Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ - சோனியா மீண்டும் நட்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது செல்வி ஜெயலலிதா ஒவ்வொரு மேடையிலும் மறக்காமல் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லி ஓட்டு கேட்டார் அது என்ன தெரியுமா? தன் கணவரை கொன்ற கட்சியினருடன் சோனியா கூட்டு வைத்து இருக்கிறார் அதனால் அவர் பதிபக்தி இல்லாதவர் என்று மேடைதோறும் முழங்கி வந்தார். தி.மு.க. புலி ஆதரவு கட்சி என்பது ஜெயலலிதாவின் டிரேட் மார்க் பிரச்சாரம் என்பது உலகப் பிரசித்தி. இதை எல்லாம் அடித்தட்டு மக்கள் வேண்டுமானால் மறந்து போய் இருக்கலாம் அவர்களுக்கு அன்றாடப் பிரச்சினைகளே ஆயிரம் இருக்கிறது ஆனால் டைம் பாஸுக்காக இணையத்தில் உலவிக் கொண்டு ஈமெயில்களை பார்வேர்டு செய்து கொண்டு இருக்கும் படித்த பாமரர்கள் மறந்துவிட்டிருக்க முடியாது. இன்று கூட்டத்தில் கலக்கவில்லை என்றால் நாளை கும்மிக்கு ஆள் இருக்காதே என்ற கவலை அவர்களுக்கு

இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த "பதிபக்தி" மேட்டரை கண்டு கொள்ளாதது மட்டுமல்லாமல் மேடைதோறும் கலைஞரை காய்ச்சி எடுக்கும் ஜெயலலிதா மறந்தும் கூட சோனியா பற்றி வாயே திறக்கவில்லை. இந்த தேர்தல் சூடு பிடிக்கும் முன்னரே காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சி செய்தவர் ஜெயலலிதா. காங்கிரஸில் உள்ள சில கோஷ்டிகளும் இதை தான் விரும்பின. ஆனால் காங்கிரஸ் மேலிடம் ஏற்கனவே கலைஞர் கூட்டணியில் இருப்பதால் அதை கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்சமயம் அ.தி.மு.க.வுக்கு சாதகமான சில நடவடிக்கைகளை செய்து வருகிறது. ராகுல் காந்தியின் பேச்சும் இதை உறுதி செய்கிறது. ஜெயலலிதா தரப்பில் இருந்தும் இதற்கு மறுப்பு இன்னும் வரவில்லை

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி போல் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்று ஒன்றும் இருக்கிறது அந்த கூட்டணி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணியாக கூட இருக்கலாம் அதனால் எவனோ ஒருவன் தன் சுயநலனுக்காக கொளுத்திப் போட்டான் என்பதற்காக செம்மறி ஆட்டு கூட்டம் போல் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்கும் படித்த பாமரர்களை நினைத்தால் நகைப்பாக இருக்கிறது

http://kalaignarkarunanidhi.blogspot.com/2...og-post_08.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆக்கத்தைப் படிக்கும்போதுதான் நகைப்பாக இருக்கிறது. :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆக்கத்தைப் படிக்கும்போதுதான் நகைப்பாக இருக்கிறது. :icon_idea:

டங்குவார் எதையுமே பொறுத்திருந்துதான் பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

சோனியாவுக்கும் ஜெயாவுக்கும் தனிப்பட்ட பிரச்னை உள்ளது.

ஆனால் காங்கிரசிற்கும் ஜெயிற்கும் இடையெ பூசல் எதுவுமேயில்லை.

அதைவிட ராகுலிற்கும் ஜெயிற்குமிடையே நிறைய நட்பு உண்டு.

ராகுலின் குழந்தைப்பிராயத்திலிருந்தே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய மக்களும் ,தமிழ் நாட்டு மக்களும் தேர்தல் காலத்தில் செம்மறியாடுகள் போலத்தான் இருக்கிறார்கள்.

இலங்கை வாழ் தமிழர்களுக்கு அதில் கதைபதற்கு ஒன்றும் இல்லை.

