Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

Featured Replies

உலகத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஒரு சிலர் பணத்துக்கு விலைபோய் தவறான பிரச்சாரங்களில் ஈடுபவடுவதாக தெரிகின்றது.

புலம் பெயர் தமிழர்களின் இன்றைய பிரச்சாரங்களை முறியடித்து தன்னுடைய எண்ணத்தை ஈடேற்றுவதற்காக ஒரு சிலரை விலைக்கு வாங்கியுள்ளதாக தெரிகின்றது. அவர்களும் கனடா போன்ற நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி போராட்டத்தை மழுங்கடிக்க முயல்கின்றார்கள். அவர்களுடைய பிரச்சாரம் தலைவரை சுற்றி பின்னப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள். இப்போது அவர்கள் கையிலெடுத்திருப்பது நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்க போகின்றோம் என்று வீடுவீடாக சொல்கின்றார்களாம். தயவு செய்து கனடிய தமிழர்கள் இவர்கள் பற்றி கவனமாக இருங்கள். இவர்கள் உங்கள் வீடுகளுக்கு வந்தால் உங்கள் பகுதி அமைப்பளார்களுக்கு இரகசியமாக தகவல் கொடுத்த இவர்களின் முகத்திரையை அகற்றுங்கள்.

வேதனை இவர்களுடன் சில பச்சோந்திகள் இருப்பதுதான்

இது முந்தி... கண்ட கண்ட நாயெல்லாம் புலியின்பேரில் காசு சேர்த்தமாதிரிதான்.

சிலவருடங்களுக்குமுன் ஒருவர் சொன்னார்.. புலிகள் தன்னிடன் வந்து பயமுறுத்தி காசு கேட்டதாக..

நான் கேட்டேன், உவை புலிதான் எண்டு என்ன ஆதாரம் எண்டு... அவர் சொன்னார்..

அவையள் புலியின்ட அடையாள அட்டையை காட்டினவயாம்.... இதுக்குமேல என்ன சொல்ல.....

.

Edited by Panangkai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களே விழிப்பாக இருங்கள். இதை நானும் கேள்விப்பட்டு மிகவும் கொதித்துபோய் உள்ளேன். எங்கள் இனத்தில் மட்டும் தான் இப்படி நடக்கும். நிறைய பணம் கைமாறி உள்ளதாம். வீடு வீடாக சென்று சொல்ல படுதம்.

நமது தலைவரையும் நமது போராளிகளையும் பற்றி நன்கு அறிந்த எந்த தமிழ் ஈழ உறவும் இந்த கதைகளை நம்பி ஏமாந்து போக மாட்டர்கள்.

H1N1 virus விட வேகமாக இந்த கொடிய வந்தியை பரப்புகிறார்கள்.

கவனம் கவனம் கவனம். ஓநாய்கள் ஊளையிட வருதுகள் கவனம் கவனம்.

தலைவர் மிகமிக பாதுகாப்பாக நலமாக இருக்கின்றார். அவர் தான் இருப்பதை வெளிவந்து நிருபித்துத்தான் மக்கள் நம்பவேண்டும் என்றால் தமிழ்மக்களாகிய நாம் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை பொசுக்குவது போல் ஆகிவிடும். ஆகவே உறவுகளே அவரைப்பொறுத்தவரை தன்னைப்பாதுகாக்க அவரைத் தெரியும் அதேவேளை போராளிகளிற்கும் அந்த தன்னம்பிக்கையை விதைத்துள்ளார். கவலை வேண்டாம் எம்மைக்காக்க அவர் என்றும் இருப்பார்.

மாவீரர் தினம் வரை பொறுமை கொள்ளுங்கள். அன்று எம்முன்னே வந்து எம்மை மட்டுமல்ல உலகையே வியப்பில் ஆழ்த்துவார். எம் கருத்துக்களை கடுமையாக விதைத்து அவரை நோகடிக்க வேண்டாம்.

மீளவும் சொல்கின்றேன். அவர் நலமுடன் இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1.இவர்களை எங்களால் வாங்க முடியாதா?

2.இன்னும் சில மாதங்களில் , டக்ளஸ் க்கு நடந்தது போல் இவர்களுக்கும் நடக்கலாம் என்று கூறுங்கள்

3.இவர்களிடம் கதைக்கும் போது ஒளிப்படம்,புகைபடம் எடுக்கலாம்

4.இவர்கள் வந்தால் .............................கா வ ல் க்கு தெரிவிக்கலாம்

5.இவர்கள் யாரென்று இணையம் மூலம் மற்றவர்களுக்கு தெரிவிக்கலாம்

6. நாமும் அவர்களுடன் ஊடுருவி ....................................

7.

