Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசயம் தெரிந்தவர்களிடம் இருந்து விளக்கம் தேவை தேவை தேவை

Featured Replies

வணக்கம்,

யாழ் உறவு ஒருவரின்ட கையெழுத்தில காணப்பட்ட கீழ்வரும் கருத்து சிறிது நேரம் அல்ல.. நீண்டநேரம் என்னை சிந்திக்க வைத்தது. இதை வாசிக்க உங்களுக்கு என்ன தோன்றுது என்று ஒருக்கால் சொல்லுங்கோ:

''உனை அழவைக்கும் உறவு

உன் உறவுக்குத் தகுதியற்றது

உன் அழுகைக்கு தகுதியான உறவு

உனை ஒருபோதும் அழ விடாது

உறவை நினைத்து அழாதே.''

மேலுள்ள கருத்தை எங்கட தனிப்பட்ட வாழ்வில இருக்கிற பல்வேறுவிதமான உறவுநிலைகளில இருந்து - சமூகம், நாடுவரை சீர்தூக்கி ஒப்பிட்டு பார்க்கலாம். உங்களுக்கு விளங்கியதை சொல்லுங்கோ.உங்கள் விளக்கங்களிற்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வரிகள் என்னயும் கவர்ந்தவை . இறந்த பின் எவருக்காக அழுகிறோமோ

அவர்கள் உன் வாழ்வில் முக்கியமானவர்கள்.

ஏழை ........அழுத கண்ணீர் கூரிய வாள் போன்றது ........

பிறரை அழ வைக்காதே இறைவன் அவன் கண்ணீரை அளந்து பார்பான்.

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

ஆட்கள் உயிரோட இருக்கும்போது நல்லாய் அழவைத்து அழகுபார்த்துப்போட்டு அவையள் இல்லாதநேரத்தில ஐயோ எண்டு தலையில அடிச்சு ஏங்கி அழுவுற நிலமையும் இருக்கிதுதானே நிலாமதி அக்கா.

''உனை அழவைக்கும் உறவு

உன் உறவுக்குத் தகுதியற்றது

உன் அழுகைக்கு தகுதியான உறவு

உனை ஒருபோதும் அழ விடாது

உறவை நினைத்து அழாதே.''

மேலால இதை வாசிக்கேக்க உடனடியாக மனதில தோன்றுகின்ற எண்ணங்கள் தவிர, இதைக்கொஞ்சம் ஆழமாய் பார்க்கேக்க - வாழ்க்கையிண்ட ஒவ்வொரு சூழ்நிலைகள், சம்பவங்கள், வெவ்வேறு உறவுநிலைகள் என்று பார்க்கேக்க இன்னும்பல விசயங்களை யோசிக்கவேண்டி இருக்கிது:

மேலும், மேல இருக்கிறதை இப்பிடி மாத்தினால் எப்பிடி இருக்கும்?

"நான் அழவைக்கின்ற உறவு

என் அழுகையை நிறுத்தக்கூடியது?

என்னுடன் சேர்ந்து அழுகின்ற உறவு

என் அழுகையை நிறுத்தமுடியாதது?

என்னை நினைத்து நான் அழுவேனாக!''

  • கருத்துக்கள உறவுகள்

என்னை நினைத்து நான் அழுவேனாக

என்னை நினைத்து நான் அழுவேனாக....ஒருத்தன் தன்னை நினைத்து ஏன் அழுவான் ?என்னால் இன்னோருவனுக்கு தீங்கு வந்தால் அதை நான் உணர்ந்து அழலாம் மற்றும் படி சும்மா என்னையை நினைத்து நான் அழவேண்டிய அவசியம் என்ன?

சுயமாக ஒருத்தன் வாழ்ந்தால் இப்படியான சிந்தனை வராது என்று நினைக்கிறன் .நாம் எமது வாழ்வில் மற்றவர்களுக்காக வாழ்வது அதிகம்

"நான் அழவைக்கின்ற உறவு

என் அழுகையை நிறுத்தக்கூடியது?

நான் மகிழ்சிஅடைகிறன் அதானல் என் அழுகை நிக்கிறது

என்னுடன் சேர்ந்து அழுகின்ற உறவு

என் அழுகையை நிறுத்தமுடியாதது

இருவருக்கும் சோகம்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விளங்கியதில் ................

உனை அழவைக்கும் உறவு

உன் உறவுக்குத் தகுதியற்றது

பிரச்சினை தரும் உறவு

உன் அழுகைக்கு தகுதியான உறவு

உனை ஒருபோதும் அழ விடாது

சிநேகிதமான உறவு

உறவை நினைத்து அழாதே.

இதுக்காக பெரிதாக கவலைப் படாமல் ....... நடக்க வேண்டிய காரியத்தில் கண்ணாயிரு .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் போது தினமும் ஏதோ ஒருவகையில் மனதைக் காயப்படுத்தி கண்ணீர் விடவைக்கும் உறவுகள்.அந்தக் கண்ணீர் விடும் உறவு இறந்த பின்னர் மாரடித்து அழுவது ஏன்....?

பிரியமுடன்:யாயினி.

  • தொடங்கியவர்

புத்தன் ஆன்மீகவாதி இப்படி சொல்லிப்போட்டீங்கள். பல சித்தர்கள், ஞானிகள் உன்னை நினைத்து கவலைப்படுவாயாக என்கின்ற தொனியில பல விசயங்களை சொல்லி இருக்கிறீனமே. அத்தோட இன்னொரு கருத்தும் சொல்லுவீனம்: செத்துப்போனவனை பார்த்து சாகப்போறவன் அழுதுகொண்டு இருக்கிறான் எண்டு.

