Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாதிகளை விரட்டுமாறு இந்தியா உத்தரவு விக்ரமபாகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாதிகளை விரட்டுமாறு இந்தியா உத்தரவு விக்ரமபாகு :

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாதிகளை அதில் இருந்து விரட்டிவிடுமாறு இந்தியா தெரிவித்துள்ளதாக கலாநிதி. விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தேசியக் கொடியை அரசாங்கத்தின் கொடியாக மாற்றிக் கொண்டு, மன்னருக்கு (ஜனாதிபதிக்கு) தங்கம், வெள்ளி என அணிவித்து, பெரும் ஆட்டத்தை ஆடி வருகின்றனர். எனினும் கூரை தம் தலையில் இடிந்து விழப் போகிறது என்பதை இவர்கள் அறியவில்லை எனவும் விக்ரமபாகு சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகமே பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ள வேளையில், இலங்கை போன்ற நாடு ஆட்டம் போட முடியாது. மேலும் ஒரு லட்சம் பேர் இராணுவத்தில் இணைத்து கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எதுவித நிவாரணமும் கிடைக்க போவதில்லை. நாட்டின் நிதி அனைத்தும் இராணுவத்திற்கு செலவிடப்படுகிறது. அரசாங்கத்திற்கு நிதியுதவியை மாத்திரமல்ல கடனை கூட எவரும் வழங்க முன்வருவதில்லை. மியன்மாருக்கு சென்றதும் 50 ஆயிரம் டொலர்களை பொக்கற் மணியாக கொடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

எனினும் போய் வந்த செலவுகள் இதனை விட அதிகம். இதெல்லாம் பைத்தியக்காரத்தனம். பொருளாதார நெருக்கடியில் கழுத்து இறுகிப் போயுள்ள நிலையில் மூன்று லட்சம் தமிழர்களை மீள்குடியேற்றுமாறு சர்வதேசம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதேவேளை இந்தியா இரண்டு, மூன்று சவுக்கடிகளை கொடுத்தே பசில், கோத்தபாய, லலித் வீரதுங்க ஆகியோரை அனுப்பி வைத்துள்ளது. ஐரோப்பாவில் இருந்து சென்ற நிலையில் திருப்பி அனுப்பிய கப்டன் அலி கப்பலின் பொருட்களை இந்தியா இவர்களின் தோளில் ஏற்றி மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளாவிட்டால் 5 சதம் கூடத் தரப்பட்ட மாட்டாது எனக் கூறியதும், இவர்கள் மாகாண சபைகளுக்கும் அப்பால் சென்று அதிகாரப் பகிர்வை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன் அரசாங்கத்தில் உள்ள இனவாதிகளை விரட்டி விடுமாறும் இந்தியா கூறியுள்ளது. தமது பெரிய தனத்தை நாட்டுக்குள் காட்டிக் கொண்டாலும், இவ்வாறு நாட்டைக் காட்டிக் கொடுத்த யுகத்தை வரலாற்றில் காணவில்லை எனவும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2009-07-02மூலம் - GTN

இதை வாசிக்கும் போது

என் கவலைகள் எல்லாம் மறைந்தது... மனம் புள்காங்கிதம் அடைகிறது.

ஆனந்த வெள்ளதில் திளைகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்கும் போது

என் கவலைகள் எல்லாம் மறைந்தது... மனம் புள்காங்கிதம் அடைகிறது.

ஆனந்த வெள்ளதில் திளைகிறேன்.

ரொம்ப ...... சந்தோசப் படாதேயுங்கோ சூறாவளி ,

இவங்க மற்றவன் காதிலை பூ சுத்த பிறந்த பசங்க .

விக்கிரமபாகு கருணாரத்ன தமிழருக்காக என்றும் குரல் கொடுத்து வருபவர். தமிழராய்ப் பிறந்து ஈனத் தமிழனாய், அடிவருடித் தமிழராய் வாழ்பவருக்கு மத்தியில் பேரினத்தில் பிறந்து தமிழருக்காக குரல் கொடுக்கும் விரல் விட்டு எண்ணக்கூடியவாகளில் முதன்மையானவர்.

கவலையெதற்கு அது தான் நாளுக்கு நாள் எரிபொருட்கள், உணவு வகைகள் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றப்பட்டு யுத்த வெறி பேரினத்திற்கு நிர்வாணத்தைக் நாளும் வழங்கிக் கொண்டிருக்கின்றான் கொலைவெறி சிங்கள மன்னன் ராஜபக்சே. இப்படியெல்லாம் இந்தியா சொல்லப் போக ஆயுற்கால நன்பன் சீனாவுடன் சேர்ந்து காதைப்பிடித்து வெளியே தூக்கிஎறியப்படப் போகிறது இந்தியா. பொல்லைக் கொடுத்து அடிவாங்கிக் கொண்டிருக்கிறது பாவம் பாரதம்.

ஜானா

அடப்பாவிகளா!

அப்படியானால் முழு அரசாங்கத்தையும் அல்லவா விரட்ட வேண்டும்!!

பாராளுமன்றத்துக்கும் வெள்ளை அடிக்கவேண்டும்!!!

செய்தியில் சில உண்மைகளும் உண்டு. பக்ஷ சகோதரர்களுக்கு அறிவுறத்தல் என்ற போர்வையில் கொஞ்சம் அழுத்தம் கொடுக்கப்பட்டுத்தானுள்ளது. பிந்தி வரும் செய்திகள் அதனைச் சொல்லாமல் சொல்கின்றன. சீனா எமது வாழ்நாள் நண்பன் என்பதெல்லாம் இந்தியாவிற்காக விடுக்கப்படும் செய்திகள். எந்த ஆத்ம நண்பனும் தனக்காகவன்றி சிறிலங்காவிற்காகச் சண்டையிடப் போவதில்லை.

அதிலும் இனிமேல் என்ன காரணத்தைக் கொண்டு தமிழர் மேல் அழுத்தங்களைக் கொடுப்பது. இனித் தேர்தல் வரப்போகுதாம். எது கோள்கையாக இருக்கப்போகிறது. புலிகளை அழித்துவிட்டார்கள் என்பதெல்லாம் சரி. இந்தியாவின் வெருட்டல் அல்லவா இப்போது மேலோங்கியிருக்கிறது.

ஒன்றை மட்டும் புரிந்துகொள்வார்கள் சிங்கள ஆட்சியாளர்கள், " தங்களின் உண்மையான எதிரி விடுதலைப்புலிகள் அல்ல" என்பதை.

பாராளுமன்றத்துக்கும் வெள்ளை அடிக்கவேண்டும்!!!

அந்த பாராளுமன்றத்தை கொளுத்தவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.