Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த காலங்களில் நடந்து முடிந்த கசப்பான அரசியல் அனுபவங்களை மறந்து, அரசியல் முரண்பாடுகளை களைந்து நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் -EPDP டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

இயக்கமே, துரோகி என்ற வார்த்தைகளைப் பல ஆண்டுகளாகப் பாவிப்பதில்லை. ஒட்டுக்குழு என்று தான் பாவித்து வந்தது. மகிந்தவுடன் சேர்ந்து நிற்கின்ற ஒருவனால், எப்படி என்ன செய்து விட முடியும்??? அது தான் கேள்வியே தவிர, துரோகிப்பட்டம் சூட்டுவது என் வேலையல்ல

யாழ்ப்பாணத்திலை டக்கிளஸ் தனது அமைச்சு மூலம் ரோட்டுகள் போட்டு இருக்கும் போது அதிலை துரோகி( உங்கள மொழியிலை ஒட்டு குழு ) போட்ட ரோட்டு அதாலை போக மாட்டன் எண்டா சொன்னீர்கள்... இல்லை தமிழரை கொல்லும் இலங்கை அரசாங்கம் கொடுக்கும் சம்பளம் வாங்கும் ஆசிரியர்களிட்டை கல்வி கற்க மாட்டன் எண்டுதான் சொன்னீர்களா...??? அங்கை எல்லாம் விட்டு கொடுப்போடைதானே இருந்தீர்கள்...

இப்படி எல்லாத்துக்கும் வளைஞ்சு குடுத்து போட்டு ஒட்டு குழுவுக்கு ஆதரவு இல்லை எண்டு சொல்லுறது எந்த வகையிலை சேர்க்கிறது...???

வீரம் எல்லாம் காலம் கடந்து வந்து இருக்கிறது... முந்தி எல்லாம் தமிழ் மக்களுக்கு பெரிய அரணாக புலிகள் இருந்தார்கள் அந்த நிலை இப்போது இல்லை... அப்போ நிமிர்ந்து நிக்காதவர்கள் இப்ப நிக்க வேணும் எண்டு அடம் பிடிக்கிறது நல்லதுக்கு இல்லை...

Edited by தயா

  • Replies 185
  • Views 13.2k
  • Created
  • Last Reply

நாங்கள் வெளிநாட்டுல இருந்து மூக்குமுட்ட கொட்டிதிண்டுகொண்டு கொண்டு நல்ல ரோசக்காரராய் இருக்கிறம். மற்றவனை பார்த்து சோத்துக்கு உப்பு போட்டு சப்பிடுறனீயோ எண்டு கேட்கிறம். ஆனால் தாயகத்தில அங்க சனம் யார் எதைக்குடுத்தாலும் வாங்கிற நிலமையில இருக்கிதுகள். அதுகளுக்கு அது டக்லஸ் மூலம் கிடைக்கிதோ கருணா மூலம் கிடைக்கிதோ மகிந்தமூலம் கிடைக்கிதோ இல்லாட்டிக்கு சோனியா மூலம் கிடைக்கிதோ எண்டு இல்லை. அதுகளுக்கு தேவை தங்கட தேவைகள் நிறைவேற்றப்படவேணும்.

யார் குத்தின அரிசி எண்டு நாங்கள் ரோசத்தோட பாத்து சாப்பிடலாம். ஆனால்.. தாயகத்தில் சனம் அப்படியான நிலமையில இல்லை எண்டுறதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறம். ஏன் எண்டால் எங்களுக்கு வயித்துக்கு கொட்டிறதுக்கு எல்லாம் இஞ்ச தாராளமாய் கிடைக்கிது தானே.

யாழ்ப்பாணத்து செய்திகளை வாசித்தால்... சனங்களிண்ட மனநிலையை புரிஞ்சு கொள்ளக்கூடியதாக இருக்கிது.

நாங்கள் இப்பிடித்தான் இந்திய இராணுவம் இருந்த காலத்தில கூட இருந்தம். அவன் செய்யிற அக்கிரமம் எல்லாம் செய்தான். ஆனால் அவனிட்ட அடிவாங்கிக்கொண்டே அவன் தார அரிசிக்கும், பருப்புக்கும், மாவுக்கும் சனங்கள் எல்லாருமே நீண்டவரிசையில நிக்கிறது. ஒருநாள் காலம்பற அரிசி கிடைக்கும். அடுத்தநாள் காலம்பற அடி கிடைக்கும்.

