Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை இனப்பிரச்சினை பேச்சு மூலம் தீராவிட்டால் "தனி ஈழ மாநிலம்" அமைய அதிமுக வலியுறுத்தும்: அதிமுக தேர்தல் அறிக்கை

Featured Replies

இலங்கை இனப்பிரச்சினை பேச்சு மூலம் தீராவிட்டால் "தனி ஈழ மாநிலம்" அமைய அதிமுக வலியுறுத்தும்: அதிமுக தேர்தல் அறிக்கை

இலங்கை இனப் பிரச்சினை பேச்சு மூலம் தீராவிட்டால் தனி ஈழ மாநிலம் அமைய அதிமுக வலியுறுத்தும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது

அஇஅதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இலங்கை பிரச்சினை சம்பந்தமான கோரிக்கைகள்:

இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுப்பதோடு மட்டுமல்லாமல், அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான படுகொலையை நிறுத்தவும் உடனடியாக கோரிக்கை வைக்கப்படும்.

பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கு சமமாக தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும்.

இந்த முயற்சி தோல்வி அடைந்தால், தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ ஏதுவாக, "தனி ஈழ மாநிலம்'' அமைக்க வலியுறுத்தப்படும்.

அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ்ப் பகுதிகளைப் புதுப்பிக்கவும், மேம்படுத்தவும் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ரூ.10,000 கோடி மானியம் வழங்கப்படும்.

கச்சதீவு சம்பந்தமாக இந்திய-இலங்கை உடன்பாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தென்னிந்தியாவில் உள்ள மீனவ சமுதாயத்தின் பிரச்சினைகளைப் போக்க ஏதுவாக இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீட்கத் தேவையான அனைத்தும் செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/

  • தொடங்கியவர்

கருணாவைத் தோலுரிக்கின்றார்கள்.

cartoonp.gif

Edited by Iraivan

  • தொடங்கியவர்

சேது ரத்து, நாடு முழுவதும் அன்னதானம், ஈழ மாநிலம்-அதிமுக தேர்தல் அறிக்கை

இலங்கையில் இனப்படுகொலையை நிறுத்தி, அமைதி திரும்ப பாடுபடுவோம். அது முடியாவிட்டால் தனி ஈழ மாநிலம் அமைய பாடுபடுவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 5 நாட்கள் பணிபுரிவோருக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான 25 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு வகைகள், 1 கிலோ சமையல் எண்ணெய், 5 லிட்டர் மண்ணெண்ணெய் கொண்ட தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை தீவுத் திடலில் நடந்த அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டார்.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்...

- பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கு சமமாக தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும்.

-இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்படவும், அப்பாவி தமிழ் மக்களின் இனப் படுகொலையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முயற்சி தோல்வி அடைந்தால் தனிஈழ மாநிலம் அமைக்க வலியுறுத்துவோம்.

- அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ் பகுதிகளை புதுப்பிக்கவும், மேம்படுத்தவும், இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

- தமிழ் உட்பட எட்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ள நாட்டின் அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அறிவிக்கவும், அத்துடன் நேரு அளித்துள்ள உறுதிப்படி, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை மாற்று மொழியாக ஆங்கிலம் நீடிக்கவும் வழி வகை செய்யத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டுவரும்படி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள அரசிடம் அ.தி.மு.க. வலியுறுத்தும்.

- மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.

- கற்பழித்தல் குற்றம் புரிபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

சேதுவை ரத்து செய்வோம்..

- இன்றைய திட்டத்தின்படி சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்காக பாறாங்கற்களால் அமைக்கப்பட்ட ராமர் பாலம் இடிக்கப்படும் நிலை உருவாகும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இப்போது திட்டமிட்டுள்ளபடி இந்தக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படுவதால், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு எந்தப் பொருளாதார ஆதாயமும் கிடைக்க வாய்ப்பே இல்லை. எனவே, இந்தத் திட்டத்தை அதிமுக ரத்து செய்யும்.

இதற்குப் பதில், தென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் இருந்து சென்னை அல்லது பெங்களூருக்கு சரக்குகளை கொண்டு செல்ல மாற்று வழிகளை அதிமுக கொண்டு வரும். மேலும், தூத்துக்குடி துறைமுகம் சரக்கு மாற்று துறைமுகமாக மேம்படுத்தப்படும்.