இலங்கை பிரச்சினை பற்றி அதிகம் அலசலாம். எம்மை தேர்தல் பரப்புரைக்கு எடுத்தவர்கள் அரசியல் கற்றுக்குட்டிகள் தான்.

த. நாட்டில் வரவிருக்கும் ஆட்சி தி.மு.க அல்லது அ தி மு க.

தி மு க ஆட்சியில் உள்ளது. அவர்களால் ஏதும் செய்ய முடியுமாக இருந்தால் செய்திருப்பார்கள். அவர்களால் முடியாது. 500 கோடி ரசீதுடன் மலையாளி நாராயணன் திரிகிறார்.

தற்போது இலங்கையில் உள்ள நெருக்கடி போல், அம்மணி ஆட்சியில் இருக்கும் போது இல்லை. ஆகவே கருணா நிதியால் முடியாதென்பதுதான் உண்மை.

எனவே பந்து மற்றய பக்கம் தான். அவ செய்வாவோ இல்லையோ தெரியாது.

இலங்கை பிரச்சினை மாதிரி த நாட்டு பிரச்சினையையும் அவரால் தீர்க்க முடியாது.

முடிவு அம்மணி க்கு வெற்றியை கொடுத்த கரு நானிதி வாழ்க

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் எதையுமே பொறுத்திருந்துதான் பார்க்கலாம்

சேகுவாரா,

பிரச்சினை என்னவென்றால், பராக் ஒபாமா தமிழகத்தில் போட்டியிட்டால் அவரது கட்சியைத் தேர்வு செய்யலாம். ஆனால் இருப்பதோ இரண்டே இரண்டு தேர்வுகள். திமுக அல்லது அதிமுக. பிஜேபி மற்றும் தேமுதிகவுக்கு தனிப்பட வெல்லும் செல்வாக்கு இல்லை.

இப்போது இருக்கும் இந்த இரண்டு தேர்வுகளில், திமுக ‍காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது என்பது எப்போதோ முடிவான‌ ஒன்று. ஆக இருப்பது அதிமுக கூட்டணி மட்டுமே. அதிமுக கூட்டணியும் பின்னாளில் காலை வாரலாம். ஆனால் இன்றுள்ள நிலையை வைத்துத்தான் ஒரு முடிவுக்கு வரமுடியுமே தவிர, பழைய கதைகளை வைத்துக்கொண்டு இவர் இப்படி மாறலாம் அப்படி மாறலாம் என்று விவாதிப்பது அர்த்தமற்றது.

இவர் யாரோ கலைஞரின் அபிமானி ஜெயலலிதாவின் முன்னைய நடவடிக்கைகளை வைத்து எழுதியிருக்கிறார். ஆனால் அதுவே கொலைக்குத் துணை போன கலைஞரை மீண்டும் தேர்வு செய்யப் போதுமானதா? இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.

ஜெயலலிதாவின் மேடைப் பேச்சுக்களைக் கேட்கம்போது, ஒரேவிடயம் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டாலும் சொல்லப்படாத ஒரு விடயம் உண்டு. தமிழீழம் அமைக்க இந்தியப் படைகளை அனுப்பிவைப்பேன் என்று கூறுகிறாரே ஒழிய விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான எக் கருத்துக்களையும் கூறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா கச்சியேகம்பா

அதுதான் ஜெயின் தந்திரம். தேர்தலின் முன் தமிழீழம். பின்னர் வி.புலிகள் தடை தொடரும்.

புலிகள் இருப்பதால் தமிழீழத்தை அடையமுடியவில்லை.தேர்தலுக்கு

ஜெ - சோனியா மீண்டும் நட்பு?

ஜெயலலிதாவின் இந்த ஈழ ஆதரவு பேச்சினால் வாக்குகள் திசைமாறிவிடுமோ என்ற நோக்கத்தில் இப்படியான கருத்துகள் இப்போது பரப்பபட்டு வருகிறதோ?