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் எண்டு சொல்லுவீனம். புலம்பெயர் தமிழர் எங்களுக்கு நாங்கள் கொஞ்சநாளைக்காவது பட்டினி கிடக்காதவரை இப்பிடித்தான் ரோசம் பொங்கக் கதைப்பம்.

Edited by கலைஞன்

நாங்கள் வெளிநாட்டுல இருந்து மூக்குமுட்ட கொட்டிதிண்டுகொண்டு கொண்டு நல்ல ரோசக்காரராய் இருக்கிறம். மற்றவனை பார்த்து சோத்துக்கு உப்பு போட்டு சப்பிடுறனீயோ எண்டு கேட்கிறம். ஆனால் தாயகத்தில அங்க சனம் யார் எதைக்குடுத்தாலும் வாங்கிற நிலமையில இருக்கிதுகள். அதுகளுக்கு அது டக்லஸ் மூலம் கிடைக்கிதோ கருணா மூலம் கிடைக்கிதோ மகிந்தமூலம் கிடைக்கிதோ இல்லாட்டிக்கு சோனியா மூலம் கிடைக்கிதோ எண்டு இல்லை. அதுகளுக்கு தேவை தங்கட தேவைகள் நிறைவேற்றப்படவேணும்.

சில விசயத்தை மீண்டும் நினைச்சு பாக்கேக்கை எங்கட ஆக்கள் எவ்வளவு ஈனமானவர்கள் என்பது புரியுது...

இப்பிடித்தான் 1996 ல ஆமிக்காறன் அச்சுவேலிக்காலை உடைச்சு கொண்டு வந்து ஆவரங்காலிலை நிக்கிறான் அவனை மறிக்க புலிகளாலை அனுப்ப பட்ட போராளிகள் வெறும் 650 பேர்.. கிட்டத்தட்ட சாப்பாடு தண்ணி இல்லாமல் சண்டை .. காயப்பட்டவர்கள் எல்லாம் போக அந்த இடத்துக்கு கொஞ்ச போராளிகளை அனுப்பி வைக்கிறார்கள். எல்லாம் முடிஞ்சு யாழ்ப்பாணம் முழுவதும் இராணுவம் கட்டுக்கை கொண்டு வருகிறான்... தாக்கு பிடிச்சு நிண்ட போராளிகள் எல்லாம் திரும்பி போகிறார்கள்.. வெளிய போய் கணக்கெடுத்து போட்டு சொல்கிறார்கள் கிட்டத்தட்ட 400 போராளிகள் வரைக்கும் வீரச்சாவடைந்து இருந்தனர்...

அந்த வேளை யாழ் மாவட்டத்துக்கை இருந்த மக்கள் தொகை 6 லச்சத்துக்கும் மேலை... இளவயதினர் 2 லச்சத்துக்கும் மேலை இருந்தனர்... அதிலை ஒரு பத்து வீதத்தினர் கூட வீழ்ந்து போன போராளிகளின் இடத்தை நிரப்ப முன் வரவில்லை... இதுக்கை எல்லாருக்கும் யாழ்ப்பாணத்தை புலிகள் கைவிட்டதிலை சரியான மன வருத்தம்...

உந்த சண்டைக்கு போன போது எனது நன்பனின் அக்கா யாழ் மருத்துவ பீட இறுதியாண்டு மாணவி காயம் அடைந்த போராளிகளின் முதலுதவிக்காக உதவிக்கு எண்டு வந்து இருந்தவர் நாங்கள் திரும்பி வரும் போதும் மருத்துவ முகாமில் சேவையில் இந்தார்... என்னை கண்டது ஆவலாக பாத்து மகிழ்ச்சியாக சிரித்தார்... அவரை இயக்க மருத்துவ முகாமில் பார்த்தது எனக்கும் மகிழ்ச்சி.. அவரிடம் போய் கேக்கிறன் என்ன அக்கா களைச்சு போனீங்கள் போல கிடக்கு... ஓமடா நல்ல வேலை எண்டு எனக்கு பதில் சொன்னா... என்ன நீங்கள் தனியவா நிக்கிறீர்கள் எண்டு நான் கேட்க்க அவர் சொன்னார் எங்கட மாணவர்கள் பத்து பேர்தான் வந்தனாங்கள் இப்ப மூண்டு பேர்தான் நிக்கிறம்...

இதே காலப்பகுதியில் யாழ் பல்களைக்களகத்தில் 250 பேருக்கும் மேல் மருத்துவ பீட மாணவர்கள்... இதில் போராளிகளுக்கு முதலுதவி செய்ய வர மனம் இருந்தது வெறும் 10 பேருக்குதான்...

