Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத்தயார் கூட்டமைப்பிடம் கருணாநிதி ‐ உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத்தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவர் வீட்டில் இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பது குறித்து தமிழக முதல்வருடன் பேசியதாக கூறியுள்ளார். அத்துடன் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த கோரிக்கை விடுத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாத். இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு அமைதியான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தகைய பாதுகாப்பான சுமூகமாக தமிழர்கள் வாழ ஒரு நிலை உருவாக்கப்பட வேண்டும். இதற்கு தமிழக அரசும், இந்திய மத்திய அரசும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத் தயார் என தமிழக முதல்வர் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

GTN

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

இவன் என்ன சொல்ல வாரான் எண்டால் தமிழமக்கள் மீதான சிங்கள அரசினது இனஅழிப்பு நடவடிக்கைக்கு இராஜபக்ச குழுமத்திற்கு தொடர்ந்தும் உதவிசெயவேன் என்று. அப்படித்தானே கருனாநிதி இப்படிப் புரியும்படி சொல்ல வோண்டும் அடுத்தமுறை அறிக்கைவிடும்போது நாயே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத்தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

:rolleyes:

ஐயோ.. ஏன்? :(

ஐயோ ஐயோ அண்டமாப்புளூகன் திரும்பவும் அறிக்கை விடுகின்றனா. போதுமடா சாமி உங்கட அறிக்கை. ஈழதிலிருந்து எங்கள் உறவுகளின் இரத்தவாடை யை கச்சான் காற்றும் சோழக காற்றும் உன் வீட்டு வாசலில் அள்ளி அடித்தாலும், உன்னால் அறிக்கை மட்டுமே

விடமுடியும்.அல்லது அதை வைத்து பணம் பண்ண முடியும்.

நீங்கள் திட்டுவதுக்கு உரித்துடையவர்களா?

அவர் ஒன்றும் உங்கள் பிரதிநியில்லையே?

அண்மையி அவர்களுக்கு மக்களாதரவு உண்டென்பதை நிருபித்துள்ளார். அந்த மக்களின் விருப்பத்துக்காவது அவரைப்பற்றி விமர்சிக்கும்போது கொஞ்சமாவது கண்ணியத்தை கடைப்பிடிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் திட்டுவதுக்கு உரித்துடையவர்களா?

அவர் ஒன்றும் உங்கள் பிரதிநியில்லையே?

அண்மையி அவர்களுக்கு மக்களாதரவு உண்டென்பதை நிருபித்துள்ளார். அந்த மக்களின் விருப்பத்துக்காவது அவரைப்பற்றி விமர்சிக்கும்போது கொஞ்சமாவது கண்ணியத்தை கடைப்பிடிக்கவும்.

அந்த கேவலத்தை தமிழ் நாட்டு மக்கள் முதல் உலக தமிழர்களே அறிவர். அதனை வேறு விளாவாரியாக சொல்லவேண்டுமோ? தமிழினத்தின் தானை தலைவன் என்று சொன்னவர் தமிழர்களின் உய்ரை காக்க என வரும் போது மட்டும் பெட்டி பாம்பாக அடங்குவது ஏன்? காங்கிரஸ் காரர் இவரது வண்டவாளத்தை எடுத்து விடுவார்கள் என்ற பயபிராந்தியால் அடங்கி போய் குடும்ப அரசியல் நடாத்துபவர். இவரின் அரசியல் பலத்தினால் பல ஈழமக்களின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். பலர் காயமைடைவதை தடுத்து இருக்கலாம்.(புலிகள் மீது தனிப்பட்ட குரோதம் இருந்த போதும் கூட). தமிழ் நாட்டு மக்கள் வாக்களித்தார்கள் என்பதை விட வாக்களிக்கப்பட்டார்கள் பண பலத்தினால் என்பது தான் சால பொருந்தும். தோல்வியுற்ற சிதம்பரம் மீண்டும் வாக்கு எண்ணப்பட்டு வெற்றி பெற்றாராம். வை. கோவின் தொகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட வாக்களிக்கப்பட்ட வாக்குகள் எப்படி கூடவாக இருக்கும் கணணி முறை மூலம் வாக்களித்தும். இந்திய சன நாயகம் பற்றி அடுத்த பரம்பரை தெரியாமல் இருத்தால் நல்லது என எண்ண தோன்றுகிறது.

இந்த அகந்தை பிடித்த ஓநாயின் வாயில் மறுபடியும் ஈழத்தமிழன்....? ஏமாந்தது போதும். கூட்டணியே கொஞ்சநஞ்சம் இருக்கும் ஆதரவையும் இந்த நரிகளை சந்திப்பதன் மூலம் இல்லாமல் செய்து விடாதீர்கள். வரலாற்றை எடுத்துப் பாருங்கள் என்றாவது இந்த மனிதன் ஈழத்தமிழருக்கு ஆதரவாய் செயல்பட்டிருப்பானா என்பதனை தெரிந்து கொள்வீர்கள். கூட்டணியே உங்களால் ஏதும் உருப்படியாக செய்யமுடியாதென்பது தெரியும். பேசாமல் விட்டுவிடுங்கள். எமது இளைய தலைமுறை செய்யும் என்ற நம்பிக்க மலைபோல உள்ளது. மறந்தும் இந்த அவமானத் தமிழரின் காலில் மறுபடியும் ஈழத்தமிழரை விழ வைக்காதீர்கள்.

ஜானா

முதலமிச்சரின் தனிப்பட்ட அரசியல் விவகாரத்துக்கு இங்கு யாரும் வக்காலத்து வாங்கவில்லை

ஆனால் அவர்கள் ஒரு தேசம் என்றமுறையில் அவர்களுக்கு தங்கள் நாட்டின் அரசியல் மீதோ அல்லது இறயாண்மை மீதோ

இருக்கும் ஆதரவை நாங்கள் சோதிக்கமுடியாது.

ஈழ உறவுகளுக்கு ஆதரவானவர்கள் கூட உங்களின் பேச்சால் புண்படவாய்ப்பிருக்கிறது.

எதையும் குறைத்து மதிப்பிடமுடியாது. இதுக்குமேல் இதைப்பற்றி அலச நான் விரும்பவில்லை

உங்கள் விருப்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.