ஜெயலலிதாவின் மேடைப் பேச்சுக்களைக் கேட்கம்போது, ஒரேவிடயம் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டாலும் சொல்லப்படாத ஒரு விடயம் உண்டு. தமிழீழம் அமைக்க இந்தியப் படைகளை அனுப்பிவைப்பேன் என்று கூறுகிறாரே ஒழிய விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான எக் கருத்துக்களையும் கூறவில்லை.

சீமானை உள்ள போட்டது மறந்திட்டுதா? ஜெயலலிதா இப்ப புலிகள் பற்றி வாயை திறந்தா அதை சாக்காக வைத்து அம்மாவை களி தின்ன வைக்க ஒரு கூட்டம் ரெடியாக இருக்கு.. :icon_idea:

Edited by வசி_சுதா

ஜெயலலிதாவின் மேடைப் பேச்சுக்களைக் கேட்கம்போது, ஒரேவிடயம் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டாலும் சொல்லப்படாத ஒரு விடயம் உண்டு. தமிழீழம் அமைக்க இந்தியப் படைகளை அனுப்பிவைப்பேன் என்று கூறுகிறாரே ஒழிய விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான எக் கருத்துக்களையும் கூறவில்லை.

மகளீர் அணியில் சேர்ந்து புல்டோசர் படைபிரிவை அறிமுகப்படுத்துவேன் எண்டு சொன்னக்கூட ஆச்சரியபடமுடியாது....

நாடு இருக்கும் நிலையில்... எமக்குத்தேவை, கோங்கிரஸ் வெல்லக்கூடாது... இதில்தான் பிரச்சாரம் குறியாயிருக்கோனும்....

(அ).தி.மு.கவும்.... மண்ணாங்கட்டியும்....

Edited by Panangkai

நாடு இருக்கும் நிலையில்... எமக்குத்தேவை, கோங்கிரஸ் வெல்லக்கூடாது... இதில்தான் பிரச்சாரம் குறியாயிருக்கோனும்....

உண்மை!!!

காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வெற்றிபெற்றால் (அதற்கு வாய்ப்பே இல்லை) பயங்கர வாதத்திற்கு எதிரான போரிற்கு தமிழக மக்களே அங்கீகாரம் அளித்து விட்டதாக சிங்கள இனவெறி அரசு சர்வேதேசத்தில் பிரச்சாரத்தை முன்னெடுத்து, தனது தமிழ் இனப்படுகொலையை காங்கிரசின் ஆசீர்வாதத்துடன் தங்கு தடை இன்றி நிறைவேற்றி முடிக்கும்!

அத்தோடு தமிழீழமே இறுதித்தீர்வு என்று பகிரங்கமாக அறிவித்து செல்வி.ஜெயலலிதா தமிழக மக்களிடம் வாக்கு கேட்பதால், இந்த தேர்தல் முடிவை சிங்கள இனவாத அரசும் சர்வதேசமும் மிக உன்னிப்பாக அவதானித்து கொண்டுள்ளது.

கிட்டத்தட்ட 7 கோடி தமிழர்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் அந்த மக்களின் அபிலாசைகளுக்கு எதிரான ஒரு போரில் பிராந்திய சிறுபான்மை இனமான சிங்களம் தற்போதைக்கு இராணுவ ரீதியாக வெற்றிபெற்றாலும் கூட நீண்ட கால அடைப்படையில், தென்னாசிய பிராந்தியத்தில் சிங்களம் நிம்மதியாக இருக்க முடியாது என்பதை சிங்கள இனவெறி அரசுக்கும், இந்திய ஆளும்வர்க்கத்திற்கும், சர்வதேசத்திற்கும், காங்கிரஸ் கூட்டணியின் படுதோல்வி என்பது தெளிவாக எடுத்துரைக்கும்.