இதுதான் எமது மக்களின் நிலைப்பாடு... யாராவது போராட வேண்டும் யாராவது எதையாவது பெற்றுத்தர வேண்டும்.... மற்றவர்கள் சந்தோசமாக இருக்க வேண்டும்.. இப்படியே பழகிப்போச்சு...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

"உணர்வுகளை கட்டுபடுத்தி அறிவை பயன்டுத்த இனியாவது கற்றுகொள்ளுங்கள்"

என்று ஒரு சகோதர உறவு மேலே எழுதியுள்ளது அதை எனது பல யாழ்கள நண்பர்களும் இதுவே யதார்த்தம் அப்பிடியே பற்pட வேண்டும் என எழுதுகிறார்கள். இவர்கள் எல்லாவற்றையும் விழங்கி எழுதுகிறாகளா இல்லை எனக்கு சரியாக அவர்கள் கருத்து வியங்கவில்லையா தெரியாது. எனது அறிவுக்கு எட்டிய அளவிற்கு இவர்கள் இப்படி சொல்கின்றார்கள். எனது மனைவியை புணர வந்த கொடூர புத்தியுள்ள புனிதர்களை நான் எதிர்க்க கூடாதம் காரணம் எனது சூழ்நிலையை நான் புரிந்துகொள்ள வேண்டுமாம். உணர்வை கட்டுபடுத்தி அறிவின்பால் அவர்கள் எனது மனைவியை வல்லுறவு கொள்ளும் கலையை நான் ரசிக்க வேண்டுமாம். நிற்சயமாக எனது மனைவிக்கும் சுகம் கிடைக்குமென்றும் அப்படி பேரின்பம் இல்லாவிடினும் தற்போதைய நிலையிலும் அது மேன்மையான சுகத்தை அவள் பெறுவாள் என்றும் உறுதி தருகிறார்கள். இதை எடுத்த எடுப்பில் கேடுகெட்ட வார்த்தைகள் என்று என்னால் சொல்விட முடியவில்லை காரணம் என்னை நோக்கி அவர்கள் கேட்கும் கேள்வி வவுனியாவில் உள்ள மக்கள் நிலை உமக்கு தெரியுமோ என்பதுதான்? உண்மையில் நான் அந்த சூழ்நலைக்குள் இல்லைத்தான் ஆனால்...........? இதிலும் கேடுகெட்ட நிலைக்குள் எனது தங்கைகளை..... விலைபேசி விற்பதிலும் விட தங்கைகளே நீங்களாகவே இறந்துவிடுங்கள் என்று சொல்லிடத்தான் தோன்றுது. எனது நெஞ்சை தொட்டு சொல்கிறேன் எனது தங்கைகள் முள்ளிவாய்க்காலில் இறக்கவில்லையே என்ற கவலைதான் இப்போது எனக்கு மட்டுமல்ல.... நான் கதைத்த போது தங்கைகளுக்கும் அதுதான். நல்லவன் எல்லாம் விடியும் விடியும் என்று விடியல் தேடி சென்றுவிட்டார்...... இனி மிஞ்சிய இந்த துரோகிகளுடன்... மன்னிக்கவும் கைதவறி எழுதிவிட்டேன் அரசியல் ஞானிகளுடன் எம்மக்காள் வாழ ஒரு வாழ்வுமுண்டா?

நாங்கள் வெளிநாட்டுல இருந்து மூக்குமுட்ட கொட்டிதிண்டுகொண்டு கொண்டு நல்ல ரோசக்காரராய் இருக்கிறம். மற்றவனை பார்த்து சோத்துக்கு உப்பு போட்டு சப்பிடுறனீயோ எண்டு கேட்கிறம். ஆனால் தாயகத்தில அங்க சனம் யார் எதைக்குடுத்தாலும் வாங்கிற நிலமையில இருக்கிதுகள். அதுகளுக்கு அது டக்லஸ் மூலம் கிடைக்கிதோ கருணா மூலம் கிடைக்கிதோ மகிந்தமூலம் கிடைக்கிதோ இல்லாட்டிக்கு சோனியா மூலம் கிடைக்கிதோ எண்டு இல்லை. அதுகளுக்கு தேவை தங்கட தேவைகள் நிறைவேற்றப்படவேணும்.

