Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நிருவாகம் நித்தா கொள்கின்றது?

Featured Replies

இந்த பரதேசி தொடர்புடைய செய்திகளை இங்கு போட வேண்டாம் நண்பர்களே.

இன்றைக்கு இவ்வளவு மக்களின் இழப்புக்கும் காரணமானவன் இவன்.

இந்த ஈனப்பிறவிகளின் கருத்துகளை செய்தி என்று எடுத்து போட்டு எங்களை நாங்களே கேவலப்படுத்த வேண்டாம்.

ஒரு துரோகியின் கருத்துகளை வாசிக்க வேண்டிய தலைவிதி எங்களுக்கு.

மானமுள்ள தமிழனாக இருந்தால் இனிமேல் இவனின் கருத்துகளை இங்கு போடாதீர்கள்! ரத்தம் கொதிக்குது!

அனைவருக்கும் இனிய இழவு வணக்கங்கள்,

தாயகத்தில் மனிதப்பேரவலம் உருவாக்கப்பட்டு தினமும் அந்த பேரவலம் இன்னும் இன்னும் உக்கிரம் அதிகரித்துச் செல்லும் இன்றைய மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் நாங்கள் எல்லோரும் இரவு பகலாக தெருவில் இறங்கி போராடும் நிலையில்... யாழ் இணையம் சிறந்த சேவைகளை தமிழ் மக்களுக்கு செய்துவருகின்றது. ஆனால் அதேசமயம்..

ஆத்திரத்தை ஊட்டும்வகையில் ஊர்ப்புதினத்தில் செய்திகள் இணைக்கப்படுவது மிகுந்த எரிச்சலை தருகின்றது. தற்போது நமக்கு தேவையான, நாம் கருத்தில்கொள்ளவேண்டிய முக்கியமான விடயம் தாயகம், தாயக மக்கள், தாயக போராட்டம் இவை மட்டுமே.

சிறீ லங்கா பயங்கரவாத அரசின் கைக்கூலிகளான கண்ட கண்ட புண்ணாக்குகள், மற்றும் சிறீ லங்கா பயங்கரவாத அரசின் பிரச்சார பரப்புரைகளிற்கான ஊடகமாக யாழ் இணையம் பயன்படுத்தப்படுவதை நானும் தனிப்பட விரும்பவில்லை.

யாழ் நிருவாகம் ஓரளவு இந்த விடயத்தில் ஊர்ப்புதினம் செய்திகள் பற்றி அக்கறைகொண்டு இருந்தாலும்... அதன் வேகம் போதவில்லை. இன்று ஊர்ப்புதினம் பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கு என்று சொல்லும் அளவுக்கு செய்திகள் இணைக்கப்படுகின்றன. தவிர, நிருவாகத்தினர் எல்லோரும் வேறு வேறு செயல்திட்டங்களில் கவனத்தை செலுத்துகின்றனர். எனவே, முழுதுமாக கண்காணிப்பது கடினமான பணியாக இருக்கலாம்.

இதற்கு மாற்றுவழிகள் கண்டுபிடிக்கப்பட்டு ஊர்ப்புதினம் பகுதி எமக்கான - தமிழ்மக்களுக்கான தாயகத்திற்கான - தாயக போராடத்திற்கான பகுதியாக மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். பொருத்தமற்ற செய்திகள் வந்தால் அவை உடனடியாக கடாசப்படவேண்டும். மேலே வசி கூறியதுபோல் யாழ் இணையமும் சிறீ லங்கா பயங்கரவாத அரசின் பரப்புரைகளிற்கு பயன்படுத்தப்படுவது எரிச்சலை தருகின்றது. ஊர்ப்புதினம் பகுதி மட்டறுத்தலின்பின் பார்வைக்கு விடப்படலாம். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு மாற்றுவழிகள் கண்டுபிடிக்கப்பட்டு ஊர்ப்புதினம் பகுதி எமக்கான - தமிழ்மக்களுக்கான தாயகத்திற்கான - தாயக போராடத்திற்கான பகுதியாக மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். பொருத்தமற்ற செய்திகள் வந்தால் அவை உடனடியாக கடாசப்படவேண்டும்.

கட்டாயமாய்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க நியாயமா எழுதுறதுகளையே தூக்கிடுறாங்க..! அப்படி இருக்காங்க விழிப்போட. இப்படியான மாற்றரை விட்டுட்டாங்களா..??! :(:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க நியாயமா எழுதுறதுகளையே தூக்கிடுறாங்க..! அப்படி இருக்காங்க விழிப்போட. இப்படியான மாற்றரை விட்டுட்டாங்களா..??! :(:unsure:

ஏலுமெண்டால் இண்டை வரைக்கும் புலம்பெயர் மக்கள் விட்ட பிழையையும் அதுக்கான மாற்று நடவடிக்கையையும் இந்த இடத்திலை பக்கெண்டு எடுத்து விடுங்கோ பாப்பம்.

தொட்டிலில் ஆடும் கிளியே!-என்

தூய தமிழின் ஒளியே!

கட்டிக்கரும்பே தூங்கு!-முக்

கனியின் சாறே தூங்கு!