மற்றைய தமிழக தேர்தல்கள் போல் அல்லாமல் இந்த தேர்தல், இந்திய தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் மிக உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் இந்திய மட்டத்திலும் சர்வதேசமட்டத்திலும் சிறீலங்கா சம்பந்தமான பல்வேறு அணுகுமுறை மாற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கும் என்றே இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன

ஆகவே தேர்தலின் பின் ஜெயா தமிழீழம் பெற்றுத் தருவாரா, அல்லது தமிழீழம் அமைவதை ஆதரிப்பாரா என்பது அல்ல முக்கியம். தேர்தல் முடிவுகள் தமிழீழம் சம்பந்தமாக தமிழக மக்களின் நிலைப்பாடை அறிவிக்கும் களமாக சர்வதேசம் உற்று நோக்கி கொண்டிருப்பதே முக்கியம்.

ஆட்சிக்கு வந்த பின் ஜெயா இராணுவத்தை அனுப்பவோ, ஏன் தமிழீழத்தை வெளிப்படையாக ஆதரிக்கவோ கூட தேவையில்லை. தற்போது காங்கிரஸ் அரசால் தமிழர் இனப்படுகொலைக்காக சிங்கள அரசுக்கு வழங்கப்படும் தங்கு தடையற்ற இந்திய இராணுவ உதவிகளை நிறுத்திவிட்டாலே போதும். தமிழீழம் தானாகவே அமைந்துவிடும்.

அத்தோடு இன்னும் இரண்டு வருடங்களிலோ, சில வேளைகளில் அதற்கு முன்போ தமிழக சட்டமன்ற தேர்தல்கள் வர இருப்பதால், இந்த தேர்தலின் பின் தடாலடியாக தனது ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மாறிவிட ஜெயா ஒன்றும் அரசியல் அறியாதவர் அல்ல என்றே நினைக்கிறேன்

அப்படி அவர் மாறுவது அவருக்கு அரசியல் தற்கொலையாக மாறிவிடும்!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

------

சீமானை உள்ள போட்டது மறந்திட்டுதா? ஜெயலலிதா இப்ப புலிகள் பற்றி வாயை திறந்தா அதை சாக்காக வைத்து அம்மாவை களி தின்ன வைக்க ஒரு கூட்டம் ரெடியாக இருக்கு.. :icon_idea:

ஜெயலலிதாவை இப்போ ........ களி தின்ன வைத்தால் , காங்கிரஸ் + திமுக கூட்டணிக்கு கட்டுக்காசும் கிடைக்காமல் போய்விடும் .

இந்த கட்டுரையே மிகப்பெரிய ஜோக் . இதற்கு கூட நாம் கருத்து எழுதுகிறோம் . சோனியா வெளிநாட்டவர் என பலமாக பிரச்சாரம் செய்ததும் இதே ஜெயாதான் . ராஜீவ் அனுதாபத்தில் ஒன்றும் நான் ஜெயிக்கவில்லை என சொன்னதும் இதே அம்மாதான். சிதம்பரத்தை திருச்சியில் அடிவாங்க வைத்ததும் இதே அம்மாதான் . மணி அய்யரை ஓட ஓட விரட்டி அடித்ததும் இதே அம்மாதான் . எல்லா விஷயத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு . இரண்டையும் பார்ப்பதே புத்திசாலித்தனம்

மகளீர் அணியில் சேர்ந்து புல்டோசர் படைபிரிவை அறிமுகப்படுத்துவேன் எண்டு சொன்னக்கூட ஆச்சரியபடமுடியாது....

நாடு இருக்கும் நிலையில்... எமக்குத்தேவை, கோங்கிரஸ் வெல்லக்கூடாது... இதில்தான் பிரச்சாரம் குறியாயிருக்கோனும்....

(அ).தி.மு.கவும்.... மண்ணாங்கட்டியும்....

உண்மை!!!

காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வெற்றிபெற்றால் (அதற்கு வாய்ப்பே இல்லை) பயங்கர வாதத்திற்கு எதிரான போரிற்கு தமிழக மக்களே அங்கீகாரம் அளித்து விட்டதாக சிங்கள இனவெறி அரசு சர்வேதேசத்தில் பிரச்சாரத்தை முன்னெடுத்து, தனது தமிழ் இனப்படுகொலையை காங்கிரசின் ஆசீர்வாதத்துடன் தங்கு தடை இன்றி நிறைவேற்றி முடிக்கும்!

