Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடத்தப்பட்ட சிறுமி உருக்குலைந்த நிலையில் உடலமாக மீட்பு: மட்டக்களப்பில் அதிர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் :

மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 28ம் திகதி பாடசாலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சத்தீஸ்குமார் தினுஷிகா ( வயது 8 ) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கள்ளியங்காடு பாரதி வீதியில் அமைந்துள்ள வளவிலுள்ள பாழடைந்த கிணற்றொன்றில் இருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news....=9077&cat=1

அந்த சின்னஞ் சிறுமி என்ன பாவம் செய்தது? ஐயோ...அதன் அப்பா இரு வருடங்களின் முன் காணாமல் போனார்...இன்று மகள்.... இந்த அநியாயத்தின் கணக்குகளை யார் தீர்த்து வைப்பார்?

மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 28ம் திகதி பாடசாலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சத்தீஸ்குமார் தினுஷிகா ( வயது 8 ) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கள்ளியங்காடு பாரதி வீதியில் அமைந்துள்ள வளவிலுள்ள பாழடைந்த கிணற்றொன்றில் இருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

GTN

மட்டக்களப்பு மாணவர் அமைப்புக்கள் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் என்ன செய்கின்றார்கள் என்று ??

இன்று அமைதிகாத்தார்கள் என்றால் நாளை அவர்களுக்கு ??? அவர்களுடைய பிள்ளைகளுக்கு

அப்பா உங்களை பார்க்க வந்திருக்கின்றார் என்று சொல்லித்ததான் குழந்தையை அழைத்து சென்றிருக்கின்றார்கள்

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கிழக்கின் விடிவெள்ளி :unsure::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கின் உதயம் இதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு வயது சிறுமியை கொல்வதற்கு , இதயம் இல்லாத மனிதர்களா ? :unsure:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வார தொடக்கத்தில் மர்மமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 3 பாடசாலை மாணவர்களில் ஒருவரான 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழம காலை உடலமாக மீட்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பில் பெரும் பதற்றமும் அச்சமும் தோன்றியிருக்கின்றது.

கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தின் 3 ஆம் தர மாணவி சதீஷ்குமார் தினுஷிகா (வயது 9) கடந்த செவ்வாய்கிழமை காணாமல் போயிருந்தார்.

கடந்த செவ்வாய்கிழமை பாடசாலைக்குச் சென்ற இந்தச் சிறுமியை பாடசாலை முடிவடைந்தபோது அடையாளம் தெரியாத யாரோ வந்து அழைத்துச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

உயர்கல்வி ஆசிரியரான இந்தச் சிறுமியின் தந்தை சதீஷ்குமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆயுதக்குழு ஒன்றினால் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போய்விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சிறுமியும் காணாமல் போயிருப்பதால் அதிர்ச்சியடைந்திருந்த குடும்பத்தினர் அவர் கடந்த நான்கு நாட்களாகத் தேடிவந்தனர். காவல்துறைக்கும் இது தொடர்பாகத் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலயில் மட்டக்களப்பு நகரில் உள்ள பாரதி வீதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் இவரது உடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை கிடைத்த தகவல் ஒன்றையடுத்தே காவல்துறையினர் உடலத்தை மீட்டுள்ளனர். நீதவான் விசாரணைகளும் அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டது.

பிரேத பரிசோனைக்கு உத்தரவிட்டுள்ள நீதவான், விசாரணைகள் தொடங்குமாறு காவல்துறையினரையும் பணித்துள்ளார்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி தினுஷிக்கா சடலமாக மீட்பு

New post Posted: Sat May 02, 2009 9:08 am

மட்டக்களப்பு நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை மர்மமான காணாமல் போலிருந்த கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா (வயது 8) இன்று காலை கிணறு ஒன்றிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை சென்றிருந்த போது மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார். இன்று காலை கல்வியங்காடு சேமக்காலைக்கருகில் உள்ள வளவு ஒன்றிலிருந்த கிணறு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்..

சடலம் இவரது தாயாரால்; அடையாளம் காணப்பட்டு தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவரது தந்தை எஸ். சதீஸ்குமார் (உடற்கல்வி ஆசிரியர்) 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இனந்தெரியாதோரால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல போயிருந்தார். இதே பாணியில் கடந்த மார்ச் 18ஆம் திகதி திருகோணமலை சென் மேரிஸ் வித்தியாலய முதலாந்தர மாணவி ஜூட் வர்ஷா காணாமல் போய் பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

paristamil.com

எட்டு வயது சிறுமியை கொல்ல உதுகளுக்கு எல்லாம் எப்படி மனசு வருகுதோ தெரிய வில்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரச கட்டுப்பாட்டு பகுதியான மட்டக்களப்பில் நடக்கும் கடத்தி படுகொலை செய்தல்களையும் எம் புலம்பெயர் போராட்டங்களில் எடுத்து சொல்லவேண்டும்,அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு மக்களை வா என்று அழைக்கும் அரசு ஏற்கனவே அரச கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள தமிழ் மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதை உலகுக்கு சொலவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.