Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனி ஈழம் பெற்று தருவேன் என்று ஜெ. சொல்லுவது வேடிக்கையாக உள்ளது: கலைஞர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை தீவுத்திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தியும், முதலமைச்சர் கருணாநிதியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பேசினார்கள்.

தமிழக முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

நான் 2007ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளிள் தலைவர்களின் ஒருவரான தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதினேன். எப்படி இரங்கல் கவிதை எழுதலாம் என்றும், உடனே கருணாநிதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பிரதான எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.

இன்று தனி ஈழம் பெற்று தருவேன் என்று பேசுகிறார் என்றால், ஜெயலலிதா பேச்சு வேடிக்கையாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வந்த ராகுல் காந்தி வார்த்தைக்கு வார்த்தை இலங்கை தமிழர்களை காப்போம். இலங்கை தமிழர்களை காக்க அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் கூறினார் :) .

சோனியா காந்தி கடந்த மார்ச் மாதம் ஒரு கடிதம் அனுப்பினார். அதில் பிரதமர் மன்மோகன் சிங் மூலம் இலங்கை தமிழர்கள் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதியிருந்தார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8174

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனி ஈழம் பெற்று தருவேன் என்று ஜெ. சொல்லுவது வேடிக்கையாக உள்ளது: கலைஞர்

சரி,

தங்களூக்கு மக்கள் செத்துமடிவது வேடிக்கையாக இருப்பது போல.

தனி ஈழம் பெற்று தருவேன் என்று ஜெ. சொல்லுவது வேடிக்கையாக உள்ளது: கலைஞர்

நாலு எம்பிக்கள் மட்டும் உள்ள அரசியல் நிலை தன்மை வலுப்படாத நிலையிலும் வைகோ அவர்களே தைரியமாக பேசும்போது ஒரு மாநிலத்தை ஆளும் வல்லமை உள்ள ஜெயலலிதா பேசினால் கண்டிப்பாக கிடைக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

நீ பேசுவதுதான்யா வேடிக்கையாக இருக்கிறது.ரொம்ப மதிப்பு வைத்திருந்தோம் ஆனால் உங்களைப்பற்றி பேசினாலே உடம்பெல்லாம் பற்றிக் கொண்டு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே! தயவுசெய்து இவரைப் பற்றி பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். எம் உறவுகளைப் பற்றி , அவர்கள் படும் அவலங்களை பற்றி துளியும் சிந்திக்காத சுயநலமிக்க இந்த மனிதரைப்(???) பற்றி நாம் சிந்திக்கவும் கூடாது, பேசவும் கூடாது.

கருணாநிதி என்ற பெயரைக் கேட்டாலே கடுப்பாகுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

30.gif

இதை கருணாநிதி பேசவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழழில் கருணாநிதியும் அவரைச் சேர்ந்தவர்களும் அடித்த கூட்டுக்கொள்ளைப் பணம் ஒரு லட்சம் கோடி ரூபாய் பேசுகிறது.

கருணாநிதி இப்படி ஜால்ரா அடிக்கா விட்டால் சொக்கத் தங்கம் சோனியா இவரையும் இவர் குடும்பத்தாரையும் கம்பிக்கு பின்னால் இருந்து களி தின்ன வைத்து விடும்!

வசந்தசேனையிடம் வசமாக மாட்டிக்கொண்டு சொந்த மகனான மனோகரனை வாய் கூசாமல் வேசிமகன் என்று சொன்ன புருசோத்தமனின் நிலையில் தான் கருணாநிதி இருக்கிறார். மனோகரா வசனம் எழுதிய கைகள் இன்று நடுநடுங்க காகிதத்தில் எழுதி வைத்த பொய்யையும் புரட்டையும் பேசும் காட்சி காணச் சகிக்கவில்லை!!!

Edited by vettri-vel

அது அப்படி அல்ல, இது கருணானிதிக்கு ஜால்ரா அடிப்பவர்கள் கூரும் நொண்டிச் சாக்கு. கருணானிதிக்கு தான் மிழ் இனத் தலைவன்[/b] என்ற பதவி வேண்டும் அதற்கு ஏற்பத் தான் அவர் தனது 40 வருட அரசியலை நடத்தி வருகிரார், ஆனால் பிரபாகரனை ஆதரித்து தனித் தமிழ் ஈழம் அமைந்தால் இவருக்கு அந்தப் பெயர் போய்விடும் அது தான் உன்ண்மையான காரணம். இவர் எமக்கு எதிரான போருக்கு துணை போவதற்கான காரணம் இது தான். இன்னும் சொல்லப் போனால் இஅவரும் இந்தப் போரை நட்ட்த்திய இந்திய அரசும் போர் இப்பசியான இக்கட்டான நிலைக்கு வந்து மாபெரும் மனிதொ பேரவலம் ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை இவர் அண்மையில் என்ன கூறினார் அ"பிரபாகரனை மகிந்த லெக்ஸான்டர் மன்னன் நடத்தியதிப் போல நட்த்த வேண்டும்" இதன் அர்த்த்ம் என்ன புலிகளின் தோல்வியை இவரும் எதிர் பார்த்து இருக்கிரார். இன்னும் தெளிவாக்ச் சொல்ல்ப் போனால் காங்கிரஸின் ஆசை வார்த்தையை நம்பி மோசம் போய் விட்டர்.

"எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது அல்லவா"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.