Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழக்கொடியில் துவக்கும் சன்னங்களும் இருப்பது சரியா? பிழையா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத் தேசியக்கொடியில் இன்றைய உலகத்தின் படைக்கலமான துவக்கும், சன்னங்களும் இருப்பது கூடாது என்றும் அது சரியல்ல என்றும் சில தமிழர்களும், வேறு இன மக்களும் ஒரு பிழையை உருவாக்க முனைகின்றனர்

இவர்களுக்கு சில விளக்கத்தை கொடுக்கலாம் என்றுதான் இவ்விபரம் தரப்படுகின்றது.

அதாவது நாட்டின் தேசியக்கொடிகள் கால நீரோட்டத்தோடு சுதந்திரப்போராட்டம் தொடங்கிய அந்த அந்த காலத்திற்கு ஏற்ப உருவாக்கப்படுகின்றது. இதன்படி எடுத்துப்பார்த்தால் முன்னைய சுதந்திரமான நாடுகளின் சில கொடிகளில் அம்பு, வில்லு, வாள், கேடயம் போன்ற கருவிகள் இருக்கின்றன. இது அந்த அந்தக் காலங்களில் எப்படியான ஆயுதம் கொண்டு சண்டையிட்டார்களோ அதை தங்கள் கொடிகளில் சின்னமாகப்பதிந்தார்கள். உதாரணத்திற்கு சிங்களச் சிறீலங்காவின் கொடியில் சிங்கம் வாள் ஏந்தி தமிழர், முஸ்லீம் மக்களைக்குறிக்கும் நிறங்களான பச்சை, ஆரஞ்சுக் நிறங்களுக்கு எச்சரிக்கை செய்வது போல் இருக்கின்றது. இது போல வேறு பல நாடுகளின் கொடிகளிலும் இப்படிச்சின்னங்கள் இருக்கின்றது.

யாராவது சிங்கக்கொடி அப்படி இருப்பது பற்றி கேட்டார்களா? ஆனால் தமிழ் தேசியக்கொடியை ஏன் இப்படி விமரிசிக்கின்றார்கள். ஈழப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் ஒருவரும் வாளாலும், அம்பு வில்லாலும் போர் புரியவில்லை. ஈழப்போராட்டம் தொடங்கியகாலம் போர்ப்படைக்கலம் துவக்குத்தான். அதனால் அதைச் சேர்த்தார்கள். இதைப்பிழையென்று யாரும் விமரிசிக்க இயலாது.

சிலர் புலி பயங்கரமாக உள்ளது என்கிறார்கள். ஏன் சிங்கம், கழுகு உள்ள கொடிகள் பயங்கரமாக இல்லையா?

இனிவரும் காலங்களில் சுதந்திரத்துக்காக போராடும் இனங்கள் மிசையில்ஸ், அணுகுண்டு, ஏவுகணை என்பனவும் கொடிகளில் வரலாம். அந்தக்காலத்தில் எது பிரபல்யமாக உள்ளதோ அது கொடியில் வரும்.

ஆகையால் ஈழக்கொடியில் பிழை பிடிக்க முயலாதீர்கள். இது அவதூறுக்காக சிலர் செய்யும் விதண்டா வாதம்.

அல்லது வரலாறு தெரியாதவர்கள் அல்லது மற்றைய நாட்டுக்கொடிகளை தெரியாதவர்கள். அப்படி விமரிசிப்பது ஆனால் சிங்கக்கொடியையும் விமரிசியுங்கள்.

குறைகாணுவதை நிறுத்தி ஈழத்தேசியக்கொடியை உயர்த்தி பெருமையுடன் பிடியுங்கள். ஈழக்கொடி உலகக் கொடூரர்களால்; கசக்கமுடிந்ததே தவிர கிழிக்கப்படவும் இல்லை, எரிக்கப்படவும் இல்லை.

நன்றி திரும்பவும் ஈழக்கொடி நிமிர்ந்து பறக்கும். நீதிக்கு இது ஒரு போராட்டம் நிச்சயம் வெல்லும். "தருமத்தை சூது வெல்லும். மீண்டும் தருமம் வெல்லும்" புரட்சிக்கவி பாரதி

தமிழீழத் தேசியக்கொடி பற்றி உங்கள் கருத்தே எனது கருத்தும், அண்ணா ...