எங்களை நினைத்து அழுவது - எங்கள் நிலையை நினைச்சு நாங்கள் கவலைப்படுவது சுயதேடலில ஓர் ஆரம்பபடிமுறை என்று நினைக்கலாமோ?

கீழ இருக்கிறதை நீங்கள் வேறகோணத்தில பார்த்து இருக்கிறீங்கள்.

"நான் அழவைக்கின்ற உறவு

என் அழுகையை நிறுத்தக்கூடியது?

இதற்கு இப்படி சொல்லி இருக்கிறீங்கள். இதுவும் வாஸ்தவம்தான். நான் மகிழ்சிஅடைகிறன் அதானல் என் அழுகை நிக்கிறது. மற்றவர்களை அழவைத்து அதில மகிழ்ச்சி அடைகிற நிறைய சனம் இருக்கிதுகள்தானே.

தமிழ்சிறி, எங்களை ஒரு உறவு அழவைக்கும்போது அது எப்படியான உறவுநிலையில இருக்கிது எண்டும் பார்க்கேக்கதான் கொஞ்சம் சிக்கலாய் இருக்கிது. அது அம்மா அப்பாவில இருந்து நண்பர் காதல் என்கின்றவிதமாக போகும்போது வேறு வேறு பொருள்களைத் தரும் என்று பார்க்கலாம்.

அம்மா அப்பா எங்களை வேணுமெண்டு அழவைக்கிறது இல்லை. நாங்கள் பிழையாக அல்லது தவறாக ஏதாவது செய்வமோ எண்டுறபயம் அவையள் மனதில இருக்கலாம். ஆனால் காதல் நட்பு போன்ற விசயங்கள் இடியப்பச் சிக்கலாய் இருக்கும். நான் நினைக்கிறன் இந்தச் சிந்தனையை எழுதியவர் காதலை மற்றும் வழமையான ஆண்-பெண் உறவுநிலையை மையப்படுத்தி இந்தக் கருத்தை எழுதி இருக்கலாம்.

யாயினி, நீங்கள் சொன்ன இந்தவிசயம் பெரும்பாலும் எங்கள் பெற்றோருக்கும் எங்களுக்குமான உறவுநிலைக்கு பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறன். நாங்கள் அம்மா அப்பா உயிரோட இருக்கேக்க அவையளை புறக்கணிக்கிறது, கண்டுகொள்ளுறது இல்லை. ஆனால்.. அவையள் இல்லாதகாலத்தில அவர்களை நினைச்சு களங்கிறது.

Edited by மாப்பிள்ளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

முதல் இரண்டு வரிகளையும்

அடுத்த இரண்டு வரிகளையும்

கடைசி தனி வரியாகவும் பிரித்து வாசியுங்கள்.பொருள் எளிதில் விளங்கும்.

சில உறவுகள் உன்னதமானவை.

உறவு இல்லை எனின் இவ் உலகமுமம் சூனியமானது[எதுவும் அற்றது]

இந்து சமயம் இறைவனையும் உறவுகள் மூலம் சித்தரிக்கின்றது.இதற்கு திருமுறைகளில் சிறந்த எடுத்துக்காட்டுகள் உள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

''உனை அழவைக்கும் உறவு

உன் உறவுக்குத் தகுதியற்றது

உன் அழுகைக்கு தகுதியான உறவு

உனை ஒருபோதும் அழ விடாது. அப்பிடியெண்டா

உறவை நினைத்து அழாதே. சரிதானே தம்பி உறவை நெச்சு நீ அழுதியெண்டா அந்த உறவை நீஉறவா நெக்கேல்லையெண்டுதானே அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

யாழ் உறவு ஒருவரின்ட கையெழுத்தில காணப்பட்ட கீழ்வரும் கருத்து சிறிது நேரம் அல்ல.. நீண்டநேரம் என்னை சிந்திக்க வைத்தது. இதை வாசிக்க உங்களுக்கு என்ன தோன்றுது என்று ஒருக்கால் சொல்லுங்கோ:

''உனை அழவைக்கும் உறவு

உன் உறவுக்குத் தகுதியற்றது

உன் அழுகைக்கு தகுதியான உறவு

உனை ஒருபோதும் அழ விடாது

உறவை நினைத்து அழாதே.''

மேலுள்ள கருத்தை எங்கட தனிப்பட்ட வாழ்வில இருக்கிற பல்வேறுவிதமான உறவுநிலைகளில இருந்து - சமூகம், நாடுவரை சீர்தூக்கி ஒப்பிட்டு பார்க்கலாம். உங்களுக்கு விளங்கியதை சொல்லுங்கோ.உங்கள் விளக்கங்களிற்கு நன்றி!

என்னத்தை விளக்கம் சொல்லி... நான் கட்ட முதல் பாத்திருந்தாலாவது பிரயோசனப்பட்டிருக்கும். எனித்தெரிஞ்சு என்னத்தை சொல்லுறது :huh:

  • தொடங்கியவர்

சரி சபேஸ், நீங்களாவது அழவைக்காமல் இருங்கோ. ரெண்டுபேரில ஒருத்தராவது சந்தோசமாய் இருந்தாலே குடும்பத்தில 50% வெற்றிதானே! இது உங்கள் குடும்பம் ஆகக்குறைஞசது 50% வேகத்திலாவது திருப்தியுடன் முன்னேற உதவும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.