Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நடேசன், புலித்தேவன் சரணடையும் விடயம் கொல்லப்பட்டு 10 நிமிடத்தின் பின்பே தெரியும் : இராணுவ தளபதி தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடேசன், புலித்தேவன் சரணடையும் விடயம் கொல்லப்பட்டு 10 நிமிடத்தின் பின்பே தெரியும் : இராணுவ தளபதி தெரிவிப்பு

வீரகேசரி நாளேடு 6/1/2009 9:17:49 AM -

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் எஸ்.புலிதேவன் மற்றும் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோர் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடையப்போவதான விடயம் அவர்கள் கொல்லப்பட்டு 10 நிமிடங்களின் பின்னரே தெரியவந்தது. அவர்கள் வெள்ளைக் கொடியோடு வந்து சரணடையப் போவது குறித்த விடயம் சுமார் 7, 8 மணித்தியாலங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தால் அவர்களை உயிரோடு கைது செய்திருப்போம் என்று இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை உயிரோடு பிடிப்பதன் அவசியம் குறித்து நாமும் அறிவோம். அவர்களைக் கைது செய்வதன் மூலம் பல்வேறு விடயங்களை நாம் அறியக்கூடும். அவர்கள் சரணடையப் போவதைத் தெரிவிக்க தாமதமானதே கொல்லப்பட்டதற்கான காரணமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளதாவது : "புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் எஸ்.புலிதேவன் மற்றும் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோர் சரணடைய வந்த போதே படையினர் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர் என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போர் நடவடிக்கைகளின் போது புலி உறுப்பினர்கள் அனைவரும் சுமார் 300 மீற்றர் நிலப்பரப்புக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 17ஆம் திகதி இரவு படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது அவ்வியத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் 18ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்டமையும் உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் கொல்லப்பட்டு 10 நிமிடங்களின் பின்னர் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அவர்களிருவரும் சரணடையப் போவதான விடயத்தினை எனக்குத் தெரிவித்தார். ஆயினும் அதற்குள் படையினரின் துப்பாக்கி ரவைகள் அவர்களிருவரின் உடலைத் துளைத்துவிட்டன. அவர்கள் சரணடையப் போவதை சுமார் 7அல்லது 8 மணித்தியாலங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தால் நாம் அவர்களைக் கைது செய்திருப்போம். சர்வதேச ரீதியில் அரசாங்கத்துக்கு வழங்கப்படும் அழுத்தங்கள் காரணமாக காப்பாற்றப்படுவோம் என்று எண்ணியே அவர்கள் அதுவரையில் சரணடையாமல் இருந்திருக்கலாம். இருப்பினும் அவர்கள் தமது வெள்ளைக் கொடிகளைக் காண்பிக்க தாமதித்து விட்டனர் என்பதே உண்மையாகும்." இவ்வாறு அவர் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவனுக்கு பயம் வர துவங்கிவிட்டுது போல கிடக்கு

பான் கீ மூன்....நம்பியார் .........கோஷ்டி இருக்கும் வரை பயமே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிவரை சரணடைய மாட்டோம் என்று மக்களுக்கு அறிவித்த நடேசன் அண்ணா சரணடையப் போனாரா.. இல்லை போராடி வீழ்ந்தாரா..??!

புலிகள் சரணடைவது அவர்களின் இலட்சியத்துக்குப் புறம்பானது.. அப்படி இருக்க... சரணடைய நடேசன் அண்ணா கேட்டாரா.. மக்களை பாதுகாப்பாக அனுப்ப வழி கேட்டாரா..??!

இறந்தவர்கள் மீளமாட்டார்கள் என்ற துணிவில் சதிகாரர்கள் நல்லாவே கதைகட்டிக் கொண்டிருக்கிறாங்க. புலிகள் மீது மக்களுக்கு சந்தேகத்தை வெறுப்பை ஊட்ட என்றே இவ்வாறான கதைகள் கட்டிவிடப்படுகின்றன..! இவை குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும்..! :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[quote

மக்களை பாதுகாப்பாக அனுப்ப வழி கேட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிவரை சரணடைய மாட்டோம் என்று மக்களுக்கு அறிவித்த நடேசன் அண்ணா சரணடையப் போனாரா.. இல்லை போராடி வீழ்ந்தாரா..??!