- மக்களிடம் அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படுத்தப்படும். மாத வருவாய் பெறும் அனைத்து பணியாளர்களுக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

- சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இடம் கொடுப்பவர்களுக்கு சந்தை விலையில் இழப்பீடு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

- அனைத்து முக்கிய நகரங்களையும் இணைக்கும் புல்லட் ரயில் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

- இன்னும் 5 ஆண்டுகளில் மின் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். காற்று, சூரிய சக்தி மற்றும் பிற மரபு சாரா மின் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

- தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளில் இருந்தும் பெறப்பட்ட அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.

- ஒளிவு மறைவற்ற, குடிமக்களின் உணர்வுகளை மதிக்கக் கூடிய, நேர்மையான, மதச் சார்பற்ற, ஆற்றல் மிக்க நிர்வாகத்தை இந்திய மக்களுக்குத் தர அதிமுக உறுதி அளிக்கிறது.

- மத்திய அரசின் நிதி நிர்வாகத்தில் ஓர் ஒழுங்கு முறையை அதிமுக திரும்ப உருவாக்கும்.

- கிரெடிட் கார்டு பயன்படுத்துவோரிடம் அநியாய வட்டி வசூலிக்கும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- ஓய்வூதிய நிதி நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைக்கப்படமாட்டாது. மேலும், ஓய்வூதிய நிதி பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.

- எந்தவித பயனுமின்றி வரி ஏய்ப்பு செய்வதற்காக வெளிநாடுகளில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குச் சொந்தமானப் பணத்தை (7.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் 75 லட்சம் கோடி ரூபாய்க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது) பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

- வரி ஏய்ப்பு செய்வோர், கள்ளச் சந்தைப் பேர்வழிகள், பதுக்கல்காரர்கள் மற்றும் யூக பேரத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

- ஏழைகளுக்கு சேவை செய்கிறோம் என்ற போர்வையில் துளிகூட அச்சம் இன்றி தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மீது, குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் இந்த அமைப்புகளின் மீது அதிமுக மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

- மத்திய அரசுப் பணிகள் மற்றும் பாதுகாப்புத் துறையில் தற்போது காலியாக உள்ள 6 லட்சம் இடங்கள் நிரப்பப்படும்.

- மத்திய அரசுப் பணிகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் 5 லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

- தபால் துறையில் பணிபுரியும் 3 லட்சம் மிகைத் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

- அடுத்த 5 ஆண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

- தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் புனரமைக்கப்பட்டு தேசிய ஊரக மேம்பாட்டுத் திட்டம் என மாற்றப்படும். இத்திட்டத்தின் கீழ் 75 சதவீதம் பொருளாகவும், 25 சதவீதம் பணமாகவும் வழங்கப்படும்.

- ஊரக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 5 நாட்கள் பணிபுரிவோருக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான 25 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு வகைகள், 1 கிலோ சமையல் எண்ணெய், 5 லிட்டர் மண்ணெண்ணெய் கொண்ட தொகுப்பு வழங்கப்படும்.

- வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்களின் பசியை போக்கும் வகையில், தினந்தோறும் அவர்களுக்கு உணவு அளிக்கும் வகையில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அன்னதானத் திட்டம் நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரம் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்படும். இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும்.

- சட்டத்தை தவறுதலாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், ஏராளமான பாதுகாப்புகள் அடங்கிய கடுமையான தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் இயற்றப்படும்.

- இந்தியாவில் தங்கியிருப்பதற்கான காலக்கெடு முடிந்த பிறகும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டினர் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்கள் கெளரவமாக வெளியேற்றப்படுவார்கள்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு மத்திய அரசில் தொங்கிட்டு இருப்பது இலங்கையில் ஈழம் தொங்கிட்டு இருக்க வேண்டும் போல நினைக்கிறாவோ ^_^:(

இலங்கை இனப் பிரச்சினை பேச்சு மூலம் தீராவிட்டால் தனி ஈழ மாநிலம் அமைய அதிமுக வலியுறுத்தும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது

ம்ம்ம் அப்பவும் தனிநாடு எண்டு சொல்வதற்கு மனசு இல்லை... இவ்வளவு நடந்தும் சிங்களவனோடு இருக்க சொல்கிறார்கள்...ஏன் இந்தியாவையும் பாகிஸ்தானையும் சேர்ந்திருக்க சொல்லலாமே.. காஷ்மீர் பிரச்சனையும் தீர்ந்து விடும்....