பல்வேறு இனங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டின் தேசியக் கொடியில் ஒரு சிங்கம் வாளோடு இருபது சரியானால்... அந்த நாட்டில் தம் சொந்த இனத்தின் விடுதலைக்காக உருவாகிய இயக்கத்தின் கொடியில் புலி இருப்பதோ, இல்லை துப்பாக்கிகள் இருப்பதோ, சன்னங்கள் இருப்பதோ எந்தவிதத்தில் பிழை?

புலிகளைத் தோற்கடித்து விட்டார்கள் தானே... இனி எதற்கு தமிழ் தேசியக் கொடியில் புலி என்று (முட்டாள் தனமா) ஆராட்சி பண்ணி இருப்பார்கள் போல... தமிழ் தேசியக் கொடியில் உள்ள புலியை வேண்டம் என்று சொல்லிப் போட்டு சோற்றுப் பாசல் சின்னமா தேசிய கொடியில் போடப் போகிறார்கள்? smiley-angry009.gif

  • கருத்துக்கள உறவுகள்

அந்தந்த இனங்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக தான் தேசிய கொடி இருக்க வேண்டும்.எம்மை பொறுத்த மட்டில் நாம் ஒடுக்கப்பட்ட மக்கள், ஒடுக்கும் இனத்துக்கு எதிராக போராடும் இனம் , ஆயுதபோராட்டத்தின் மூலம் தீர்வை பெற போராடிய போராடவேண்டிய நிலையில் உள்ள மக்கள் என்ற வகையில் துவக்கும் சன்னங்களும் இருப்பது சரி என நினைக்கிறேன். பல நாட்டு கொடிகளில் வாள், அம்பு, AK47 என உண்டு.அதற்காக அவர்கள் வன்முறையை விரும்புகிறார்கள் என்று அர்த்தமாகாது. சிறிலங்கா அதற்கு விதிவிலக்கு தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகையால் ஈழக்கொடியில் பிழை பிடிக்க முயலாதீர்கள். இது அவதூறுக்காக சிலர் செய்யும் விதண்டா வாதம்.

அல்லது வரலாறு தெரியாதவர்கள் அல்லது மற்றைய நாட்டுக்கொடிகளை தெரியாதவர்கள்.

அப்படி விமரிசிப்பது ஆனால் சிங்கக்கொடியையும் விமரிசியுங்கள்......................

இந்த கருத்து தான் மெத்தச்சரி. இது விதண்டா வாதம் இதில் நேரம் செலவிடுவது வீண் வேலை......இதை விட வேறு பயனுள்ள

வேலை பார்ப்பது நன்று.........

நாமே நமது மான்புமிக்க தேசியக்கொடியைப் பற்றி விமர்சிப்பது, விவாதிப்பது நம்மை நாமே தாழ்த்திக் கொள்வதற்குச் சமனாகும். இதன் மூலம், நமது தேசத்தினையும் நம்மையும் நாமே அவமதிக்கின்றோம்.

இப்படியான தேவையற்ற ...

சரியா? பிழையா?... இருக்கின்றாரா? இல்லையா? என்ற கருத்து விவாதங்களைத் தவிர்த்து, நமது வரலாற்றுக் கடமையினைத் தவறாது, தொடர்ந்து செய்வோம்.

எவையெவை எப்பொழுது நடக்க வேண்டுமோ... அவை அப்பொழுது நடக்கும்.

கலக்கம் வேண்டாம்.

நாம் நமது தேசத்தின் விடுதலைக்காய்த் தொடர்ந்து போராடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எதிரி களத்திலே வென்றாலும், தமிழரது மனங்களில் பதிந்துள்ள தேசிய அடையாளங்கள் பெரும் இடையூறாக இருக்கிறது. எனவேதான் அவனது தாக்குதல் எமது தேசிய அடையாளங்கள் மீது திரும்பியுள்ளது.எமது இனத்தினது மீள் எழுச்சியின் வடிவமாகவும் பல்லாயிரக் கணக்கான மாவீர்களதும், மக்களதும் குருதியாலும், வியர்வையாலும் உருவாகி தேசியக் கொடியினை தன்பாட்டில் விடுங்கள். எனவே இது தொடர்பாகத் தமிழினம் விழிப்புடன் இருக்க வேண்டியது மட்டுமன்றி எமது இல்லங்களில் இவற்றை நாம் எமது பார்வைக்குத் தெரியும் விதமாக, அவற்றைச் சட்டகங்களில் போட்டுக் கொழுவி வைக்க வேண்டும்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனுக்கு அடையாளமே புலிக்கொடிதானே.....

மாண்ட வீரர் கனவுகள் புலிக்கொடியுடனே நனவாக வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.