புலிகள் சரணடைவது அவர்களின் இலட்சியத்துக்குப் புறம்பானது.. அப்படி இருக்க... சரணடைய நடேசன் அண்ணா கேட்டாரா.. மக்களை பாதுகாப்பாக அனுப்ப வழி கேட்டாரா..??!

இறந்தவர்கள் மீளமாட்டார்கள் என்ற துணிவில் சதிகாரர்கள் நல்லாவே கதைகட்டிக் கொண்டிருக்கிறாங்க. புலிகள் மீது மக்களுக்கு சந்தேகத்தை வெறுப்பை ஊட்ட என்றே இவ்வாறான கதைகள் கட்டிவிடப்படுகின்றன..! இவை குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும்..! :lol:

மர்மங்கள் வெளிவர சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன!

பத்துநிமிடம் அதிகம்

ஒரு வினாடிக்கு பிறகுதான் தெரியும் என்று சொல்லலாம்

இறுதிவரை சரணடைய மாட்டோம் என்று மக்களுக்கு அறிவித்த நடேசன் அண்ணா சரணடையப் போனாரா.. இல்லை போராடி வீழ்ந்தாரா..??!

புலிகள் சரணடைவது அவர்களின் இலட்சியத்துக்குப் புறம்பானது.. அப்படி இருக்க... சரணடைய நடேசன் அண்ணா கேட்டாரா.. மக்களை பாதுகாப்பாக அனுப்ப வழி கேட்டாரா..??!

இறந்தவர்கள் மீளமாட்டார்கள் என்ற துணிவில் சதிகாரர்கள் நல்லாவே கதைகட்டிக் கொண்டிருக்கிறாங்க. புலிகள் மீது மக்களுக்கு சந்தேகத்தை வெறுப்பை ஊட்ட என்றே இவ்வாறான கதைகள் கட்டிவிடப்படுகின்றன..! இவை குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும்..! :lol:

அரசியல் பிரிவினர் சிலர் சரண் அடைவது பற்றி பேசப்பட்டது உண்மைதான்.. ஆயுதங்களை கைவிடுதலின் பின்னர் அரசியல் நடவடிக்கைக்காக சில தலைவர்களை சரணடையுமாறு குறிப்பிடதக்க நாடுகள் சில கோரியதாகவும் அதன் அடிப்படையிலேயே சரண் நிகழ்வு நடந்ததாக சொல்லப்படுகிறது...

அதை இப்போது விடுவோம்...

ஆயுதம் தரிக்காது சிலர் வெள்ளை கொடியுடன் வந்தவர்களை சுட்டு கொண்று இருக்கிறார்கள் என்பதை சரத் பொன்ஸேகா ஒத்துக்கொள்கிறார்.... அதாவது வருவது யார் எண்று தெரியாமல் சுட்டு விட்டார்களாம்...

இதே மாதிரித்தான் வந்த பொது மக்களையும் அடையாளம் காணாமல் சுட்டு கொண்று உள்ளார்கள்... என்பதையும் மறைமுகமாக ஒத்து கொள்கிறார்...

Edited by தயா

சரணடைய வருபவரைச் சுடக் கூடாது என்ற போர் விதியக்ைகூட அறியாதவர்களா இவர்கள் ?

கதைத்து கதைத்தே வாழ்க்கை பின் வாங்குதே

சரணடைய வருபவரைச் சுடக் கூடாது என்ற போர் விதியக்ைகூட அறியாதவர்களா இவர்கள் ?

இது என்ன புதுக்கதை? சொரிலங்க எப்போ விதிமுறைகளைக் கடைபிடித்தது?? அங்கு மகிந்தா, கோத்தா, பொன்ஸ் வைத்து தானே இப்ப சட்டம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரணடைய வருபவரைச் சுடக் கூடாது என்ற போர் விதியக்ைகூட அறியாதவர்களா இவர்கள் ?

அதுதான் அவர்களை மோ....... ............. என்பினம்

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா வானொலிக்கு செல்வராஜா பத்மநாதன் அவர்கள் வழங்கிய செவ்வி

http://www.tamilnaatham.com/interviews20080213.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.