யார் குத்தின அரிசி எண்டு நாங்கள் ரோசத்தோட பாத்து சாப்பிடலாம். ஆனால்.. தாயகத்தில் சனம் அப்படியான நிலமையில இல்லை எண்டுறதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறம். ஏன் எண்டால் எங்களுக்கு வயித்துக்கு கொட்டிறதுக்கு எல்லாம் இஞ்ச தாராளமாய் கிடைக்கிது தானே.

யாழ்ப்பாணத்து செய்திகளை வாசித்தால்... சனங்களிண்ட மனநிலையை புரிஞ்சு கொள்ளக்கூடியதாக இருக்கிது.

நாங்கள் இப்பிடித்தான் இந்திய இராணுவம் இருந்த காலத்தில கூட இருந்தம். அவன் செய்யிற அக்கிரமம் எல்லாம் செய்தான். ஆனால் அவனிட்ட அடிவாங்கிக்கொண்டே அவன் தார அரிசிக்கும், பருப்புக்கும், மாவுக்கும் சனங்கள் எல்லாருமே நீண்டவரிசையில நிக்கிறது. ஒருநாள் காலம்பற அரிசி கிடைக்கும். அடுத்தநாள் காலம்பற அடி கிடைக்கும்.

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் எண்டு சொல்லுவீனம். புலம்பெயர் தமிழர் எங்களுக்கு நாங்கள் கொஞ்சநாளைக்காவது பட்டினி கிடக்காதவரை இப்பிடித்தான் ரோசம் பொங்கக் கதைப்பம்.

சரி அவன் செய்யட்டுமே ஏன் புலம் பெயர்தமிழரை அவன் கேட்கிறான், உள்நோக்கம் என்ன?

அவன் பெற்று தரும் தமிழீழ அரசை எதிர்க்க போறோமா? அல்லது நிவாரணம் வாங்க வேண்டாம் என்று சொல்கிறோமா ?

ஏன் எங்களை இதற்குள் போட்டு குழப்புகிறான்.

சரி போராடினவை போனாப்பிறகு நாங்க எங்களால் ஆன வழியில எதோ செய்கிறம். எங்கள விட வேண்டியது தானே

"உணர்வுகளை கட்டுபடுத்தி அறிவை பயன்டுத்த இனியாவது கற்றுகொள்ளுங்கள்"

என்று ஒரு சகோதர உறவு மேலே எழுதியுள்ளது அதை எனது பல யாழ்கள நண்பர்களும் இதுவே யதார்த்தம் அப்பிடியே பற்pட வேண்டும் என எழுதுகிறார்கள். இவர்கள் எல்லாவற்றையும் விழங்கி எழுதுகிறாகளா இல்லை எனக்கு சரியாக அவர்கள் கருத்து வியங்கவில்லையா தெரியாது. எனது அறிவுக்கு எட்டிய அளவிற்கு இவர்கள் இப்படி சொல்கின்றார்கள். எனது மனைவியை புணர வந்த கொடூர புத்தியுள்ள புனிதர்களை நான் எதிர்க்க கூடாதம் காரணம் எனது சூழ்நிலையை நான் புரிந்துகொள்ள வேண்டுமாம். உணர்வை கட்டுபடுத்தி அறிவின்பால் அவர்கள் எனது மனைவியை வல்லுறவு கொள்ளும் கலையை நான் ரசிக்க வேண்டுமாம். நிற்சயமாக எனது மனைவிக்கும் சுகம் கிடைக்குமென்றும் அப்படி பேரின்பம் இல்லாவிடினும் தற்போதைய நிலையிலும் அது மேன்மையான சுகத்தை அவள் பெறுவாள் என்றும் உறுதி தருகிறார்கள். இதை எடுத்த எடுப்பில் கேடுகெட்ட வார்த்தைகள் என்று என்னால் சொல்விட முடியவில்லை காரணம் என்னை நோக்கி அவர்கள் கேட்கும் கேள்வி வவுனியாவில் உள்ள மக்கள் நிலை உமக்கு தெரியுமோ என்பதுதான்? உண்மையில் நான் அந்த சூழ்நலைக்குள் இல்லைத்தான் ஆனால்...........? இதிலும் க

  • கருத்துக்கள உறவுகள்

கல்மடு செய்திக்கு பிறகு,டக்கியின் அறிக்கைக்குத்தான் அதிக பதில் கருத்து எழுதியுள்ளனர் உறவுகள்

இதெல்லாம் ஒரு திருப்பு முனையென எங்கள் உறவுகள் கருதுவதனாலோ என்னமோ?

