Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னி மிஷன் கப்பல் திருப்பி அனுப்பபட்டது - உணவை கூட மறுக்கும் இலங்கை தமிழனுக்கு உரிமை தரபோகுதாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு: புலம் பெயர்ந் தமிழர்களால் வன்னி தமிழர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்த கப்பலை, அப்படியே திரும்பிப் போய் விடுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

புலம் பெயர்ந்த தமிழர்கள், வன்னிப் பகுதியில் வாடி வரும் தமிழ் மக்களுக்காக உணவு, மருந்து, உடைகள் உள்ளிட்டவற்றை சேகரித்து கேப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலில் (இக்கப்பலுக்கு தமிழர்கள் வணங்கா மண் என்று பெயரிட்டிருந்தனர்) வன்னிப் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

நிவாரணப் பொருட்கள் அடங்கிய இக்கப்பல் வன்னிப் பகுதி கடல் பகுதியில் பிரவேசித்தபோது இதை இலங்கை கடற்படை தடுத்து நிறுத்தி கொழும்புக்குக் கொண்டு சென்றது.

அங்கு கப்பலில் இருந்த 15 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தக் கப்பல் விடுதலைப் புலிகளின் கப்பல் என்றும், இதை அனுமதிக்க முடியாது என்றும் கூறி வந்தது இலங்கை.

இந்த நிலையில் கப்பல் முழுவதையும் சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடத்திய கடற்படையினர், கப்பலில் உணவு, உடை, மருந்துப் பொருட்களைத் தவிர வேறு எதுவும் இல்லாததைக் கண்டு ஏமாந்து போனது.

மேலும் கப்பலில் இருந்தவர்களில் ஒருவர் ஐஸ்லாந்து, ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழர், சிரியா மற்றும் எகிப்தைச் சேர்ந்த 13 ஊழியர்கள் எனவும் கடற்படை கண்டுபிடித்துள்ளது.

இதையடுத்து கப்பல் மீதான இலங்கையின் சந்தேகம் தீர்ந்தது. இதையடுத்து விரைவில் இக்கப்பல் விடுவிக்கப்படும் என கோத்தபாய ராஜபக்சே கூறியிருந்தார்.

இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தக் கப்பலில் அபாயகரமான நோக்கத்துடன் யாரும் இல்லை, எந்தப் பொருளும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

வணங்கா மண் கப்பலில் ஆயுதங்களோ அல்லது தடை செய்யப்பட்ட வேறு பொருட்களோ இல்லை. முழுக்க முழுக்க நிவாரண உதவிப்பொருட்கள்தான் உள்ளன. இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இக்கப்பல் வரவில்லை.

இக்கப்பலில் வந்தவர்கள் செய்த ஒரே தவறு அனைத்துலக கடல் விதிகளை மீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததுதான். இது தொடர்பாக கப்பலில் வந்த பணியாளர்கள் மற்றும் மனித ஆர்வலர்களிடம் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.

இந்த விசாரணை முடிவடைந்த பிறகு அவர்கள் 2 நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்.

இந்த நிலையில் இன்று இக்கப்பலை திரும்பிப் போய் விடுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. நிவாரணப் பொருட்களை இறக்கவும் அது தடை விதித்து விட்டது.

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குச் சென்று நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு பிரான்ஸ் துறைமுகத்திலிருந்து இந்த கப்பல் இலங்கைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி ....................தட்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக, புலம்பெயர் மக்கள் அளித்த நிவாரண பொருட்களுடன் இலங்கை வந்தடைந்த வணங்கா மண் கப்பலை, எவ்வித நிவாரண பொருட்களையும் தரையிறக்கம் செய்யாமலே, நாட்டை விட்டு வெளியேற்றுமாறு சிறிலங்கா அரச அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த கப்பல் முறையான பயண ஏற்பாடுகள் செய்யாது சட்டவிரோதமாக சிறிலங்கா கடற்பரப்புக்குள் நுழைந்ததாக தெரிவித்து, கடற்படையினர் தடுத்து வைத்து சோதனை செய்தனர். கப்பலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அச்சுறுத்தலான ஆயுதங்கள் எவையும் காணப்படவில்லை, என பாதுகாப்பு அமைச்சர் கோத்தயாப ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.சிறிலங்க

வன்னி மிஷன் கப்பல் திருப்பி அனுப்பபட்டது - உணவை கூட மறுக்கும் இலங்கை தமிழனுக்கு உரிமை தரபோகுதாம்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மிஷன் கப்பல் திருப்பி அனுப்பபட்டது - உணவை கூட மறுக்கும் இலங்கை தமிழனுக்கு உரிமை தரபோகுதாம்

இனி....