எல்லாம் தேர்தல் அறிக்கை தவிர.. தமிழ்மக்கள் மீது உள்ள அக்கறை இல்லை...பிரபாகரனால் மட்டுமே தமிழனை காப்பாற்ற முடியும்...அவருடைய காலத்தை தவற விட்டால் தமிழ் மக்களின் தமிழீழம்.. தனி மானிலம் எதுவும் வரப்போவதில்லை.. வரவும் விட மாட்டார்கள்..

யாருக்கும் விலை போகாத தலைவன். தன்மான தமிழன்.....தமிழீழ தலைவன் ...பிரபாகரன் மட்டுமே..

இலங்கை இனப்பிரச்சினை பேச்சு மூலம் தீராவிட்டால் "தனி ஈழ மாநிலம்" அமைய அதிமுக வலியுறுத்தும்: அதிமுக தேர்தல் அறிக்கை

இலங்கை இனப் பிரச்சினை பேச்சு மூலம் தீராவிட்டால் தனி ஈழ மாநிலம் அமைய அதிமுக வலியுறுத்தும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது

அஇஅதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இலங்கை பிரச்சினை சம்பந்தமான கோரிக்கைகள்:

இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுப்பதோடு மட்டுமல்லாமல், அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான படுகொலையை நிறுத்தவும் உடனடியாக கோரிக்கை வைக்கப்படும்.

பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கு சமமாக தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும்.

இந்த முயற்சி தோல்வி அடைந்தால், தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ ஏதுவாக, "தனி ஈழ மாநிலம்'' அமைக்க வலியுறுத்தப்படும்.

அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ்ப் பகுதிகளைப் புதுப்பிக்கவும், மேம்படுத்தவும் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ரூ.10,000 கோடி மானியம் வழங்கப்படும்.

கச்சதீவு சம்பந்தமாக இந்திய-இலங்கை உடன்பாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தென்னிந்தியாவில் உள்ள மீனவ சமுதாயத்தின் பிரச்சினைகளைப் போக்க ஏதுவாக இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீட்கத் தேவையான அனைத்தும் செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/

கலைஞரை சிக்கலில் மாட்டுவதற்காகவே தயாரிக்கப்பட்டதுபோலுள்ளது கலைஞர் இதற்கு பதிலாக என்ன சொல்லப்போகின்றார்?

  • தொடங்கியவர்

கலைஞர் ஒரு அடங்காப் பிடாரி கதை சொல்லுவார்.

நல்ல தேவையானதொரு மாற்றம்.. தமிழக மக்களுக்குதான் நண்றி சொல்ல வேண்டும்...

  • தொடங்கியவர்

இலங்கை இனப்படுகொலையை தடுக்க கோரிக்கை விடுப்போம்: அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை

இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க கோரிக்கை வைப்போம்'' என்று அ.தி.மு.க. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

* ஒளிவு மறைவற்ற, குடிமக்களின் உணர்வுகளை மதிக்கக் கூடிய, நேர்மையான, மதச் சார்பற்ற, ஆற்றல் மிக்க நிர்வாகத்தை இந்திய மக்களுக்குத் தர அ.தி.மு.க. உறுதி அளிக்கிறது.

* மத்திய அரசின் நிதி நிர்வாகத்தில் ஓர் ஒழுங்கு முறையை அ.தி.மு.க. திரும்ப உருவாக்கும்.

* மக்களிடம் அதிக பணப்புழக்கத்தை ஏற்படுத்த உறுதியளித்தல்.

* மாத வருவாய் பெறும் அனைத்துப் பணியாளர்களுக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு அளித்தல்.

* மற்ற பிரிவினருக்கு வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

* வரம்பு பயன் வரி மற்றும் வங்கி பண மாற்ற வரி ஆகியவை நீக்கப்படும்.

* சில்லறை வியாபாரம், கட்டுமானம் மற்றும் உயர் கல்வித் துறைகளில் நேரடி வெளிநாட்டு முதலீடு இருக்காது. காப்பீட்டுத் துறையில் தற்போதுள்ள நேரடி வெளிநாட்டு முதலீட்டு முறை தொடரும்.

* விவசாய விளை நிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படமாட்டாது.

