Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடனடியாக சண்டையை நிறுத்துங்கள்: இரு தரப்பினருக்கும் அமெரிக்கா மீண்டும் கோரிக்கை: வெள்ளை மாளிகை அறிக்கை

Featured Replies

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2009, 07:50.38 AM GMT +05:30 ]

இலங்கையில் நடைபெற்றுவரும் சண்டையால் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் கவலையளிக்கிறது என்று கூறியுள்ள அமெரிக்க அரசு, சிறிலங்க அரசும், விடுதலைப் புலிகளும் உடனடியாக சண்டையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பொறுப்பேற்றதன் பின்னர் இலங்கைப் பிரச்சனையில் வெள்ளை மாளிகை இன்று முதல் முறையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இலங்கை இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வ காண சிறிலங்க அரசு முற்பட்டால் அது இலங்கையின் ஒற்றுமைக்கே ஆபத்தாக முடியும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது.

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பொறுப்பேற்றதன் பின்னர் இலங்கைப் பிரச்சனையில் வெள்ளை மாளிகை இன்று முதல் முறையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“சிறிலங்கா அரசிற்கும் தமிழ் புலிகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் போரினால் அப்பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் அனுபவித்துவரும் துயரம் அமெரிக்காவை மிகவும் கவலை கொள்ளச் செய்துள்ளது. அங்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இரு தரப்பினரும் உடனடியாக சண்டையை நிறுத்தி அங்கு சிக்கியுள்ள அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ள வெள்ளை மாளிகை அறிக்கை, மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும், போர் பகுதியி்ல் இருந்து வெளியேறியுள்ள மக்களுக்கு உதவிட சர்வதேச குழுக்களையும், ஊடகங்களையும் அனுமதிக்குமாறும் சிறிலங்கா அரசை கோரியுள்ளது.

போர் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை அனுப்புவது தொடர்பாக சர்வதேச கூட்டாளிகளுடன் அமெரிக்கா ஆலோசித்து வருவதாக கூறியுள்ள வெள்ளை மாளிகை அறிக்கை, இராணுவ நடவடிக்கை மூலம் இனப் பிரச்சனைக்குத் தீ்ர்வு காண்பது இலங்கையின் ஒற்றுமைக்கு ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.

“இலங்கை இனப் பிரச்சனையை இராணுவ நடவடிக்கையின் மூலம் முடித்துவிட முனைவது தற்பொழுது தொடரும் இந்த துயரத்தை மேலும் சிக்கலாக்கிவிடும் என்பது மட்டுமின்றி, அது இரண்டு இனங்களுக்கும் இடையே மேலும் பகைமையை வளர்த்துவிடும். அதன் பிறகு பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதற்கான வாய்ப்பிற்கும், இலங்கையின் ஒற்றுமைக்கும் அது முடிவு கட்டிவிடும்” என்று அறிக்கையில் கூறியுள்ளது.

சிறிலங்க அரசும் விடுதலைப் புலிகளும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்குட்பட்டு நிற்கவேண்டு்ம் என்றும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள் தங்களுக்கு மிகுந்த கவலையளிக்கிறது என்றும், அதனை அமெரிக்கா மிக கடுமையாக எடுத்துக் கொள்ளும் என்றும் எச்சரித்துள்ளது.

http://www.tamilwin.com/view.php?2a26QVj4b...4g2h92ccblj0Q2e

ஈழவிவகாரம்:இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கை பிரச்சனை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகை முதன் முதலாக இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

’’இலங்கை வடக்குப் பகுதியில் நடத்தப்பட்டு வரும் போரை சிங்கள அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் அது இலங்கை ஒற்றுமைக்கு பெரும் இடையூறாக அமையும்.

எனவே சிங்கள அரசு இதில் கவனமுடன் செயல்பட வேண்டும். இலங்கை வடக்கில் இரு தரப்பினரும் மனித உரிமை மீறல்களை செய்கின்றனர்.

இதே நிலை நீடித்தால் அவலம் அதிகரிக்கும். இது இலங்கை அரசின் மறு சீரமைப்பு பணிகளுக்கு முட்டுக்கட்டையாகிவிடும். எனவே இரு தரப்பினரும் சண்டை போடுவதை கைவிட்டு விட்டு மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல உதவ வேண்டும்.

மக்கள் பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் சர்வதேச உதவிக்குழுக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போர் நிறுத்தத்துக்கு இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதாகவும்’’ அமெரிக்கா கூறி உள்ளது.

nakheeran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் நிறுத்தத்துக்கு இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதாகவும்’’ அமெரிக்கா கூறி உள்ளது.

இலங்கையை போரைநிறுத்த சொல்லிப்பலனில்லை இந்தியாவையல்லவா கேட்கவேண்டும் அதைவிட்டு சிறிலங்காவைகேட்டு என்ன பிரியோசனம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே எல்லோரும் சொல்லி கொண்டிருந்தா .............புதை குழிக்கு கஞ்சி ஊத்தும் நிலை தான் வரும் .....

..மந்தி எதாவது சொல்லி அடித்து கொண்டே இருக்கிறான்......தடுப்பார் யாருமிலையா? உலகத்தயே ஏமாத்துறான்.ஐ நா வும்

......ஏ மாந்து..... கொண்டே இருக்குது ........காலம ஆக ஆக .......புதைகுழிகள் தான் மிஞ்சும் ....

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே எல்லோரும் சொல்லி கொண்டிருந்தா .............புதை குழிக்கு கஞ்சி ஊத்தும் நிலை தான் வரும் .....

..மந்தி எதாவது சொல்லி அடித்து கொண்டே இருக்கிறான்......தடுப்பார் யாருமிலையா? உலகத்தயே ஏமாத்துறான்.ஐ நா வும்

......ஏ மாந்து..... கொண்டே இருக்குது ........காலம ஆக ஆக .......புதைகுழிகள் தான் மிஞ்சும் ....

ஐ.நா. அல்லது வேறு நாடுகள் ஒரு போரை பலத்தை பயன்படுத்தி நிறுத்த படையை அனுப்ப வேண்டும். படையை அனுப்ப பெருமளவில் செலவாகும். இந்த செலவால் என்ன நன்மை தமக்கு கிடைக்கும் என்று பார்த்துத்தான் எந்த ஒரு நாடும் செலவு செய்யும். ஐ.நா. செலவு செய்வதற்கு பாதுகாப்பு சபையில் உள்ள நாடுகள் தமக்கு என்ன நன்மை என்று பார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் தமிழர்களுக்கு தமிழர்கள் தான் தஞ்சம். :lol:

ஐ.நா. அல்லது வேறு நாடுகள் ஒரு போரை பலத்தை பயன்படுத்தி நிறுத்த படையை அனுப்ப வேண்டும். படையை அனுப்ப பெருமளவில் செலவாகும். இந்த செலவால் என்ன நன்மை தமக்கு கிடைக்கும் என்று பார்த்துத்தான் எந்த ஒரு நாடும் செலவு செய்யும். ஐ.நா. செலவு செய்வதற்கு பாதுகாப்பு சபையில் உள்ள நாடுகள் தமக்கு என்ன நன்மை என்று பார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இதுதான் அய்யா யதார்த்தம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.