: 219 தமிழர்கள் படுகொலை; 408 பேர் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை, வான், பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 219 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 408 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு வலயங்களான முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று புதன்கிழமை காலை தொடக்கம் இரவு வரை சிறிலங்கா படையினர் செறிவான எறிகணை, பல்குழல் வெடிகணை, வான், பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் முள்ளிவாய்க்கால் மக்கள் குடியிருப்பு பகுதி மீது இன்று முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளையில் மாத்தளன், வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால் பகுதியில் இன்று மாலை 6:00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி பீரங்கி, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்க பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களையும் சமநேரத்தில் படையினர் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல்களில் 172 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 326 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்றைய தாக்குதல்களில் 219 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 408 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டோரின் பெயர், விபரம்:

மருதமலை செவ்வானம் (வயது 05)

கனகையா பார்த்தீபா (வயது 10)

கதிரமலை மருதன் (வயது 11)

கருணை கோபிதாஸ் (வயது 13)

மூர்த்தி முகுந்தன் (வயது 14)

பேபிறோசா (வயது 34)

ரகுதாஸ் சுபோதினி (வயது 19)

மகாலிங்கம் கற்பகாதேவி (வயது 58)

பாலசுப்பிரமணியம் இலக்குமி (வயது 42)

மயில்வாகனம் புவனேஸ்வரி (வயது 53)

மகேந்திரன் தெய்வானை (வயது 50)

கறுப்பையா சத்தியகலா (வயது 24)

செல்வரட்ணம் கலாவதி (வயது 55)

செல்வராசா டயஸ்குமார் (வயது 20)

சிங்கராசா பிரதீபன் (வயது 27)

சிவகணேசமூர்த்தி பிரதீட்சா (வயது 02)

செல்வகதிர் பலோமினி (வயது 18)

சின்னராசா (வயது 70)

கனகரட்ணம் பானுமதி (வயது 38)

மயில்வாகனம் செபமாலை (வயது 58)

தங்கராசா பழனி (வயது 68)

பேச்சிமுத்து கண்ணாயி (வயது 48)

சோதரன் மருதமலை (வயது 45)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர், விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

Edited by kuddipaiyan26

ஒவ்வொரு நாளும் கொத்து கொத்தாக மக்களை அழித்தே ஒட்டு மொத்த மக்களையும் கொல்லப் போகின்றனர். தப்பித் தவறி மிஞ்சுகின்றவர்களும் அங்கவீனர்களாகவும் மனநிலை பாதிக்கப் பட்டவர்களாகவும் ஆகப்போகின்றனர்.

இறுதி யுத்தக் கனவில் நாமிருக்க, ஈற்றில் ஒட்டு மொத்த சிலுவையையும் சுமக்கின்றது வன்னி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.