புலம்பெயர் தமிழர்களை அழிப்பதே இந்தியா, இலங்கை இனைந்த நாட்டின் தற்போதைய தேவை

இதைப்பாருங்கள்

சிவாஜிலிங்கம் எம்பி சொல்கின்றாராம்.

“பிரபாகரன் இறப்பு குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து விரைவில் ஓர் அறிக்கை வெளியாகும். அந்த அறிக்கை அதிர்ச்சி தரக்கூடியதாகவும், உலகை உலுக்கக் கூடியதாகவும் இருக்கும்” என்று இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

அமெரிக்கா, நார்வே நாடுகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, வெள்ளைக் கொடியோடு செஞ்சிலுவைச் சங்கத்திடம் சரணடைய வந்தபோது சர்வதேச விதிமுறைகளை மீறி நடேசன் உள்ளிட்டவர்களை நயவஞ்சமாகக் கொன்றுள்ளனர். சர்வதேச சதியால் விடுதலைப் புலிகள் மோசமான பின்னடவை சந்தித்துள்ளனர்.

புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதை விடுதலைப்புலிகள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

பிரபாகரனது மூத்த மகன் சார்லஸ் அந்தோணி இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது மனைவி, மகள், இளையமகன் ஆகியோர் குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் தெரியவில்லை.

இலங்கை அரசு காட்டியது பிரபாகரன் உடல்தானா என்ற சந்தேகம் உள்ளது. உண்மையில் பிரபாகரன் இறந்திருந்தால் ஊர் முழுக்க ஊர்வலம் எடுத்துச் சென்றிருப்பர்.

பிரபாகரனின் மூத்த சகோதரி சென்னையில் உள்ளார். அவரிடம் இருந்து மரபணுச் சோதனைக்கு மாதிரி எடுத்து, அவர்கள் காட்டிய உடலோடு ஒப்பிட்டு சோதனை செய்திருக்கலாமே!

சர்வதேச பத்திரிகையாளர்களையோ, இலங்கைப் பத்திரிகையாளர்களையோ அந்த உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. புலிகள் இயக்கத்தை யார் நடத்துவது என்பதை அந்த இயக்கத்தினர்தான் அறிவிக்க வேண்டும். பிரபாகரன் இறப்பு குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து விரைவில் ஓர் அறிக்கை வெளியாகும். அந்த அறிக்கை அதிர்ச்சி தரக்கூடியதாகவும், உலகை உலுக்கக் கூடியதாகவும் இருக்கும்.

‘இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் காயம்பட்டவர்களுக்கு உதவ மனிதாபிமான பணியாளர்களை அனுப்புகிறோம்; ஒரு கப்பலை அனுப்பி அப்பாவி பொதுமக்களை மீட்கிறோம்’ என்ற இரு கோரிக்கைகளை அமெரிக்க கப்பற்படைத் தளபதி, கடந்த வாரம் இந்தியாவிடம் வைத்தார். இந்த இரண்டையும் இந்தியா ஏற்கவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய, தமிழக அரசுகளின் செயல்பாடுகள் எங்களுக்கு வேதனையையும், ஏமாற்றத்தையும் தருகிறது. இலங்கையில் பெருமளவிலான படுகொலைகள் நடந்துமுடிந்த பின் ஐ.நா. செயலர் இலங்கை வந்துள்ளார். இந்த நாளை கறுப்பு நாளாகக் கடைபிடிக்கிறோம்.’

இவ்வாறு சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

- தினமலர்

குறிப்பு: மேலே உள்ளது இன்றைய தினமலரில் 11ம் பக்கம் வெளியான செய்தி. பிரபாகரனின் இறப்பைப் பற்றி இரண்டாம் ஹிட்லர் ராஜபக்‌ஷே சொன்ன செய்தியை முதல் பக்கம் போட்டிருக்கும் தினமலர், இந்தச் செய்தியை 11ம் பக்கம் வெளியிட்டிருக்கிறது. ஆகவேதான் அந்தப் பேட்டியை இப்படிப் பதிவாக வெளியிடுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற ஆராட்சியை விட்டிட்டு விடுதலைப்போரை எப்படி தீவிரப்படுத்தலாம் என்ற ஆய்வை நிகழ்த்தலாம் தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியத்தலைவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற ஆராட்சியை விட்டிட்டு விடுதலைப்போரை எப்படி தீவிரப்படுத்தலாம் என்ற ஆய்வை நிகழ்த்தலாம் தானே?

உண்மை!