தட்டிற் பாலும் சோறும்-நான்

தந்தே னேநாள் தோறும்;

சுட்டப் பத்துடன் வருவேன்-நீ

தூங்கி எழுந்தால் தருவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏலுமெண்டால் இண்டை வரைக்கும் புலம்பெயர் மக்கள் விட்ட பிழையையும் அதுக்கான மாற்று நடவடிக்கையையும் இந்த இடத்திலை பக்கெண்டு எடுத்து விடுங்கோ பாப்பம்.

எம்மவர்கள் உண்மையை தரிசிக்கவும்.. தவறுகளை இனங்காணவும்.. சீர்செய்யவும்.. மாற்றங்களைத் தேடவும் இலகுவில் விரும்புபவர்களாகத் தெரியவில்லை. இன்று வரை தமிழன் இவ்வாறு துன்பப்பட இவையும் ஒரு காரணம். :(:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

QUOTE (வசி_சுதா @ May 10 2009, 03:46 PM)

இந்த பரதேசி தொடர்புடைய செய்திகளை இங்கு போட வேண்டாம் நண்பர்களே.

இன்றைக்கு இவ்வளவு மக்களின் இழப்புக்கும் காரணமானவன் இவன்.

இந்த ஈனப்பிறவிகளின் கருத்துகளை செய்தி என்று எடுத்து போட்டு எங்களை நாங்களே கேவலப்படுத்த வேண்டாம்.

ஒரு துரோகியின் கருத்துகளை வாசிக்க வேண்டிய தலைவிதி எங்களுக்கு.

மானமுள்ள தமிழனாக இருந்தால் இனிமேல் இவனின் கருத்துகளை இங்கு போடாதீர்கள்! ரத்தம் கொதிக்குது!

சிறீ லங்கா பயங்கரவாத அரசின் கைக்கூலிகளான கண்ட கண்ட புண்ணாக்குகள், மற்றும் சிறீ லங்கா பயங்கரவாத அரசின் பிரச்சார பரப்புரைகளிற்கான ஊடகமாக யாழ் இணையம் பயன்படுத்தப்படுவதை நானும் தனிப்பட விரும்பவில்லை.

மேலே வசி கூறியதுபோல் யாழ் இணையமும் சிறீ லங்கா பயங்கரவாத அரசின் பரப்புரைகளிற்கு பயன்படுத்தப்படுவது எரிச்சலை தருகின்றது. ஊர்ப்புதினம் பகுதி மட்டறுத்தலின்பின் பார்வைக்கு விடப்படலாம். நன்றி!

உங்கள் கோபம் விளங்க கூடியதே...

நீங்கள் குறிப்பிட்ட "பரதேசி" நான் நினைக்கும் பரதேசியாக இருந்தால்....அந்த பரதேசி நபர் சொன்ன அறிக்கையை எமக்கு சாதகமாக பிரட்டி போடலாம்....

பாதுகாப்பு வலயத்தில் இருப்பது போராளி/மாவீரர் குடும்பங்கள் மட்டும் என்றால் - விடுதலை புலிகள் மேல் சுமத்த பட்ட இன்னொரு குற்ற சாட்டு "அவர்கள் பொது மக்களை மறித்து கேடயமாக வைத்திருகிறார்கள், தப்ப வெளிக்கிடுபவர்களை சுடுகிறார்கள்" என்பது சர்வதேசத்தை நம்ப வைக்க கூறியது எவளவு பெரிய அப்பட்டமான பொய் என்பதை இந்த பரதேசி தவளையே தன் வாயால் ஒத்து கொள்கிறதே......!!!!!

அந்த கருத்தை மட்டும் பரப்பி விடலாம்.....

போராளி/ மாவீரர் குடும்பங்களாக இருந்தாலும், இல்லா விட்டாலும் மக்கள் மக்கள் தான்..... அவர்களை கொல்வது போர் தர்மங்களுக்கு உட்பட்டது என்று யாரும் சொல்ல முடியாது.... சர்வ தேசத்திற்கு அது விளங்கும்....

பா. நடேசனே ஒரு வானொலி செவ்வியில் இந்த வருட ஆரம்பத்தில் சொல்லி இருந்தார் - "எமது குடும்பங்கள், உறவுகள் எம்முடனே இருக்க விரும்புகிறார்கள்" என்று...

எதோ தான் மல்லாக்க கிடந்தது ஜோசிச்சு வெளியிடற அறிக்கை என்று இது இப்ப சொல்லுது.... பரதேசிக்கு அழிவு கூட இருக்கும் குள்ள நரிகளால் கூடிய கெதியில் வரும், அது உலக நியதி...

ஏதும் பிழையாக விளங்கி இதை நான் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்....

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு உங்கட ஆதங்கம் புரிகிறது கருத்து எழுதுனாலும் வெட்டுவிழுது அதனாலதான் அந்த செய்திகளுக்கு கருத்து எழுததுறதும் இல்லை அந்த செய்திகளை இனைக்காதீர்கள் என்றால் யார் கேட்கிறார்கள் பாவம் நிர்வாகித்தினர்தான் என்ன செய்வார்கள் அவர்களுக்கும் எவ்வளவு வேலைபாடுகள் செய்தி இணைப்போர் கவனத்திற்கு தறசமயம் சிந்தித்து செயற்படுங்கள் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.