Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம் : சில உண்மைகள் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் Jegath Caspar

Featured Replies

புலம் பெயர் தமிழ்மக்களின் குழப்பங்களுக்கும் எதிர்கால நகர்வுகளுக்கும் பதிலளிக்கும் ஜெகத் கஸ்பார் அடிகளார் தெளிவான விபரமான ஒரு நேர்காணல்

1. தேசியத் தலைவர் பற்றிய குழப்பம்

2. நமக்குள் உள்ள தெவையற்ற முரண்பாடுகள்

3. நாடுகடந்த தமிழீழ அரசு

4. மற்றும் சமகால நகர்வுகள்

நிச்சயமாக அனைத்துத் தமிழர்களும் கேட்டு தெளிவு பெறவேண்டும்

நன்றி குமுதம்

இணைப்புக்கு தமிழ்த்தேசியம்

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் ஆசிரியர்களே இதனை உடனடியாக நீக்குங்கள் ....

தலைவர் இறந்ததைப் பற்றிய ஆய்வுக்கே இங்கே இடம் உண்டு ....

எதை நீக்கச் சொல்கிறீர்கள்? யாழில் உள்ளதையா? குமுத இணையத்தளஃத்தில் உள்ளதையா? இல்லை அனைத்து உண்மைகளையுமா???? ............. நிய உலகிற்கு வாருங்கள்!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதை நீக்கச் சொல்கிறீர்கள்? யாழில் உள்ளதையா? குமுத இணையத்தளஃத்தில் உள்ளதையா? இல்லை அனைத்து உண்மைகளையுமா???? ............. நிய உலகிற்கு வாருங்கள்!!!!!!!!

நிஜ உலகு எண்டு எதை சொல்கிறிர்கள் ???

தலைவர் இறந்து விட்டார் இறந்து விட்டார் என்று ஆய்வு எழுதி மக்களைக் குழப்புவதயா ??

அல்லது இயக்கத்தைப் பற்றி பொது இடத்தில் ஆய்வும் விமர்சனமும் செய்யும் மேதாவித்தனத்தயா ?? அல்லது இவை இரண்டையும் செய்து நம்மிடையே இன்னும் இன்னும் பிளவுகளையும் எதிரிகளையும் உருவாகுபவர்களயுமா???

இறந்து விட்டார் என்று நீங்கள் நினைத்தால் நினைத்துக் கொண்டு இருங்கள் ஏன் அதனை தொடர்து எழுதி எழுதி இன்னும் சர்ச்சையை உருவாக்குகிறிர்கள்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை பொறுத்தவரையில் இன்று மக்கள் ஒரு தெளிவுநிலைக்கு ஏதோ ஒரு வகையில் வந்துவிட்டார்கள். ஒவ்வொருவரும் தமக்கு தெரிந்ததை தமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது வெளிப்படுத்துகிறார்கள்...... அதனை வைத்துக்கொண்டு மீண்டும் ஒரே பிரச்னையை கிளப்பி விடுவதால் நாமே நமது தேசியத்திற்கு எதிராக செயற்படுகின்றோம். இன்றைய இணைய யுகத்தில் ஒருவரின் கருத்தை எந்தவகையிலும் தடுத்து நிறுத்தமுடியாது. அவரவர் கருத்துக்களை எந்தவகையிலும் வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் குவிந்து கிடக்கின்றன. எனவே எமது கொள்கைக்கு எதிராக கருத்து சொல்பவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு காட்டி அவர்களை மேலும் மேலும் பிரபல்ய படுத்தாமல் அதனை அப்படியே கணக்கெடுக்காமல் விட்டு விடுங்கள்... இரண்டு தரம் குரைப்பார்கள்... முன்றாம் தரம் சி.. போ.. நாயே... என்று விட்டு போய்விடுவார்கள்...... அவர்களுக்கு இது ஒரு வேலை...... தமக்கு கொடுக்கபட்டத்தை எல்லாவகையிலும் முயற்சித்து பார்ப்பார்கள்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழம் : சில உண்மைகள் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் Jegath Caspar

அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அவர்கள் குமுதம் இணையதளத்திற்கு வழங்கிய நேர்காணல்.

Get Flash to see this player.

http://www.vakthaa.tv/play.php?vid=4638

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு மிக்க நன்றி வக்தா.