வன்னிமுகாங்களுக்குள் பட்டினியால்வாடும் மக்களின் இழப்புகளுக்கு....

ஐ.நாவை மட்டுமல்ல

எம்மைக்கூட காரணம் சொல்லமுடியாது

இறுதிக் கட்டப் போரில், ஐ.நா மட்டும் இல்லை, சர்வதேசம் முழுதும் விடுதலைப்புலிகள் மக்களைக் கேடையங்கலகப் பாவிப்பது என்று ஓர் பிரச்சாரத்தைப் பண்ணியது...

இப்போ போர் முடிந்து வாரங்களும் நகர்ந்து கொண்டு போகிறது... அனால் மக்களைக் பாதுகாக்க தான் எந்த ஒரு உலக நாடுகளும் முன் வரவில்லை... புலத்தில் வாழும் மக்களாகிய நாம் தான் இதனை சர்வதேசத்திக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கவேண்டும்... விடுதலை புலிகளை அழித்துவிடோம் என்று ஸ்ரீலங்கா வெற்றி கொண்டையும் விட்டது (சில நேரங்களில் சிங்களவன் சொல்வதை எமக்கு சார்பாக்கிக் கொள்ளவேண்டும்)... அனால் அங்குள்ள மக்களை ஏன் சர்வதேசம் மறந்து விட்டது???

புலத்தில் வாழும் மக்களாகிய நாம் அவர்களுக்கு உணவு மருந்துகளை அனுப்பியும், அதை ஸ்ரீலங்கா திருப்பியனுப்பி, மக்களை பட்டினிச்சாவுக்குத் தள்ளுகிரறது... காலம் கடந்தபின் கண்ணீர் விட்டு பிரியோசனம் இல்லை...உங்கள் நாடுகளில் உள்ள ஊடகங்களில் இதுபற்றிய கருத்துக்களை தயவு செய்து முன்வைத்து அழுத்தம் கொடுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி உங்களுக்கு ஒன்று புரிகிறதா?

உலகெலாம் பரந்து வாழும் தமிழ் மக்களின் தாயக வீச்சையும், அவர்தம் பரப்புரைகளின் வீச்சுகளை கட்டுப்படுத்துவதற்கும் 3 லட்சத்தை அண்மித்த தமிழ் மக்களை இப்போது வதைமுகாம்களுக்குள் அடைத்த நிலையில் சிங்களம் தனது கேடயமாகப் பயன்படுத்தி வருகிறது. தொடர்ந்து உறவுகளின் நிலை என்னவாயிற்று என்று தெரியாத நிலையில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கூட மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவதன் மூலம் பரப்புரைப் போரை மழுங்கடிக்கும் நிலையை சிங்கள அரசு திட்டமிட்டு செய்து வருகிறது.

எல்லோரும் 5 ஆம் கட்டப்போர் என்று ஏதோ இனிமேல் தான் வரப்போவதாகவும், அல்லது அப்படி ஒன்றே அமையப் போவதில்லையென்றும் பேசுகிறார்கள். உண்மையிலேயே இந்தக்குழப்பங்களை நாம் வென்று பரப்புரை ரீதியில் சிங்கள அரசின் முகமூடியைக் கிழித்துக் கொணடிருக்கும் இத்தருணங்களே 5ஆம் கட்ட ஈழப்போராகும். இனிவரப்போவது என்று எதிர்கால ஆருடம் பார்த்து கொண்டிருக்கும் உறவுகளே!, இன்று இத்தருணத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதே 5 ஆம் கட்டம்.

முறைமையற்ற போரியலால் ஏற்பட்ட பின்னடைவை வெற்றியாகத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் சிங்கள அரசுக்கு புலம்பெயர்ந்த தமிழர் இப்போது பெருத்த தலையிடியாக மாறியுள்ளர். இப்புலம் பெயர்ந்த தமிழரை குழப்புவதன் மூலமும், ஒற்றுமையின்மையைத் தோற்றுவிப்பதன் மூலமும்தான் சிங்கள அரசால் இந்த 5ஆம் கட்டப் போரை வெல்ல முடியும்.