துரோகிகள் பற்றி எச்சரிக்கையோடு இருந்தவாறு நாம் எமது விடயங்களை முன்னெடுப்பதே இன்றைய காலத்தின் தேவைகும். இதனைத் தமிழினம் புரிந்து கொள்ள வேண்டும். தனது கடமையைச் செய்ய முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட வடிவம் மாற்றபட்டு இருக்கிறது புலம் பெயர்ந்தோர் கைகளில............ஊக்கமுள்ள இளையோர் கைகளில் ........தமிழ் உணர்வுள்ள வர்கள் கைகளில் .

....அதை முன்னெடுப்பது நம் கடமை.

Edited by நிலாமதி

போராட்ட வடிவம் மாற்றபட்டு இருக்கிறது புலம் பெயர்ந்தோர் கைகளில............ஊக்கமுள்ள இளையோர் கைகளில் ........தமிழ் உணர்வுள்ள வர்கள் கைகளில் .

....அதை முன்னெடுப்பது நம் கடமை.

இந்த வடிவ மாற்றம் முக்கிய விடயம்...

இன்றும் இராணுவ ரீதியில் மீண்டும் பலம் பெற்று, மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்து கட்டமைப்போம் என்று பலர் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த கனவை இனி விடுவோம். இராணுவ வெற்றி சாத்தியமா இல்லையா என்ற கேள்விக்கு அப்பால், அதன் மூலம் இன்னும் இன்னும் மக்களை இழக்க எம்மால் முடியாது. அரசியல் ரீதியில் மீண்டும் போராடுவோம். இராணுவ வெற்றி எனும் மாயையில் இருந்து வெளிவருவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினமலர் மட்டுமல்ல, இந்து, என்.டி.டி.வி போன்ற அனைத்து இந்திய ஊடகங்களுமே இலஙகையின் கைக்கூலி தான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில தமிழர்கள் தாங்கள் தமிழரின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள.; நம்பியாரைச்சந்தித்தது ஒரு கூட்டம்.

அரசியல் தெரியாத கூட்டம். இவர்கள் தாங்கள் போராட்டங்கிளில் பங்கு பற்றினோம் என்று படங்கள் வெளியாவதில்லை. ஆனால் வேறு விடயங்களில் மாத்திரம் எல்லாத்திசைகளிலும் நின்று எடுத்த படங்கள் வெளியாகும்.

தமிழன் வழிகாட்டியின் பின்பக்கம் கடைசிப்பக்கத்தில் சிறீலங்காவின் மதுபான விளம்பரம் வந்துள்ளது. சிறீலங்காவின் உற்பத்திக்கு விளம்பரம் கொடுக்கும் இவர்கள் நம்பியாரைச் சந்தித்தார்களாம். இவர்களை மக்கள் கட்டாயம் இனங்கண்டு (சமுதாய ஒட்டுண்ணிகள்) அப்புறப்படுத்தவேண்டும். இவர்கள் போராட்டங்களில் கலந்து கொண்டதாக படங்கள் பிரசுரித்தார்களா? இவர்கள் தான் தமிழ் சமுதாயத்தின் பிரதிநிதிகாளா? தமிழனை அவர்கள் எந்த தரத்தில் எடைபோட்டிருப்பார்கள். மக்கனே இனம் காணுங்கள் ஓரம் கட்டுங்கள். விடிவு தானாகப்பிறக்கும். இனத்தைக்காப்பது மக்கள் போராட்டமே. மிகவும் என்னிப்பாக இனம் காணவேண்டியவர்களில் ஒருவர் மேலே கூறப்பட்டவர் ஒரு உதாரணம்.

தமிழன் வழிகாட்டியின் பின்பக்கம் கடைசிப்பக்கத்தில் சிறீலங்காவின் மதுபான விளம்பரம் வந்துள்ளது. சிறீலங்காவின் உற்பத்திக்கு விளம்பரம் கொடுக்கும் இவர்கள் நம்பியாரைச் சந்தித்தார்களாம். இவர்களை மக்கள் கட்டாயம் இனங்கண்டு (சமுதாய ஒட்டுண்ணிகள்)

ஹஹ் ஹஹ் ஹா............

தமிழ் தேசிய வியாபரம் செய்யும் எத்தனை புலம் பெயர் பத்திரிகைகளில் எயார் லங்கா (air lanka) விளம்பரம் வருகின்றது என்று உங்களுக்கு தெரியுமா? மதுபான விளம்பரம் மட்டும் அல்ல, இன்னும் எத்தனையோ வருகின்றன...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஒரு சிலர் பணத்துக்கு விலைபோய் தவறான பிரச்சாரங்களில் ஈடுபவடுவதாக தெரிகின்றது.

