Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி நிலை தொடர்பாக அதிகாரபூர்வமற்ற முறையில் பாதுகாப்பு சபை ஆராய்ந்தது: ரஷ்யா, சீனா பங்கேற்கவில்லை

Featured Replies

வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் பத்து நாடுகள் நேற்று திங்கட்கிழமை அதிகாரபூர்வமற்ற முறையில் நியூயார்க்கில் கூடி ஆராய்ந்துள்ளன.

பாதுகாப்புச் சபையில் இடம்பெற்றுள்ள பத்து நாடுகளுடன் பிரித்தானியாவும், பிரான்சும் இந்த சந்திப்பை நடத்தின. இதில் அரச சார்பற்ற உதவி நிறுவனங்களும் கலந்துகொண்டன.

சிறிலங்காவின் போர் முனைப்புக்களுக்குத் தொடர்ந்தும் ஆதரவை வழங்கிவரும் சீனா, ரஸ்யா என்பவற்றுடன் வியட்நாமும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துக்கொண்டன.

இலங்கையில் நடைபெறுவது ஒரு உள்நாட்டுப் போர்தான் எனவும் அதனால் அமைதிக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனவும் கூறுகின்ற இந்த மூன்று நாடுகளும் அதனால் இலங்கை பிரச்சினை தொடர்பாக பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படத் தேவையில்லை எனவும் வலியுறுத்துகின்றன.

இந்தப் போரை சாட்சிகள் எதுவும் இல்லாமல் நடக்கின்ற ஒரு போர் என வர்ணிக்கும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட அது தொடர்பாக பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான கூட்டம் முடிந்ததும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மிலிபாண்ட்,

பிரான்ஸ் பிரதிநிதி 'பேர்னர்ட் கௌச்னே' உடன் சேர்ந்து தலைமை வகித்து ஐ.நா பாதுகாப்புச் சபையின் சர்வதேச பிரதிநிதிகளுக்காகவும், இலங்கையில் செயற் திறனுடன் உள்ள அரச சார்பற்ற மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்களுக்காகவும் நடத்திய கூட்டத்தில் பாதுகாப்புச்சபையின் 8 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதற்கு முன் நடந்த கூட்டங்களைப்போல் அல்லாது இலங்கைப் பிரச்சினை தொடர்பாகக் கவனம் செலுத்தி வரும் உலக நாடுகள் அனைத்திற்கும் ஏற்கனவே முன்னறிவிக்கப் பட்டிருந்த போதும் சீனாவும், ரஷ்யாவும் இதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டம் நிறைவடைந்த பின் பத்திரிகைக்குப் பேட்டியளிக்கும் போது மிலிபாண்ட், இலங்கை அரசு வார இறுதியில் நடத்திய கொடூர தாக்குதலை வன்மையாகக் கண்டித்தார். மேலும் அவர் பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பிரதேசத்தின் உள்ளே 3 சதுர கிலோமீற்றர் பரப்புக்கும் குறைவான பகுதியில் 50 000 இலிருந்து 100 000 வரையிலான மக்கள் விவரிக்க முடியாத இன்னல்களுடன் மிகப் பெரிய பேரழிவு நிலையை எதிர் நோக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை பிரிட்டன் அமெரிக்காவுடன் இணைந்து சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை பெற்றுவரும் பெருமளவான கடன் தொகையைக் கட்டுப்படுத்த ஆலோசித்து வருகிறது.

ஐ.நா செயலாளர் பான் கீ மூன் உட்பட பாதுகாப்புச் சபையின் முக்கிய பிரமுகர்கள் பலரும் இலங்கை ராணுவத்தின் வார இறுதி நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...-05-11-22-55-50

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் போர் முனைப்புக்களுக்குத் தொடர்ந்தும் ஆதரவை வழங்கிவரும் சீனா, ரஸ்யா என்பவற்றுடன் வியட்நாமும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துக்கொண்டன.

இந்த வியட்நாம்காரனுக்கு என்ன வந்தது . அவனுக்கு போரின் வலி தெரியாதா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வியட்நாம்காரனுக்கு என்ன வந்தது . அவனுக்கு போரின் வலி தெரியாதா ?

போரின் வலி இன்னும் போகவில்லை....அதுதான் பிரச்னை அவனுக்கு போல...அமெரிக்காவுடன் வியட்நாமுக்கு எப்பவும் காய்ச்சல் தானே......

அமெரிக்கா பிழை என்று சொல்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் சரி என்று நிற்கிறார்கள் போல....

ம்ம்...ம்ம்..முடியல!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வியட்நாம்காரனுக்கு என்ன வந்தது . அவனுக்கு போரின் வலி தெரியாதா ?

சீனாக்காரரின் சொல்லை கேட்கும் செல்லப்பிள்ளை வியட்நாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னாலை இந்தியா நிண்டு அலுவல் பாக்குதப்பா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.