Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகு குறிப்புகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

40 வயதைக் கடந்த பெண்களுக்கு மட்டுமல்ல இளம் பெண்கள் சிலருக்கும் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் கசியும். உதடு கறுப்பானதாக மாறிவிடும். இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்துவிட வேண்டும். இரவு நேரங்களில் வெண்ணெயை உதட்டில் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.

கண்ணில் கருவளையமா?

சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இதுதான் அவர்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது. கரு வளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

காது அழகை பராமரிப்பது எப்படி?

பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர காதுகளை கண்டுகொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும் காதுகள் இரண்டும் முக அழகுக்கு வேட்டு வைத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும். ஆகவே பெண்மணிகளே, காதை ஜொலிக்கவைப்பதற்கான இந்த யோசனையை கவனமாக கேளுங்கள்.

உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும். 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்த மாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகி விடும். முகத்தில் பூசும் பேஸ் பேக்குகளை காதுக ளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாகத் தெரியாது.

இடுப்பில் காய்ப்புத் தழும்பு நீங்க...?

இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிந்தால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். காய்ப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவ வேண் டும். அதன் பிறகு லேசாக மசாஜ் செய்யவும். இப் படி தொடர்ந்து செய்து வந்தால் மிகச் சீக்கிரமே இடுப்புக் காய்ப்புத் தழும்பு நீங்கி விடும்.

முகத்தைப் பாதுகாக்கும் முறை:

ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள் ளது. ஒன்று உலர்ந்த சருமம், எண்ணெய் சருமம். உலர்ந்த சருமத்திற்கு கரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும். இதே போல் எண்ணெய் வழியும் சருமத்திற்கு மருந்துக் கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளி பெறும்.

  • கருத்துக்கள உறவுகள்

உதடு கறுப்பானதாக மாறிவிடும்.

ஏற்கனவே உதடு கறுப்பு தாங்கோ.

ஏற்கனவே உதடு கறுப்பு தாங்கோ.

புகைப் பிடிச்சால் உதடு கறுப்பாகும்... கறுப்பி அக்கா நீங்கள் புகைப்பிடிப்பின்களோ... smiley-shocked003.gif

  • கருத்துக்கள உறவுகள்

புகைப் பிடிச்சால் உதடு கறுப்பாகும்... கறுப்பி அக்கா நீங்கள் புகைப்பிடிப்பின்களோ... smiley-shocked003.gif

புகை பிடிச்சி இல்லைங்கோ. முத்தம் கொடுத்து தான் :rolleyes:

புகை பிடிச்சி இல்லைங்கோ. முத்தம் கொடுத்து தான் :rolleyes:

உதடு கறம் கட்டுற மாதிரியா முத்தம் குடுக்கிறது??? ச்ச... :(

இப்ப தான் ஒண்ணு புரிஞ்சுது உங்க பேர் என் ரதி எண்டு நீங்கள் நியமாகவே

ரதிதான் போங்க!!!!!!!!!!!!! குறிப்புக்களுக்கு நன்றி என் மனைவிக்கு பயன்படுகிறதா

இருந்தால் செய்து விட்டு பெறுபேற்ரை சொல்லுகிறேன்.............

ஏதோ இருக்கிற அழகும் இல்லாமல் போற நிலை வராமல் இருக்க கல்லாய் இருக்கம் கடவுளை

வேண்டிக் கொண்டு ஆரம்பிக்க சொல்லுறன்.............

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் ஒண்ணு புரிஞ்சுது உங்க பேர் என் ரதி எண்டு நீங்கள் நியமாகவே

ரதிதான் போங்க!!!!!!!!!!!!! குறிப்புக்களுக்கு நன்றி என் மனைவிக்கு பயன்படுகிறதா

இருந்தால் செய்து விட்டு பெறுபேற்ரை சொல்லுகிறேன்.............

ஏதோ இருக்கிற அழகும் இல்லாமல் போற நிலை வராமல் இருக்க கல்லாய் இருக்கம் கடவுளை

வேண்டிக் கொண்டு ஆரம்பிக்க சொல்லுறன்.............

உங்க அம்மணி ரதி மாதிரி வர வாழ்த்துகள்

நன்றி கறுப்பி அண்ணா!!!!!!

விரைவில் என் அம்மிணி ரதியாக வருவா எண்ட

நம்பிக்கையில அழகு குறிப்பை பயன் படுத்த சொல்லுறன்..........

ஏதாவது நடந்தால் ரதி மேல் வழக்கு போடலாம் என எண்ணுகிறேன்.......

நீங்கள் ஒத்துழைப்பு தருவீர்களா????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மாறன் ஒருவரது பெயரை வைத்து அவர் அழகானவர் என எப்படி முடிவு செய்வீங்கள்...உங்களுக்கு இது பற்றி தெரியாவிட்டால் நெடுக்கு தம்பியிடம் கேட்கவும் வடிவாய் சொல்லி தருவார். :icon_idea:

ஏற்கனவே உதடு கறுப்பு தாங்கோ.

லிப்டிக்ஸ் பூசுங்க ஆண்களும் பூசலாம்.

லிப்டிக்ஸ் பூசுங்க ஆண்களும் பூசலாம்.
:icon_idea:

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயற் றம்மாவை தேய்த்துக் குளித்தால் தோல் பள பளப் பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

ஆரஞ்சுப்பழத்தை இரண்டாக வெட்டி முகத் தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இள மையுடனும் இருக்கும். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலு மிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ் வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

*பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒருடம்ளர் வெது வெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலு மிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

* நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகா கவும் வெட்ட முடியும். கூந்தலில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருந்தால், முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு நீர் ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும். தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித் தால், தலைமுடி பளபளப்பாகும். * வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற் றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க் குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும். இளம் சூடான ஒரு லீற்றர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிக மாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழச் சாறை தேய்த்து சவர்க்காரம் போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஒலிவ் எண்ணெய் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சவர்க்காரம் போட்டு குளிக்க வேண்டும்.

