Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய சந்திரயான் -1 விண்கலத்தில் பழுது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_45130184_45126426.jpg

image: bbc.co.uk

கடந்த அக்டோபர் திங்களில் (அக்டோபர் 2008) பெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் சந்திரனை ஆராய என்று அனுப்பப்பட்ட இந்திய விண்கலமான சந்திரயான் -1 விண்கலத்தில் உள்ள முக்கிய உணரியில் (sensor) பழுது ஏற்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புக் கூறியுள்ளது.

சந்திரயானின் செயற்பாடுகளில் ஆரம்பத்தில் இருந்தே குழப்பங்கள் நிலவினாலும் தற்போதே அது பழுதடைந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும் பழுதைச் சரிபார்க்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்று கொண்டிருப்பதாகவும் மேற்படி செய்திக் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

மேற்படி பழுது காரணமாக சந்திரயான் - 1 இன் ஆயுட்காலம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே அமையும் என்று கூறியுள்ளனர் இஸ்ரோ அதிகாரிகள்.

சந்திரனின் மேற்பரப்பை முப்பரிமானப் படம் பிடித்து அனுப்புதல் மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் கனிமங்கள் தொடர்பில் ஆராய என்று மேற்படி விண்கலம் பெரும் பொருட் செலவில் (3.8 பில்லியன் ரூபாய்கள் செலவில்) விண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் - 1 பல பெறுமதிமிக்க தகவல்களை பெற்றுத் தந்திருப்பதாகவும் ஆனால் அவை பழுது காரணமாக தரக்குறைவாக உள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேலும் கருத்து வெளியிட்டுள்ளனர். இருந்தாலும் சந்திரயான்-1 ஐ தற்போதைக்கு முழுமையாகக் கைவிடும் திட்டம் தமக்கு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் - 1 இந்திய மற்றும் அமெரிக்க, பிரித்தானிய, ஜேர்மனிய உதிரிப்பாகங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் செயற்பாட்டு ஆயுட்காலம் எதிர்பார்க்கப்பட்ட விண்கலமாகும்.

source: http://www.kuruvikal.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்திரனின் மேற்பரப்பை முப்பரிமானப் படம் பிடித்து அனுப்புதல் மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் கனிமங்கள் தொடர்பில் ஆராய என்று மேற்படி விண்கலம் பெரும் பொருட் செலவில் (3.8 பில்லியன் ரூபாய்கள் செலவில்) விண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதுசரி நெடுக்குசாமி !

உவங்கள் சந்திரனிலை இருக்கிற கல்லுமண்ணுகளை ஆராஞ்சு என்னத்தை புடுங்கப்போறாங்கள்?

இந்திய மற்றும் அமெரிக்க, பிரித்தானிய, ஜேர்மனிய உதிரிப்பாகங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட விண்கலமாகும். :):lol::D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய மற்றும் அமெரிக்க, பிரித்தானிய, ஜேர்மனிய உதிரிப்பாகங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட விண்கலமாகும். :):lol::D:lol:

லோக்கல் சாமானைக்குடுத்து பேக்காட்டிப் போட்டாங்களப்பா :D

லோக்கல் சாமானைக்குடுத்து பேக்காட்டிப் போட்டாங்களப்பா :lol:

அல்லது... நம்ம இந்திய :) சாமாணோ... :D யார்அறிவார்.... :lol::D

Edited by Netfriend

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க, பிரித்தானிய, ஜேர்மனிய உதிரிப்பாகங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் செயற்பாட்டு ஆயுட்காலம் எதிர்பார்க்கப்பட்ட விண்கலமாகும்.

குப்பையை இந்தியாவின் தலையில் கட்டி விட்டார்கள் போல. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி நெடுக்குசாமி !

உவங்கள் சந்திரனிலை இருக்கிற கல்லுமண்ணுகளை ஆராஞ்சு என்னத்தை புடுங்கப்போறாங்கள்?

நியாயமான கேள்வி. ஆய்வுகளில் விண்வெளி ஆய்வுகளுக்கும்.. இராணுவ தளபாட ஆய்வுகளுக்குமே உலகில் அதிக பணம் செலவு செய்யப்படுகிறது.

இரண்டுமே மக்களுக்கு உடனடிப் பயன்கள் எதனையும் தராத ஆய்வுகள். பல விண்வெளி ஆய்வுப் பணிகள் பல மில்லியன் டொலர்கள் செலவில் ஆரம்பித்து.. இறுதியில் ஒன்றுமில்லாமல் முடிந்தது. இருந்தும்.. தொடர்கின்றன.

என்ன ஒரு பிராந்திய வல்லரசு.. அண்டை அயலான் சந்திரனுக்குப் போறான். நானும் போகல்லை என்றால் எப்படி வல்லரசு ஆவது.. இதுதான் அடிப்படை.

பனிப்போர் காலத்தில் தொடங்கிய இந்த பணத்தை வீணடிக்கும் வியாதி.. இன்னும் தொடர்கிறது.

3.8 பில்லியன் ரூபாய்களை இந்திய கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களில் முதலிட்டிருந்தால்.. அதன் பயன்.. இன்று ஏழை எளிய மக்களைப் போய் சேர்ந்திருக்கும். ஆனால்.. இது.. கறுப்படித்த சில புகைப்படங்களோடு முடங்கிப் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும்.

ஒரு ஆய்வுத்திட்டத்தை ஆரம்பிக்கும் போது.. அதுவும் இந்தியா போன்ற வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் அந்த ஆய்வுத்திட்டத்தின் உச்ச பயனைப் பெற முயல வேண்டுமே அன்றி.. விலை குறைவா செய்து தாரன் என்று அமெரிக்க.. பிரித்தானிய.. ஜேர்மனிய சாமான்களுக்கு பரிசோதனை மையமாக விளங்கி இருக்கக் கூடாது. அவங்கள் பணக்காரர் எதனையும் செய்து கொள்ள விட வேண்டியதுதானே.

இத்தனை பணமிருந்தும்.. ஐரோப்பிய நாடுகள் தனித்தனியாக விண்வெளி ஆராய்ச்சியில் இறங்குவதில்லை. கூட்டான முயற்சிகளையே இன்று வரை எடுத்து வருகின்றன. ஆனால் பிச்சைக்கார நாடுகள் சில தான் அமெரிக்கா என்ற நினைப்பில்.. செயற்படுகின்றன..!

அவன் வெள்ளைக்காரன்.. தான் பாவிச்சிட்டு.. கழிவை இந்தியக் கரையில் கொட்டுவது போல.. தான் செய்ததை.. கொஞ்சக் காசில பரீட்சித்துப் பார்த்திட்டான். நட்டம் ஆருக்கு..???! வெட்டிப் பெருமை பேச வெளிக்கிட்டவனுக்கே..!

வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான் என்றதை நிரூபிச்சுப் போட்டான்..! எதுஎப்படியோ இந்தியாவின் 3.8 பில்லியன் நாசமாப் போனது மகிழ்ச்சியே..! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் இவ்வளவு கஸ்டப்படுகிறார்கள். அதுக்குள்ளை சந்திராயன், பூராயான் என்று அனுப்பிக்கொண்டு...

OHyt1219914133.jpg:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.