* அனைத்து முக்கிய மாநகரங்களையும் இணைக்கும் புல்லட் ரெயில் திட்டத்தை சர்வதேச அளவிலான பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் வசதிகளுடன் அ.தி.மு.க. விரைவுபடுத்தும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் மின் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைத்தல். காற்று, சூரிய சக்தி மற்றும் பிற மரபு சாரா மின் திட்டங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

* கிரெடிட் கார்டு பயன்படுத்துவோரிடம் அநியாய வட்டி வசூலிக்கும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஓய்வூதிய நிதி நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைக்கப்படமாட்டாது. மேலும், ஓய்வூதிய நிதி பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.

* எந்தவித பயனுமின்றி வரி ஏய்ப்பு செய்வதற்காக வெளிநாடுகளில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குச் சொந்தமானப் பணத்தை (7.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் 75 லட்சம் கோடி ரூபாய்க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது) பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* வரி ஏய்ப்பு செய்வோர், கள்ளச் சந்தைப் பேர்வழிகள், பதுக்கல்காரர்கள் மற்றும் ழூக பேரத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* ஏழைகளுக்கு சேவை செய்கிறோம் என்ற போர்வையில் துளிகூட அச்சம் இன்றி தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மீது, குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் இந்த அமைப்புகளின் மீது அ.தி.மு.க. மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

* மத்திய அரசுப் பணிகள் மற்றும் பாதுகாப்புத் துறையில் தற்போது காலியாக உள்ள 6 லட்சம் இடங்கள் நிரப்பப்படும்.

* மத்திய அரசுப் பணிகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் 5 லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

* தபால் துறையில் பணிபுரியும் 3 லட்சம் மிகைத் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

* அடுத்த 5 ஆண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் புனரமைக்கப்பட்டு தேசிய ஊரக மேம்பாட்டுத் திட்டம் என மாற்றப்படும். இத்திட்டத்தின் கீழ் 75 சதவீதம் பொருளாகவும், 25 சதவீதம் பணமாகவும் வழங்கப்படும்.

* ஊரக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 5 நாட்கள் பணிபுரிவோருக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான 25 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு வகைகள், 1 கிலோ சமையல் எண்ணெய், 5 லிட்டர் மண்ணெண்ணெய் கொண்ட தொகுப்பு வழங்கப்படும்.

* வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்களின் பசியை போக்கும் வகையில், தினந்தோறும் அவர்களுக்கு உணவு அளிக்கும் வகையில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அன்னதானத் திட்டம் நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரம் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்படும். இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும்.

* சட்டத்தை தவறுதலாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், ஏராளமான பாதுகாப்புகள் அடங்கிய கடுமையான தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் இயற்றப்படும்.

இந்தியாவில் தங்கியிருப்பதற்கான காலக்கெடு முடிந்த பிறகும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டினர் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்கள் கவுரவமாக வெளியேற்றப்படுவார்கள்.

* நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நீடித்து வரும் ராமர் கோயில் பிரச்சினைக்கு, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண அ.தி.மு.க. முனையும். இந்தப் பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடைய நேரிட்டால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இறுதி முடிவாக ஏற்றுக்கொண்டு அதன்படி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.

* இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுப்பதோடு மட்டுமல்லாமல், அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலையை நிறுத்தவும் அ.தி.மு.க. உடனடியாக கோரிக்கை விடுக்கும்.

* பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கு சமமாக தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும்.

* இந்த முயற்சி தோல்வி அடைந்தால், தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ ஏதுவாக தனி ஈழ மாநிலம் அமைக்க அ.தி.மு.க. வலியுறுத்தும்.

* அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ் பகுதிகளை புதுப்பிக்கவும், மேம்படுத்தவும், இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

* தமிழ் உட்பட எட்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ள நாட்டின் அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அறிவிக்கவும், அத்துடன் நேரு அளித்துள்ள உறுதிப்படி, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை மாற்று மொழியாக ஆங்கிலம் நீடிக்கவும் வழி வகை செய்யத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டுவரும்படி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள அரசிடம் அ.தி.மு.க. வலியுறுத்தும்.

* மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.