* இரவு படுக்கும் முன், புதினாச்சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம் பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம் மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமி டம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும் பும் மறையும். அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும். * முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை, சோளமா அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும். மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவி னால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

* பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும். ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந் தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும். * பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித் தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும். * தக்காளிப் பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண் ணெய்ப்பசை குறையும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஒலிவ் ஒயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சவர்க்காரம் போட்டு குளிக்க வேண்டும்.

Edited by ரதி

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து...

... தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து.... தக்காளிப் பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண் ணெய்ப்பசை குறையும் ....ஒலிவ் ஒயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து...

எண்ணெயும் மஞ்சளும் சமைக்கும் போது சிறிதளவு, கையிலோ நகங்களிலோ பட்டால் சவர்காரம்/ போட்டுக் கழுவினால் கூட உடனே போகாது... எரிச்சலாக வரும்...

பாவம் யாழ் கள அம்மணிகள், முகத்திற்கு tikka மசாலா போட்டது போல இருக்கப் போகுது... ^_^:o

இந்தியாவில் தான் கூடுதலாக பெண்கள் மஞ்சள் போட்டுக் குளித்துவிட்டு வேலைக்குப் போவார்கள்... இங்க இப்படிப் போனால் மொபைல் இந்தியன் restaurant என்று முகம் சுளிக்கமாட்டார்களா?

எனக்குப் பக்கத்தில இப்படி ஒரு பெண் வந்தால் நான் சொல்லுவான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் கோயில்குளத்தை பகிஸ்கரிக்கோணும்.

சாமத்தியவீடு,கலியாணவீடு எல்லாத்தையும் நிப்பாட்டோணும்.பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தினால் நக்கல் வேறை .

ஏனெண்டால் அங்கை சனம் கஸ்ரப்படுதுகளாம்.உண்மைதான் சரி ஓகே விடுவம்.

உவ்வளவு அழகுக்குறிப்புக்களை வைச்சு நான் என்னசெய்ய?

என்னை அழகுபடுத்தி........... (சத்தியமாய் நான் நல்ல வடிவானவன்)

கும்பகோணபட்டு உடுத்தி...........

என்ரை பொன்னானமேனியை கடலைமாவும்,உழுந்துமாவும் தடவி திருப்பியும் மினுக்கி இல்லாட்டி மினுங்கப்பண்ணி...........

என்னபிரயோசனம்?

சந்தியிலை நிண்டு மயிலாட்டம் ஆடவே?

  • கருத்துக்கள உறவுகள்

அதில்லை பாருங்கோ ....வாழுற .....வளருகிற ...பெண்பிள்ளைகள் கண்டதையும் அப்பி முகத்தி கெடுக்காமல் ஆரோக்கியமான ..

..பூச்சுகளை வீடில தயார் பண்ணி பூச சொல்லித்தான் அவ போடவா .விரும்பிய பெண்கள் பயனடையுங்கோ என்று போட்டு இருக்கலாம்

.....அல்லது படித்ததில் பிடித்தது .....என்று போடலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எண்ணெயும் மஞ்சளும் சமைக்கும் போது சிறிதளவு, கையிலோ நகங்களிலோ பட்டால் சவர்காரம்/ போட்டுக் கழுவினால் கூட உடனே போகாது... எரிச்சலாக வரும்...

பாவம் யாழ் கள அம்மணிகள், முகத்திற்கு tikka மசாலா போட்டது போல இருக்கப் போகுது... :lol::(

இந்தியாவில் தான் கூடுதலாக பெண்கள் மஞ்சள் போட்டுக் குளித்துவிட்டு வேலைக்குப் போவார்கள்... இங்க இப்படிப் போனால் மொபைல் இந்தியன் restaurant என்று முகம் சுளிக்கமாட்டார்களா?

எனக்குப் பக்கத்தில இப்படி ஒரு பெண் வந்தால் நான் சொல்லுவான்...

குட்டி மன்னிக்க வேண்டும் இது இலங்கையில் உள்ளவர்களுக்காக எழுதியது இதை நிலாமதி அக்கா சொன்ன மாதிரி விரும்பினால் இதை பாவித்துப் பாருங்கள் எனப் போட்டுயிருக்கலாம்....நன்றி நிலா அக்கா.

எல்லாரும் கோயில்குளத்தை பகிஸ்கரிக்கோணும்.

சாமத்தியவீடு,கலியாணவீடு எல்லாத்தையும் நிப்பாட்டோணும்.பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தினால் நக்கல் வேறை .

ஏனெண்டால் அங்கை சனம் கஸ்ரப்படுதுகளாம்.உண்மைதான் சரி ஓகே விடுவம்.

உவ்வளவு அழகுக்குறிப்புக்களை வைச்சு நான் என்னசெய்ய?

என்னை அழகுபடுத்தி........... (சத்தியமாய் நான் நல்ல வடிவானவன்)

கும்பகோணபட்டு உடுத்தி...........

என்ரை பொன்னானமேனியை கடலைமாவும்,உழுந்துமாவும் தடவி திருப்பியும் மினுக்கி இல்லாட்டி மினுங்கப்பண்ணி...........

என்னபிரயோசனம்?

சந்தியிலை நிண்டு மயிலாட்டம் ஆடவே?

கு சா அண்ணா இது ஒன்றும் மேக்கப் எப்படி போடுவது பற்றிய குறிப்பு அல்ல சாதரணமாக வீட்டில் உள்ள பெண்களுக்கான குறிப்புகள் உங்கள் மனைவி விரும்பினால் இதை செய்து பார்க்க சொல்லுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.