இப்போது சிங்களம் எங்கள் மக்களை எங்களின் நியாயமான அறப்போராட்டங்களுக்கு எதிராக கண்ணுக்குப் புலப்படாத மனிதகேடயங்களாக பயன்படுத்தி வருகிறது என்பதை இன்னும் துரிதப்படுத்தியும், அதிகரித்தும் இந்த உலகிற்கு புரியவைக்க வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோரிடமும் அதிகரித்துள்ளது. எங்கள் உறவுகளுக்காக எங்களால் சேகரிக்கப்பட்ட உணவு,மருந்து வகைகளைக் கொடுக்கச் சென்றவர்களையும், கப்பலையும் திருப்பி அனுப்புவதற்கு இவர்கள் யார்? என் பிள்ளைகள், என் பெற்றோர், என் சகோதரர்கள் காயமுற்று வலிசுமந்து ஊனப்படுத்தப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் எடுத்தணைக்க என்னை மறுப்பது என்பது எவ்வகையானது?

Edited by valvaizagara

சிங்கள அரசு பாவித்த அதே வார்த்தையை பாவிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. பயங்கரவாதம் என்ற சொல்லை சிங்கள அரசுக்கு எதிராக சர்வதேசத்ில் நாம் பிரச்சாரம் செய்யவேண்டிய தருணம் இது.

ஆனால் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல யார் இருக்கின்றார்கள்? <_< <_< <_< <_< <_<:(

குட்டி உங்களுக்கு ஒன்று புரிகிறதா?

உலகெலாம் பரந்து வாழும் தமிழ் மக்களின் தாயக வீச்சையும், அவர்தம் பரப்புரைகளின் வீச்சுகளை கட்டுப்படுத்துவதற்கும் 3 லட்சத்தை அண்மித்த தமிழ் மக்களை இப்போது வதைமுகாம்களுக்குள் அடைத்த நிலையில் சிங்களம் தனது கேடயமாகப் பயன்படுத்தி வருகிறது. தொடர்ந்து உறவுகளின் நிலை என்னவாயிற்று என்று தெரியாத நிலையில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கூட மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவதன் மூலம் பரப்புரைப் போரை மழுங்கடிக்கும் நிலையை சிங்கள அரசு திட்டமிட்டு செய்து வருகிறது...

இப்போது சிங்களம் எங்கள் மக்களை எங்களின் நியாயமான அறப்போராட்டங்களுக்கு எதிராக கண்ணுக்குப் புலப்படாத மனிதகேடயங்களாக பயன்படுத்தி வருகிறது என்பதை இன்னும் துரிதப்படுத்தியும், அதிகரித்தும் இந்த உலகிற்கு புரியவைக்க வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோரிடமும் அதிகரித்துள்ளது. எங்கள் உறவுகளுக்காக எங்களால் சேகரிக்கப்பட்ட உணவு,மருந்து வகைகளைக் கொடுக்கச் சென்றவர்களையும், கப்பலையும் திருப்பி அனுப்புவதற்கு இவர்கள் யார்? என் பிள்ளைகள், என் பெற்றோர், என் சகோதரர்கள் காயமுற்று வலிசுமந்து ஊனப்படுத்தப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் எடுத்தணைக்க என்னை மறுப்பது என்பது எவ்வகையானது?

நீங்கள் சொல்வது சரியே...

சிங்கள அரசு பாவித்த அதே வார்த்தையை பாவிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. பயங்கரவாதம் என்ற சொல்லை சிங்கள அரசுக்கு எதிராக சர்வதேசத்ில் நாம் பிரச்சாரம் செய்யவேண்டிய தருணம் இது.

ஆனால் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல யார் இருக்கின்றார்கள்?

சோழன், ஜனனி நனநாயகம் ஐரோப்பியத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலு

  • கருத்துக்கள உறவுகள்

3 இலட்சம் மக்களை பலவந்தமாக மனிதக் கேடயங்களாக சிறிலங்கா பயங்கரவாத அரசானது தடுத்து வைத்திருக்கிறது.அவர்களுக்கு அவர்களின் உறவுகள் அனுப்பிய உணவுப் பொருட்களைக் கூட அனுமதிக்காத அரசு எப்படி அந்த மக்களைக் பராமரிக்கும் என்ற உண்மையை உலகத்திற்கு புலம் பெயர்ந்த மக்களாகிய நாம் புரிய வைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உணவுக்கப்பல் திருப்பி யனுபியத்தில் இருந்தே தெரியவேண்டாமா ? லங்காபுரியின் காருண்யம். உலகம் தரும் நன்கொடை .......வேண்டுமாம் சொந்த ரத்தம் அனுப்பும் உதவி .....நஞ்சா ? இவர்களெல்லாம்.....மனிதமே இல்லாதவர்கள். இவர்களை எப்படி நம்பமுடியும். முட்கம்பி வேலி அகதி வாழ்வு இன்னும் எத்தனை காலம்........?.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.