புலம் பெயர் தமிழர்களின் இன்றைய பிரச்சாரங்களை முறியடித்து தன்னுடைய எண்ணத்தை ஈடேற்றுவதற்காக ஒரு சிலரை விலைக்கு வாங்கியுள்ளதாக தெரிகின்றது. அவர்களும் கனடா போன்ற நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி போராட்டத்தை மழுங்கடிக்க முயல்கின்றார்கள். அவர்களுடைய பிரச்சாரம் தலைவரை சுற்றி பின்னப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள். இப்போது அவர்கள் கையிலெடுத்திருப்பது நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்க போகின்றோம் என்று வீடுவீடாக சொல்கின்றார்களாம். தயவு செய்து கனடிய தமிழர்கள் இவர்கள் பற்றி கவனமாக இருங்கள். இவர்கள் உங்கள் வீடுகளுக்கு வந்தால் உங்கள் பகுதி அமைப்பளார்களுக்கு இரகசியமாக தகவல் கொடுத்த இவர்களின் முகத்திரையை அகற்றுங்கள்.

வேதனை இவர்களுடன் சில பச்சோந்திகள் இருப்பதுதான்

அப்ப அவயிண்ட 'நீண்டகால' உறுப்பினர்கள் ரகசிமா தெரிவிக்கற தகவல் மாத்திரம் என்ன?? அப்ப அவை எல்லாம் பச்சோந்திகளா? நான் நினைக்கிறான் கனடிய 'பொறுப்பாளர்கள் ' மக்களிண்ட மனங்களை புரிந்து கொண்டு அதற்க்கு எத்தவாறு நடந்துகொள்ள வேண்டும்....எவ்வளவு நாளுக்குத்தான் தாங்கள் மாத்திரம் தான் தேசியத்தின்ட 'ஆணிவேருகள்' எண்டு படம் காட்டிக்கொண்டு திரியப்போகினம்?? வீதியில மக்களை 'படுக்க' வச்சா மாத்திரம் போதாது .........

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட வடிவம் மாற்றபட்டு இருக்கிறது புலம் பெயர்ந்தோர் கைகளில............ஊக்கமுள்ள இளையோர் கைகளில் ........தமிழ் உணர்வுள்ள வர்கள் கைகளில் .

....அதை முன்னெடுப்பது நம் கடமை.

இதனைச் சரியாக உய்த்துணர்ந்தவாறு தொடர் போராட்டங்களைச் சுழற்சி முறையில் செய்வதே இன்றை எமது கடனாகும்.

தலைவரெங்கே என்று தேடுகின்ற நேரத்தில் தமிழீழ தேசிய விடுதலைப் போருக்கு எந்தவகையிலே உதவலாம் இன்னும் எத்தனை பேரை இணைக்கலாம் என்பது தொடர்பாகச் சிந்திப்பதும். செயற்படுவதுமே தேவையாகும். இன்றும் எமக்கென்ன என இருப்போரை அணுகிக் கதைப்பது கூடத் தேவையானது. நாம் ஒரு பெரும் மக்கள்சக்தியென்பதை உலகுக்குக் காட்டத் ஒன்றினைவது மிக முக்கியமாகத் தேவையானது

  • கருத்துக்கள உறவுகள்

அட உதுகளை கனடாக்காராக்கள் பார்த்துட்டு சும்மாவா இருக்கிறீங்க இருட்டடி அடிக்கவேண்டாம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஒரு சிலர் பணத்துக்கு விலைபோய் தவறான பிரச்சாரங்களில் ஈடுபவடுவதாக தெரிகின்றது.

புலம் பெயர் தமிழர்களின் இன்றைய பிரச்சாரங்களை முறியடித்து தன்னுடைய எண்ணத்தை ஈடேற்றுவதற்காக ஒரு சிலரை விலைக்கு வாங்கியுள்ளதாக தெரிகின்றது. அவர்களும் கனடா போன்ற நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி போராட்டத்தை மழுங்கடிக்க முயல்கின்றார்கள். அவர்களுடைய பிரச்சாரம் தலைவரை சுற்றி பின்னப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள். இப்போது அவர்கள் கையிலெடுத்திருப்பது நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்க போகின்றோம் என்று வீடுவீடாக சொல்கின்றார்களாம். தயவு செய்து கனடிய தமிழர்கள் இவர்கள் பற்றி கவனமாக இருங்கள். இவர்கள் உங்கள் வீடுகளுக்கு வந்தால் உங்கள் பகுதி அமைப்பளார்களுக்கு இரகசியமாக தகவல் கொடுத்த இவர்களின் முகத்திரையை அகற்றுங்கள்.

வேதனை இவர்களுடன் சில பச்சோந்திகள் இருப்பதுதான்

உண்மை சோழன் ,

இந்த வெற்றிடத்தை பயன் படுத்தி , காசு பாக்க வெளிக்கிட்டு விடுவார்கள் . நாம் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.