கல்மடு செய்திக்கு பிறகு,டக்கியின் அறிக்கைக்குத்தான் அதிக பதில் கருத்து எழுதியுள்ளனர் உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

சில விசயத்தை மீண்டும் நினைச்சு பாக்கேக்கை எங்கட ஆக்கள் எவ்வளவு ஈனமானவர்கள் என்பது புரியுது...

இப்பிடித்தான் 1996 ல ஆமிக்காறன் அச்சுவேலிக்காலை உடைச்சு கொண்டு வந்து ஆவரங்காலிலை நிக்கிறான் அவனை மறிக்க புலிகளாலை அனுப்ப பட்ட போராளிகள் வெறும் 650 பேர்.. கிட்டத்தட்ட சாப்பாடு தண்ணி இல்லாமல் சண்டை .. காயப்பட்டவர்கள் எல்லாம் போக அந்த இடத்துக்கு கொஞ்ச போராளிகளை அனுப்பி வைக்கிறார்கள். எல்லாம் முடிஞ்சு யாழ்ப்பாணம் முழுவதும் இராணுவம் கட்டுக்கை கொண்டு வருகிறான்... தாக்கு பிடிச்சு நிண்ட போராளிகள் எல்லாம் திரும்பி போகிறார்கள்.. வெளிய போய் கணக்கெடுத்து போட்டு சொல்கிறார்கள் கிட்டத்தட்ட 400 போராளிகள் வரைக்கும் வீரச்சாவடைந்து இருந்தனர்...

அந்த வேளை யாழ் மாவட்டத்துக்கை இருந்த மக்கள் தொகை 6 லச்சத்துக்கும் மேலை... இளவயதினர் 2 லச்சத்துக்கும் மேலை இருந்தனர்... அதிலை ஒரு பத்து வீதத்தினர் கூட வீழ்ந்து போன போராளிகளின் இடத்தை நிரப்ப முன் வரவில்லை... இதுக்கை எல்லாருக்கும் யாழ்ப்பாணத்தை புலிகள் கைவிட்டதிலை சரியான மன வருத்தம்...

உந்த சண்டைக்கு போன போது எனது நன்பனின் அக்கா யாழ் மருத்துவ பீட இறுதியாண்டு மாணவி காயம் அடைந்த போராளிகளின் முதலுதவிக்காக உதவிக்கு எண்டு வந்து இருந்தவர் நாங்கள் திரும்பி வரும் போதும் மருத்துவ முகாமில் சேவையில் இந்தார்... என்னை கண்டது ஆவலாக பாத்து மகிழ்ச்சியாக சிரித்தார்... அவரை இயக்க மருத்துவ முகாமில் பார்த்தது எனக்கும் மகிழ்ச்சி.. அவரிடம் போய் கேக்கிறன் என்ன அக்கா களைச்சு போனீங்கள் போல கிடக்கு... ஓமடா நல்ல வேலை எண்டு எனக்கு பதில் சொன்னா... என்ன நீங்கள் தனியவா நிக்கிறீர்கள் எண்டு நான் கேட்க்க அவர் சொன்னார் எங்கட மாணவர்கள் பத்து பேர்தான் வந்தனாங்கள் இப்ப மூண்டு பேர்தான் நிக்கிறம்...

இதே காலப்பகுதியில் யாழ் பல்களைக்களகத்தில் 250 பேருக்கும் மேல் மருத்துவ பீட மாணவர்கள்... இதில் போராளிகளுக்கு முதலுதவி செய்ய வர மனம் இருந்தது வெறும் 10 பேருக்குதான்...

இதுதான் எமது மக்களின் நிலைப்பாடு... யாராவது போராட வேண்டும் யாராவது எதையாவது பெற்றுத்தர வேண்டும்.... மற்றவர்கள் சந்தோசமாக இருக்க வேண்டும்.. இப்படியே பழகிப்போச்சு...

தயா

தயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள்

எங்கே பிழை என்று கேட்பவர்களுக்கு உங்களிடம் ஆதாரமுள்ளது

தொடர்ந்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் 2003இல் மிகமிகமகிழ்ச்சியுடன் ஊர் சென்று

மிகமிக துக்கத்துடன் திரும்பினேன்

திரும்பிவரும்போது

சம்பந்தப்பட்டவர்களைச்சந்தி

கல்மடு செய்திக்கு பிறகு,டக்கியின் அறிக்கைக்குத்தான் அதிக பதில் கருத்து எழுதியுள்ளனர் உறவுகள்

தாயகத்தில் சனங்களின் அவலங்கள் அவ்வளவுக்கு எங்களை மாற்றிவிட்டது புத்தன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.