அத்தோடு தமிழீழமே இறுதித்தீர்வு என்று பகிரங்கமாக அறிவித்து செல்வி.ஜெயலலிதா தமிழக மக்களிடம் வாக்கு கேட்பதால், இந்த தேர்தல் முடிவை சிங்கள இனவாத அரசும் சர்வதேசமும் மிக உன்னிப்பாக அவதானித்து கொண்டுள்ளது.

கிட்டத்தட்ட 7 கோடி தமிழர்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் அந்த மக்களின் அபிலாசைகளுக்கு எதிரான ஒரு போரில் பிராந்திய சிறுபான்மை இனமான சிங்களம் தற்போதைக்கு இராணுவ ரீதியாக வெற்றிபெற்றாலும் கூட நீண்ட கால அடைப்படையில், தென்னாசிய பிராந்தியத்தில் சிங்களம் நிம்மதியாக இருக்க முடியாது என்பதை சிங்கள இனவெறி அரசுக்கும், இந்திய ஆளும்வர்க்கத்திற்கும், சர்வதேசத்திற்கும், காங்கிரஸ் கூட்டணியின் படுதோல்வி என்பது தெளிவாக எடுத்துரைக்கும்.

மற்றைய தமிழக தேர்தல்கள் போல் அல்லாமல் இந்த தேர்தல், இந்திய தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் மிக உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் இந்திய மட்டத்திலும் சர்வதேசமட்டத்திலும் சிறீலங்கா சம்பந்தமான பல்வேறு அணுகுமுறை மாற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கும் என்றே இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன

ஆகவே தேர்தலில் பின் ஜெயா தமிழீழம் பெற்றுத் தருவாரா, அல்லது தமிழீழம் அமைவதை ஆதரிப்பாரா என்பது அல்ல முக்கியம். தேர்தல் முடிவுகள் தமிழீழம் சம்பந்தமாக தமிழக மக்களின் நிலைப்பாடை அறிவிக்கும் களமாக சர்வதேசம் உற்று நோக்கி கொண்டிருப்பதே முக்கியம்.

ஆட்சிக்கு வந்த பின் ஜெயா இராணுவத்தை அனுப்பவோ, ஏன் தமிழீழத்தை வெளிப்படையாக ஆதரிக்கவோ கூட தேவையில்லை. தற்போது காங்கிரஸ் அரசால் தமிழர் இனப்படுகொலைக்காக சிங்கள அரசுக்கு வழங்கப்படும் தங்கு தடையற்ற இந்திய இராணுவ உதவிகளை நிறுத்திவிட்டாலே போதும். தமிழீழம் தானாகவே அமைந்துவிடும்.

அத்தோடு இன்னும் இரண்டு வருடங்களிலோ, சில வேளைகளில் அதற்கு முன்போ தமிழக சட்டமன்ற தேர்தல்கள் வர இருப்பதால், இந்த தேர்தலின் பின் தடாலடியாக தனது ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மாறிவிட ஜெயா ஒன்றும் அரசியல் அறியாதவர் அல்ல என்றே நினைக்கிறேன்

அப்படி அவர் மாறுவது அவருக்கு அரசியல் தற்கொலையாக மாறிவிடும்!

அதுதான், யார் யாருக்கு எப்படித் தேவை வருகிறதோ அதற்கேற்றபடியெல்லாம் ஈழத்தமிழரின் இன்னல்களைப் பயன் படுத்துகின்றார்கள். தமிழ்நாட்டுமக்கள் தங்களது தீர்ப்பை தமிழருக்கச் சார்பாக வழங்குவதன் மூலம் ஈழத்தமிழருக்கு ஓரு ஆதரவுத் தளத்தை உருவாக்கிக் கொடுக்கலாம். அந்தத் தளம் பின்பு எப்பொழுதும் தட்டிக்கழிக்க முடியாததொன்றாக இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.