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலகச் செயலகத்தையும் கஸ்ரோவையும் நேரயாக கஸ்பார் சுட்டிக்காட்டுறபடியால் இதை யாழிலை இருந்து தூக்குங்கோ கஸ்பார் துரோகி என்று ஓடியந்து கத்துறவர்கள் கத்தலாம்...ஓடிவாருங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் கொடுத்த இணைப்பு இப்பொழுது வேலைசெய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மறவன் .............வேலை செய்கிறதே...............இப்போதும் கேடேன். மீளவும் முயற்சி செய்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் கொடுத்த இணைப்பு இப்பொழுது வேலைசெய்யவில்லை.

இங்கை போய் பாருங்கோ http://www.vakthaa.tv/play.php?vid=4638

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பொழுது வேலை செய்கிறது. நிலாமதிக்கும் ரவுடிக்கும் நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில கருத்து முரண்பாடுகள் இவர்களுக்கும் கேபி அண்ணைக்குமிடையில் இருந்தாலும் இது காலப்போக்கில் இந்த முரண்பாடுகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதைவிடுத்த இவர்களை மாபியாக் கும்பல்கள் என்று எடுத்த வீச்சிற்குச் சொல்லிவிட்டு இவர்களை ஒதுக்கிவைப்பது மீண்டும் தமிழருக்கிடையில் பிளவுகளை உருவாக்கும்.

திரு கஸ்பார் அவர்கள் சில முக்கியமான விடயங்களை சொல்லியிருக்கின்றார். மாவீரர் கஸ்ரோ அவர்கள் சில முக்கிய தவறுகள் விட்டுள்ளது பற்றியும், நாடு கடந்த அரசுக்கு ஆதரவாகவும் அவர் கருத்துகளை கூறியிருக்கின்றார்.

நாம் எமது விடுதலைப் போராட்டத்தில் நிறைய தவறுகளை விட்டிருப்பது உண்மை. தவறுகளே செய்யவில்லை என்றால் நாம் தோற்றிருக்க மாட்டோம்.

எமது போராட்டம் பற்றிய மீள்வாசிப்பு நடைபெற வேண்டும். ஆனால் அத்தகைய மீள்வாசிப்பு எமக்காக தியாகம் செய்தவர்களை கொச்சைப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருக்கக் கூடாது. கஸ்ரோ போன்றோர் செய்த தவறுகளை பற்றி பேசுகின்ற பொழுது, அவர்கள் மாவீரர்கள் என்கின்ற மரியாதை மனதில் இருப்பது அவசியம்.

இவர்கள் விட்டது சாதாரண தவறல்ல ........ "வாங்கவோ, விற்கவோ முடியாது என்று சர்வதேசமே ஏங்கியதை, ....... பணம், பணம், பணத்துக்காக கூறு போட்டு சர்வதேச சந்தையில் விற்றார்கள்"!!!

  • தொடங்கியவர்

பணம், பணம், பணத்துக்காக கூறு போட்டு சர்வதேச சந்தையில் விற்றார்கள்"!!!

அப்படியா ???

என்ன விலைக்கு விற்றார்கள் ???

தெரிந்திருந்தால் வாங்கியிருக்கலாம்

கஸ்ரோ பற்றியோ அவரது செயற்பாடுகள் பற்றியோ சாதாரண மக்களுக்கு தெரியாது

இவர் சாதாரண எங்களுக்கு பரிச்சயமில்லாதவர் ஆனால் புலம் பெயர் அமைப்பாளர்களுடன் தொடர்பில் இருந்தவர் அவர் பற்றி தலைமையிடம் சொல்லியிருக்கலாம் அதற்கு எத்தனையோ வழிகள் இருந்தன பலர் தலைவரை நேரில் சந்தித்தவர்கள்

சரி இதை விடுவோம்

இந்த வரலாறுகாணாத அழிவை தமிழ்மக்கள் எவராலும் தடுத்திருக்க முடியுமா ???

என்னப் பொறுத்தவரையில் முடியாது

முடிவு ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது எப்படி அழிப்பது எப்படி மறைப்பது என்பதில் தான் இவ்வளவு காலம் சென்றது

அப்படி இருக்கும் போது கஸ்ரோவை குற்றம் சொல்வது

காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை போல் உள்ளது

Edited by tamilsvoice

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.