* கற்பழித்தல் குற்றம் புரிபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

* இன்றைய திட்டத்தின்படி சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்காக பாறாங்கற்களால் அமைக்கப்பட்ட ராமர் பாலம் இடிக்கப்படும் நிலை உருவாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால், இப்போது திட்டமிட்டுள்ளபடி இந்தக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படுவதால், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு எந்தப் பொருளாதார ஆதாயமும் கிடைக்க வாய்ப்பே இல்லை. எனவே, இந்தத் திட்டத்தை அ.தி.மு.க. ரத்து செய்யும். இதற்குப் பதில், தென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் இருந்து சென்னை அல்லது பெங்களூருக்கு சரக்குகளை கொண்டு செல்ல மாற்று வழிகளை அ.தி.மு.க. கொண்டு வரும். மேலும், தூத்துக்குடி துறைமுகம் சரக்கு மாற்று துறைமுகமாக மேம்படுத்தப்படும்.

http://www.nakkheeran.in/

  • தொடங்கியவர்

இலங்கையில் போரை நிறுத்த அ.தி.மு.க. கூட்டணி வழிவகுக்கும் : ராமதாஸ்

இலங்கையில் போரை நிறுத்தி, அங்கு வாழும் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க அ.தி.மு.க. கூட்டணி வழிவகை செய்யும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், "40 தொகுதியிலேயும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று சொன்னேன். இன்றைக்கும் சொல்கிறேன், தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணும் போது 40 தொகுதிகளிலேயும் இந்தக் கூட்டணி வெற்றி பெறும்.

இன்று எங்கு பார்த்தாலும் மக்கள் சக்தி அன்பு சகோதரி பக்கமே இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிரான அலை இப்போது வீசத் தொடங்கி இருக்கிறது. அது பெரும் புயலாக வீசப் போகிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இன்னும் 2 ஆண்டு காலம் இந்த ஆட்சி நீடிக்கவிட்டால் பீகார் போன்ற மாநிலமாக மாறிவிடும்.

நிச்சயம் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அப்போது, கூட்டணியில் அங்கம்பெறுகின்ற நாங்கள் அனைவரும் இலங்கை பிரச்னையை தலையாய பிரச்னையாக எடுத்துக்கொண்டு, இலங்கையில் தினம் தினம் செத்து மடிகின்ற தமிழர்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்வோம். போரை நிறுத்தி அவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க நாம் வழிசெய்வோம்," என்றார் ராமதாஸ்.

இக்கூட்டத்தில் வைகோ பேசுகையில், "இனிமேல் இந்தியாவில் எந்த கட்சியும் ஏகபோகம் கொண்டாட முடியாது. இனிமேல் இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சி என்பதே கிடையாது. மாநில கட்சிகள் இந்தியாவின் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் கட்டம் வந்துவிட்டது. நாடாமன்றத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? என்பதை அ.தி.மு.க. தீர்மானிக்கும்.

இலங்கையில் தமிழக மக்கள் தினமும் கொன்றுகுவிப்பதற்கு யார் காரணம்? நேற்றும் நேற்று முன்தினமும் போர் நிறுத்தம் என்று ராஜபக்சே மக்களை ஏமாற்றினார். இலங்கையில் உள்ள தமிழர்களை கொல்லும்படி ஆயுதம் கொடுத்தது இந்திய அரசு, வட்டியில்லா கடன் கொடுத்தது இந்திய அரசு இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை மத்திய அரசு குப்பை தொட்டியில் தூக்கி வீசிவிட்டது. இந்த நிமிடம் வரை மத்திய அரசு இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் செய்யும்படி சொல்லவில்லை.

திருமங்கலம் இடைதேர்தலில் பயன்படுத்தியது போல் ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் 4 ஆயிரம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள் இது நடக்காது.

அவர்கள் கொடுக்க நினைப்பது பணம் விழுவது தமிழர்களின் பிணம். பணமா? அல்லது தமிழர்களின் பிணமா? என்பதை தீர்மானிக்கவேண்டியது தமிழக மக்கள் ஆவார்கள். ஒரு தொகுதியில் கூட தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு டெப்பாசிட் கிடைக்க கூடாது.

காங்கிரஸ் இனி ஒருபோதும் டெல்லியில் ஆட்சிக்கு வரப்போவது இல்லை. இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்யலாம் என்ற எண்ணம் இனி எவருக்கும் வரக்கூடாது. எனவே அதிமுக கூட்டணியை வெற்றிபெற செய்யுங்கள்," என்றார் வைகோ.

http://www.vikatan.com/

மீண்டும் இந்த அரசியல்வாதிகளை நம்புகின்றோமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.